Shadow

கட்டுரை

சிக்னேச்சர் ஸ்டுடியோ – அண்ணா நகரில் புத்தம்புது சலூன்

சிக்னேச்சர் ஸ்டுடியோ – அண்ணா நகரில் புத்தம்புது சலூன்

சமூகம்
சிக்னேச்சர் ஸ்டுடியோ (யுனிசெக்ஸ் சலூன் | அகாடமி) எனும் இருபாலருக்கான அழகு நிலையத்தை அண்ணா நகரில்* நிறுவியுள்ளார் ஜபீன் மெஹமூத். ஒப்பனைத் துறையில் 22 வருட அனுபவமுள்ள ஜபீன், சிறந்த ஒப்பனைக்காக பல விருதுகள் வாங்கியூள்ளார். அவர் சிறந்த ஒப்பனையாளர் மட்டுமல்லர், சிறந்த ஒப்பனைக் கல்வியாளராகவும் திகழ்கிறார். ஓர் அழகுநிலையத்தை நடத்துவதற்கான, தொழில் முனைவோருக்குரிய ஊக்கமும் திறனும் ஒருங்கே பெற்றவர். அவருடைய சிறப்பு அம்சம், அழகு மற்றும் ஒப்பனைத் தொழில் பற்றிய பரிபூரண அறிவைப் பெற்றிருப்பதே!சிக்னேச்சர் ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குநர் முஜீபா நாஸ், “அனைத்து சர்வதேச பிராண்ட் தயாரிப்புகள் பற்றிய அறிவைப் பெற்ற தரமான சேவை வழங்கக்கூடிய பணியாளர்களைக் கொண்டுள்ளோம். அவர்கள், உலகின் மிகச் சிறந்த அழகுக் கலை நிபுணர்களிடம் பயிற்சி பெற்றவர்கள். எங்களிடம் ஒரு வாடிக்கையாளர் பெறும் மிகச் சிறந்த அனுபவம், அவரை எங்களது ...
தி பார்க் | சென்னையில் சீன – ஜப்பானியப் பாரம்பரிய உணவுகள்

தி பார்க் | சென்னையில் சீன – ஜப்பானியப் பாரம்பரிய உணவுகள்

காணொளிகள், சமூகம்
‘தி பார்க், சென்னை (THE Park, Chennai)’ நட்சத்திர விடுதியில், 2002 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் 601 பல்வகை உணவுக்கூடம் (Multicuisine Restaurant), புத்தம் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது. விரைவாகவும் இலகுவாகவும் ஜீரணமாகும் மதிய உணவாகட்டும் அல்லது நிதானமாக உண்டு களைப்பாற முற்படும் இரவு உணவாகட்டும், அனைத்திற்குமே ஏற்ற வகையில் உணவு வகையறாக்கள் இங்கே உண்டு. கலையும் கற்பனையும் கலந்த கலவையாக இங்குத் தயாரிக்கப்படும் உணவு வகைகள் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தளிப்பதோடு நாவின் சுவைக்கும் நல்விருந்தளிக்கும். ஆர்வமும் நேர்த்தியும் திறமையும் மட்டுமே துணையாகக் கொண்டு, Executive Chef, Ashutosh Nerlekar-உம், அவரது குழுவினரும், சைவ உணவினருக்கும், அசைவ உணவினருக்கும் அற்புதமான பிரத்தியேக மெனுவைத் தயாரித்துள்ளனர்.தற்போது, 601 இல், சீனப் பாரம்பரிய உணவான டிம் ஸம் (Dim Sum) மற்றும் ஜப்ப...
Stop Weighting | VJ ரம்யாவின் ஆரோக்கியத்திற்கான புத்தகம்

Stop Weighting | VJ ரம்யாவின் ஆரோக்கியத்திற்கான புத்தகம்

புத்தகம்
தொகுப்பாளரும் நடிகையுமான விஜே ரம்யா சுப்ரமணியத்தின் முதல் புத்தகமான ‘Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You’ என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்கிறது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா ஒவ்வொரு வருடமும் 250க்கும் மேற்பட்ட புதிய தலைப்புகளை வெளியிடுகிறது மற்றும் இதன் பட்டியலில் 3000க்கும் மேற்பட்ட தலைப்புகளையும் வைத்திருக்கிறது. சரிதை, பயணம், வியாபாரம், அரசியல், வரலாறு, மொழி மற்றும் தத்துவம், லைஃப்ஸ்டைல், சமையல், உடல்நலம், உடற்பயிற்சி, விளையாட்டு, விஷுவல் புத்தகம் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என வலுவான ஃபிக்‌ஷன் மற்றும் நான்- ஃபிக்‌ஷன் பிரிவுகளில் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. புகழ்பெற்ற இன்ஃபுளூயன்சராக வலம் வரும் ரம்யா ஒருகாலத்தில் உடல் பருமன் காரணமாக உடல் கேலிக்கு ஆளாக்கப்பட்டார். இதனால், எல்லாரையும் போலவே உடல் இளைக்க வேண்டும் என்று எண்ணி...
“சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு..” – பார்வதி நாயர்

“சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு..” – பார்வதி நாயர்

சமூகம்
அன்பான ரசிகர்களே, நண்பர்களே, அன்புமிக்க பொதுமக்களே! கடந்த வாரத்தில் என்னைப் பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கட்டுரைகளும் காணொளிகளும் வெளியாகின. இது தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு குறித்தும், இப்பிரச்சனையைப் பற்றி தெளிவுபடுத்துவதற்கும், பொய்யுரையைப் புரிய வைப்பதற்கும் இந்தச் செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன். எனது உடைமைகள் திருடப்பட்டதால், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சிலர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 20.10.2022 அன்று புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தேன். நான் சட்டத்தின் சரியான செயல்முறையைப் பின்பற்றி வருகிறேன். மேலும் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு எனக்கான தீர்வுகளைப் பெறுவதற்காக சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறேன். சுபாஷ் சந்திர போஸை நான் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறுவது நியாயமற்றது. அவர் ஒரு பகுதி நேர உதவியாளராகவும், வார இறுதி நாட்களில்...
தமிழர்கள் விடுதலையுடன் 25 லட்ச ரூபாய் பணம் – லைக்காவின் முன்னெடுப்பு

தமிழர்கள் விடுதலையுடன் 25 லட்ச ரூபாய் பணம் – லைக்காவின் முன்னெடுப்பு

அரசியல்
செப்டம்பர் 19 ஆம் தேதியன்று இலண்டன் மாநகரில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவைச் சந்தித்தார் லைகா நிறுவனர் சுபாஷ்கரன். அந்தச் சந்திப்பு பல்லாண்டுகளாச் சிறையில் வாடிக் கொண்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது. எப்படியெனில், அந்தச் சந்திப்பில் லைகா நிறுவனர் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார் ரணில். அதனால் தொடக்கத்தில் 8 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகினார்கள். அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் மேலும் 9 அரசியல் கைதிகள் விடுதலையாக்கியுள்ளார்கள். இவர்களில், முதலில் விடுதலையான 8 தமிழ் அரசியல் கைதிகள், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணிய சுபாஷ்கரன், அவர்களுக்குத் தலா ரூபாய் 25 இலட்சத்தை வழங்கினார். நவம்பர் 3 ஆம் தேதி வியாழன் அன்று கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் வைத்து, 8 அரசியல் கைதிகளுக்கும...
இறைவி – 5 ஆம் ஆண்டு விழா

இறைவி – 5 ஆம் ஆண்டு விழா

இது புதிது, சமூகம்
சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினரான தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு இறைவி நிறுவனத்தின் தூண்களில் ஒருவரான உம...
பாலமுரளி நாத மஹோத்சவம் தேசிய விருதுகள்

பாலமுரளி நாத மஹோத்சவம் தேசிய விருதுகள்

சமூகம்
பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சியில் Dr.T.K.மூர்த்தி, திரு. M. சந்திரசேகரன் மற்றும் திரு. விக்கு விநாயக ராம் முரளி ஆகியோர் நாத லஹிரி விருது பெற்றனர். பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சி Dr.M.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் 92ஆவது பிறந்த நாளான ஜூலை 6 ஆம் தேதி அன்று விருது வழங்கும் நிகழ்ச்சியாகவும்,இசை நிகழ்ச்சியாகவும் கோலாகலமாக நடைபெற்றது. Dr. M. பால முரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் பாரதிய வித்யா பவன் மற்றும் ssvm நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பால முரளி கிருஷ்ணா அவர்களின் பிரதான சீடர்களான Dr. K. கிருஷ்ணகுமார் மற்றும் திருமதி பின்னி கிருஷ்ணகுமார் அவர்களின் குழு,  பால முரளி பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடித் துவக்கி வைத்தனர். கர்நாடக இசை உலகின் உச்சத்தைத் தொட்ட இசைக் கலைஞர்கள் Dr.T.K. மூர்த்தி (மிருதங்கம்), திரு.M. சந்திரசேகரன் (வயலின்...
ஆஹா தமிழில் ஜீ.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’

ஆஹா தமிழில் ஜீ.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’

சமூகம், சினிமா, திரைச் செய்தி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் கலந்து கொண்டார். ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியான செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ஐங்கரன் படத்தின் ட்ரெய்லரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. இப்படம், மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து மேடையேறிய இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர், “உங்களின் இந்த உற்சாகத்தைப் பார்க்கும்போது எனக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது. உங்களுடைய எனர்ஜி என்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. நான் திரைத்துறைக்கு...
விஜய் சேதுபதி | ஒரு லட்சம் குடும்பம் பலனடையக் காரணமான VVSI

விஜய் சேதுபதி | ஒரு லட்சம் குடும்பம் பலனடையக் காரணமான VVSI

சமூகம்
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளாலாரின் ஒற்றை வரியை உயிர்நாதமாகக்கொண்ட ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ’கடைசி விவசாயி’ என்கிற இரட்டை காவியப் படங்களைத் தயாரித்த விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளாக, சத்தமில்லாமல் செய்து வரும் நற்காரியம் சிலிர்ப்பை ஏற்படுத்தும்வண்ணம் உள்ளது. இது லட்சம் குடும்பங்களின் ஆனந்தக் கண்ணீர் கண்ட கதை. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புப் பெற உந்து சக்தியாக இருந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அச்செயல் இன்னும் பல்கிப் பெருகி இன்னும் பல லட்சம் பேர் பயனடையக் காத்திருக்கிற ஆச்சர்யமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது? அவரது பெயர் இ.பா.வீரராகவன். பாண்டிச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர். 2016ஆம் ஆண்டு துவங்கி 3 வாட்ஸாப் குழுக்கள் மூலம் தனது சின்ன சக்திக்கேற்ற வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள...
ராமன், எத்தனை ராமனடி?

ராமன், எத்தனை ராமனடி?

ஆன்‌மிகம், சமூகம்
ஆந்திரத்தில் பயணம் செய்யும் போதெல்லாம் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு கோதாவரியின் மீதுள்ள பற்று. அடுத்ததாக ராமனின் மீது அவர்களுக்கு இருக்கிற அபாரமான பிரேமை. வியப்பு. வாத்சல்யம். எனக்கு அது சற்று மிகையாகவே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது. அவர்கள் எப்போதுமே சற்று அதிகம் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள் என்ற பிம்பம் எனக்குள் இருந்ததாலும் இருக்கலாம். ஒரு பக்கம் தெலுங்கானா பிரச்சினை. நக்சலைட் நெருப்பு. இதற்கு நடுவில் ராம பக்தி. எந்த ராமன்? தியாகராஜ சுவாமிகளின் பாடல்களில் நின்றும், நடந்தும், கிடந்தும் என வருகிற ராமன். மனித குல மாணிக்கம் என்று கம்பன் சிலாகிக்கிற ராமன். இந்தியாவில் எங்கு போனாலும் இது ராமர் வில் ஊன்றிய இடம், சீதை இருந்த இடம், அனுமன் தாவிய இடம் என்று குருதிக்கோட்டுடன் வரும் தொன்மங்கள் ஊற்றெடுக்கும் ராமன். நாட்டார் கலைகளில் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கும் ராமன். சீதையின் பிரிவுக்க...
22 நொடி – 8 வயது சிறுவன் நிகழ்த்திய உலக சாதனை

22 நொடி – 8 வயது சிறுவன் நிகழ்த்திய உலக சாதனை

சமூகம்
சிறு பிராயத்திலேயே உலகசாதனை படைத்துள்ளான் 8 வயது சிறுவனான ஹேம்தேவ். சென்னை வேளச்சேரி 4A, DAV பப்ளிக் பள்ளியில் படித்து வரும் சிறுவன் ஹேம்தேவ் படிப்பைப் போலவே விளையாட்டிலும் படு சுட்டி. சிறுவயதிலே உடல் சார்ந்த பயிற்சியில் அதி தீவிரமாக இயங்கி வரும் ஹேம்தேவ் 22 நொடியில் நான்கு கால் ஓட்டத்தில் 100 மீட்டர் ஓடி உலகசாதனைப் படைத்துள்ளார். இச்சிறுவனை அமைச்சர் அன்பரசன் நேரில் பாராட்டி விருதை வழங்கியுள்ளார். ஹேம்தேவ் அடைந்த இந்தப் பெருமை மிகு புகழால் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் ஹேம்தேவ் பெற்றோரான சக்திவேல் தமிழ்செல்வி. மேலும், ஹேம்தேவ் வேளச்சேரி பேருந்து நிலையம் அருகேயுள்ள வேதாஸ்ரீனி குங்பூ கிளாஸில் மாஸ்டர் வேதகிரி அவர்களிடம் தீவிரமாக குங்பூ கற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ...
“பேச மறுக்கப்படும் தலைப்புகளை விவாதிப்போம்” – ஸ்ருதிஹாசன்

“பேச மறுக்கப்படும் தலைப்புகளை விவாதிப்போம்” – ஸ்ருதிஹாசன்

சமூகம்
தென்னிந்தியத் திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார். தனது பிறந்தநாளன்று, சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார். இதனையொட்டி மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள், ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதளப் பக்கத்தில் ஜனவரி 27 முதல் அவர் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளார். இந்த நேரலை நிகழ்வுகள் மூலம், ஸ்ருதிஹாசன், பொதுவாகச் சமுகத்தில் விவாதிக்க மறுக்கப்படும், பல தலைப்புகளில் விவாதங்களை, உரையாடலை மேற்கொண்டு, அந்த விசயங்களின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறார். இந்த நேரலை அமர்வுகளில் ஸ்ருதிஹாசன் பல்வேறு செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து, இந்தத் தலைப்புகளைப் பற்றி விரிவாக விவாதிப...
ஜெய் பீம் – பாராட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு

ஜெய் பீம் – பாராட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு

அரசியல், சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்தார். அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2D நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர். முன்னதாக படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்த நல்லகண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தை என்.எப்.டி.சி.-இல் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை இரவு படத்தைத் திரையில் கண்டு ரசித்தார். படத்தைப் பார்த்துவிட்டு நல்லகண்ணு அவர்கள், நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார். நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை நல்லகண்ணு பதிவு செய்தார். தமிழகத்தில் 1990களில் நடந்த பல்...
பார்வதி நாயர் இஸ் எ டோஸ்ட்மாஸ்டர்

பார்வதி நாயர் இஸ் எ டோஸ்ட்மாஸ்டர்

சமூகம்
உலக அளவில் இலாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான டோஸ்ட்மாஸ்டர், 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் இந்த 'டோஸ்ட்மாஸ்டர்' தன்னார்வ தொண்டு நிறுவனம், கல்வியியல் துறையில் ஆக்கபூர்வமாக செயல்படும் தலைவர்களையும், தலைமைப் பண்புடன் கூடிய பேச்சாளர்களையும், மனதின் மாசுகளை அகற்றி, வலிமையான உளவியல் உத்திகளுடன் முன்னேற்றத்தை நோக்கி செல்வதற்கான பாணியை எளிதாக விளக்கும் சுயமுன்னேற்ற பேச்சாளர்களையும் உருவாக்கியிருக்கிறது. இவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள கௌரவ விருந்தினராக அழைக்கப்படுவதற்கே ஏராளமான தகுதிகள் வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் அனுபவ ஆளுமையுடன் சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கும் திறமையாளர்களையும், சாதனையாளர்களும் மட்டும்தான் இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு கௌரவ விருந்தினர்களாக அல்லது பேச்சாளர்களாகவும் அழைக்கப்படுவர். உதாரணமாக்க் ...
கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

சமூகம், சினிமா, மற்றவை
கொடியன்குளம் கலவரம் தான் கர்ணன் படத்தின் கரு என நம்பத் தொடங்கிய இணைய திமுகவினர், தொடர்ந்து அதைப் பற்றிச் சமூக ஊடகத்தில் தங்கள் கோபத்தினைப் பதிந்து வந்தனர். இறுதியாக, திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, இணைய திமுகவினரைக் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி (!?) வைத்துள்ளார். ஒரு புனைவைப் புனைவாகப் பார்க்கச் சொல்லி உடன்பிறப்புகளிடம் நயமாகச் சொல்லிக் கடக்காமல், வரலாறு சரி செய்யப்படவேண்டும் என நல்லெண்ணத்தில் உதயநிதி ஸ்டாலினும் கர்ணன் திரைப்படக் குழுவிடம் பேசி தேதிகளை மாற்றும்படி கேட்டுள்ளார். ஆக, இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினும், இப்படம் ஆஃபிஷியலாக 'கொடியன்குளம் கலவரம்' பற்றிய வரலாற்றுப்படம் தானென்று பொதுவெளியில் ஒத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சியில், கொடியன்குளத்தின் மீது, சசிகலாவினுடைய நேரடி கட்டளைக்கிணங்க நிகழ்ந்த அரச பயங்கரவாதத் தாக்குதலை, காவல்து...