Shadow

Tag: Olympia Movies

“மை லார்ட்: இது படம் கிடையாது; பெரும் பொறுப்பு” – ஷான் ரோல்டன்

“மை லார்ட்: இது படம் கிடையாது; பெரும் பொறுப்பு” – ஷான் ரோல்டன்

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் 'மை லார்ட் (My Lord)' திரைப்படமாகும். பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் நன்றி நவில்தல் சந்திப்பில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வினில் பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், "சில படங்கள், நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம், நாம் அதை நன்றாகச் செய்யவேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது, ஒரு இசையமைப்பாளராகவும் சரி, ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு, இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே ராஜு முருகன் சார் ...
மை லார்ட் விமர்சனம் | My Lord review

மை லார்ட் விமர்சனம் | My Lord review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறலைப் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது மை லார்ட் திரைப்படம். உயிரோடு இருப்பவரை இறந்தவராகச் சித்தரித்து, ஒருவரது அடையாளத்தையே அழிக்க அதிகாரத்தால் முடியும் எனப் படம் அச்சுறுத்துகிறது. ஆனால் அந்த அச்சுறுத்தலை உணர்வுப்பூர்வமாகக் கொண்டு செல்லாமல், கொஞ்சம் நகைச்சுவை கலந்து படம் தர வேண்டிய தாக்கத்தை நீர்த்துப் போகவும் செய்துள்ளார் இயக்குநர் ராஜு முருகன். அதிகாரம் சாமானியனை எங்குக் கொண்டு தள்ளுகிறது என்பதும், அதை வள்ளலாரியத்தில் ஊறிய ஓர் அப்பாவி எப்படி எதிர்கொள்கின்றார் என்பதும் தான் படத்தின் அரசியலும் மையச்சரடும். உயிருடன் இருக்கும்போதே நாயகன் முத்துச்சிற்பிக்கு இறப்புச் சான்றிதழைப் பெற்று, அவரை நையப்புடைக்கிறார் கவுன்சிலர் நர்சிம். குறு பிராந்திய அதிகார பலம் பொருந்திய கவுன்சிலரைத் தேசிய அளவில் உச்ச அதிகாரம் கொண்ட ஒருவரின் துணையோடு சிறைக்கு அனுப்புகிறார் நாயகன். அனுப்ப...
“அன்பைப் பேசப் பணம் தேவைப்படுகிறது” – ராஜு முருகன் | My Lord

“அன்பைப் பேசப் பணம் தேவைப்படுகிறது” – ராஜு முருகன் | My Lord

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' மை லார்ட் (My Lord)' எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் அம்பேத்குமார், "ராஜுமுருகன் எழுத்தாளராக இருந்த போதே தெரியும். அவர் என்னைச் சந்தித்து ஜிப்சி கதை சொன்னார். அந்தப் படம் எனக்கு வெற்றிப்படம் தான். அவர் இந்தக் கதையைச் சொன்ன போது சின்ன படமாக எடுக்கலாம் என்றார். அடுத்து நீரவ் ஷா, ஷான் ரோல்டன் என்றெல்லாம் சொன்னார். இறுதியாக சசிக்குமார் நடிக்க வைக்கலாம் என்றார். அப்போது தான் எனக்கு நம்பிக்கை வந்தது. இம்மாதிரியான படத்தை மக்களிடம் சேர்க்க அவர் மாதிரி ஒரு நடிகர் கண்டிப்பாக வேண்டும். நடிகை சைத்ரா அவர்களும் அற்ப...
My Lord – உள்ளுக்குள் உலுக்கிய படம்

My Lord – உள்ளுக்குள் உலுக்கிய படம்

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' மை லார்ட் (My Lord)' எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மாரிசெல்வராஜ், "நேற்று நான் தொடர்ந்து இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று இந்த ‘மை லார்ட்’. இந்தப் படம் முடிந்த பிறகு, என்னோட அசிஸ்டன்ட்ஸோட சேர்ந்து அதிக நேரம் விவாதம் பண்ண வைத்த படம் இது. இந்தப் படம் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கேட்கிறது. எளிய மனிதன் எல்லாத்தையும் இழந்த பிறகு, அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன? அந்த கேள்வியையே இந்தப் படம் ரொம்ப ஆழமாக முன்வைக்கிறது. சசிகுமார் சார் கேரக்டர், ஒரு எறும்பு, ஒரு எலி, ஒரு பூனை வரை காப்பாற்றுற மனிதன். ஆனா,...
My Lord – மனிதநேயத்தோடு படம் எடுப்பவர் ராஜுமுருகன்

My Lord – மனிதநேயத்தோடு படம் எடுப்பவர் ராஜுமுருகன்

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' மை லார்ட் (My Lord)' எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் த.செ.ஞானவேல், "எந்த நெருக்கடியிலும், யாருடைய மனசையும் காயப்படுத்தாமல், ஒரு பொறுப்புணர்வோடு பேசுவதும் எழுதுவதும் ரொம்ப முக்கியம். அந்த வகையில் நான் மனசார பாராட்ட விரும்புவது ராஜுமுருகன். ஒவ்வொரு எழுத்தையும் ஒரு பொறுப்பாக நினைத்து, கருத்தோடு, மனிதநேயத்தோடு படம் எடுக்கிறவர். அவருடைய சிந்தனைக்குத் துணை நின்றதே தான் இந்தப் படம் இவ்வளவு அழகாக உருவாகக் காரணம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் சசிகுமார் சாரிடம் நான் சொன்ன முதல் வார்த்தை 'நன்றி சார்'...
மை லார்ட் – மக்களுக்கான சினிமா

மை லார்ட் – மக்களுக்கான சினிமா

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' மை லார்ட் (My Lord)' எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய குரு சோமசுந்தரம், "இயக்குநர் ராஜு முருகன் அவர்களை நான் முதலில் குக்கூ படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தான் சந்தித்தேன். அவர் எழுத்துக்களை முன்பே படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் கொண்ட அனுபவம், சமூகத்தின் மீது கொண்ட அக்கறை, அதெல்லாம் அவரது படைப்புகளில் தெளிவாக தெரிகிறது. ஜோக்கர் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்குப் பெருமை. இந்தப் படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி. சசி சார் உடன் நடித்தது ரொம்ப சந்தோஷம...
மை லார்ட் – எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறல்

மை லார்ட் – எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறல்

சினிமா, திரைத் துளி
சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மை லார்ட் (My Lord)’ எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்குப் பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி.ஆர்.பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்ற, நடனத்தை எம்.ஷெரீப்பும், சண்டைக் காட்சிகளை பி.சி. ஸ்டன்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார். இதனைத் தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபில...
“உதவும் மனப்பான்மை வணிகமாக மாறி குற்றச்சம்பவத்திற்கு வழி வகுக்கிறது” – அதிஷா | DNA

“உதவும் மனப்பான்மை வணிகமாக மாறி குற்றச்சம்பவத்திற்கு வழி வகுக்கிறது” – அதிஷா | DNA

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, கடந்த இருபதாம் தேதியன்று வெளியான DNA திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது. இதைத் தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தின் வெற்றிக்குக் காரணமான இணை கதாசிரியரும் எழுத்தாளருமான அதிஷா, '' இது என்னுடைய இருபது ஆண்டுகால கனவுப் பயணம். இந்தத் தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தேன்.‌ இந்த க...
டிஎன்ஏ விமர்சனம் | DNA review

டிஎன்ஏ விமர்சனம் | DNA review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
DNA என்பது பிரதான கதாபாத்திரங்களான திவ்யாவையும் ஆனந்தையும் குறித்தாலும், படத்தில் ஒரு குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது. காதல் தோல்வியால் மதுபோதைக்கு அடிமையாகி மீளும் ஆனந்திற்கும், BPD எனப்படும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் கொண்ட திவ்யாவிற்கும் திருமணம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும், அம்மகவைக் கையில் வாங்கும் திவ்யா, அது தன்னுடைய குழந்தை இல்லை எனச் சொல்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள் என அனைவரும் திவ்யாவை நம்பாத பொழுது, ஆனந்த் மட்டும் திவ்யா சொல்வதை நம்பித் தனது குழந்தைக்காகப் போராடத் தொடங்குகிறான். சுழலில் சிக்கியது போல், ஆனந்தின் அந்தத் தேடலும் போராட்டமும் அவனை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. திவ்யாவின் மீது ஆனந்த் வைத்த நம்பிக்கை வென்றதா இல்லையா என்பதே படத்தின் முடிவு. ஃபர்ஹானா படத்தில், வசனங்களுக்காக மனுஷ்யபுத்திர...
“DNA என்றால் திவ்யா & ஆனந்த்” – அதர்வா

“DNA என்றால் திவ்யா & ஆனந்த்” – அதர்வா

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் அதர்வா, ''கடந்த தசாப்தத்தில் வெளியான சிறந்த படங்களில் பரியேறும் பெருமாள் ஒன்று.‌ இந்தப் படத்தின் வாய்ப்பைத் தவறவிட்டதால் எதையும் இழக்கவில்லை என நினைக்கிறேன். ஏனெனில் கதிர் மிக அற்புதமாக நடித்திருந்தார். மாரி செல்வராஜிடம் வேறு ஏதேனும் கதை இருந்தால் அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். டிஎன்ஏ படத்தின் கதையை இயக்குநர் நெல்சன் சொல்வதற்கு முன் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் ஃபோனில் சொல்லிவிட்டார். ஆனால் அப்போது படத்தின் டைட்டில் என்ன என்று கேட்கவில்லை. இயக்குநர் நெல்சன...
“மனிதத்தை மதிக்காதவர்கள் வாழும் சமூகத்தில் எப்படி வாழுவது?” – மாரி செல்வராஜ் | DNA திரைப்படம்

“மனிதத்தை மதிக்காதவர்கள் வாழும் சமூகத்தில் எப்படி வாழுவது?” – மாரி செல்வராஜ் | DNA திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், ''இந்தப் படத்தை நேற்று இரவு தான் என் உதவியாளர்களுடன் பார்த்தேன். அதன் பிறகு திவ்யா கதாபாத்திரத்தின் வடிவமைப்பு குறித்து விவாதித்தோம்.‌ திவ்யாவுக்கு என்ன டிஸ்ஸார்டர் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு என் உதவியாளர், ‘மிகவும் எனர்ஜியாக இருப்பார்கள். துருதுருவென்று ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருப்பார்கள்’ என்று விளக்கினார். நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டே படம் பார்க்கிறேன். ஆனால் நான் இங்கு மேடையில் வந்த பிறகு அவருடைய நடவடிக்கையைக் கவனித்தேன். அவருடைய நடவடிக்கையைப் பார...
“DNAவின் வெற்றி – ஒரு தலைமுறைக்கான வாசலைத் திறக்கும்” – ராஜு முருகன்

“DNAவின் வெற்றி – ஒரு தலைமுறைக்கான வாசலைத் திறக்கும்” – ராஜு முருகன்

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் ரமேஷ் திலக், ''பத்து வருடங்களுக்கு முன் இதே மேடையில் தான் இயக்குநர் நெல்சன் இயக்கிய 'ஒரு நாள் கூத்து' படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. அவர் தொடர்ந்து நிறைய படங்களை இயக்க வேண்டும் ஏனெனில் அவர் ஒரு நேர்மையான இயக்குநர். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு இப்போது தான் இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்திருக்கிறார். பொருத்தமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அழைத்து வாய்ப்பளிப்பார்” என்றார். இயக்குநர் ராஜூ முருகன், ''என் மனதிற்கு நெருக்கமாக இருப்பவர்கள் அனைவ...
“மனித உணர்வுகளை நுட்பமாகச் சொல்லக்கூடியவர் நெல்சன் வெங்கடேசன்” – கார்த்திக் நேத்தா | நிமிஷா சஜயன் | DNA திரைப்படம்

“மனித உணர்வுகளை நுட்பமாகச் சொல்லக்கூடியவர் நெல்சன் வெங்கடேசன்” – கார்த்திக் நேத்தா | நிமிஷா சஜயன் | DNA திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ''இந்த மேடையில் வியப்பாகவும், சிலிர்ப்பாகவும் சொல்ல நினைப்பது இயக்குநர் நெல்சனைப் பற்றி தான். அவரிடம் தொடர் இலக்கிய வாசிப்பு இருக்கிறது. சமகாலத்தில் சமூகத்தின் அசைவுகளை அவதானித்து, அதில் தன்னுடைய பார்வையைப் பதிவு செய்வதில் தீவிரமானவர். அத்துடன் உலகத் திரைப்படங்களையும் தீவிரமாகப் பார்க்கக் கூடியவர். இத்தகைய அனுபவங்களில் ஊறி வெளியாகும் படைப்புதான் இது. அவருடன் பாடல் எழுதும் போது பாடலுக்காக அவர் விவரிக்கும் சூழல் வாழ்க்கைக்கான கொண்டாட்டமாக இல்லாமல் நம்முடைய வாழ்க்கைக்குள் இருக்க...
ஜிப்ஸி விமர்சனம்

ஜிப்ஸி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜிப்ஸி என்றால் நாடோடி எனப் பொருள்படும். காஷ்மீரில், ஒரு முஸ்லீம் அம்மாக்கும், ஹிந்து அப்பாக்கும் பிறக்கும் குழந்தை, இந்தியாவெங்கும் பயணிக்கும் ஒரு நாடோடியிடம் வளர நேருகிறது. அந்நாடோடி குழந்தைக்கு ‘ஜிப்ஸி’ எனப் பெயரிடுகிறார். அரசியல் புரிதலுள்ளவனாக வளரும் ஜிப்ஸிக்குக் கட்சிச் சார்போ, கொள்கைச் சார்போ எதுவும் கிடையாது. ஆனாலும், புரட்சிகர தெருப் பாடகனாக அடையாளம் காணப்படுகிறான். தனக்கான முகம் என நாகூரில் ஒரு பெண்ணை அடையாளம் காணுகிறான். அந்தப் பெண், திருமணத்திற்கு முன் தினம் அழுது கொண்டிருப்பதைப் பார்க்கிறான். உடனே ஜிப்ஸி, “கவலைப்படாதீங்க உங்க ஆளுங்க (பாகிஸ்தான்) தான் ஜெயிப்பாங்க (கிரிக்கெட்டில்)” என வஹிதாவிடம் சம்பந்தமே இல்லாமல் சொல்கிறான். அதுவரை அழகான விஷுவல்ஸ்களினால் கள்ளுண்ட போதையில் மதி மயங்கி படம் பார்த்துக் கொண்டிருந்த மயக்கம் சட்டெனத் தெளிகிறது. நம்முடன் வாழும் முஸ்லிம்கள் இந்தியர்கள் ...