Shadow

சினிமா

பொன்மகள் வந்தாள் விமர்சனம்

பொன்மகள் வந்தாள் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகள் மீது நடக்கப்படும் பாலியல் வன்முறையினால், அக்குழந்தைகளுக்கு ஏற்படும் வாழ்நாள் மன அதிர்ச்சியைப் (mental trauma) பற்றிப் படம் பேசுகிறது. போலீஸ் எப்படி பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகச் சோடிக்கும் என்பதையும் படம் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. இரட்டைக் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட ஜோதியை, சைக்கோ என முத்திரை குத்தி, 2004 இல் என்கவுண்ட்டர் செய்து விடுகிறது போலீஸ். அந்த வழக்கை மறுவிசாரணைக்குக் கொண்டு வருகிறார் பெட்டிஷன் பெத்துராஜ். இறந்துவிட்ட ஜோதிக்கு ஆதரவாக வெண்பா எனும் வக்கீல் களமிறங்க, 15 வருடத்துக்கும் முன் நிகழ்ந்த உண்மையைப் பார்வையாளர்களுக்குக் கதையாகச் சொல்கிறார் வெண்பா. வெண்பாவாக ஜோதிகா நடித்துள்ளார். பாதி படத்திற்கு மேல், நீதிபதியாக வரும் பிரதாப் போத்தனை, விஜய் டிவி ஜட்ஜ் என நினைத்துக் கொண்டு ஜோதிகா அழுது தீர்க்கிறார். படத்தின் சீரியஸ்னஸை அது நீர்த்துப் போகச் செய்கிறது. 'அந்தக...
“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

சமூகம், சினிமா, திரைத் துளி
திரையரங்கு உரிமையாளர்களின் கடும் அதிருப்திக்கும், கோபத்திற்கும் இடையில், "பொன்மகள் வந்தால்" படம் அமேசான் ப்ரைமில் மே 29 அன்று வெளியாகவுள்ளது. ஓடிடி என்பது சினிமாவிற்கு மாற்றா, இல்லை சினிமா என்பதே தியேட்டரில் பார்த்து மகிழும் ஓர் அனுபவம், அதற்கு எந்தப் பாதிப்பும் மாறாது என விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகா தனது படத்தைப் பற்றியும், ஓடிடி பிளாட்ஃபார்ம் குறித்தும் பேசியுள்ளார். "எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும். ஆகையால் தான் 2டி நிறுவனம் எனக்குப் பொருந்துகிறது. 6 மணிக்கு பேக்-அப் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன். சில படங்கள் எந்தளவுக்குப் பொதுமக்கள் வந்து பார்ப்பார்கள் என்பது தெரியாது. ஆகையால் சொ...
TENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்

TENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்

சினிமா
TENET is a palindrome. முன்னிருந்து பின்னோக்கிப் படித்தாலும் சரி, பின்னிருந்து முன்னோக்கிப் படித்தாலும் சரி ஒரே வரிசையில் எழுத்துகளைத் தரும் சொல். அச்சொல்லை Ambigram ஆகவும் மாற்றித் தலைப்பை உருவாக்கியுள்ளார். அதாவது தலைப்பை 360° திருப்பினாலும், மீண்டும் அதே வரும்.நோலன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படத்தின் தலைப்பில் இருக்கக்கூடிய இந்த பாலிண்டிரோமிற்கும் ஆம்பிகிராமிற்கும், திரைக்கதையுடன் மிகப்பெரிய ஒற்றுமை இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இப்போது வரை இந்தத் திரைப்படத்தின் கதை என்னவென்று மிகச் சில நபர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நோலனின் திரைப்படங்களில் தொடர்ந்து பங்காற்றிவரும் நடிகரான மைக்கேல் கெய்னிற்கே கதை என்ன என்று தெரியாது. அத்தனை ரகசியமாக அதனை வைத்திருக்கிறார். நோலனைப் பொறுத்தவரையில் அவர் எழுதி இயக்கும் ஒவ்வொரு திரைப்படமுமே கனவுத் திரைப்படம்தான் என்ற போதிலும், 'இந்தத்...
பொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள்

பொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள்

சினிமா, திரைத் துளி
அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்தியச் சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி* மக்களை இந்த ட்ரெய்லர் சென்...
“கடைசியாக அது நம்மை நோக்கி வந்துவிட்டது” – ராட்டினம் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி

“கடைசியாக அது நம்மை நோக்கி வந்துவிட்டது” – ராட்டினம் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி

சினிமா, திரைத் துளி
இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.தங்கசாமி, "ராட்டினம்", "எட்டுத்திக்கும் மதயானை" ஆகிய படங்களை இயக்கியவர். திருப்பூர் சுப்ரமணியத்தின் முயற்சிக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். "சமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது. தனது இந்த முன்னெடுப்பிற்கு பிரமிட் நடராஜன் சாரும், ஆர்.பி. சவுத்ரி சாரும் காரணமாக அமைந்ததாகத் தனது பேச்சில் குறிப்பிட்டார். அவர்களுக்கும் மிக்க நன்றி. திருப்பூர் சுப்ரமணியன் முன்வைத்த தீர்வு சதவீத அடிப்படையில் சம்பளம், சிறுசிறு பங்குதாரர்கள், விற்பனையில் பங்கு, வெளிப...
“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

சினிமா, திரைத் துளி
ஓடிடி (OTT) பிளாட்ஃபாரத்தில் நேரடியாக வெளியாகும் முதல் இந்திய மெயின்ஸ்ட்ரீம் திரைப்படம் என்ற பெருமையைப் 'பொன்மகள் வந்தாள்' பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பினைத் தூண்டியுள்ள இந்தப் படத்தைப் பற்றி ஜோதிகா, "இது ஒரு சமூக அக்கறையுள்ள கதை. த்ரில்லர் படம் என்பதால் என்ன சமூக அக்கறை என்பதை சொல்ல முடியாது. இந்தப் படத்தில்  5 இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கடந்த படத்தில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம் இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அனைவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் எப்படித் தங்களுடைய கதாபாத்திரத்துக்குத் தயார் செய்து கொள்கிறார்கள், நீளமான வசனத்தை எப்படி சரியாக உச்சரித்து நடிக்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை ஒரு நடிகையாகக் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் 3 - 4 நீளமான வசனக் காட்சிகள் இருக்க...
தப்பட் விமர்சனம்

தப்பட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. 'தப்பட்' என்றால் "அறை (slap)" என்று பொருள். 'ஆர்டிகிள் 15' எனும் அதி அற்புதமான படத்தை இயக்கிய அனுபவ் சின்ஹாவின் படம். அதுவும் குடும்ப வன்முறையைப் (Domestic violence) பற்றிய படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. மாமியார் கொடுமை, வரதட்சணைக்காகத் துன்புறுத்தப்படுவது, வசை மாரி பொழிதல், கையை நீட்டி அடித்தல் என்ற பிசிக்கல் & வெர்பல் அப்யூஸ்கள் மட்டும் டொமஸ்டிக் வயலன்ஸில் வராது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, குடும்ப நலனெனக் காரணம் காட்டி ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பது போன்றவையும் டொமஸ்டிக் வயலன்ஸ்தான். "நான் கார் ஓட்டக் கத்துக்கவா?" - டாப்சி. "முதலில் ஒழுங்கா பராத்தா போடக் கத்துக்க?" - டாப்சியின் கணவன். இந்த உதாசீனத்த...
Extraction விமர்சனம்

Extraction விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்திய போதைக் கடத்தல் மன்னன் சிறையில் அடைபட்டிருக்க, அவனது மகன் ஓவி மஹாஜனைக் கடத்தி விடுகிறான் பங்களாதேஷ் கடத்தல் மன்னன் அமிர். ஓவியைப் பணயத் தொகை தராமல் விடுவிக்க, ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு கூலிப்படை பங்களாதேஷ் தலைநகரம் டாக்காவில் இறங்குகிறது. அடைபட்ட பையனை, ஆஸ்திரேலியக் கூலிப்படையைச் சேர்ந்த நாயகன் டைலர் வெளியில் கொண்டு வந்த பிறகு, ஆஸ்திரேலியக் குழு யாரோ ஒருவனால் தாக்கப்படுகிறது. மறுபுறம், ஓவியை மீட்டுக் கொல்ல, அமிரின் ஆட்களும், பங்களாதேஷ் இராணுவமும் டாக்காவை முழுவதும் மூடித் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றனர். இந்தக் குழப்பங்களை எல்லாம் மீறி, ஓவியைப் பத்திரமாக இந்தியா கொண்டு வந்து டைலர் சேர்க்கிறானா என்பதுதான் படத்தின் கதை. மார்வல் படங்களுக்கு ஸ்டன்ட் டைரக்டராகப் பணியாற்றிய சாம் ஹார்க்ரேவ் இயக்கியுள்ள முதல் படம். தோர் ஆக நடித்த க்றிஸ் ஹெம்ஸ்வொர்த், டைலர் ரேக்-காக நடித்துள்ளா...
The Insult (2017) விமர்சனம்

The Insult (2017) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
“மனிதன் மகத்தான சல்லிப்பயல்” என்பது எழுத்தாளர் ஜி.நாகராஜனுடைய புகழ்பெற்ற வாசகம். யாராவது சாலையில் விழுந்து கடுமையான காயம்பட்டால், “நல்ல அடி" என்போம் இல்லையா? அது போல 'மகத்தான சல்லிப்பயல்' என்கிறார். நம் எல்லோருடைய மனதிலும் ஈகோ எனும் பெட்ரோலில் தோய்ந்த பஞ்சுப்பொதி ஈரத்துடனே இருக்கிறது. அந்த பெட்ரோல் பஞ்சுப்பொதி பற்றிக்கொண்டு எரிய அவமானம் அல்லது புறக்கணிப்பு எனும் சிறு-தீப்பொறி கூடத் தேவையில்லை, அந்த தீப்பொறியின் வெம்மையே கூடப் போதுமானதாக இருக்கிறது. அப்படிப் பற்றும் தீ, தன்னையும் எரித்து, சுற்றியிருப்பவரையும் கருகச் செய்கிறது. அப்படிப்பட்ட ஈகோவால் தானும் கஷ்டப்பட்டு, சுற்றி இருப்பவர்களையும் சங்கடமாக்கும் இரண்டு நபர்களைப் பற்றிய லெபானியப் படமே The Insult (2017). இந்தப் படத்தைப் பார்க்கும் போது, சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து பெரிதும் பேசப்பட்ட அய்யப்பனும் கோஷியும் ஞாபகம் வருவதைத் தவிர்க்...
Birbal Trilogy: Case 1 Finding Vajramuni விமர்சனம்

Birbal Trilogy: Case 1 Finding Vajramuni விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சமீபமாகக் கன்னடத்தில் வெளிவந்த சிறந்த இன்வஸ்டிகேடிவ் த்ரில்லர் என தைரியமாக இப்படத்தினைச் சொல்லலாம். கடைசி வரைக்கும் யார் உண்மையான கொலையாளி எனத் தீர்மானிக்க முடியாமல் யோசிக்க வைப்பதிலேயே இயக்குநர் வெற்றி பெற்றுவிடுகிறார். ஒரு கொலை நடக்கிறது, அதனைப் பற்றிச் சொன்னவன் தான் குற்றவாளி என காவல்துறையினர் கைது செய்கின்றனர். நீதிமன்றத்தில் தீர்ப்பாகி எட்டு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளி வருகிறான். இதனிடையில் ஒரு சட்ட நிறுவனம் சமுதாயத்தில் நற்பெயர் எடுக்க வேண்டி, ஏழை மக்களது வழக்குகளை இலவசமாக நடத்த முடிவெடுக்கிறது. அப்பொழுது அங்கு வேலைக்குச் சேரும் மகேஷ் தாஸ் என்பவன் இந்த வழக்கை எடுக்கிறான். எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த குற்றம் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமான சாட்சிகள் எதுவும் கிடைக்காத நிலையில் மகேஷ் தாஸ் பூஜ்ஜியத்தில் இருந்து வழக்கைத் தொடங்குகிறான். படம் பார்...
Babel (2006) விமர்சனம்

Babel (2006) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
புகழ் பெற்ற மெக்ஸிக்கன் இயக்குநர்,அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டு (Alejandro Iñárritu) தயாரித்து, இயக்கிய திரைப்படம். இதே இயக்குநர், “மரணம்” என்ற தீமை மையமாக கொண்டு இயக்கிய 'அமரோஸ் ஃபெரோஸ்', '21 கிராம்ஸ்' ஆகிய படங்களின் தொடர்ச்சி ட்ரையாலஜியாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. பேபல் படம் ஹைப்பர்-லிங்க் திரைக்கதையைக் கொண்டது. அதாவது, சம்மந்தமே இல்லாத நாலைந்து கிளைக் கதைகளை க்ளைமாக்ஸில் ஏதோ ஒரு வகையில் லிங்க் செய்து ஒற்றைக்கதையாக மாற்றும் திரைக்கதை வடிவத்தை ஹைப்பர்-லிங்க் என்பார்கள். போன வருடம் தமிழில் வந்த சூப்பர் டீலக்ஸ் போல! திரைப்படம், பைபிளில் கூறப்படும் ஒரு நாட்டார் கதையுடன் துவங்குகிறது. முன்பெல்லாம் மனிதர்கள் உலகம் முழுக்க ஒரே மொழியைப் பேசிக் கொண்டிருந்தனர். நோவாவின் வழித் தோன்றலான பாபிலோன் என்பவர் கடவுள் வாழும் சொர்க்கத்துக்கு மனிதர்கள் எல்லாரும் போவதற்காகப் பூமியிலிருந்து வானத்...
Untraceable (2008) விமர்சனம்

Untraceable (2008) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கடந்த ஒரு வாரம் பத்து நாட்களாக, ஃபேஸ்புக்கில் பெரியாரியம், பெண்ணியம், பாலியல் சுதந்திரம் குறித்து இரண்டு முற்போக்கு குழுக்கள் விவாதம் செய்து வருகின்றன. பரஸ்பரம் குற்றம் சாட்டியும் வருகின்றன. சில அந்தரங்கப் பேச்சுகள், வீடியோக்கள் என விவாதம் தனிப்பட்ட தாக்குதலைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த இரண்டு குழு பற்றியும் எனக்குப் பெரிய அக்கறை இல்லை. ஆனால், அவர்கள் இருவரும் தந்தை பெரியாரைத் தனது துணைக்குக் கூப்பிட்டுக் கொள்கிறார்கள். அது தான் வருத்தம். பாவம் பெரியார். இந்த இரண்டு குழுவைச் சார்ந்தவர்கள் இதற்கு முன்பும் பெண்ணியம், சுதந்திரம், பகுத்தறிவு என பல தலைப்புகளில் மிகச் சிறப்பான பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அதிகம் கவனிக்கப்படாத அந்தப் பதிவுகளை விட, பெண்ணுடல், ஆபாசப் பேச்சு என பதிவுகள் வந்ததும் அங்கு ஆயிரக்கணக்கில் லைக்குகளும் பின்னூட்டங்களும் குவிந்து வருகிறது. அங்கு லைக், ...
The tale of the Princess Kaguya (2013) விமர்சனம்

The tale of the Princess Kaguya (2013) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஜப்பான் நாட்டுப்புறக் கதை ஒன்றை அழகான அனிமே (Anime – Japanese animation) படமாக உருவாக்கியுள்ளார் இசாவோ டகஹாட்டா (Isao Takahata). இது அவர் இயக்கிய கடைசிப்படமும் ஆகும். சிறிய வயதில் அவர் படித்த, ‘ஒரு முங்கீல் வெட்டியின் கதை’ என்ற நாட்டுப்புறக் கதைக்கு அனிமேஷன் உருவம் கொடுக்க வேண்டுமென்பது அவரது ஆசை. சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக அனிமேஷன் துறையில், கதாசிரியராகத் தயாரிப்பாளராக இயக்குநராகப் பணியாற்றிய டகஹாட்டா, தனது இளம் வயது கனவிற்கு அவரது 78 வது வயதில் உயிர் கொடுத்தார். வழக்கம் போல், மலையில் மூங்கிலை வெட்டிக் கொண்டு திரும்பும் பொழுது, ஓர் அதிசயமான வெளிச்சம் மூங்கிலின் அடித்தண்டில் இருந்து வருவதைக் காணுகிறார் ஒரு மூங்கில் வெட்டி. அருகில் சென்று பார்க்கும் பொழுது, ஒரு மூங்கில் குருத்து பிரகாசமாய் வளர்ந்து மலருகிறது. அந்த மலர்ந்த மூங்கில் குருத்தில் இருந்து, உள்ளங்கைக்குள் அடங்கி விடுமளவு ...
தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்

தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'திருட்டுப்பொருளும் சாட்சியும்' என்பதே தலைப்பின் பொருள். ஆங்கிலத்தில், Angle in Details என்று சொல்லுவார்கள். மிக எளிமையான விஷயத்தைக் காட்சிப்படுத்துவது, அதனைப் புரிந்துகொள்வதில் விரிவாக ஆழம் செல்லச் செல்ல தெய்வீகம் வெளிப்படுகிறது. எளிமையே பிரம்மாண்டம். அதனைக் காணவும் மற்றவருக்கு அதே அனுபவத்தைக் கடத்தவும் சற்றே பெரிய கண்கள் தேவைப்படுகிறது. அது தனிக் கலை. இந்தக் கலை பெரும்பாலான கேரள திரைப்படக் கலைஞர்களுக்குப் பிறப்பிலேயே வாய்த்திருக்கிறது எனலாம். மிக மிக எளிமையான கதையை கூட மனதில் நீங்காமல் இருப்பது போல காட்சிப்படுத்துவதில் கில்லாடிகள். ஃபஹத் ஃபாசில் நடிப்பில் இயக்குநர் திலீஷ் போத்தன் எடுத்த, 'மகேஷின்டே பிரதிகாரம்' என்ற படம் மிக நன்றாக ஓடியது (தமிழில் கூட அப்படம், உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் நிமிர் ஆக மறு உருவாக்கம் செய்யப்பட்டது). அதே இயக்குநர் ஃபஹத்துடன் இணைந்து, 'தொண்டிமுதலும் த்ரிக்சா...