Shadow

சினிமா

“யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை” – பா.ரஞ்சித்

“யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை” – பா.ரஞ்சித்

சினிமா, திரைத் துளி
“ஒன் டே புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “நறுவி” திரைப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் கிறிஸ்டி, "இந்தப்படம் எனக்குக் கிடைக்கக் காரணமே இயக்குநர் ரஞ்சித் தான். சினிமா எப்ப வேணும்னாலும் உன்னை மாத்தும் என்று ரஞ்சித் சொன்னார். அப்படியொரு மாற்றம் ரஞ்சித் மூலமாகத்தான் நடந்தது. இந்தப் படத்தில் என்னை கமிட் செய்த தயாரிப்பாளருக்குப் பெரிய நன்றி. அதேபோல் இயக்குநர் ராஜா முரளிதரனுக்கும் பெரிய நன்றி" என்றார். இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், "பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப் படுத்தும் சூழ்நிலையில் இன்று 'நறுவி' படத்தின் விழாவில் இருக்கிறோம். இந்தப் படத்தில் உழைத்த அனைவருக...
எரும சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி

எரும சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி

சினிமா, திரைத் துளி
வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன் மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் நீட்சியாக இணைய உலகில் ‘எரும சாணி’ மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். MNM Films சார்பில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது, ”இப்படம் கல்லூரி வாழ்வின் பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக் கதையைக் கூறிய போதே அதில் பல உற்சாகமிகு தருணங்களுடன் பரபரப்பும் நிறைந்திருந்தது. இந்தப் படத்தின் திரைக்கதையை முடித்தவுடன் நாங்கள் முதல் வேலையாக நடிகர் அருள்நிதியை தான் அணுகினோம். எப்போதும் தரமான பரீட்சார்த்த முயற்சிகளுக்குச் செவி சாய்ப்பவர் அவர். ...
கபடதாரியில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

கபடதாரியில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

சினிமா, திரைத் துளி
சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படத்தில், சத்யா பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகராக அறிமுகமாவதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் G.தனஞ்செயன் இது குறித்து கூறியதாவது, “கபடதாரி எங்கள் அனைவரின் மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. இப்படத்தின் கதை பற்றி அறிந்த கணத்திலிருந்தே படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப் படத்தில் நாங்கள் பங்கு கொண்ட கணத்திலிருந்தே இப்படைப்பு அனைவரிடத்திலும் மிகப் பெரும் உற்சாகத்தை அள்ளித் தெளித்துள்ளது. படத்தில் நடித்து வரும் அனைவருமே தங்கள் முழுத் திறமையையும் கொட்டி தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளார்கள். இக்கதையில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு நல்ல உடற்கட்டுடன், ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கக் கூடிய நடிகர் தேவைப்பட்டார். படக்குழுவுடன் இணைந்து பலரை மனதில் கொண்டு,...
‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி

‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி

Others, காணொளிகள், சினிமா, திரைத் துளி
சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கெனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காகப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக்கை பரிசு அளிப்பதாக அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்துப் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவித்திருக்கிறார் படத் தயாரிப்பாளர் ஹஷீர். இந்தப் படத்தில்,க் ஆணவ கொலைகளுக்கு எ...
ரசிகர்களின் அன்பில் – மாஃபியா அருண் விஜய்

ரசிகர்களின் அன்பில் – மாஃபியா அருண் விஜய்

சினிமா, திரைத் துளி
அருண் விஜய் தனக்கான அடையாளத்தைப் போராடி வென்றவர். தோல்விகளில் பாடம் கற்று, தொடர் வெற்றியைப் பெற்று வரும் அவரது நீண்ட கால சினிமா பயணம், பலருக்கு வாழ்க்கைப் பாடம். சமீபமாக அவரைக் காணும் இடங்களில்  ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.படு ஸ்டைலீஷ் லுக்கில் அவர் கலக்கியுள்ள “மாஃபியா” படம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்றுள்ளது. “மாஃபியா” ரிலீஸ் அன்று சென்னையில் SPI Cinemas, KG Cinemas அரங்குகளில் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களது அன்பில் மிதந்தவர், பிப்ரவரி 22 அன்று கோயம்புத்தூர் INOX திரையரங்கில் ரசிகர்களைச் சந்தித்தார். அங்கு ரசிகர்கள் அருண் விஜயை நேரில் கண்டதில் உற்சாக மிகுதியில் கொண்டாடித் தீர்த்தனர். இது குறித்து, "கோயம்புத்தூர் நகரம் கலப்பற்ற நேர்த்தியான நகரம். அங்குள்ள ரசிகர்கள் எப்போதும் பெரிய  நட்சத்திரங்களைக் கண்மூடித்தனமாகக் கொண்டாடுவதில்லை. அவர்கள் தரமான ப...
கட்புலனாகாத சைக்கோ மனிதன்

கட்புலனாகாத சைக்கோ மனிதன்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘தி இன்விசிபிள் மேன்’ எனும் அறிவியல் புனைவு நாவலை 1897 இல் எழுதினார் H.G.வெல்ஸ். அதை அடிப்படையாகக் கொண்டு, 1933 இல் ‘தி இன்விசிபிள் மேன்’ எனும் திரைப்படம் உருவானது. அதைத் தொடர்ந்து, 1940 இல் 'தி இன்விசிபிள் மேன் ரிட்டர்ன்ஸ்', 1951 இல் 'அபோட் அண்ட் காஸ்டெல்லோ மீட் தி இன்விசிபிள் மேன்', 1984 இல் சோவியட் படமான 'தி இன்விசிபிள் மேன்', 2000இல் வெளிவந்த 'ஹாலோ மேன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, H.G.வெல்ஸின் நாவலைத் தழுவி, 'தி இன்விசிபிள் மேன் (2020)' படம் வ்ளியாகவுள்ளது. பணக்காரனும், அதிமேதாவி விஞ்ஞானியுமான ஆலிவர் ஜாக்ஸன் கோஹனின் வன்முறையைக் கையாளும் உறவில் இருந்து, ஓரிரவு தப்பிச் சென்று தலைமறைவாகிறார் செசிலியா காஸ். ஒருநாள் ஆலிவர் ஜாக்ஸன் கோஹன் தற்கொலை செய்து கொள்கிறான். அவனது பெரும் சொத்து செசிலியா காஸ்க்குக் கிடைக்கும்படி உயில் எழுதி வைக்கிறான். அவன் இறந்துவிடவில்லை, அரூபமாய் மாறி தன்னை டார்ச்சர்...
‘கன்னி மாடம்’ படக்குழு – வெற்றிக் கொண்டாட்டம்

‘கன்னி மாடம்’ படக்குழு – வெற்றிக் கொண்டாட்டம்

சினிமா, திரைத் துளி
ரூபி பிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியா ரோபோ ஷங்கர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘கன்னி மாடம்’. ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவான இப்படம், அனைத்துth தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று சென்னை ஏவி.எம் ராஜேஷ்வரி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாகப் படம் பார்த்த படக்குழுவினர் அனைவரும், அவர்களோடு படத்தின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். வெற்றியை மிகப்பெரும் கேக் வெட்டி, ரசிகர்களுக்குக் கொடுத்தும், படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்தும் தங்களது வெற்றியைக் கொண்டாடினர். மேலும், இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹரீஷ் சாய், ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரீஷ், ரோ...
பாரம் – சொன்னதைச் செய்த மிஷ்கின்

பாரம் – சொன்னதைச் செய்த மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
சினிமா மீது தீராத காதல் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். தனது தனித்துவமான படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரது படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் அதே நேரத்தில் திரைக்கல்லூரிகளில் பாடங்களாக விவாதிக்கப்பட்டும் வருகின்றது. சினிமாவை உயிராக நேசிக்கும் அவர் நல்ல படங்கள் வரும் போது, முதல் ஆளாகப் பார்க்கவும் பாராட்டவும் தவறுவதில்லை. “பாரம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், 'பாரம் படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காகத் தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன்' எனக் கூறியது போலவே அவர் தற்போது செய்து காட்டியுள்ளார். சினிமா மீதான அவரது அளவற்ற நேசிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்குநர் மிஷ்கினின் அளவிலா அன்பின் செயலால் மிகுந்த புளகாங்கிதம் அடைந்துள்ளார். "பாரம் படம் மீது இயக்கு...
ஓம் என்கிற மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்

ஓம் என்கிற மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓம் எனத் தொடங்கப்பட்ட படத்தை, 'மீண்டும் ஒரு மரியாதை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளனர். மகனால், லண்டன் ஓல்ட் ஏஜ் ஹோமில் சேர்க்கப்படுகிறார் பாரதிராஜா. அங்கே அவரது நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரளிக்கும் உயிலை உரியவரிடம் சேர்க்க ஸ்காட்லாந்திற்குக் கிளம்புகிறார். இடையில், தற்கொலைக்கு முயலும் ராசி நட்சத்திராவிடம் ஆதரவாகப் பேசி, அவரைத் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்கிறார். தன்னுடன் ஸ்காட்லாந்து வரை பயணித்தால், தற்கொலை எண்ணம் விலகும் எனக் கூறி ராசி நட்சத்திராவுடன் பயணிக்கிறார். பயணத்தின் முடிவில் என்னாகிறது என்பதே படத்தின் கதை. OM (ஓம்) என்றால் ஓல்ட் மேன். ராசி நட்சத்திரா பாரதிராஜாவை, ஓல்ட் மேன் என்றே படம் முழுவதும் அழைக்கிறார். ஆனால், அவரை யாராவது அப்படி அழைத்தால் ராசி நட்சத்திராவிற்குக் கோபம் வந்துவிடுகிறது. 'நம் வீட்டுக் குழந்தையை நாம் விருப்பப்பட்ட பெயரில் கூப்பிடலாம். ஆனால் இன்னொரு...
மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்

மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாஃபியா – குற்றத்தை நிறுவனமயப்படுத்தும் ஓர் இயக்கம் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, போதைப் பொருள் கடத்துவதை நிறுவனமயப்படுத்தும் திவாகர் குமரனைப் பிடிக்க நினைக்கிறார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஆரியன். இதுதான் மாஃபியா படத்தின் கதை. Ground to Earth பெர்ஸ்னாலிட்டியாக நடித்துள்ளார் பிரசன்னா. டிகே (DK) எனும் திவாகர் குமரன், பெரிய சிண்டிகேட்டின் லோக்கல் தலைவராக இருந்தும், யாரையாவது மிரட்ட, தானே நேரடியாகக் களம் இறங்குகிறார். அவரது அலட்டலில்லாத அமைதி ரசிக்க வைக்கிறது. காட்டில் தானொரு நரி எனச் சொல்லிக் கொள்ளும் அவர், அது போன்று குயுக்தியாக எதுவும் செய்வதில்லை. நாயகனைக் காதலிக்கவும், ஸ்லோ-மோஷனில் நடக்கவும், ஆரியனின் குழு உறுப்பினர் சத்யாவாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இன்னொரு குழு உறுப்பினர் வருணாக பாலா ஹாசன் நடித்துள்ளார். வில்லனின் குடோனைத் தாக்கும் மிக முக்கிய பணியை இருவரும் ...
பாரம் விமர்சனம்

பாரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தேசிய விருது பெற்ற இப்படத்தின் தலைப்பே சற்று குழப்பம்தான். உடம்பு முடியாமல் படுத்துவிடும் முதியவர்களை தான் 'பாரம்' எனத் தலைப்பு சுட்டுகிறதோ என எண்ண வேண்டியுள்ளது. தலைக்கூத்தல் (Thalaikkoothal - தலைக்கு ஊத்தல்) என்பது பற்றி ஆன்லைனில் படிக்க நேரிடும் இயக்குநர் பிரியா கிருஷ்ணாசாமிக்கு, மேலும் அது சம்பந்தமான ஒரு உண்மைக் கதையும் தெரிய வருகிறது. இது கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டியதென முடிவுக்கு வந்து, திரைப்படமாக எடுக்க ஆய்வு மேற்கொள்கிறார். இப்படமும் டாக்குமென்ட்ரி டிராமா வகையைச் சார்ந்ததே! தங்கை வீட்டில் தங்கி, வாட்ச்மேன் வேலை பார்க்கும் கருப்பசாமிக்கு விபத்து ஏற்பட்டு இடுப்பெலும்பு உடைகிறது. அவரது மகன் செந்தில், அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்காமல், நாட்டு மருத்யுவர் குணப்ப்டுத்துவார் என கிராமத்திற்கு அவரை அழைத்துச் சென்றுவிடுகிறான். அவர் இறந்து விடுகிறார். தனது தாய்மாமா கருப்பசா...
காட் ஃபாதர் விமர்சனம்

காட் ஃபாதர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எளிமையில் எண்ணற்ற வலிமையுண்டு என்பதை நிரூபித்து இருக்கிறது காட்ஃபாதர். ஒரு சாதாரண அப்பாவிற்கும், மற்றொரு தாதா அப்பாவிற்கும் முட்டல் வந்தால் முடிவு என்னாகும் என்பதைத் தான் காட்ஃபாதர் பேசி இருக்கிறது. திரைக்கதை அமைப்பில் வலுவாக இருக்கிறார் காட்ஃபாதர். அமைதியை விரும்பும் நட்டிக்கு மகன் என்றால் உயிர். அந்த மகனின் உயிரைத் தன் மகனுக்காக வாங்க நினைக்கிறார் வில்லன் லால். நட்டி தன் மகனைக் காப்பாற்ற அப்பார்ட்மென்ட் உள்ளிருந்தே எடுக்கும் முயற்சிகள், அதற்கு லால் எதிர்வினையாற்றும் செயல்கள் என படம் நெடுக பரபரப்பிற்குக் குறைவேயில்லை. நடிகர் நட்டிக்கு இந்தப் படம் நல்லதொரு அடையாளம். எல்லாக் காட்சிகளையும் சரியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். அவரின் மனைவியாக வரும் அனன்யாவும் குறை காண முடியாதளவில் தன் பங்களிப்பைக் கொடுத்துள்ளார். வில்லன் லானின் நடிப்பில் வீரியம் அதிகம். குட்டிப்பையன் அஸ்வந்த் அட...
கன்னிமாடம் விமர்சனம்

கன்னிமாடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கன்னிப் பெண்கள், கர்ப்பினிப் பெண்கள், பெண் துறவிகள் என பெண்கள் தனியே தங்கும் இடத்திற்குப் பெயர் கன்னிமாடம் ஆகும். இந்தப் படத்தின் நாயகியான மலர்க்கோ தங்க ஓரிடம் இல்லா மல் தவிக்கிறார். படத்தின் தகிப்பிற்குக் காரணமோ, படம் தொட்டுள்ள ஆணவக்கொலை எனும் விஷயமாகும். நாயகன் அன்புவின் தங்கையை, அவனது தந்தையே சாதி ஆணவத்தில் படுகொலை செய்து விடுகிறார். தன் குடும்பமே சிதைந்துவிட்டது என வருத்தத்தில் இருக்கும் அன்பு, சென்னைக்கு ஓடி வரும் மலர் - கதிர் ஜோடியை அரவணைக்கிறான். கதிர் விபத்தில் இறந்து விட, நிராதரவாய் இருக்கும் கர்ப்பிணியான மலரைப் பாதுகாக்கும் பொறுப்பு அன்புவிற்கு ஏற்படுகிறது. இந்தச் சமூகக் கட்டமைப்பில் அது அத்தனை எளிதான காரியமா என்ன? அன்புக்கு நேரும் சோதனையும் சவால்களும் தான் படத்தின் கதை. 'இன்னுமா சாதி பார்க்கிறாங்க?' என அப்பாவித்தனமாய்க் கேட்கும் கவுன்சிலர் அழகுராணியாக ரோபோ ஷங்கரின் மனைவி பிரி...
இளைஞர்களைக் கவர்ந்த ‘ஓ மை கடவுளே’

இளைஞர்களைக் கவர்ந்த ‘ஓ மை கடவுளே’

சினிமா, திரைத் துளி
சென்ற வாரம் வெளியான படங்களில் 'ஓ மை கடவுளே' படம் வெற்றியை அடைந்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களிடம் இப்படம் பற்றிய ரிசல்ட்டைக் கேட்டபோது, "வெள்ளிக்கிழமை ஓப்பனிங்கில் படம் பெரிதாக பிக்கப் ஆகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இருநாட்களிலும் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களால் ரசிகர்கள் குவியத் துவங்கினார்கள். குறிப்பாக திங்கள் செவ்வாக்கிழமை கூட தியேட்டருக்கு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்" என்றனர். மேலும், இப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை இன்று படக்குழு நடத்தினார்கள். விழாவில் ஹீரோ அசோக் செல்வன் இயக்குநர் அஸ்வத், தயாரிப்பாளர் டில்லிபாபு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். - ஜெகன் சேட்...
ஏற்றத்தாழ்வினைப் பேசும் பாராசைட்

ஏற்றத்தாழ்வினைப் பேசும் பாராசைட்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘பாராசைட் (Parasite)’ என்பது ஒட்டுண்ணியைக் குறிக்கும். மற்றொரு உயிரினத்தை ஒட்டி வாழும் உயிரை ஒட்டுண்ணி என்பர். படத்தின் கருவை உணர்த்தும் குறியீட்டுப் பெயராக, ‘பாராசைட்’ எனும் தலைப்பினைக் கொள்ளலாம். இந்தக் கொரியன் படம் மொத்தமாக 4 ஆஸ்கார் விருதுகளை அள்ளியிருக்கிறது. அதுவும் சிறந்த படம், சிறந்த சர்வதேச படம் எனும் இரண்டு முக்கிய கேட்டகரியிலும் வென்றதால் வியத்தகு பாராட்டுகளையும், கடுமையான விமர்சனங்களையும் சம அளவில் சந்தித்து வருகிறது. ஆஸ்கார் விருதுகளில் லாபி அதிகம், அதே போல ஹாலிவுட் தயாரிப்பாளர்களின் வணிக நோக்கமும் விருதுக்கான தேர்வில் அழுத்தத்தினைக் கொடுக்கும். ஆசிய மார்கெட்டை ஹாலிவுட் பக்கம் திருப்பக் கூடுதல் கவனத்தை, சமீப வருடங்களில் ஆஸ்கார் விருதின் போது அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, ஆஸ்கார் விருதுகளைப் பெரிய அங்கீகரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இந்த விருதுகளைத் தாண்டி, உண்மையிலேயே ...