Shadow

இது புதிது

ரத்னம் விமர்சனம்

ரத்னம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சில பல காரணங்களினால் ப்ரியா பவானி சங்கரை கொல்லத் துரத்தும் ஒரு கூட்டம். ஒரே ஒரு காரணத்திற்காக ப்ரியா பவானி சங்கரைக் காக்க உயிரையும் கொடுப்பேன் என்று எதிர்த்து நிற்கும் விஷால், இந்த இரண்டிற்கும் பின்னால் இருக்கும் பின்கதை, இவை தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலும் தெறிக்கும் இரத்தம், இவையெல்லாம் சேர்ந்தது தான் ரத்னம்.வேலூர் பகுதி ஆளும்கட்சி எம்.எல்.ஏ “பன்னீர்” ஆக வரும் சமுத்திரக்கனிக்கு அநீதிக்கு எதிரான அண்டர் கிரவுண்ட் வேலைகள் அனைத்தும் செய்பவராக விஷால் இருக்கிறார். சமுத்திரக்கனியும் ரத்னமாகிய விஷாலை ரத்னம் போல் பொத்திப் பாதுகாக்கிறார். அவர்களுக்குள் அப்படி என்ன பாசப் பிணைப்பு என்பதற்கு ஒரு பின்கதை. திருத்தணியில் இருந்து வேலூருக்கு நீட் தேர்வு எழுத வரும் ப்ரியா பவானி சங்கரைப் பார்த்ததும் வழக்கமான ஹீரோக்கள் உருகுவது போல் விஷாலும் உருகுகிறார். அவர் ஏன் அப்படி உருகுகிறார் என்பதற்குப...
ஒரு நொடி விமர்சனம்

ஒரு நொடி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நம் வாழ்வின் ஏதேனும் ஒரு நொடியில் நடக்கும் யதார்த்தமான சம்பவங்கள் எப்படி நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்பதை மர்மமும் திகிலும் கலந்து சுவாரஸ்யமாகப் பேசி இருக்கிறது ஒரு நொடி திரைப்படம்.கந்துவட்டி கொடுமைகள் மற்றும் நிலமோசடி சம்பவங்களில் ஈடுபடும் கரிமேடு தியாகு (வேல ராமமூர்த்தி) என்பவரிடம் தன் மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனுக்காக தன் நிலப்பத்திரத்தை ஒப்படைக்கிறார் சேகரன். ஆறு மாதம் கழித்து வட்டி மற்றும் அசலோடு பணத்தைக் கொடுத்துவிட்டு தன் நிலப்பத்திரத்தை மீட்டு வர செல்கிறார் சேகரன். சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரின் மனைவி சகுந்தலா புகார் அளிக்க இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் (தமன் குமார்) தலைமையிலான குழு அவ்வழக்கை விசாரிக்கத் துவங்குகிறது. முதல் சந்தேகமே கரிமேடு தியாகு மீது வர, போலீஸ் தன் விசாரணையை அங்கிருந்து துவங்குகிறது. விசாரணையின் ஊடாக சேகரன் என்ன ஆனார்…? என்பதை கண்டடைவதே இ...
”அருண் விஜய் எத்தனை வருடமானாலும் இளமையாக அப்படியே இருக்கிறார்” – சாம் சி.எஸ்

”அருண் விஜய் எத்தனை வருடமானாலும் இளமையாக அப்படியே இருக்கிறார்” – சாம் சி.எஸ்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இவ்விழாவினில்தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது.. இந்த நாளுக்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்குப் பர்ஃபெக்டான ஹீரோ அருண் விஜய் தான். தான்யா ரவிச்சந்திரன் மிக அழகான படங்கள் செய்துள்ளார். சித்தி இத்னானி பல அற்புதமான படங்கள் செய்துள்ளார். இவர்கள் மூவரையும் இணைத்து அற்புதமான கதைச் செய்துள்ளார் திருக்குமரன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிட...
நின்னு விளையாடு | ஜல்லிக்கட்டு காளையா? காதலா?

நின்னு விளையாடு | ஜல்லிக்கட்டு காளையா? காதலா?

இது புதிது, சினிமா, திரைத் துளி
ராஜ் பீகாக் மூவீஸ் சார்பில் எம். கார்த்திக் தயாரிக்கும் படம் ‘நின்னு விளையாடு’ ஆகும். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டரும், கதாநாயகியாக நந்தனா ஆனந்தும் நடிக்கின்றனர். தீபா சங்கர், பழ. கருப்பையா, ‘பசங்க’ சிவக்குமார், சாவித்திரி, சங்கவி, ஜோதி, மதுரை குமரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சத்திய தேவ் உதயசங்கரும், ஒளிப்பதிவாளராகப் பிச்சுமணியும், படத்தொகுப்பாளராக கி. சங்கரும் தொழில்நுட்பப் பணிகளைக் கவனிக்க, சி. சௌந்தர்ராஜன் படத்தினை இயக்குகிறார். எம். சரத்குமாரும், கீர்த்தி வாசனும் இணைந்து தயாரிக்கின்றனர். மண்வாசம் கலந்த மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது இப்படத்தின் கதை. காளை மாடு வளர்க்கும் சாமானியனின் வாழ்வில், குடும்ப உறவுகளுக்கு மத்தியில் காதலா, காளை மாடா என்ற உணர்வுப்பூர்வமான பாசப்போராட்டத்தை கருவாகக் கொண்டது படத்தின் கதைக்களம். ஜாதி, மதங்களை ஒன்ற...
ஃபைண்டர் புராஜக்ட் – 1 விமர்சனம்

ஃபைண்டர் புராஜக்ட் – 1 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எந்தவித குற்றமும் செய்யாமல் சிறைக்குள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிரபராதிகளின் நிலையைப் பற்றி பேசுகிறது ஃபைண்டர் திரைப்படம்.குற்றவியல் தொடர்பான படிப்பில் முதுகலை பெற்ற மாணவர்கள் சிலர் இணைந்து தனியார்மயமான துப்பறியும் நிறுவனம் ஒன்றை துவங்குகிறார்கள். இவர்களுக்கு அவர்கள் படித்த அதே கல்லூரியில் படித்து விட்டு தற்போது அரசுத்தரப்பு வக்கீலாக பணியாற்றி வரும் நிழல்கள் ரவி உறுதுணையாக இருந்து வழிகாட்டுகிறார். குற்றம் இளைக்காமல் சூழ்நிலை காரணமாக சிறையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் நிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்பதை தங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்பட விரும்பும் இந்த மாணவர்கள் தங்கள் அமைப்பிற்கு ஃபைண்டர் என்று பெயர் வைத்து, தங்கள் நோக்கம் குறித்து பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கிறார்கள். அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பலரும் எங்களுக்கு உதவுங்கள் என்று வந்து நிற்க, அதில் உண்மையா...
“அவர்கள் வேலையை சரியாக செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன்” – நடிகர் விஷால்

“அவர்கள் வேலையை சரியாக செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன்” – நடிகர் விஷால்

இது புதிது
'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்ற, அதிரடி ஆக்ஷ‌ன் படமாக உருவாகியுள்ள 'ரத்னம்' ஏப்ரல் 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள வியாழக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஷாலின் தேவி பவுண்டேஷ‌ன் சார்பில் இரு பெண் குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யப்பட்டது. தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்...“ஹரி சார் இயக்கத்துல விஷால் ஹீரோவா ஒரு படம் தயாரிப்போம்னு நினைக்கவே இல்லை. இது எல்லாம் அமைஞ்சது எனக்கு கிடைத்த வரம் என்று தான் சொல்வேன...
சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் இணைந்து கலக்கும் தண்டுபாளையம்

சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் இணைந்து கலக்கும் தண்டுபாளையம்

இது புதிது
1980 ஆம் ஆண்டுகளிலிருந்து இன்று வரை ஒரு மிகப்பெரிய கொள்ளை கூட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் தன் வேட்டையை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது. கொலை,கொள்ளை, குற்றம் போன்ற செயல்களை யாருடைய கண்ணுக்கும் தென்படாமல் சம்பவத்தை நிகழ்த்திக் கொண்டே செல்கின்றது.இதில் ஒரு கூட்டத்தினரை 15 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்தது காவல்துறை. இவற்றில் 390 திருட்டு வழக்குகள், 108 கொலை குற்ற வழக்குகள் மற்றும் மிகக் கொடுமையான 90 கற்பழிப்பு வழக்குகள் என ஒரே கும்பலுக்கு 6 முறை மரண தண்டனை வழக்குகள் இருப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட தூக்குதண்டனை வழங்க முடியவில்லை.அதேநேரம் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மிகவும் மோசமான நிலைமைக்கு ஆளாகிறார்கள். கைதானவர்கள் அனைத்து வழக்குகளிலும் விடுதலையாகிக் கொண்டே வருகிறார்கள். இன்னும் 10 வழக்குகள் மட்...
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்

வல்லவன் வகுத்ததடா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இரண்டு திருடர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் மற்றொரு திருடன், காதலைச் சொல்லி ஏமாற்றி திருடும் மற்றொரு திருடி, வட்டிக்கு பணம் கொடுத்து, பணத்தை திரும்ப கொடுக்காதவர்களிடம் அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்துவிடுவேன் என்று மிரட்டும் வில்லன், இவர்களுக்கு மத்தியில் தன் குடும்பத் தேவைக்காக டாக்ஸி ஓட்டிக் கொண்டே பெரும் தொகை கடன் கேட்டு அலையும் அப்பாவி இளைஞி. இந்தக் கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் கதை தான் வல்லவன் வகுத்ததடா திரைப்படத்தின் கதை.படத்தில் ஹைலைட்டாக இருக்கும் கதாபாத்திரம் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் தான். தன்னிடம் வழக்கு கொடுக்க வருபவர்களிடம் நாசுக்காக உண்டியல் வைத்து வசூல் வேட்டை நடத்துவதும், விஷமத்தனமாக சிரிப்பதும், கலையாத கேசத்தை மீண்டும் மீண்டும் சரி செய்தபடி ஹேர் ஸ்டைல் சரியாக இருக்கா..? என்று கேட்பதுமென ஒட்டுமொத்த படத்தையும் உயிர்ப்போடு வைத்திருப்பவர் இந்த இன்ஸ்பெ...
DeAr விமர்சனம்

DeAr விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குட் நைட் திரைப்படத்தில் குறட்டை விடும் பிரச்சனையால் நாயகன் பாதிக்கப்படுவான். DeAr இல் அதே குறட்டை விடும் பிரச்சனையால் நாயகி பாதிக்கப்படுகிறாள். பெற்றோரின் அறிவுறத்தலின்படி அந்தப் பிரச்சனை இருப்பதை மறைத்துத் திருமணம் செய்கிறாள். முதலிரவு அன்றே அவளின் முதன்மையான பிரச்சனை தெரியவர, அதைத் தொடர்ந்து எழும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் தான் இந்த DeAr திரைப்படம். கதையின் பிரச்சனை என்ன என்பது தெரியும் போதே, அதன் முடிவும் இதுவாகத் தான் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும் அந்த முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட தூரத்தை சுவாரசியமான காட்சிகளாலும், கை தேர்ந்த நடிகர்களின் நடிப்பினாலும் இட்டு நிரப்பி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். திரைப்படத்தின் ஆகச் சிறந்த பலமே அதில் நடித்திருக்கும் கை தேர்ந்த நடிகர் நடிகைகள் பட்டாளம் தான். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷில் துவங்கி, காளி வெங்கட், இளவ...
ரோமியோ விமர்சனம்

ரோமியோ விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதல் நாளே விவாகரத்து கேட்கும் மனைவியை, ஆறு மாதத்திற்குள் காதலித்து 'கரெக்ட்' செய்து விட நினைக்கிறார் நாயகன். மனைவியின் மனதை வென்றாரா இல்லையா என்பதே படத்தின் கதை. ‘தி லவ் பார் (TLB)’-இல் மேனேஜராகப் பணிபுரிகிறார் யோகி பாபு. விஜய் ஆண்டனி ரோமியோவாக மாற ஆலோசனை சொல்லும் பாத்திரத்தை நிறைவாகச் செய்திருந்தாலும், நகைச்சுவைக்குப் பெரிய பங்களிப்பு அளிக்கவில்லை. நடிகையாக வேண்டும் என்ற கனவை மட்டுமே சுமக்கும் பாத்திரத்தில் மிர்னாலினி ரவி நடித்துள்ளார். தன் நடிப்புத்திறமையின் மீது நம்பிக்கையாக இருப்பதை விட, ஃபோனில் வரும் அநாமதேய அழைப்பின் பாசிட்டிவ் வார்த்தைகளைப் பெரிதும் நம்பியுள்ளார். இப்படி ஏனோதானோவென்று இல்லாமல், நாயகியின் கதாபாத்திர வார்ப்பில் கவனம் செலுத்தியிருந்தால் அருமையாக இருந்திருக்கும். இப்படத்தினை விட, மெலிதான கருவாக இருந்தாலும், கதாபாத்திர வார்ப்பில் கவனம் செலுத்தியதால் பிரேமலு ரீனா தனித்த...
மைதான் விமர்சனம்

மைதான் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைப்பையொட்டிப் படத்தின் 90 சதவிகிதத்திற்கு மேலான காட்சிகள் கால்பந்து மைதானத்திலேயே நடக்கின்றன. ஃபின்லாந்தில் நடக்கும் 1952 ஹெல்ஸின்கி ஒலிம்பிக்ஸில் தொடங்கும் படம், 1962 இல் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசியப் போட்டிகளில் படம் முடிகிறது. இந்தப் பத்து ஆண்டுகளில், கால்பந்து பயிற்றுநர் (Football Coach) சையத் அப்துல் ரஹீமின் தலைமையில் இந்தியக் கால்பந்து அணி மேற்கொண்ட பயணத்தை உணர்ச்சிப்பூர்வமாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அமித் ரவிந்தர்நாத் ஷர்மா. யுகோஸ்லோவியாவுடனான படுதோல்விக்குப் பின், இந்தியக் கால்பந்து அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் சமயத்தில், அதை மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்கிறார் S.A.ரஹீம். செகந்திராபாத்தின் குடிசைப் பகுதியில் இருந்து துளசிதாஸ் பலராமனையும், கல்கட்டாவிலிருந்து பிரதீப் குமார் பேனர்ஜியையும் தேர்ந்தெடுக்கிறார். பலமான இந்திய அணியை உருவாக்கி,...
கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் விமர்சனம்

கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நேசம் முரளி. அரசியல்வாதியின் மகன் ஒருவன் பெண்களிய எல்லாம் கடத்தி மானபங்கப்படுத்தி, தொடர் சித்திரவதை செய்து வருகிறான். IAS பயிற்சி வகுப்பிலுள்ள மாணவனை, ஒரு பெண் காவல்துறை அதிகாரி கைது செய்கிறார். ப்ளேடு பக்கிரி எனும் ரெளடியின் பெயரில் அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். அந்த மாணவனை அவ்வதிகாரி ஏன் கைது செய்கிறார், அந்த மாணவன் எப்படித் தப்பிக்கிறான் என்பதும்; படுபாதக செயல்களில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதி மகனுக்கும், அப்பெண் காவலதிகாரிக்கும், மாணவனுக்கும் என்ன சம்பந்தம் என்பதுமே படத்தின் கதை. தன் மேலதிகாரியை ஒருதலையாகக் காதலிக்கும் பாத்திரத்தில் கஞ்சா கருப்பு நடித்துள்ளார். அவர் நகைச்சுவை என்ற பெயரில் செய்யும் சேட்டையைப் பொறுத்துக் கொள்ள பிரம்ம பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. வையாபுரியும் அவர் பங்குக்கு நையப...
ஒரு தவறு செய்தால் விமர்சனம்

ஒரு தவறு செய்தால் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘எங்க வீட்டுப் பிள்ளை’ எனும் படத்தில், 1965 இல் கவிஞர் வாலியால் எழுதப்பட்ட ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் வரும் ஒரு வரியைப் படத்திற்குத் தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் மணி தமோதரன். பாடலில் அடுத்த வரியான, ‘அதைத் தெரிந்து செய்தால்’ என்ற வரியையும் சேர்த்தே, கதையின் ஓட்டத்தை உருவாக்கியுள்ளார். திரைத்துறையில் உள்ள நண்பர்கள் மூவர்க்கு, தங்கியிருக்கும் அறையைக் காலி செய்யவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. பிறரின் தேவையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், சுலபமாகச் சம்பாதிக்கலாமென பாடத்தைக் கோயம்பேடு மார்க்கெட்டில் கற்கின்றனர். தொழில்நுட்பம் தெரிந்த இளம்பெண் ஒருவரது துணையுடன், கே.கே.நகரில் நடக்கும் தேர்தலைப் பயன்படுத்திப் பெரும்பணம் பார்க்க நினைக்கிறார்கள். ஓர் அழகான ஃப்ளாஷ்-பேக் காட்சியில், தன் பள்ளிக்காதலை நினைவுகூருகிறான் நாயகன். அந்த மான்டேஜஸ்க்கு, டி.ஆர். குரலில் ஒரு நெடுங்கவிதை ஒலிக்கப்படுகிறது. ப...
பூமர் அங்கிள் விமர்சனம்

பூமர் அங்கிள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நல்லதொரு சூப்பர் ஹீரோ ஸ்பூஃப் படத்திற்கு முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஸ்வதேஷ் MS. சேஷு, பழைய ஜோக் தங்கதுரை, KPY பாலா, ரோபோ ஷங்கர், யோகிபாபு ஆகியோர் 90’ஸ் கிட்ஸ். இதில், யோகிபாபுவிற்கு மட்டும் கல்யாணமாகிவிட, அவரால் கல்யாணமாகாமல் இருக்கும் மற்றவர்கள், யோகிபாபுவைப் பழிவாங்க அவரது மாளிகைக்குள் களமிறங்குகின்றனர். மாளிகைக்குள் நடக்கும் கலாட்டாவே படத்தின்கதை. யோகிபாபுவின் மனைவி ரஷ்ய உளவாளி. யோகி பாபுவின் தந்தையான மதன் பாப் கண்டுபிடித்த ஆயுதங்களைத் திருடுவதே அவரது நோக்கம். மதன் பாப் கண்டுபிடித்த சில ஆயுதங்களை அமெரிக்க அரசு திருடி ஸ்பைடர் மேன், ஹல்க், தோர் ஆகியோரை உருவாக்கிவிட்டனராம். படம் பார்க்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ரசிகர்கள் நிலைமை தான் அந்தோ பரிதாபம். நகைச்சுவையாகவோ, கலகலப்பாகவோ கூடக் கொண்டு போகாமல், சகிக்கமுடியாதளவு கடியை ஏற்படுத்தும் மிகவும் சிரத்தையற்ற திரைக்கதையை எழுதியு...
Godzilla X King: The New Empire விமர்சனம்

Godzilla X King: The New Empire விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பூமியின் மேற்பரப்புக்குக் கீழுள்ள பூமியின் அடியாழத்திலிருந்து (Hollow Earth) புது அச்சுறுத்தல் முளைத்திட, கிங் காங்கும், காட்ஸில்லாவும் இணைந்து தடுக்கின்றனர். பூமிக்கு மேற்பரப்பில் இருக்கும் காட்ஸில்லா, டைட்டன்கள் எனும் இராட்சச ஐந்துகளிடம் இருந்து உலகைக் காப்பாற்றிக் கொண்டு ரோம் நகரத்து கொலசியத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளது. கிங் காங்கோ, பூமியின் அடியாழத்தில் வேட்டையாடிக் கொண்டு தன் காட்டு வாழ்க்கையில் மகிழ்வாக இருக்கிறது. இந்நிலையில், பூமியின் அடியாழத்தில் இருந்து வினோதமான சமிக்ஞைகள் வருகின்றன. அதே சமயம், வாய் பேசமுடியாத காது கேளாதவளும், ஐவி பழங்குடியின் கடைசி நபரும், ஐலீனின் தத்து மகளுமான ஜியாவிற்கும் அந்த சமிக்ஞைகளை உணருகிறாள். தன்னை யாரோ, பூமியின் அடியாழத்திலிருந்து உதவி கேட்பதாக உணருகிறாள். அந்த சமிக்ஞையை உணரும் காட்ஸில்லாவும் நகரத் தொடங்குகிறது.ஜியா, ஐலீன், பெர்னி ஹேயஸ், ட்ரேப...