
தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga review
சென்னைக் கிழக்கு கடற்கரை சாலையில் ஒருவர் கொல்லப்படுகிறார். அவ்வழக்கை விசாரிக்கும் மகுடபதி, கிடைக்கும் துப்புகளைக் கொண்டு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் செல்கிறார். அங்கே நடந்த ஒரு சிறுமியின் மரணத்திற்கும், கொலை வழக்கிற்கும், அக்குடியிருப்பைக் கட்டிய கோடீஸ்வரரான வரதராஜனுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகச் சந்தேகிக்கிறார் மகுடபதி. ஆனால் வரதராஜனும் கொல்லப்பட, நடக்கும் யாவற்றிற்கும் யார் காரணமென விரிகிறது படம்.
ஆட்டிசச் சிறுமியாக நடித்துள்ள பேபி அனிகா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கனத்தைக் கூட்ட உதவியுள்ளார். ஆசிரியை மீராவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மீராவின் தற்காப்புக் கலை மாஸ்டராக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். தீயவரை அப்படியே விட்டு வைக்கக் கூடாதெனப் பழிவாங்கத் துணியும் நாயகியாக வடிவமைக்கப்பட்டுள்ளது ஐஸ்வர்யா ராஜேஷின் பாத்திரம். அவரது காதலர் ஆதியாக பிரவீன் ராஜா நடித்துள்ள...











