Shadow

திரை விமர்சனம்

ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review

ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம். திருப்பெரும்புதூரில், 1991 மே 21ஆம் தேதி அன்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார். அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இலங்கை அகதிகளாக ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்கியிருக்கும் ஆண்கள், பெண்கள் என பல இலங்கைத் தமிழர்களை விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் செல்கிறது காவல்துறை. ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பி விடுவோம் என சொல்லி அழைத்துச் சென்று அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கிறது காவல்துறை. குடும்பத்தினரும் அவர்களை விடுதலை செய்யக் கோரி மனு கொடுத்தும், போராட்டம் செய்தும் எதுவும் எடுபடவில்லை. அப்படியே 4 ஆண்டுகள் கழிய, வேலூர் கோட்டையில் இருந்து 43 பேர் தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டுகிறார்கள். அத்திட்டம் அவர்களுக்குச்...
பறந்து போ விமர்சனம் | Paranthu Po review

பறந்து போ விமர்சனம் | Paranthu Po review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஓர் இனிய ஆச்சரியம். தென்றல் தீண்டுவது போல் ஒரு ஜாலியான படம். இயக்குநர் ராமின் முந்தைய படங்களினின்று நேரெதிராக உள்ளது இப்படம். ராமின் பிரதான கதாபாத்திரங்கள் பெரும்பாலும், சக மனிதர்கள் மீது கோபமும், அவநம்பிக்கையையும் கொண்ட கசப்பான மனிதர்களாக இருப்பார்கள். இப்படத்திலோ, கதாபாத்திரங்கள் அனைவருமே மிகவும் நல்லவர்கள். முக்கியமாக சக மனிதர்கள் மீது கோபமோ, பொறாமையோ இல்லாதவர்களாகவும்; தங்கள் மீது பச்சாதாபமோ, சுய கழிவிரக்கமோ கொண்டு இயலாமையை வெளிப்படுத்தாதவர்களாகவும் உள்ளனர். பார்ப்பவர்கள் எல்லாரையும் கெட்டவரெனும் துரியோதன மனக்கசடில் இருந்து, மனிதர்கள் அனைவருமே நல்லவர்கள் தானெனும் தருமனின் மனநிலைக்கு எப்படியோ தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார். கடன் வசூலிக்கும் நபரிடம் இருந்து தப்பிக்கும் தந்தை மகனான கோகுல் – அன்பு இருவரின் டூ-வீலர் சாகசம், ஒரு ரோடு ட்ரிப்பாக கவிதை போல் நீள்கிறது. அவர்கள் சந்திக்கும் நபர...
பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பீனிக்ஸ் எனும் புராண பறவை, தன்னைத்தானே எரித்துத் தனது சாம்பலிலிருந்து மீண்டும் பிறக்கும் வல்லமை கொண்டது. அதே போல், சூர்யா எனும் பதினேழு வயது சிறுவன், தன்னைத் தானே மரணம் துரத்தும் ஓர் இக்கட்டான சூழலுக்குள் உட்படுத்தி, ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வீழ்ந்து விடாமல் எழுந்து நிற்கிறான். மரண வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வரும் ச.ம.உ.-வான கரிகாலனை 36 முறை வெட்டிக் கொல்கிறான் சிறுவன் சூர்யா. அவனைச் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிடுகிறது. சூர்யாவைக் கூர்நோக்கு இல்லத்திலேயே வைத்துக் கொல்வதற்குக் கரிகாலனின் மனைவி மாயா முயற்சிகள் எடுத்தவண்ணம் உள்ளார். அவற்றிலிருந்து சூர்யா தப்பினானா, சூர்யா ஏன் ச.ம.உ.-வைக் கொன்றான் என்பதே படத்தின் முடிவு. முன்னாள் ச.ம.உ.வாக முத்துகுமார் நடித்துள்ளார். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அவரது ரியாக்‌ஷன்கள் போக்குகிறது. சூர்யாவின் அம்மாவாக தேவத...
3 பி.ஹெச்.கே விமர்சனம் | 3 BHK review

3 பி.ஹெச்.கே விமர்சனம் | 3 BHK review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தனக்கென்றொரு வீடு வாங்கவேண்டும் என்பது வாசுதேவனின் ஆசை. ஆனால் சூழலும், குடும்பப்பாடுகளும் அக்கனவைத் தொட்டுவிடும் நிலைக்கு வரும்பொழுதெல்லாம் தட்டி விட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்தக் கனவைத் தன் மகன் பிரபு நிறைவேற்றுவான் என்று சமாதானமாகிறார். பிரபுவின் வாழ்க்கையோ, தோல்வியடைதலுக்கும் (Failure), எதிலும் வெற்றியோ முன்னேற்றமோ காணாத மிகச் சராசரியான வாழ்விற்கும்  (Average) இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வாசுதேவனின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். பதினேழு வயதில் வேலைக்குச் செல்லத் தொடங்கும் வாசுதேவன், தன் தம்பியையும், தங்கையையும் படிக்க வைத்து ஆளாக்கிவிடுகிறார். அவரது உழைப்பின் பலனை அனுபவித்த தங்கையோ, ‘உன்னால் சொந்த வீடு வாங்க முடியாது’ என அண்ணனை ஏளனப்படுத்தி விடுகிறார். அந்த ஒரு சொல், வாசுதேவனின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே புர...
கண்ணப்பா விமர்சனம் | Kannappa review

கண்ணப்பா விமர்சனம் | Kannappa review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கண்ணப்பர் எனும் சிவ பக்தரின் கதையை பாகுபலி போல் ஒரு பிரம்மாண்டமான புனைவுப் படமாக உருவாக்கியுள்ளனர். திண்ணன் எனும் வேட்டுவக் குல வீரன், கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளருகிறான். அவன் வசிக்கும் காட்டிலுள்ள வாயுலிங்கத்தை அபகரிக்க காளாமுகன் என்பவன் பெரும்படையுடன் வருகிறான். திண்ணனின் தந்தை நாதநாதன், தீவிலுள்ள ஐந்து இனக்குழுக்களயும் ஒன்றிணைத்து காளாமுகனை எதிர்க்க ஒன்றிணைக்கிறான். கைலாயத்தில் வாழும் சிவனோ, ருத்ரனை அனுப்பி திண்ணனைத் தடுத்தாட்கொண்டு, அவனைப் பக்திமானாக்குவதோடு, அவனது தீவிரமான பக்தியை உலகறியச் செய்வதோடு, தனிநபர் சொத்தாக இருக்கும் வாயுலிங்கத்தையும் மக்கள் வழிபாட்டுக்கு உரியதாக்குகிறார். சிவன், பார்வதியாக அக்ஷய் குமாரும், காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். துவாபுர யுகத்தில், தவமியற்றும் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளிக்க வேடனாக வரும் கிராதமூர்த்தி (சிவன்) பாத்திரத்தில் மோகன்லால் வருகிறார்....
லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
உசிலம்பட்டியைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயதான ராமச்சந்திரனுக்குக் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அம்பிகாவுடன் நிச்சயதார்த்தம் நிகழ்கிறது. ராமின் ராசிக்குக் கல்யாணமே ஆகாது என உறவினர்களும் ஊரார்களும் அவர் காதுபடக் கிண்டல் செய்தவண்ணம் இருக்க, அம்பிகாவுடனான திருமணத்திற்காக மிகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார் ராம். அவரது ராசியோ, விதியோ, இயற்கையோ, இயக்குநரின் திரைக்கதையோ ஏதோ ஒன்று விளையாட, குடும்பத்துடன் கோபிச்செட்டிப்பாளையத்திலேயே லாக்டவுனில் சிக்கிக் கொள்வதோடு கல்யாணமும் நின்று விடுகிறது. 90'ஸ் கிட்டான ராமின் வேதனை ஒரு முடிவுக்கு வந்ததா இல்லையா என்பதுதான் படத்தின்முடிவு. கலகலப்பான படத்தின் முதற்பாதி ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் 90'ஸ் கிட்களுக்கே உரித்தான சோதனை நாயகன் ராமைப் போட்டு வாட்டுகிறது. ராமின் வேதனை பொறுக்காமல் அம்பிகாவின் தங்கை ராதா, ராமின் மீது காத...
மார்கன் விமர்சனம் | Maargan review

மார்கன் விமர்சனம் | Maargan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'ககன மார்க்கன்' என்றால் வான் வழியே பயணிப்பவன் எனப் பொருள். அது அப்படியே சுருங்கி மார்கன் ஆகிவிட்டது. ஒரு ஊசி போட்டால் உடல் கருகி வினோதமான முறையில் இறக்கும் வேதியியல் ஃபார்முலாவை உருவாக்கி வைத்துள்ளார் வில்லன். அப்படிக் கொடூரமாக இறக்கும் ரம்யாவின் மரணத்துடன் படம் தொடங்குகிறது. தனது மகளைப் போலவே கொல்லப்பட்டிருக்கும் ரம்யாவின் வழக்கைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்க சென்னை வருகிறார் காவல்துறை அதிகாரியான துருவ் கோரக். அவரது முகத்தின் இடது பக்கம் கூடக் கருப்படைந்து அரைகுறையாகச் செலுத்தப்பட்ட ஊசியால் பாதிக்கப்பட்டவராக உள்ளார். துருவ் கோரக் கொலையாளியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. கொலைக்காரனால் துரத்தப்படுவதாகக் காட்டப்படும் வெண்ணிலா எனும் பாத்திரத்தில் நடித்துள்ள கனிமொழி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படம் முடியும் பொழுது எல்லாக் கதாபாத்திரங்களையும் மறக்கவைக்கும் அளவிற்குச...
28 Years Later விமர்சனம் | 28 YL review

28 Years Later விமர்சனம் | 28 YL review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
28 Days Later (2002), 28 Weeks Later (2007) ஆகிய படங்களைத் தொடர்ந்து, அவ்வரிசையில் மூன்றாவதாக இப்படம் வெளியாகியுள்ளது. முந்தைய இரு பாகங்களைப் பார்க்காவிட்டாலும் இப்படத்தை நேரடியாகப் பார்க்கலாம். முதல் பாகத்தை இயக்கிய டேனி பாயிலும், திரைக்கதை எழுதிய அலெக்ஸ் கார்லேண்டும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதினைப் பெற்றுக் கொடுத்த 'ஸ்லம்டாக் மில்லியனர் (2008)' படத்தை இயக்கியவர் டேனி பாயில் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கொடுமையான வைரஸ் கிரேட் பிரிட்டனைத் தாக்கி 28 ஆண்டுகளான பின், இப்படத்தின் கதை தொடங்குகிறது. புனித தீவு என்று அழைக்கப்படும் லண்டிஸ்ஃபானில் (Lindisfarne) தனது 12 வயதான மகன் ஸ்பைக்குடன் மெயின்லேண்ட்க்கு ஜோம்பி வேட்டைக்குப் போகிறார் ஜேமி. வேட்டையை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பும் ஸ்பைக், மெயின்லேண்டில் தனியாக ஒரு மருத்துவர் வாழுவது தெரிய வர, உடல...
குபேரா விமர்சனம் | Kuberaa Review

குபேரா விமர்சனம் | Kuberaa Review

சினிமா, திரை விமர்சனம்
திருப்பதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் தேவாவின் பெயரில் ஷெல் கம்பெனி தொடங்கப்பட்டுப் பத்தாயிரம் கோடி டெபாசிட் செய்யப்படுகிறது. அப்பணத்தை மீண்டும் அவரிடமிருந்து வில்லன் பெறுவதற்குள், தேவா உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பித்துவிடுகிறார். அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் வில்லனிடமிருந்து பத்தாயிரம் கோடிக்குச் சொந்தக்காரரான பிச்சைக்காரன் தேவாவால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.ஒரு பொருளாதாரக் குற்றப் பின்னணியில் தொடங்கும் படம். அக்குற்றத்தைச் சாத்தியமாக்குவதற்கான செயற்முறை, சிறைப்பட்டிருக்கும் சி.பி.ஐ. அதிகாரியில் இருந்து சாலையோரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் வரை நீள்கிறது. மிக அழகாகப் படத்தின் முதற்பாதியில் இவற்றைக் கட்டமைக்கிறார் சேகர் கம்முலா.பெரும்கோடீஸ்வர வில்லன் நீரஜ் மித்ராவாக ஜிம் சார்ப் நடித்துள்ளார். அவரது பணக்காரத் தோரணையே, பார்வையாளர்களை அசெளகரியம் கொள...
Chennai City Gangsters விமர்சனம்

Chennai City Gangsters விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பசுபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க பாண்டியும் பூச்சியும் சைக்கோ சலீமிடம் பணத்தைத் திருடி, அதை டாஸ்மாக்கில் தொலைக்கின்றனர். அந்தப் பணத்தை ஈடு செய்ய, ஸ்பிலிட் சூசை, மெமரி தாஸ், டமார லால், குடி குமார் எனும் கொள்ளையர்களுடன் இணைந்து வாவ் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். இந்த கேங்ஸ்டர்களின் முயற்சி என்னானது என்பதே படத்தின் கதை.எழுதி இயக்கியுள்ள இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வரும், அருண் கேசவும் கதாபாத்திர வடிவமைப்பில் அசத்தியுள்ளனர். ஸ்பிலிட் சூசையாக ஆனந்த்ராஜும், மெமரி தாஸாக மொட்டை ராஜேந்திரனும், டமார லாலாக ஜான் விஜயும், கட்டிங் குமாராக வைபவின் அண்ணன் சுனிலும் நடித்துள்ளனர். பதினைந்து வருட காவல்துறை சித்திரவதையில், ஜான் விஜய் கேட்கும் திறனை இழக்கிறார், மொட்டை ராஜெந்திரன்க்கு மறதி பிரச்சனை எழுகிறது, ஆனந்த்ராஜோ அளுமைப் பிளவு ஏற்பட்டு விடுகிறது. சைரன் சத்தம் கேட்டால் ஆனந்த்ராஜ் தன்...
டிஎன்ஏ விமர்சனம் | DNA review

டிஎன்ஏ விமர்சனம் | DNA review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
DNA என்பது பிரதான கதாபாத்திரங்களான திவ்யாவையும் ஆனந்தையும் குறித்தாலும், படத்தில் ஒரு குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது. காதல் தோல்வியால் மதுபோதைக்கு அடிமையாகி மீளும் ஆனந்திற்கும், BPD எனப்படும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் கொண்ட திவ்யாவிற்கும் திருமணம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும், அம்மகவைக் கையில் வாங்கும் திவ்யா, அது தன்னுடைய குழந்தை இல்லை எனச் சொல்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள் என அனைவரும் திவ்யாவை நம்பாத பொழுது, ஆனந்த் மட்டும் திவ்யா சொல்வதை நம்பித் தனது குழந்தைக்காகப் போராடத் தொடங்குகிறான். சுழலில் சிக்கியது போல், ஆனந்தின் அந்தத் தேடலும் போராட்டமும் அவனை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. திவ்யாவின் மீது ஆனந்த் வைத்த நம்பிக்கை வென்றதா இல்லையா என்பதே படத்தின் முடிவு. ஃபர்ஹானா படத்தில், வசனங்களுக்காக மனுஷ்யபுத்திர...
கட்ஸ் விமர்சனம் | Guts review

கட்ஸ் விமர்சனம் | Guts review

சினிமா, திரை விமர்சனம்
ஒரு திருநங்கை அரசு அலுவலரைக் கொன்ற கார்ப்பரேட் முதலாளியைக் கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி ரங்கராஜ். அவ்வழக்கில் இருந்து மிகச் சுலபமாக வெளியில் வரும் வில்லன், ரங்கராஜின் கர்ப்பவதி மனைவியான அனுவைக் கொல்கிறான். கோபத்தில் ரங்கராஜும் வில்லனைக் கொன்று விட, காவல்துறையும், வில்லனின் ஆட்களும் நாயகனைத் தேடுகின்றனர். மகளுடன் தலைமறைவாகித் தனது பூர்வீக ஊரில் தஞ்சமடைகிறார் ரங்கராஜ். அவரது அப்பாவுக்கும், வில்லனின் அப்பாவுக்கும் உள்ள தீர்க்கப்படாத சிக்கலொன்றும் சேர்ந்து நாயகனைத் துரத்துகிறது. அச்சிக்கல் என்னவென்றும், அதிலிருந்து ரங்கராஜ் எப்படி வெளிவருகிறார் என்பதும்தான் படத்தின் கதை. இடைவேளை வரை ஒரு கதையும், அதன் பின் வேறொரு கதையுமாகத் திரைக்கதை பயணிக்கிறது. ஆசிரமத்தில் வளரும் நேர்மையான காவலதிகாரி, ஆசிரமத்திலேயே ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் அவரது காதல் கதை என படத்தின் முதற்பாதி ரசிக்க வைக்கி...
பரமசிவன் பாத்திமா விமர்சனம் | Paramasivan Fathima review

பரமசிவன் பாத்திமா விமர்சனம் | Paramasivan Fathima review

சினிமா, திரை விமர்சனம்
அந்நியர்கள் நுழையத் தடை விதைத்திருக்கும் சுப்ரமணியபுரத்து பரமசிவனும், சாத்தான்கள் நுழையத் தடை விதித்திருக்கும் யோக்கோபுரத்து பாத்திமாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மதத்தைக் காரணம் காட்டி இருவும் கொல்லப்படுகிறார்கள். பரமசிவனும் பாத்திமாவும் தங்கள் மரணத்திற்குப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை. ஒன்றாக இருந்த ஊரைப் பணத்தாசை காட்டி மதம் மாற்றி இரண்டாக உடைக்கிறார்கள் எனக் காத்திரமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். இதுதான் படத்தின் பிரதான நோக்கம். வசனங்கள், காட்சிகள் என அனைத்தும் அதை நோக்கியே நகர்கின்றன. பரமசிவன், பாத்திமா காதலே கூடத் தொட்டுக்கோ, துடைச்சுக்கோ எனக் கிளைக்கதையாகத்தான் வருகிறது. பாத்திமாவின் அண்ணன் ஃபெலிக்ஸாக நடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் M.சுகுமார்தான் படத்தின் வில்லன். அவருக்கு மத அபிமானம் எல்லாம் கிடையாது. அவரது குறிக்கோள் பணம் மட்டுமே! இயக்குநரின் நோக்கம...
பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம் | Peranbum Perungobamum review

பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம் | Peranbum Perungobamum review

சினிமா, திரை விமர்சனம்
குழந்தையைக் கடத்தினான் என அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் ஜீவாவைக் காவல்துறை கைது செய்கிறது. குழந்தையைத் தான் கடத்தவில்லை ஆனால் தனக்கு என்ன நேர்ந்தது, தானென்ன செய்தேன் என்று ஒரு பெரும் பஞ்சாயத்தை இழுத்து விடுகிறான் ஜீவா. ஜாதி வெறி பிடித்த ஒரு கிராமத்தினின்று அதிகாரத்திற்கு வருபவர்களை ஜீவா பெருங்கோபம் கொண்டு எப்படிப் பழிவாங்குகிறான் என்பதுதான் படத்தின் கதை. சாதிவெறி பிடித்த சகோதரர்கள் முத்துப்பாண்டி, ரத்னவேலுவாக முறையே மைம் கோபியும், அருள்தாஸும் நடித்துள்ளார்கள். சகோதர வில்லன்களாக நடிக்க மிகப் பொருத்தமானவர்கள். கேங்கரஸ் படத்திலும் பணத்தாசை பிடித்த சகோதர வில்லன்களாக நடித்திருப்பர். தாடி வைத்திருக்கும்போது இனிகோ பிரபாகரை நினைவுப்படுத்தும் முகச்சாயலில் உள்ளார் விஜித் பச்சன். நாற்பதுகளில் இருப்பது போன்ற தோற்றத்தில், ஒரு சோர்வையும், அனைத்தையும் இழந்து பழிவாங்கும் வெறியை மட்டும் தக...
மெட்ராஸ் மேட்னி விமர்சனம் | Madras Matinee review

மெட்ராஸ் மேட்னி விமர்சனம் | Madras Matinee review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எழுத்தாளர் ஜோதி ராமய்யாவிற்கு, நடுத்தர வர்க்கத்தைப் பற்றி நாவல் எழுதவேண்டுமெனப் பிரியப்படுகிறார். அந்தத் தேடலில், டாஸ்மாக்கில் சந்திக்கும் கண்ணன் எனும் ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறார். கண்ணன், அவரது குடும்பம், அவரது வாழ்க்கைப் பாடுகள், அவரது மகள் தீபிகா, மகன் தினேஷ், மனைவி கமலம் என ஒரு குடும்பத்தின் நெகிழ்ச்சியான கதை தான் மெட்ராஸ் மேட்னி படத்தின் கதையும். கட்சி விட்டுக் கட்சி தாவும் அரசியல்வாதி பச்சோந்தி பிரேமாவாகக் கீதா கைலாசம் நடித்துள்ளார். அம்மா பாத்திரங்களில் மட்டும் சிக்கிக் கொள்ளாமல், கலகலப்பான பாத்திரங்களிலும் முத்திரையைப் பதிப்பது சிறப்பு. அவரது உதவியாளராக விஜய் டிவி ராமர் தோன்றியுள்ளார். நகைச்சுவைக்கு உதவாவிட்டால் கூடப் படத்தில் ஒரு பாத்திரமாகப் பொருந்திப் போகிறார். பொதுவாகத் திரைப்படங்களில் அவர்க்கு இது போல் நிகழாது. தினேஷாக நடித்துள்ள விஸ்வாவும், தீபிகாவாக நடித்...