Shadow

Tag: சக்தி சரவணன்

கூரன் விமர்சனம்

கூரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கூரன் என்றால் கூர்மையான அறிவை உடையவன் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இப்படத்தில் கூர்மையான அறிவைக் கொண்டுள்லதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு பெண் நாயாகும். தன் குட்டியைக் காரில் மோதிக் கொல்லுபவனுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது ஜான்சி எனும் நாய். நாயின் அந்த வேதனையைப் புரிந்து, நாயின் சார்பாக வழக்காடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். நாய்க்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை. கொஞ்சம் நம்ப முடியாத கதை என்றாலும், திரைக்கதையின் மூலமாகப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை, வசனமெழுதி நடித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரை ‘குருவே’ என்றழைத்துக் கொண்டு அவரது வீட்டில் வளர்கிறார் இந்திரஜா. சந்திரசேகர் இந்திரஜாவை எப்பொழுதுமே ‘குண்டம்மா’ என்றே அழைக்கிறார். பெட்டிக்கடையில் ஒருவன் இந்திரஜாவின் உடலைக் கேலி செய்யும் விதமாகப் பேசி, ‘குட்டி யானை’ எனும் விளிக்கும்பொழுது, அவன...
ரிங் ரிங் விமர்சனம்

ரிங் ரிங் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிவாவின் பிறந்தநாள் விழாவிற்கு, அவனது நண்பர்களான தியாகு, கதிர், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தியாகுவும், கதிரும் அவர்களது மனைவியுடன் கலந்து கொள்ள, அர்ஜுன் மட்டும் தனியாகக் கலந்து கொள்கிறான். அனைவரையும் வரவேற்கிறாள் சிவாவின் மனைவி பூஜா வரவேற்கிறாள். அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவுணவு அருந்தும்போது, கைபேசியில் யார் ரகசியத்தைப் பாதுகாக்கின்றனர் என்ற விவாதம் விளையாட்டாய் நடக்கிறது. அதன் முடிவாக, யாருக்கு எந்தச் செய்தி வந்தாலும் அதை மற்றவர்களுக்குக் காட்டவேண்டும், அழைப்பு வந்தால் அதை லவுட்-ஸ்பீக்கரில் போட்டுப் பேசவேண்டுமென முடிவெடுக்கின்றனர். விளையாட்டு மெல்ல சூடுபிடித்து விபரீதமாவதுதான் படத்தின் கதை.ரஞ்சனியுடன் லிவிங்-டுகெதரில் வாழும் கதிர் எனும் பாத்திரத்தில் டேனியல் ஆன்னி போப் நடித்துள்ளார். ரஞ்சனியாக ஜமுனா நடித்துள்ளார். தன்னைத் தானே நகைச்சுவையாளனாக நினைத்து ஏமாற்றிக் கொள்ளும் அர்...
கூரன் – நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய்

கூரன் – நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய்

இது புதிது, சினிமா, திரைத் துளி
நாய் மனிதன் மீது வழக்கு தொடர்ந்தால்? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 'கூரன்' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார். பொதுவாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று போராடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதி மன்றம் படி ஏறிப் போராடுகிறது.மனித உயிரும், விலங்குகள் உயிரும் ஒன்றுதான் என்றும், இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள் இவைகளுக்குமானது தான் என்ற கருத்தை இத்திரைப்படம் பேசுகிறது. இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடித்திருக்கிறது. அதனுடன் இணைந்து எஸ்.ஏ. சந்திரசேகர், YG மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், இந்திரஜா ரோபோ ஷங்கர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன...
வாஸ்கோடகாமா விமர்சனம்

வாஸ்கோடகாமா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
  வாஸ்கோடகாமா என்பது சிறைச்சாலையின் பெயர். நல்லது செய்பவர்களையோ, கெட்டது நடப்பதைத் தடுப்பவர்களையோ கைது செய்து சிறையில் தள்ளிவிடும் அதிசய யுகத்து சிறைச்சாலை அது. நல்லவர்கள் மிகவும் அருகிவிட்ட கலியுகத்தின் பிந்தைய காலமாம். சிறைக்குள் ஏதேனும் அடிதடியில் ஈடுபட்டு எவரையேனும் காயப்படுத்தினாலோ, கொலை செய்தாலோ விடுதலை செய்து விடுவார்கள். அநியாயங்கள் மிகுந்து கிடக்கும் உலகில், கண் முன் கெட்டதைக் கண்டால் பொங்கியெழும் நாயகன் வாசுதேவன் பல சிக்கல்களை எதிர்கொள்கிறான். நல்லதைத் தட்டிக் கேட்டால் சிறையில் அடைத்துவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் கைதாகும்போது, அவரது அண்ணன் மகாதேவன் பணம் கொடுத்து மீட்கிறார். அந்த அண்ணனின் சுண்டு விரலில் காயம் ஏற்பட, நரக (Naraka Multispeciality Hospital) மருத்துவமனைக்குச் செல்கிறார். இதயத்தில் பிரச்சனை என ஐ.சி.யூ.வில் சேர்த்து அனுப்பி வைத்துவிடுகின்றனர். அறமற்ற மருத்துவமனைக...
ஆலகாலம் – வஞ்சகம் சூழ் உலகு | ட்ரெய்லர்

ஆலகாலம் – வஞ்சகம் சூழ் உலகு | ட்ரெய்லர்

Trailer, காணொளிகள், சினிமா
'ஆலகாலம்' திரைப்படத்தின் ட்ரெய்லரைப் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார். ட்ரெய்லரைப் பார்த்த அவர், அதில் வந்த காட்சிகள் பிடித்துப் போகவே படத்தின் முழுக் கதையையும் கேட்டறிந்தார். படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் ஜெய கிருஷ்ணாவின் நடிப்பையும் பாராட்டினார். 'ஆலகாலம்' என்கிற திரைப்படம் உருக வைக்கும் ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. 'ஆலகாலம்' என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையைச் சூறையாடும் வஞ்சகம், சூழ்ச்சி எனும் ஆலகாலம். இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா...
அகோரி திரைப்படம் – தீய சக்திக்கும், அகோரிக்கும் இடையேயான சண்டை

அகோரி திரைப்படம் – தீய சக்திக்கும், அகோரிக்கும் இடையேயான சண்டை

சினிமா, திரைத் துளி
தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் இல்லம் தேடி மக்கள் மனதில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகராக வளர்ந்திருப்பவர் சித்து. இவர் நடித்த ‘திருமணம்’, ‘ராஜா ராணி’ போன்ற தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'அகோரி' ஆகும். இதுவரை சின்னத்திரை மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், பெரிய திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளதால், தான் அறிமுகம் ஆகியுள்ள இந்தப் படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறார். 'பாரதி' படத்தின் மூலம் பாரதியாகவே மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும் 'அகோரி' என்கிற படம் உருவாகியிருக்கிறது. மோஷன் ஃபிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார். சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை. இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் ப...
இரட்டை இயக்குநர்களின் ‘லாக்கர்’ திரைப்படம்

இரட்டை இயக்குநர்களின் ‘லாக்கர்’ திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
லாக்கர் என்றொரு படத்தை, இரட்டை இயக்குநர்களான ராஜசேகரும், யுவராஜ் கண்ணனும் இணைந்து இயக்கியுள்ளார்கள். இவர்கள் இருவருமே சினிமாவின் மீது தீராத காதல் கொண்டவர்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். எதற்கும் துணிந்தவன், கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும், மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5-இன் இணைய தொடரிலும் நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளவர். வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். இவர் தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்தவர். பிரின்ஸ், மிரள், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்ப...
எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது

எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது

சினிமா, திரைத் துளி
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்குத் திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டுள்ளது. நவம்பர் 21 ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் 'விஸ்காம்' எனப்படும் காட்சித் தொடர்பியல் துறையின் ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவில் திரையுலகில், தனித்துவமான படங்களைத் தன் பாணியில் இயக்கி, தனக்கென முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு. ஏ.சி.சண்முகம் அவர்கள் 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் 'விருதினை வழங்கினார். விருது வழங்கும் முன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் திரையுலகச் சாதனைகள் குறிப்பிடப்பட்டு விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் திரு. அருண்குமாரும் உடன் இருந்தார். இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி திருமதி ஷ...
குருமூர்த்தி விமர்சனம்

குருமூர்த்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குற்றமே நிகழக்கூடாதென முறுக்கிக் கொண்டு திரியும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி. அவர் நீலகிரிக்கு மாற்றலாகிச் செல்ல, தொழிலதிபர் கந்தசாமியின் 5 கோடி அடங்கிய பணப்பெட்டி திருடப்படுகிறது. கறாரான குருமூர்த்தி அப்பணப்பெட்டியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை. தொழிலதிபர் கந்தசாமியாக ராம்கி நடித்துள்ளார். ஓர் இடைவேளைக்குப் பின் நடித்துள்ளதால், கதைத் தேர்வில் கவனம் செலுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யத் தவறியுள்ளார். ஆசைநாயகிக்கு வீடு வாங்கித் தர, அவர் எடுத்துச் செல்லும் கறுப்புப் பணத்தினைத் தொலைத்துவிடுகிறார். பின், பாதி படத்திற்கு மேல் கொஞ்சம் நேரம் ஆன்மாவாகவும் போலீஸ் ஜீப்பில் பயணிக்கிறார். ஜக்கம்மா தேவியின் ஆணையாகக் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர் பாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். போலீஸ், புலனாய்வு என்ற படத்திற்கு ஓர்...
செஞ்சி விமர்சனம்

செஞ்சி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஓர் ஓலைச்சுவடியில் கிடைக்கும் துப்பினைக் கொண்டு, மூவர் குழு ஒன்று, புதையலைத் தேடிச் செல்கிறது. செஞ்சியில் தொடங்கும் அந்தப் பயணம், மதுரை (கல் மலை), ராஜபாளையத்திலுள்ள இதய வடிவப்பாறை, தென்காசி எனப் பயணித்து கேரளாவின் கல்லார் (Kallar) மலைப்பகுதியில் முடிகிறது. புதையல் வேட்டையை மையமாகக் கொண்ட தமிழ்ப்படங்கள் அரிது. கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம். கதையை எழுதிப் படத்தைத் தயாரித்து இயக்கியதோடு நடித்தும் உள்ளார் கணேஷ் சந்திரசேகர். ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது. ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது. பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோஃபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள். அங்கே நிலவறையில் பழைய புராதனக் கலைப்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அங்கே ஏதோ ஓர் அமானுஷ்யத்தை உணரும் சோஃபியா, ஓர் ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதைத் தொல்பொருள் ஆராய்ச்...
டேக் டைவர்ஷன் விமர்சனம்

டேக் டைவர்ஷன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு 90’ஸ் கிட் தன் திருமணத்திற்காக பாண்டிச்சேரி செல்கிறார். செல்லும் வழியில் தன் அலுவலக மேலதிகாரி சொல்லும் ஒரு பணியை முடிக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு வருகிறது. அந்தப் பணியில் ஒரு பெரும் பிரச்சனை இருக்க, எப்படி பிரச்சனைகளை ஹீரோ டீல் செய்தார் என்பதை, பல டேக் டைவர்ஷன் போட்டுச் சொல்லியிருக்கிறது இப்படம்.. ஹீரோ அடர்ந்த தாடி, மெலிதான பாடி என பாவப்பட்ட 90’ஸ் கிட்ஸ் கதாபாத்திரத்திற்குப் பக்காவாகப் பொருந்துகிறார். இரு நாயகிகளும் ஒரு சில இடங்களைத் தவிர ஈர்க்கவே செய்கிறார்கள். ஒரு 2K கிட்ஸின் அட்ராசிட்டி படத்தை ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது. டெக்னிக்கல்லி மிகவும் அயர்ச்சி ஏற்படுத்துகிறது படம். ஜோஸ் ப்ராங்க்ளின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டிற்கும் பெரிதாக மெனக்கெடவில்லை. ஒளிப்பதிவில் பெரிய நேர்த்தியில்லை. டப்பிங்கில் துளியும் கவனம் எடுக்கவில்லை போல. லிப்சிங்கில் அவ்வளவு பிரச்சனைகள். படமெங்கும் ஆர்வம...
துணிகரம் – ஆம்புலன்ஸ் சர்வைவல் த்ரில்லர்

துணிகரம் – ஆம்புலன்ஸ் சர்வைவல் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
புதுமுகங்களின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'துணிகரம்' படத்தின் முன்னோட்ட வெளியீடு மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஐய்விஷ்வா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஏ4 மீடியா வொர்க்ஸ் டாக்டர் வீரபாண்டியன் மற்றும் டாக்டர் டெய்ஸி வீரபாண்டியன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘துணிகரம்’ ஆகும். அறிமுக இயக்குநர் பாலசுதன் எழுதி, இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் வினோத், பரணி, டென்னிஸ், நடிகைகள் செம்மலர் அன்னம், சரண்யா ரவிச்சந்திரன், காயத்ரி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் கோகுல் இசையமைத்திருக்கிறார். பின்னணியிசையை தனுஷ் மேனன் கவனிக்க, படத்தொகுப்பை என். பிரகாஷ் கையாண்டிருக்கிறார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த சிறிய பட்ஜெட் படத்தைத் தமிழகம் முழுவதும் மே 6ஆம...
ரீ – காதில் அலறும் மர்ம ரீங்காரம்

ரீ – காதில் அலறும் மர்ம ரீங்காரம்

சினிமா, திரைச் செய்தி
உலகையே சுருக்கி, கடல் கடந்து இருப்பவர்களை அருகில் கொண்டு வந்துவிட்டது தொழில்நுட்பம். ஆனால், பக்கத்து வீடுகளில் இருப்பவர் யார், அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளத் தவறி வருகிறோம். ஆனால் 'ரீ ' படத்தின் கதாநாயகி அப்படி இருப்பவள் அல்ல. அவளது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது .அது அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது. 'என்ன சத்தம் இந்த நேரம்? பேயின் ஒலியா? மனிதனின் வலியா?' என்று அறிய முற்படுகிறாள். ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு நாகரிகமான டாக்டர் குடும்பம் தான் வசிக்கிறது. இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும் போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில் சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்னவென்பதைப் பற்றிப் பேசும் படம் தான் ''ரீ". இப்படத்தை சுந்தரவடிவேல் எழுதி இயக்கியுள்ளார். அவரே தனது ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தய...
“நெகடிவ் ரோல்களில் பிரஷாந்த் நடிக்கவேண்டும்” – ஆர்.கே.செல்வமணி

“நெகடிவ் ரோல்களில் பிரஷாந்த் நடிக்கவேண்டும்” – ஆர்.கே.செல்வமணி

சினிமா, திரைச் செய்தி
ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம். இந்த ஆண்டு சென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த விழாவில் ஃபெப்ஸியின் தலைவரும், அண்மையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றவருமான இயக்குநர் ஆர். கே. செல்வமணி, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் கலந்து கொண்டு பிரஷாந்தை வாழ்த்தினர். இவ்விழாவில் பிரஷாந்தின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் பேசும்போது, “பிரஷாந்த் நடித்து அடுத்தடுத்து படங்கள் வர உள்ளன. இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் 'அந்தகன்' திரைப்படம் பிரஷாந்த்துக்கு மறக்க முடியாத படமாக இருக்கும். இந்தப் படம் ஹிந்தியில் வெளியாகிப் பெரிய வெற்...