Shadow

சினிமா

எட்டுத்திக்கும் பற விமர்சனம்

எட்டுத்திக்கும் பற விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாதி, இனம், மதம் என குறுகிய பரப்பில் கிணற்றுத் தவளையாய்ச் சிக்கித் தவிக்காமல், அதிலிருந்து மீண்டு, விடுதலை பெற்று, பரந்த விரிந்த உலகத்தை எட்டுத் திசைகளிலும் சுதந்திரமாய்ப் பறக்கவேண்டும் என்ற பொருளில் தலைப்பைச் சூட்டியுள்ளார் இயக்குநர் வ.கீரா. திரெளபதி படத்திற்கு நேர் எதிரான அரசியலைப் பேசியுள்ளது இப்படம். அரசியலில் எதிரெதிர் துருவம் என்றாலும் இரண்டு படத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. எப்படி திரெளபதி படத்தில், வில்லனாக ஓர் இயக்கத் தலைவரைச் சித்தரித்திருந்தார்களோ, அப்படியே இந்தப் படத்திலும். அதே போல், ஒரு வழக்குரைஞரும், சார்பதிவாளர் அலுவலகமும், அப்படத்தில் எப்படிச் சித்தரித்திருந்தனரோ,  இங்கே அப்படியே உல்டாவாகக் காட்டப்பட்டுள்ளது. வயதான இணையின் காதல், சாலையோரம் வாழும் இணையின் காதல், சாதி மாறி காதலிக்கும் இணையின் காதல் என படத்தில் மொத்தம் மூன்று காதல்கள். சமூக நீதிக்காகப் போராடும் வழக்கு...
ஜிப்ஸி விமர்சனம்

ஜிப்ஸி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜிப்ஸி என்றால் நாடோடி எனப் பொருள்படும். காஷ்மீரில், ஒரு முஸ்லீம் அம்மாக்கும், ஹிந்து அப்பாக்கும் பிறக்கும் குழந்தை, இந்தியாவெங்கும் பயணிக்கும் ஒரு நாடோடியிடம் வளர நேருகிறது. அந்நாடோடி குழந்தைக்கு ‘ஜிப்ஸி’ எனப் பெயரிடுகிறார். அரசியல் புரிதலுள்ளவனாக வளரும் ஜிப்ஸிக்குக் கட்சிச் சார்போ, கொள்கைச் சார்போ எதுவும் கிடையாது. ஆனாலும், புரட்சிகர தெருப் பாடகனாக அடையாளம் காணப்படுகிறான். தனக்கான முகம் என நாகூரில் ஒரு பெண்ணை அடையாளம் காணுகிறான். அந்தப் பெண், திருமணத்திற்கு முன் தினம் அழுது கொண்டிருப்பதைப் பார்க்கிறான். உடனே ஜிப்ஸி, “கவலைப்படாதீங்க உங்க ஆளுங்க (பாகிஸ்தான்) தான் ஜெயிப்பாங்க (கிரிக்கெட்டில்)” என வஹிதாவிடம் சம்பந்தமே இல்லாமல் சொல்கிறான். அதுவரை அழகான விஷுவல்ஸ்களினால் கள்ளுண்ட போதையில் மதி மயங்கி படம் பார்த்துக் கொண்டிருந்த மயக்கம் சட்டெனத் தெளிகிறது. நம்முடன் வாழும் முஸ்லிம்கள் இந்தியர்கள் ...
வெல்வெட் நகரம் விமர்சனம்

வெல்வெட் நகரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொடைக்கானல் மலையில் ஏற்பட்ட தீ விபத்து இயற்கையானதல்ல எனக் கோரும் நடிகை கெளரி கொல்லப்படுகிறாள். அத்வைதா எனும் நிறுவனம், மலையில் செய்த சதியை நிரூபிக்கும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகப் பத்திரிகையாளர் உஷாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்படுகிறார் கெளரி. ஏன் யாரால் கெளரி கொல்லப்படுகிறார் என்பதும், உஷா கெளரியின் கொலைக்கும், மலைக்கிராம மக்களுக்கு நிகழ்ந்த கொடுமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாரா என்பதும்தான் படத்தின் கதை. படத்தின் கதை 48 மணி நேரத்திற்குள் நடப்பதாக அமைந்துள்ளது. முதல் நாள் இரவு கெளரி இறக்க, அவர் சேகரித்த தரவுகள் அடங்கிய கோப்பினைத் தேடி பிரியா வீட்டுக்குச் செல்கிறார் பிரியா. அன்றைய இரவு, பிரியாவின் வீட்டுக்குள் நுழையும் மைக்கேல் குழுவின் தலையீடால் என்னாகிறது என்பதுதான் படத்தின் இரண்டாம் பாதி. பிரியாவாக மாளவிகா சுந்தர் நடித்துள்ளார். அவரது கணவர் முகிலனாக பிரதீப் பெனி...
தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பாறையில் கடல் அலைகள் மோதி, அந்த நீரலைகள் கீழே விழும் பொழுது 'தி இன்விசிபிள் மேன்' எனப் பெயர் போடுவதே அட்டகாசமாக உள்ளது. மலையுச்சியில் இருக்கும் பங்களாவில் இருந்து செசிலியா காஸ் எனும் பெண், தப்பிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்குத் தொற்றிக் கொள்ளும் பதற்றம் படம் முழுவதுமே தொடர்கிறது. பல இடங்களில், பெஞ்சமின் வால்ஃபிஷின் பின்னணி இசை மனதைத் தொந்தரவு செய்வதாகவே உள்ளது. அந்தத் தொந்தரவு, செசிலியா காஸிற்குக் கண்ணுக்குப் புலனாகாத அவளது காதலன் ஆட்ரியன் தரும் டார்ச்சர். தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடும் ஆட்ரியன், தான் கண்டுபிடித்த மாயமாகும் உடையை அணிந்து கொண்டு, செசலியா காஸ் யாருடனெல்லாம் நெருக்கமாக இருக்கிறாளோ அவர்களிடம் இருந்தெல்லாம் பிரிக்கிறான். மனதளவில் அவளை முடக்கும் முயற்சியில், செசிலியாவின் சகோதரியையே கொன்று அந்தப் பழியையும் செசிலியா மீது போடுகிறான் ஆட்ரியன். கண்ணுக்குத் தெரியாத ஒரு...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இடைவேளையின் பொழுது ஓர் எதிர்பாராத ட்விஸ்ட், படத்தின் முடிவில் புன்னகையை வரவைக்கும் ஒரு ட்விஸ்ட் என படம் ஸ்வீட் சர்ப்ரைஸாய் வந்துள்ளது. படத்தின் தலைப்பைக் கொண்டே இது ஓர் அழகான காதல் படமென யூகிக்கலாம். அப்படிக் காதல் படமாக மட்டும் தேங்கிவிடாமல், ஆன்லைன் குற்றத்தையும், டெக்னிக்கல் குற்றத்தையும், அவற்றை நூல் பிடித்துத் தொடரும் காவல்துறையின் சாமர்த்தியத்தையும் அழகாகக் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. துல்கர் சல்மானும், ரிது வர்மாவும் ஒரு காதல் ஜோடி என்றால் விஜய் டிவி புகழ் ரக்‌ஷனும், நிரஞ்சனி அகத்தியனும் ஒரு காதல் ஜோடியாக வருகின்றனர். படத்தை மைய இணைக்கு நிகரான ஒரு ஜோடியாகக் கலக்கியுள்ளனர். சொப்பு பொம்மை போலிருக்கும் சன்னி (Sunny) வகை ஸ்கூட்டரைக் காட்டி நாயகியை அறிமுகப்படுத்த, நிரஞ்சனி அகத்தியனை தண்டர்பேர்ட் புல்லட்டில் அறிமுகப்படுத்துகின்றனர். அவரது அலட்சியம் கலந்த பார்வையும்...
திரெளபதி விமர்சனம்

திரெளபதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தென்னாற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் 'திரெளபதி அம்மன்' கோயிலும், அக்கோவிலில் நிகழும் சித்திரை தீ மிதி திருவிழாவும் மிகவும் பிரசித்தி. விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கதை நிகழுவதாகக் காட்டப்படும் இப்படத்தின் பிரதான பெண் பாத்திரத்தின் பெயர் திரெளபதி. ஊருக்கு ஒன்றெனில் முதலாளாக முன்னிற்கும் தைரியமான பெண்மணி. இவரைப் போலவே, படத்தில் இன்னும் இரண்டு பெண் பாத்திரங்களும் வலுவானதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் முறையே ஓர் அரசு மருத்துவரும், ஒரு பத்திரிகையாளரும் ஆவர். தைரியமான பெண் என்பதற்கான குறியீடாய் இத்தலைப்பினைக் கொள்ளலாம். பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ட்ரெய்லரின் மூலம் அருமையான கவன ஈர்ப்பினைப் பெற்றுவிட்டது படம். படத்தின் வில்லனாக இயக்குநர் யாரைச் சுட்டுகிறார் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகத் தெரிகிறது. எனினும், மிகப் புத்திசாலித்தனமாய், ஒரு பொதுப் பிரச்சனையைப் பற்றிப் பட...
“யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை” – பா.ரஞ்சித்

“யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை” – பா.ரஞ்சித்

சினிமா, திரைத் துளி
“ஒன் டே புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “நறுவி” திரைப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் கிறிஸ்டி, "இந்தப்படம் எனக்குக் கிடைக்கக் காரணமே இயக்குநர் ரஞ்சித் தான். சினிமா எப்ப வேணும்னாலும் உன்னை மாத்தும் என்று ரஞ்சித் சொன்னார். அப்படியொரு மாற்றம் ரஞ்சித் மூலமாகத்தான் நடந்தது. இந்தப் படத்தில் என்னை கமிட் செய்த தயாரிப்பாளருக்குப் பெரிய நன்றி. அதேபோல் இயக்குநர் ராஜா முரளிதரனுக்கும் பெரிய நன்றி" என்றார். இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், "பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப் படுத்தும் சூழ்நிலையில் இன்று 'நறுவி' படத்தின் விழாவில் இருக்கிறோம். இந்தப் படத்தில் உழைத்த அனைவருக...
எரும சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி

எரும சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி

சினிமா, திரைத் துளி
வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன் மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் நீட்சியாக இணைய உலகில் ‘எரும சாணி’ மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். MNM Films சார்பில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது, ”இப்படம் கல்லூரி வாழ்வின் பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக் கதையைக் கூறிய போதே அதில் பல உற்சாகமிகு தருணங்களுடன் பரபரப்பும் நிறைந்திருந்தது. இந்தப் படத்தின் திரைக்கதையை முடித்தவுடன் நாங்கள் முதல் வேலையாக நடிகர் அருள்நிதியை தான் அணுகினோம். எப்போதும் தரமான பரீட்சார்த்த முயற்சிகளுக்குச் செவி சாய்ப்பவர் அவர். ...
கபடதாரியில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

கபடதாரியில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

சினிமா, திரைத் துளி
சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படத்தில், சத்யா பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகராக அறிமுகமாவதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் G.தனஞ்செயன் இது குறித்து கூறியதாவது, “கபடதாரி எங்கள் அனைவரின் மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. இப்படத்தின் கதை பற்றி அறிந்த கணத்திலிருந்தே படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப் படத்தில் நாங்கள் பங்கு கொண்ட கணத்திலிருந்தே இப்படைப்பு அனைவரிடத்திலும் மிகப் பெரும் உற்சாகத்தை அள்ளித் தெளித்துள்ளது. படத்தில் நடித்து வரும் அனைவருமே தங்கள் முழுத் திறமையையும் கொட்டி தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளார்கள். இக்கதையில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு நல்ல உடற்கட்டுடன், ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கக் கூடிய நடிகர் தேவைப்பட்டார். படக்குழுவுடன் இணைந்து பலரை மனதில் கொண்டு,...
‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி

‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி

Others, காணொளிகள், சினிமா, திரைத் துளி
சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கெனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காகப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக்கை பரிசு அளிப்பதாக அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்துப் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவித்திருக்கிறார் படத் தயாரிப்பாளர் ஹஷீர். இந்தப் படத்தில்,க் ஆணவ கொலைகளுக்கு எ...
ரசிகர்களின் அன்பில் – மாஃபியா அருண் விஜய்

ரசிகர்களின் அன்பில் – மாஃபியா அருண் விஜய்

சினிமா, திரைத் துளி
அருண் விஜய் தனக்கான அடையாளத்தைப் போராடி வென்றவர். தோல்விகளில் பாடம் கற்று, தொடர் வெற்றியைப் பெற்று வரும் அவரது நீண்ட கால சினிமா பயணம், பலருக்கு வாழ்க்கைப் பாடம். சமீபமாக அவரைக் காணும் இடங்களில்  ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.படு ஸ்டைலீஷ் லுக்கில் அவர் கலக்கியுள்ள “மாஃபியா” படம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்றுள்ளது. “மாஃபியா” ரிலீஸ் அன்று சென்னையில் SPI Cinemas, KG Cinemas அரங்குகளில் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களது அன்பில் மிதந்தவர், பிப்ரவரி 22 அன்று கோயம்புத்தூர் INOX திரையரங்கில் ரசிகர்களைச் சந்தித்தார். அங்கு ரசிகர்கள் அருண் விஜயை நேரில் கண்டதில் உற்சாக மிகுதியில் கொண்டாடித் தீர்த்தனர். இது குறித்து, "கோயம்புத்தூர் நகரம் கலப்பற்ற நேர்த்தியான நகரம். அங்குள்ள ரசிகர்கள் எப்போதும் பெரிய  நட்சத்திரங்களைக் கண்மூடித்தனமாகக் கொண்டாடுவதில்லை. அவர்கள் தரமான ப...
கட்புலனாகாத சைக்கோ மனிதன்

கட்புலனாகாத சைக்கோ மனிதன்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘தி இன்விசிபிள் மேன்’ எனும் அறிவியல் புனைவு நாவலை 1897 இல் எழுதினார் H.G.வெல்ஸ். அதை அடிப்படையாகக் கொண்டு, 1933 இல் ‘தி இன்விசிபிள் மேன்’ எனும் திரைப்படம் உருவானது. அதைத் தொடர்ந்து, 1940 இல் 'தி இன்விசிபிள் மேன் ரிட்டர்ன்ஸ்', 1951 இல் 'அபோட் அண்ட் காஸ்டெல்லோ மீட் தி இன்விசிபிள் மேன்', 1984 இல் சோவியட் படமான 'தி இன்விசிபிள் மேன்', 2000இல் வெளிவந்த 'ஹாலோ மேன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, H.G.வெல்ஸின் நாவலைத் தழுவி, 'தி இன்விசிபிள் மேன் (2020)' படம் வ்ளியாகவுள்ளது. பணக்காரனும், அதிமேதாவி விஞ்ஞானியுமான ஆலிவர் ஜாக்ஸன் கோஹனின் வன்முறையைக் கையாளும் உறவில் இருந்து, ஓரிரவு தப்பிச் சென்று தலைமறைவாகிறார் செசிலியா காஸ். ஒருநாள் ஆலிவர் ஜாக்ஸன் கோஹன் தற்கொலை செய்து கொள்கிறான். அவனது பெரும் சொத்து செசிலியா காஸ்க்குக் கிடைக்கும்படி உயில் எழுதி வைக்கிறான். அவன் இறந்துவிடவில்லை, அரூபமாய் மாறி தன்னை டார்ச்சர்...
‘கன்னி மாடம்’ படக்குழு – வெற்றிக் கொண்டாட்டம்

‘கன்னி மாடம்’ படக்குழு – வெற்றிக் கொண்டாட்டம்

சினிமா, திரைத் துளி
ரூபி பிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியா ரோபோ ஷங்கர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘கன்னி மாடம்’. ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவான இப்படம், அனைத்துth தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று சென்னை ஏவி.எம் ராஜேஷ்வரி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாகப் படம் பார்த்த படக்குழுவினர் அனைவரும், அவர்களோடு படத்தின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். வெற்றியை மிகப்பெரும் கேக் வெட்டி, ரசிகர்களுக்குக் கொடுத்தும், படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்தும் தங்களது வெற்றியைக் கொண்டாடினர். மேலும், இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹரீஷ் சாய், ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரீஷ், ரோ...