Shadow

சினிமா

பிழை விமர்சனம்

பிழை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகளை மையப்படுத்தி வரும் படங்களில், கதையினூடாக மறைமுகமாகவோ, நேராகவோ பாடம் புகட்டுதலும் இருக்கும். பிழை படமும் அப்படியான ஒரு முயற்சி தான். ஆனால் பிழை ஒரு நல்ல பாடத்தைத் தாங்கி வந்திருந்தாலும் ஒரு நல்லபடமாக உருபெற சற்றே திணறுகிறது. வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு கல்வி என்பது கசப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால், அக்குழந்தை மாணவர்கள் மட்டம் தட்டப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் சென்னை வர, அதன் பின் அவர்களுக்கு என்னானது என்பது தான் படத்தின் கதை. படத்தில் நடித்துள்ளவர்கள் எல்லாரும் சிறப்பாகவே நடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான பின்கதை ரைட்டிங் மிகவும் பின் தங்கி இருப்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் பார்வையாளர்களின் பொறுமையை மிகவுமே சோதித்து விடுகின்றனர். படிக்காமல் தனது உழைப்பால் முன்னேறியவர்களை மட்டும் கணக்கில் எடுத்...
“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி

“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி

சினிமா, திரைத் துளி
‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தைத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படம் தமிழில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி அன்று வெளியிடப்பட இருக்கிறது. படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி, “எனது அம்மா ஒரு சிறந்த திரைப்பட ரசிகை. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு தென்னகத்து மொழிப் படங்களையும் பார்த்து ரசிப்பார். அதிலும் குறிப்பாக அவருக்கு பாலசந்தர் மற்றும் கமல் ஹாசனின் படைப்புகள் மிகவும் பிடிக்கும். அவரோடு சேர்ந்து தமிழ்ப் படங்களின் மீது எனக்கும் ஒரு பெரிய நன்மதிப்பும் மரியாதையும் உண்டு. மேலும் தமிழ்ப் படங்களில் கதையும், திரைக்கதையும் பலமாக இருப...
“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்

“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி”சிங்கிள் பாடலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. மேலும் அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறியதாவது, “அனிருத் எங்களது உயிர் நண்பர். அவரை எங்கள் இசையில் பாட வைப்பது எங்களது நெடுநாளைய கனவு. ஜிகிடி கில்லாடியில் அது நிறைவேறியிருப்பது எங்களுக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. “ஜிகிடி கில்லாடி” பாடல் எங்கள் மனதுக்கு நெருக்கமான ஒன்று. தனுஷ் அனிருத் கூட்டணி என்பது எப்போதும் வெற்றிக் கூட்டணி. இப்பாடலின் அசுர வெற்றி அத...
சில்லுக்கருப்பட்டி விமர்சனம்

சில்லுக்கருப்பட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்த உலகம் அன்பிற்கானது. இந்த மனிதர்கள் அன்பால் ஆனவர்கள் அன்பிற்காக ஏங்குபவர்கள். அன்பை அதிகாமாக வைத்திருப்பவர்களும் கூட என்பதைக் கவித்துவமாகச் சொல்லிச் செல்கிறது சில்லுக்கருப்பட்டி. நான்கு கதைகளுக்குள் நான்கு வாழ்க்கையை வைத்து சில்லுக்கருப்பட்டியைத் திகட்டாமல் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம். குப்பை மேட்டில் கிடைக்கும் பொருட்களை எடுத்து விற்பனை செய்யும் ஒரு சிறுவன் கையில் கிடைக்கும் வைரமோதிரமும், அந்த மோதிரத்தைத் தொலைத்த பணக்கார வீட்டுச் சிறுமியும் எப்படி நட்பாகிறார்கள் என ஒரு கதை. திருமணம் நிச்சயமாகி இருக்கும் வேளையில் கேன்சர் வந்த ஐடி இளைஞனும், அவனோடு ஓலா காரில் ட்ராவல் ஷேர் செய்து, பின் காதலை ஷேர் செய்யும் பெண்ணுக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒரு கதை. முதிர்ந்த வயதிலும் காதல் வரும் என்பதையும், அந்தக் காதல் வருவதற்கான காரணத்தையும் அற்புதமாகச் சொல்லும் ஒரு கதை. திருமணம் முடி...
V1 விமர்சனம்

V1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விசாரணையில் துவங்கும் படம், சமூகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு விசயத்தை மீள் விசாரணை செய்வதாக முடிகிறது. லிவிங் டுகெதரில் இருக்கும் ஒரு ஜோடியில், பெண் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவளின் காதலன், ‘கொலையை நான் தான் செய்தேன்’ என ஒப்புக் கொள்கிறான். ஆனால் கொலையை அவன் செய்யவில்லை. அந்தக் கொலையை யார் செய்தார் என்ற கேள்வியோடு படம் விரிகிறது. யார் கொலைகாரர் என்ற கேள்வியில் பயணிக்கும் படத்தில் திருப்புமுனைகள் தான் பிரதானம். V1 படத்தில் அது திரும்பும் இடத்தில் எல்லாம் இருக்கிறது. அவையெல்லாம் நம்மை ஈர்ப்பதற்கான திருப்புமுனைகளையே ஒழிய லாஜிக் ரிதீயான திருப்புமுனையாக இல்லை. இதுதான் இப்படத்தின் சறுக்கல். நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ சிரமம் இல்லாமல் நடிக்க வேண்டிய இடங்களில் எல்லாம் சிரமப்பட்டிருக்கிறார். நாயகி விஷ்ணுபிரியா ஓரளவு அவரின் காதாபாத்திரத்திற்குரிய நியாயத்தை நடிப்பில் சேர்த்துள்ளார். லிஜீஸ் ...
ஹீரோ விமர்சனம்

ஹீரோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜென்டில் மேன் 2 என்றே படத்திற்குத் தலைப்பு வைத்திருக்கலாம். அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற நன்நோக்கமுடைய கொள்ளைக்காரன் சத்தியமூர்த்தியாக அர்ஜுன் வருகிறார். படத்தின் நாயகன் அவர் தான். ஸ்கூல் படிக்கும் பொழுது சக்திமான் தொடர் பார்த்து சூப்பர் ஹீரோ ஆகவேண்டுமென ஆசைப்படுகிறான் சக்தி. வளர்ந்த பின்னும் அந்த ஆசை விடாமல் சக்தியைத் துரத்த, ஜென்டில் மேன் சத்தியமூர்த்தியின் உதவியுடன், ஒரு முகமூடி அணிந்து சூப்பர் ஹீரோவாகி விடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. தொழிலதிபர் மகாதேவாக அபய் தியோல். சத்தம் போடாத, பணம் சம்பாதிப்பதில் கண்ணாக இருக்கும் காரிய வில்லனாக அசத்துகிறார். ஆனாலும், க்ளைமேக்ஸில் அவரை வழக்கமான சோப்ளாங்கி வில்லனாக்கி, சூப்பர் வில்லனாகப் பரிணமிக்க வேண்டியவரைச் சாதாரண வில்லனாக்கி உச்சபட்ச அநியாயம் செய்துள்ளார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். கடல் நீரில் ஓடும் வாகனத்தைக் கண்டுபிடித்ததற்கான பேடன்ட் உரி...
தம்பி விமர்சனம்

தம்பி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாபநாசம் படத்தின் மூலம் நம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ஜீத்து ஜோசப். பாபநாசத்தைப் போலவே தம்பியும் ஒரு த்ரில்லிங் அனுபவத்தைக் கொடுக்கின்றது. கதை சொல்வதில் தனது த்ரில்லர் திறமையைக் கொட்டி இருக்கிறார் ஜீத்து. ஆனால் கொஞ்சம் அதிகமாகவே கொட்டியுள்ளார். கதைக்கு ட்விஸ்ட் என்பது சுவாரசியமாகவும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் என்று வெறும் ட்விஸ்டாக மட்டுமே கொடுத்துக் கொண்டு இருந்தால் எப்படி? ஜீத்து, மலையாள வாசத்தோடு படத்தை எடுத்துள்ளார். கதாபாத்திரங்கள் அனைவரும் தமிழில்தான் பேசுகிறார்கள். ஆனால் அது மலையாளப் படமாகத்தான் நகருகிறது. தமிழில் பேசுவதாலேயே தமிழ்ப்படம் என்று சொல்ல முடியாது. ஏன் என்றால், ஒவ்வொரு காட்சிக்குமான அரேஞ்ச்மென்ட்ஸ் மலையாள மார்க்கமாகவே இருக்கிறது. ஒரு காட்சிக்குள் படிப்படியாகக் கதாபாத்திரங்களைக் கொண்டு வர இயக்குநர...
டூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்

டூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா
விக்டோரியன் காலகட்டத்தில் நடக்கும், டாக்டர் டூலிட்டிலின் பிரபலமான கதை, புதிய கதாபாத்திரங்களுடன் பெரிய திரையில் ஜனவரி 17, 2020 அன்று வெளியாகவுள்ளது. டூலிட்டில் என்னும் புனைவுக் கதைகளின் மிக உறுதியான கதாபாத்திரங்களின் ஒன்றாகவும், மிருகங்களுடன் பேசும் திறன் கொண்ட ஒரு மனிதனின் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜுனியர் நடித்துள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் அதே தினத்தில், டூலிட்டில் திரைப்படம் இந்தியாவிலும், ஆங்க்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் ரீமேக் இப்படம். ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகத் தனது மனைவியை இழந்த, துடிப்பான டாக்டர் ஜான் டூலிட்டில், பிரபலமான மருத்துவராகவும், குயின் விக்டோரியாவின் இங்கிலாந்தில் செயலாற்றும் ஒரு விலங்குகள் வல மருத்துவராகவும் திகழ்கிறார். மேலும், டூலிட்டர் மேனரின் உயரமான சுவர்களுக்குப் பின்னால் தனக்குப் பிடித...
ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம் மேற்கொண்டுள்ளனர் ராக் & கோ. இம்முறை மேலும் கலகலப்பிற்கு உத்திரவாதமளித்துள்ளனர். எட்டி (Eddie) எனும் முதியவர் பாத்திரம் ஒன்று வருகிறது படத்தில். இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ள அப்பெரியவருக்கு, ஜுமான்ஜி விளையாட்டுக்குள் ஆஜானபாகு ராக்கின் உருவம் கிடைக்கிறது. அந்தப் பெரியவரின் மனநிலைக்கு ஏற்றவாறு, ராக்குடைய ப்ரேவ்ஸ்டோனின் முக பாவனைகள் மாறுவது காமிக்கலாக ரசிக்கும்படி உள்ளது. படத்தில் இன்னொரு ரசனையான கேரக்டர், திருடி மிங் ஃப்ளீட்ஃபூட் ஆகும். ஆவ்க்வாஃபினா எனும் அந்த நடிகை, ஸ்பென்சர் மிங் வடிவத்தை ஏற்கும் பொழுதும், பின் முதியவர் எட்டி அவ்வடிவத்தை எடுக்கும் பொழுதும் நல்ல வேறுபாடு காட்டியிருந்தார். திரையரங்கில் குழந்தைகள் ரசித்து மகிழும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நெருப்புக்கோழிகள் துரத்தும் பொழுது தப்பிக்கும் சாகசம், நகரும...
மெரினா புரட்சி விமர்சனம்

மெரினா புரட்சி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு 2016-ஆம் ஆண்டில் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மெரினா புரட்சி தான் பெரிய போராட்டம். அப்போராட்டத்திற்கான முதல் புள்ளியை வைத்தவர்கள் யார்? அப்போரட்டத்தின் போது நடைபெற்ற அரசியல் சூதாட்டங்கள் என்ன? அப்போராட்டத்திற்கு எதிராக நின்ற இரண்டு தமிழர்கள் பற்றிய தகவல்கள் என படம் பல ஆச்சர்யம் & அதிர்ச்சியூட்டும் விஷயங்களை ஆவணப்படுத்தி இருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் படமாகப் பதிவு செய்வதில் தான் இயக்குநர் எம்.எஸ் ராஜ் வெற்றி பெற்றுள்ளாரே ஒழிய இதை ஒரு நல்ல திரைக்கதையாக மாற்ற இயலவில்லை அவரால். ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு வேலை கேட்டு வருகிறார்கள் ஒரு இளைஞனும் இளைஞியும். சேனல் நிர்வாகி இவர்களுக்கான டெஸ்ட் ஆக ஜல்லிக்கட்டு வரலாற்றையும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் சேகரிக்கச் சொல்கிறார...
காளிதாஸ் விமர்சனம்

காளிதாஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
  காளிதாஸ் நல்ல சைக்காலஜிகல் த்ரில்லர் படம். பரத்துக்கு இந்த படம் நல்லதொரு கம்பேக்காக அமையும். அடிக்கடி மர்மமான முறையில் பெண்கள் இறந்து போகிறார்கள். அவை தற்கொலைகள் என்றும், அதற்குக் காரணம் ப்ளூவேல் கேம்தான் என பரத் நினைக்கிறார். பரத்தால் இந்த வழக்கை முடிக்க முடியாததால் சுரேஷ் மேனன் அவ்வழக்கைத் துப்பு துலக்க வருகிறார். இருவரும் சேர்ந்து அது கொலையா தற்கொலையா எனக் கண்டுபிடிப்பதுதான் கதை. இது போக, பரத் வீட்டுக்கே வராமல் போலீஸ் வேலையிலையே பிசியாக இருப்பதால் அவரது மனைவி, வீட்டு மாடியில் வாடைகைக்குக் குடியிருக்கும் ஆதவ் கண்ணதாசன் மீது காதல் கொள்கிறார். அதனால் அவருக்கு என்ன ஆச்சு என்பதுதான் செம க்ளைமேக்ஸ் ட்விஸ்ட். இதில் மிகுந்த சுவாரசியமான விஷயம், சுரேஷ் மேனனுக்கும் பரத்துக்கும் உள்ள உறவு. இப்படி ஒரு மேலதிகாரியும் இருப்பாரா என்று பார்வையாளர்களுக்குத் தோன்றும். பரத்துக்கு ஆலோசனை செய்வதாகட...
மலையாள இயக்குநரின் “அல்லி”

மலையாள இயக்குநரின் “அல்லி”

சினிமா, திரைச் செய்தி
‘செக்ஸி துர்கா’ எனும் படத்தை இயக்கிய சனல் குமார் சசிதரனின் ‘சோலா’ எனும் மலையாளப் படத்தை, “அல்லி” என்ற பெயரில் தனது ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். நகர வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியும், அவரது காதலனும் யாருக்கும் தெரியாமல், ஒரு நாள் நகரத்திற்குச் சென்று வர விரும்புகிறார்கள். அவர்களின் பயணத்தில், மூன்றாவதாய் ஒரு நபர் இணைந்து கொள்கிறார். இந்தப் பயணத்தால், பள்ளி மாணவியின் வாழ்க்கை என்னானது என்பது தான் இப்படத்தின் கதை. “இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகாது. ஆனால் படவிழாக்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் மட்டுமே வெளியாகும். இப்படத்தில் பாடல்கள், நகைச்சுவைகள், சண்டைக்காட்சிகள் என்று எந்த ஒரு விசயமும் இருக்காது. படம் முழுவதும் மிக எதார்த்தமாக தான் இருக்கும். இந்த படம் எடுக்க எந்த ஒரு வியாபார நோக்கமும...
ஜடா விமர்சனம்

ஜடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
    வடச்சென்னையில் செவன்ஸ் எனப்படும் விதிமுறைகளைப் பின்பற்றாத கால் பந்தாட்டத்தில் கலந்து கொள்ள கதிர் ஆசைப்படுகிறார். அந்த ஆட்டத்திற்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளையும், அதனால் நிகழ்ந்த சில பயங்கரங்களையும் கோச் எடுத்துரைக்கிறார். அதை மறுத்துரைத்து, 'செவன்ஸ் ஆடுவேன்' என்பதில் உறுதியாக நிற்கிறார். அதற்கான காரணமும், முடிவில் செவன்ஸில் கதிர் அணி எப்படி வெற்றி கொண்டது என்பது தான் ஜடா. ஒரு படத்திற்குச் சிறந்த துவக்கம் மிக முக்கியம். அதை ஜடா இயக்குநர் குமரன் மிகச் சிறந்த முறையில் கையாண்டுள்ளார். நடிகர்களை வேலை வாங்கியதிலும் ஒரு தேர்ந்த இயக்குநராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக ஓவியர் ஸ்ரீதர் நடிப்பும், அவரது கதாபாத்திர வார்ப்பும் அத்தனை துல்லியம். கதிர் நடிப்பில் எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் பரியேறும் பெருமாள் பரியன் எட்டிப் பார்க்கிறார். மற்ற இடங்களில் ...
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஒரு கற்பனைக் கதை. ஆனால், இந்தக் கதையில் காட்டப்படும் டாக்குமென்ட்ரியில் நிகழ்வது போல் நடப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ள மெத்தனமான நாடு இந்தியா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடல்நீரில் கலந்த எண்ணெயை வாளியில் அள்ளும் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்த அரசாங்கம், கரை ஒதுங்கும் ஆபத்தை விளைவிக்கும் குண்டை, வெடிக்கும் குண்டு என ஒத்துக் கொள்வதற்கே அதன் வெட்டி கெளரவம் இடம் கொடுக்காது. ஏன் உலகிற்கு இத்தனை குண்டுகள், இத்தனை உயிரிழுப்புகள் என்ற கேள்வியை மிக அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது சடோகா சசாகியின் கதை. ஆனால், தினேஷ் வசமிருக்கும் குண்டு வெடித்து விடக் கூடாது என்ற பதைபதைப்பை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது படம். அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவல், தோழர் ரித்விகாவிற்கு அதிகமாக உள்ளதே தவிர, அதை வெடிக்கவிடாமல் செய்ய என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்றெல்லாம் அவர் யோசிப்பதில்லை. கு...
அடுத்த சாட்டை விமர்சனம்

அடுத்த சாட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலேயே கதை சொல்லிவிடுகின்றனர் சாட்டை படத்தின் இயக்குநர் அன்பழகன். அப்பா கலை கல்லூரியில், ஒரு டிப்பார்ட்மென்ட்டின் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்களின் வகுப்பில் கதை நிகழ்கிறது. சாதி வெறியில் ஊறிய பிரின்சிபல் சிங்க பெருமாளின் மகன் பழனியால் வகுப்பில் சாதிப் பிரிவினை ஏற்படுகிறது. படத்தின் முதற்பாதியில் மகன் திருந்தி விட, இரண்டாம் பாதியில் பிரின்சிபலும் திருந்தி விட படம் சுபமாய் முடிகிறது. சமுத்திரக்கனி முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை சாட்டையை அட்வைஸ்களாகச் சுழற்றியபடியே உள்ளார். அவருக்கு இதே வேலையாகப் போய்விட்டதென அவர் சொல்வதை யாரும் காதில் வாங்கவேயில்லை. ஆனால், நாயகியான போதும்பொண்ணு, “நான் அந்த சாதியைச் சேர்ந்த பையனைக் காதலிக்கவில்லை. எனக்கு உன்னைத்தான் பிடிக்கும். அவனைக் கூடப் பிறந்தவனா நினைச்சுத்தான் பழகுறேன்” என்று நாயகனிடம் சொன்னதும், ஒட்டுமொத்த கல்லூரியிலுள்ள மாணவர்களுக்கும் சாத...