
தூநேரி விமர்சனம்
அமானுஷ்ய கதைகள் என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அப்படியான கொண்டாட்டங்களை ஏற்படுத்தவே தூநேரி படம் முயற்சி செய்திருக்கிறது.
ஊர்க்காலவனாக இருக்கும் கருப்பசாமி என்கிற ஜான் விஜய் ஒரு கட்டத்தில் ஊரார்களாலே கொல்லப்படுகிறார். பின் கொன்றவர்களைப் பேயாக மாறி பழி வாங்குகிறார். இப்படியான சம்பவம் நடக்கும் ஊருக்கு மாற்றலாகி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்தி நடக்கும் கொலைகளை எப்படி தடுக்கிறார் என்பதுதான் படத்தின் மையக்கரு.
கருவிலேயே நடிக்கத் தெரியும் என்பது போல படத்தில் வெள்ளக்கனியாக வரும் சிறுவன் அபிஜித் அபாரமாக நடித்திருக்கிறான். ஜான் விஜய், கருப்பசாமி கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். இன்ஸ்பெக்டர் இன்னும் கூட முனைப்போடு நடித்திருக்கலாம்.
ஒரு பேய் படத்திற்கான கதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் அதற்கான விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்குவதில் கூடுதல் சிரத்தையைச் செலுத்தியிருக்கலாம் அறி...
















