Shadow

சினிமா

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

சமூகம், சினிமா, திரை விமர்சனம்
குறிஞ்சி நிலத்தின் கரடுமுரடான வாழ்வியலை அட்டகாசமாகப் பதிவு செய்துள்ளனர். கும்மிருட்டு விலகாத விடியற்காலையில் எழும் ரங்கசாமி, மலையில் ஏறியிறங்கும் தூரம் மிக நீண்டது. அவரது வேலை என்பது ஏலக்காய் மூட்டையைச் சுமந்து கொண்டு மலையில் இறங்கும் சுமைக்கூலி வேலை. ஒரு கையளவு நிலம் வாங்க நினைக்கும் அவனது வாழ்வு, அவன் தினமும் பயணிக்கும் மலைப்பாதை போலவே ஏறியிறங்கி ஒரு வெற்றுவெளியில் முடிகிறது. தேனி ஈஸ்வர். ஒளிப்பதிவில் மாயம் செய்துள்ளார். ஒரு வாழ்க்கையை அதன் அருகில் இருந்து பார்த்த உணர்வையும், கோம்பையில் இருந்து கேரள எல்லை இடுக்கி மாவட்டம் வரை மலையைச் சுற்றிப் பார்த்த ஒரு திருப்தியையும் தருகிறது படத்தின் விஷுவல். மனம் பிசகிய பாட்டி ஒருவர் தன் கையிலுள்ள வளையல்களை எண்ணிக் கொண்டிருப்பார். தகதகக்கும் பொன்னிற சூரிய வெளிச்சத்தின் பின்னணியில் வரும் அந்த ஷாட்டு ரசனையின் உச்சம். படத்தில் வரும் கதாபாத்திரங்களில் ...
ரெட் ஹில்ஸில் பி.வி.ஆர். சினிமாஸ்

ரெட் ஹில்ஸில் பி.வி.ஆர். சினிமாஸ்

சினிமா
சென்னையில் தங்களது நான்காவது திரையரங்கத்தைத் திறந்துள்ளது பி.வி.ஆர். சினிமாஸ்க்குக் குழு. முன்னதாக, அமைந்தகரையில் அம்பா ஸ்கைவாக்கிலும், வேளச்சேரி கிராண்ட் மாலிலும், மீனம்பாக்கம் விமான நிலையம்  எதிரே கிராண்ட் கலாடாவிலும் ஆகிய மூன்று இடங்களில் பி.வி.ஆர். குழுமத்தின் திரையரங்குகள் உள்ளன. தற்போது, சென்னை செங்குன்றத்திலுள்ள SKLS கேலக்ஸி மாலில், ஐந்து திரைகள் கொண்ட அரங்கத்தை, ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று திறந்துள்ளனர். ...
சிவகார்த்திகேயனின் கனா

சிவகார்த்திகேயனின் கனா

சினிமா, திரைச் செய்தி
மரகத நாணயம் படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், அனிருத்தின் குரலில் "கனா" படத்தில் ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளார். "அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்தப் பாடலைப் பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது. அந்தப் பாடல் பதிவின் முழு அமர்விலும் நாங்கள் மிகப் பாசிடிவாக உணர்ந்தோம். அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது" என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கனா' படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புறப் பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு. "நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சி செய்தோம். வழக்கமாகப் பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும். ஆனால் நாங்கள் அதைப் பாரம்...
லக்ஷ்மி – தி டான்ஸர் தித்யா

லக்ஷ்மி – தி டான்ஸர் தித்யா

சினிமா, திரைச் செய்தி
ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் நடனத் திரைப்படம் 'லக்‌ஷ்மி'. நடனப்புயல் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி 'தித்யா' ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்குச் சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. "லக்‌ஷ்மி என் கனவு திரைப்படம். ஒரு டான்சராக இருந்து விட்டு இந்தத் திரைப்படத்தில் நடித்திருப்பது சிறப்பான அனுபவம். ஐஸ்வர்யா தான் என்னை அழைத்து, 'நீ இந்தப் படம் பண்ணனும்' என்று சொன்னார். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த குழந்தைகள் மிகப்பெரிய ஆளாக வருவார்கள்" என்றார் நடிகை ஷோஃபியா. இசையமைப்பாளர் சாம் C.S."இதுவரை நிறைய ஹாரர், த்ரில்லர், மாஸ் திரைப்படங்களுக்கு தான் இசையமைத்திருக்கிறேன். முதன் முறையாக ஒரு ...
கோலமாவு கோகிலா விமர்சனம்

கோலமாவு கோகிலா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோகிலாவின் அம்மா வடிவுக்கு நுரையீரல் புற்றுநோய் இரண்டாம் நிலையில் உள்ளது. தனது அம்மாவைக் குணபடுத்த 15 லட்சம் செலவாகும் என மருத்துவர் சொல்லிவிட, அப்பணத்திற்காகக் கோகிலா எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை. ஒப்புக்குச் சப்பாணியாகக் கூட ஒரு நாயகன் இல்லாத முழு நீள ஹீரோயின் ஓரியன்டட் படம். நயன்தாராவை நம்பி மட்டுமே இத்தகைய முயற்சி சாத்தியம். பாவாடை சட்டையில் அப்பாவியான முகத்துடன் படம் முழுவதும் நயன்தாரா மட்டுமே! இடைவேளைக் காட்சியில் நயன்தாரா காட்டும் மனப்பாங்கு (ஆட்டிட்யூட்) நகைச்சுவையாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அந்த வன்மம் மிகவும் அச்சுறுத்துகிறது. காதலில் விழுந்த சேகராக யோகி பாபு. எல்.கே எனும் லக்‌ஷ்மண குமாராக அன்புதாசன் நடித்துள்ளார். அவரது அறிமுகமே அட்டகாசம் எனினும் யோகி பாபுவுடனான அவரது காட்சிகளில் பார்வையாளர்கள் வெடித்துச் சிரிக்கிறார்கள். 'சாய்பாபா படத்தை 30 பேருக்கு ஷேர் பண்ணா...
ஓடு ராஜா ஓடு விமர்சனம்

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எழுத்தின் மேலுள்ள ஆர்வத்தில் வேலையை விட்டு எழுத்தாளர் ஆகிவிடுகிறான் மனோகர். நர்ஸாக வேலை புரியும் அவனது மனைவி மீரா தான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள். மனோகரிடம் பணம் கொடுத்து, செட்-டாப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்கிறாள் மீரா. தனது நண்பன் பீட்டருடன் செட்-டாப் பாக்ஸ் வாங்கக் கடைக்குப் போகும் மனோகர், ஒன்றிலிருந்து மற்றொன்றெனப் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான். அந்தச் சிக்கல்களில் இருந்து மனோகர் மீண்டு, வீட்டுக்குச் செட்-டாப் பாக்ஸ் வாங்கிக் கொண்டு போனானா என்பதுதான் படத்தின் கதை. ஆனாலும், கதையை இப்படி நேர்க்கோட்டிற்குள் அடைத்து விட முடியாது. மூன்று கிளைக் கதைகள், மையக் கதையுடன் நான்-லீனியராக ஒட்டி உறவாடுகிறது. ஒன்று, வேஷ்டி சட்டை கேங் சகோதர்களான காளிமுத்து மற்றும் செல்லமுத்துவின் தந்தையான பெரியதேவர், தன் மகன்கள் இருவரும் ரெளடியிசத்தை விட்டுவிடவேண்டுமெனச் சத்தியம் வாங்கிக் கொள்கிறார். தந்த...
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்ற தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் பாட்டு, ஒரு அழகான காதல் பாடல். அந்தப் பாடலின் தொடக்கத்தைத் தலைப்பாக வைத்திருக்கும் இப்படமோ, ‘செயின் ஸ்னாட்சிங்’ பற்றிய படம். சுலபமாய் உருக்கிவிடக்கூடிய தங்கம் தான், மறைந்திருந்து பெண்களின் கழுத்தை மர்ம கும்பல் நோட்டமிடக் காரணம். பெண்களின் செயினை அறுப்பது வெறும் கொள்ளைக் குற்றம் மட்டுமில்லை, அது அட்டெம்ப்டட் மர்டரில் வரும் என்பதைப் படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. நகை அணிந்து கொண்டு, இரவில் ஒரு பெண் தனியாக, என்று நடக்கிறாளோ அன்று தான் உண்மையாகச் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் எனக் காந்தி சொன்னதை மாற்றி, என்று ஒரு பெண் பகலில் தைரியமாக நகையணிந்து நடக்க ஆரம்பிக்கிறளோ, அன்று தான் சுதந்திரம் எனப் படத்தின் இறுதியில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளார் இயக்குநர். பெண்களின் தங்கச்சங்கிலியை அறுக்கும் கும்பலிடம் இருந்து சங்கிலியைப...
செந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2

செந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2

சினிமா, திரைத் துளி
கழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பைக் கவனிக்கிறார். மூணாறில் படமாக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் நேற்று முதல் படத்தின் டப்பிங் தொடங்கியது. செந்நாய் வேட்டை பற்றிய படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது....
டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது

டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது

சினிமா, திரைத் துளி
83 world cup, என்.டி.ஆர் சுய சரிதை ஆகிய படங்களைத் தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படத்தைத் தயாரிக்கிறது இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி இவர். ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். அவருடைய சுய சரிதையைப் படமாக்குவத்தில் மிகுந்த பெருமை கொள்வதாக கூறுகின்றனர் vibri மீடியா நிறுவனத்தினர். "டாக்டர் ஜெ.ஜெயலலிதா மேடம் தேசிய அளவில் பிரசித்திப் பெற்றப் பிராந்திய தலைவர்களில் முக்கியமானவர். உலகெங்கும் உள்ள பெண்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம். திரை துறையிலும், அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்தப் படத்தை சமர்பிக்கிறோம். அவர் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தப் படத்தைத் துவக்க இருக்கிறோம். அன்றே ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிட இருக்கிறோம்" என்கிறார் vibr...
ஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு

ஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஐரோப்பாவில், 20000 ஆண்டுகளுக்கு முன், காட்டெருதை வேட்டையாட ஒரு குழு கிளம்புகிறது. அக்குழுவில் ஓர் இளைஞன் முதன்முறையாக இணைகிறான். வேட்டையின் பொழுது நிகழும் விபத்தொன்றில், அவ்விளைஞன் இறந்துவிட்டான் எனக் கருதி அவனை விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்கிறது அவ்வேட்டைக்குழு. உடலாலும் மனதாலும் போராடிக் கொண்டிருக்கும் அவ்விளைஞனுக்கு வழித்துணையாக, தன் கூட்டத்தில் இருந்து வழி தவறிவிடும் ஓர் ஓநாய் சேருகிறது. அந்த விநோத நட்பு வழியில் ஏற்படும் எண்ணற்ற ஆபத்துகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது. இளைஞன் தன் குழுவுடனும், ஓநாய் தனது கூட்டத்துடனும் இணைந்ததா என்பதே ஆல்ஃபா படத்தின் கதை. 96 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இப்படத்தில் கோடி ஸ்மிட் – மெக்பீ (Kodi Smit- McPhee), லியானோர் வரேலா (Leonor Varela), ஜென்ஸ் ஹல்டன் ( Jens Hultén) மற்றும் யோஹனஸ் ஹெளகுர் யோஹனசன் (Jóhannes Haukur Jóhannesson)ஆகியோர் நடித்துள்ளன...
நெஞ்சமெல்லாம் பல வண்ணம் – மகேஷ் பாபுவும் வெங்கடேஷும்

நெஞ்சமெல்லாம் பல வண்ணம் – மகேஷ் பாபுவும் வெங்கடேஷும்

சினிமா, திரைச் செய்தி
தெலுங்கில், 'சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு' என்ற படம் வசூலை அள்ளிக் குவித்தது. ஆந்திரத் திரையுலகினரே அதிசயித்த படமது. அப்படத்தைத் தமிழில், 'நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' என மொழிமாற்றம் செய்து மொயின் பேக் வழங்க, ரோல்ஸ் பிரைட் மீடியா ப்ரைவேட் லிமிடெட் படநிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ளார்.  இந்தப் படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி , சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். >> இசை - மிக்கி ஜே.மேயர் >> பாடல் - அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி, ராஜராஜா, ரா.சங்கர், பா.சபிக், தமிழ்ப்ரியன் நசிர். >> படத்தொகுப்பு - நிவேதா ஸ்டுடியோஸ் செல்வம் >> தயாரிப்பு - ரோல்ஸ் பிரைட் மீடியா(பி.லிட் ) மெஹபு பாஷா >> இயக்கம் - ஸ்ரீகாந்த் இவர் ...
செட்-டாப் பாக்ஸிற்காக ஓடும் ராஜா

செட்-டாப் பாக்ஸிற்காக ஓடும் ராஜா

சினிமா, திரைச் செய்தி
கணவன், மனைவிக்கு இடையில், ஒரு ‘செட்டாப் பாக்ஸ்’ எந்த அளவுக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பது தான் ஓடு ராஜா ஓடு படத்தின் மையக்கரு. விஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். நான்கு முக்கிய கேரக்டர்கள் 24 மணி நேரத்தில் சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவையான திரைக்கதையாக்கிருக்கிறார்கள். ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரத்துக்கு ஜோடியா லக்ஷ்மி பிரியா நடித்துள்ளார். நாசர், சோனா, ஆஷிகா எனப் பெரும் நடிகர் பட்டாளமே உள்ளது படத்தில். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நாசர், “சமீபமா சினிமாவுக்கு வர்ற இயக்குநர்கள்லாம் நல்லா படிச்சவங்களா இருக்காங்க. அதனால நிறைய வித்தியாசமான படங்கள் வருது. அந்த மாதிரி ஒரு படம்தான் ஓடு ராஜா ஓடு. எத்தனையோ படங்கள் நடிச்சாலும் ஒருசில படங்கள் மட்டும்தான் அதிக ஈடுபாட்டோட நடிக்கிற மாதிரி அமையும். அந்த வக...
ஆருத்ரா – பெற்றோர்களே சிறுமிகளுக்கு அரண்

ஆருத்ரா – பெற்றோர்களே சிறுமிகளுக்கு அரண்

சினிமா, திரைச் செய்தி
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.விஜய் பேசுகையில், "இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த ஆருத்ரா. 1996 ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே.பாக்யராஜ் அவர்களின் ஆசியுடன் ஞானப்பழம் என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானேன். இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பிறகும், கடந்த வாரம் வெளியான மோகினி என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் "மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன" என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரம்மாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்தத் திரையுலகில...
“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்

“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்

சினிமா, திரைச் செய்தி
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், "நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா.விஜயைப் பிடிக்கும். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா.விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்தக் கேரக்டரில் நடித்தாலும், அந்தக் கேரக்டரில் ஒரு காட்சியிலாவது அதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தோன்றிவிடுவார். ஆனால் இந...