Shadow

திரைச் செய்தி

பாகுபலி – 1000 கோடி நாயகன்

பாகுபலி – 1000 கோடி நாயகன்

சினிமா, திரைச் செய்தி
பாகுபலி 2-இன் நட்சத்திர நாயகன் பிரபாஸ், வசூலில் ஆயிரம் கோடிகளைக் கடந்த முதல் இந்தியத் திரைப்பட நாயகன் என்ற பெருமையை ஈட்டியுள்ளார். திரையிட்டு பத்து நாட்களுக்குள் அந்த வசூல் சாதனையைப் படைத்திருப்பது ஒரு மாபெரும் சரித்திரமாகும். பாகுபலி 2 திரையிடப்பட்ட ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், அயல் நாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 121 கோடியில் துவங்கிப் பின், வெகு வேகமாய் தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாட்களில் பல நூறு கோடிகளைக் கடந்து ஒன்பதாவது நாளில் ரூ. 1000 கோடியைத் தொட்டிருக்கிறது. இந்தக் காவிய படைப்பில், அமரேந்திர பாகுபலியாய்த் தன்னுடைய அசாத்தியமான, அப்பழுக்கற்ற நடிப்பை வெளிப்படுத்திய பிரபாஸ், உலகளாவிய அளவில் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, பாகுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்ற...
“படங்கள் பார்த்தேன்; இயக்குநர் ஆனேன்” – திரி இயக்குநர்

“படங்கள் பார்த்தேன்; இயக்குநர் ஆனேன்” – திரி இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
திரி கல்வியை மையப்படுத்திய யதார்த்தமான ஒரு கமர்ஷியல் படம். “தியேட்டரில் நான் 465 படங்களை பார்த்து விட்டு தான் படம் இயக்கவே வந்தேன். ஒரு ரசிகனாய் நான் பல படங்களை விமர்சித்திருக்கிறேன். அதனால் என்ன பண்ணலாம் பண்ணக்கூடாதுன்னு தெரிந்து கொண்டேன். நிச்சயம் என் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். திரி என்றால் இளைஞர்களைத் தூண்டி விடுதல் என்ற பொருளில் தலைப்பு வச்சிருக்கேன். சினிமாவால் தான் சமுதாயம் கெட்டுப் போகுது. நல்ல கருத்துகளையே அவைச் சொல்வதில்லை என்றொரு கம்ப்ளெயின்ட் இருக்கு. நான் நல்ல கருத்துகளைச் சொல்லியுள்ளேன். ‘துருவங்கள் 16, மாநகரம் போல படங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் யதார்த்தமான கமர்ஷியல் படமா?’ என்று நினைக்க வேண்டாம். என் நண்பர்கள் தான் எனக்கு உறுதுணையாய் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்றார் இயக்குநர் அசோக் அமிர்தராஜ். சீ ஷோர் கோல்டு புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆ....
தப்பு தண்டா ஸ்ரீகண்டன்

தப்பு தண்டா ஸ்ரீகண்டன்

சினிமா, திரைச் செய்தி
பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர் இயக்குநர் ஸ்ரீகண்டன். அந்தப் பட்டறையில் இருந்து வெளிவரும் முதல் இயக்குநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. "படத்தின் தலைப்பும், டிரைலரும் சற்று திரில்லர் பாணியில் இருந்தாலும், இந்தப் படத்தை எல்லாத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் தான் உருவாக்கி இருக்கின்றேன். 'தப்பு தண்டா' ஒரு டார்க் காமெடி படம். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கும் அஜய் கோஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோரின் நடிப்பு நிச்சயமாக அனைவராலும் பாரட்டப்படும். தப்பு தண்டா படத்திற்குப் பிறகு அஜய் கோஷின் வில்லன் அடையாளம் தமிழ்த் திரையுலகில் மேலும் வலு பெறும். இந்த மே மாதத்தில் எல்லோராலும் பேசப்படும் படமாக எங்களின் தப்பு தண்டா இருக்கும். நான் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவன். அவர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் மனைவி அகிலா அம்மா வந்து என்னை வாழ்த்தியது என...
விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

சினிமா, திரைச் செய்தி
‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ எனும் படத்தில் விஷாலும் கார்த்தியும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள். சத்ரியன் முதலிய படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் K.சுபாஷ், இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இரட்டை எழுத்தாளர்களான சுபா வசனமெழுதுகின்றனர். இப்படத்தை ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தனது ஐந்தாவது படமாகத் தயாரிக்கவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இயையமைக்கிறார். இரண்டு நாயகர்கள் இணைந்து நடிக்கும் இப்படம், அமிதாப் பச்சனும் தர்மேந்திராவும் நடித்துப் பெரும்புகழ் ஈட்டிய ஹிந்திப் படமான “ஷோலே” போல் இருக்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநரான பிரபுதேவா, “கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்பது நிறமில்லை. அஹிம்சைக்கும் வன்முறைக்கும் நடக்கின்ற போராட்டத்தைக் குறிக்கின்றது” என்றார். படத்தில் ஒரே கதாநாயகி தான். வனமகன் படத்தில் அறிமுகமாகும் சாயிஷா சைகல் தான் கார்த்திக்கிற்கு ஜோடியாக நட...
இன்னும் உருப்படாமல்தான் இருக்கோம் – ராதாரவி

இன்னும் உருப்படாமல்தான் இருக்கோம் – ராதாரவி

சினிமா, திரைச் செய்தி
“சிவலிங்கா அபடத்தில் அழகா வர்றார் லாரன்ஸ். எப்பவும் அமைதியா தான் பேசுவார். ஆனா புரட்சி உள்ளம் படைச்சவர். இல்லைன்னா, ஒரு மனுஷன் ஜல்லிக்கட்டில் வந்து உட்காருவானா? நிறைய பேர் சொன்னாங்க, விளம்பரத்துக்காக வந்து உட்கார்ந்தார்னு. அவருக்கு விளம்பரம்லாம் தேவையில்ல! ‘கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும். எங்கண்ணன் படத்தில் வரும் வசனம்’ என மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ராகவா வசனம் பேசியிருப்பார். படம் ஃபுல்லா நான் சொல்லியிருப்பேன். அவர் ரஜினி ரசிகர்னு எனக்குத் தெரியும். என் ரசிகர்கள் என்னிடம், ‘பாருங்க சார். உங்க மேல லாரன்ஸ்க்கு எவ்ளோ பிரியம் பாருங்க சார்’ எனச் சொன்னாங்க. ‘டேய், அவர் ரஜினிய சொன்னார்டா. நீ வேற ஒரு புரியாத பயல்டா’ எனச் சொன்னேன். ஏன் சொல்றேன்னா நம்ம மக்கள் புரியாத பயலுக. எதை நினைக்கிறது, எதை யோசிக்கிறது, எதை பண்றதுன்னு நம்ம மக்களுக்கு எதுவும் தெரியாது. ‘நல்லவன் வாழ்வான்’ படத்தி...
ரித்திகா சிங் – முதல் ஹீரோ

ரித்திகா சிங் – முதல் ஹீரோ

சினிமா, திரைச் செய்தி
“பாக்ஸராக இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமான ரித்திகா சிங்கைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பயம். கையில் வித்தை வச்சிருக்காங்க எனச் சொன்னாங்க. நான் நேர்ல ரிங்லயே அதைப் பார்த்திருக்கேன். சிவலிங்கா படத்தில் தான் தைரியமாக அவங்க கூட நடிக்கிறேன். அவங்க நேச்சுரல் ஆர்டிஸ்ட். நதி போல். படத்தில் பிரமாதமா பண்ணியிருக்காங்க” என்றார் ராதாரவி. “எனக்குத் தெலுங்கில் ரவி தேஜா ரொம்ப பிடிக்கும். ரொம்ப எனர்ஜிட்டிக்கான நடிகர். அதே போல், ஹீரோயின்ஸ்ல ரித்திகா சிங் ரொம்ப பிடிக்கும். அவங்க ரொம்ப எனர்ஜிட்டிக்கா நடிக்கிறாங்க. தெலுங்கில் இப்போ ‘குரு’ படம் ஹிட் ஆகியிருக்கு. இந்தப் படமும் அதே போல் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்கிறார் ரித்திகா சிங். “சிவலிங்கா படத்தில் முதல் ஹீரோ ரித்திகா சிங் தான்; இரண்டாவது ஹீரோ வடிவேலு; மூன்றாவது ஹீரோ சக்தி வாசு; நான்காவது ஹீரோ தான் நான்” என்றார் ராகவா லாரன்ஸ்....
சின்ன மாப்பிள்ளை 1995 டூ கொலையுதிர் காலம் 2017

சின்ன மாப்பிள்ளை 1995 டூ கொலையுதிர் காலம் 2017

சினிமா, திரைச் செய்தி
நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை இயக்குகிறார் சக்ரி டோலெட்டி. இவர், ‘ உன்னை போல் ஒருவன்’ படமும், ‘பில்லா 2’ படமும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை  'பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம் இயக்குகிறது. வட இந்தியத் திரையுலகில், குறிப்பாக ஹிந்தித் திரையுலகின் தயாரிப்புத் துறையில் மிகப் பெரிய ஜாம்பவனாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானி அவர்களின் நிறுவனம் அது. "சினிமா மீது எனக்குக் காதல் ஏற்பட முக்கிய காரணம், தமிழில் வெளியான சின்ன மாப்பிள்ளை திரைப்படம் தான். அந்தப் படத்தை ஹிந்தியில் நான் 'கூலி நம்பர் 1' என்ற தலைப்பில்  ரீமேக் செய்தேன். அதனைத் தொடர்ந்து சதி லீலாவதி படத்தை ரீமேக் செய்த எங்கள்   'பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்' நிறுவனம், தற்போது முதல் முறையாகக் கொலையுதிர் காலம் படம் மூலம் தமிழ்த...
முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி

முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி

சினிமா, திரைச் செய்தி
ஆயிரம் விருதுகள் கிடைத்தாலும், கலைஞர்களுக்கு கைதட்டல் என்பது தான் ஊக்க சக்தி. அதுவும் முதல் கைதட்டல் என்பது அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் முதல் அங்கீகாரம். அவர்களது நம்பிக்கையைப் பன்மடங்கு உறுதி செய்யும் தருணம் அது. தன் படைப்பு, பெருவாரியான மக்களைச் சென்று சேர்ந்துள்ளது என்ற உணர்வு தரும் சொல்லொன்னா பரவசத்திற்கு அளவுகோலே கிடையாது. அப்படி, இளம் படைப்பாளிகளைப் பரவசப்படுத்தும் முன்முயற்சியைத் தான் மூவி பஃப் (Movie Buff - First Clap) மேற்கொண்டுள்ளது. மூன்று நிமிடங்கள் காலளவு கொண்ட குறும்படப் போட்டியை நடத்தி, தேர்வு பெற்ற ஐந்து படங்களைத் தமிழகம் முழுவதும் சுமார் 150+ திரையரங்குகளில் படத்தின் நடுவே வரும் இடைவேளையில் ஒளிபரப்புகின்றனர். மக்கள் தங்களுக்கு விருப்பமான படத்தை ஓட்டு செய்தும் தேர்ந்தெடுக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று படங்களுக்கு, பரிசுத் தொகை வழங்கப்படுவதோடு, நடிகர் சூர்ய...
என்னோடு விளையாடு – குதிரைப் பந்தயமும் சூதாட்டமும்

என்னோடு விளையாடு – குதிரைப் பந்தயமும் சூதாட்டமும்

சினிமா, திரைச் செய்தி
ரொமான்டிக் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த 'என்னோடு விளையாடு' திரைப்படம், கெளதம் வாசுதேவ் மேனன் பாணியில் 'ஸ்டலிஷான லவ்' படமாக வந்துள்ளது எனச் சிலாகித்தார் படத்தின் எடிட்டர் கோபிகிருஷ்ணா. இவர், 'வழக்கு எண்:18/9', 'எனக்கு வாய்த்த அடிமைகள்' போன்ற படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்துள்ளார். இரண்டு லவ் ட்ராக், ஒரு சேஸிங் (chasing) ட்ராக் கொண்ட இப்படம், 'தனி ஒருவன்' போல் சுவாரசியமாக உள்ளதென நம்பிக்கையோடு தெரிவித்தார். படத்தில், பரத் - கதிர் என படத்தில் இரண்டு கதாநாயகன்கள். பரத்திற்கு ஜோடியாக சாந்தினி தமிழரசனும், கதிருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளனர். காதல் பாடல்களை அறிமுக இசையமைப்பாளர் மோசஸும், சேஸிங் போன்ற மற்ற ஜானர் பாடல்களை 'பர்மா' படத்தின் இசையமைப்பாளர் சுதர்ஷன் M.குமாரும் மெட்டமைத்துள்ளனர். 'ஒரு சின்ன பிரேக் இருந்தால் நல்லாயிருக்கும்' என ஒன்பது மாதங்கள் இடைவெளி விட்ட பின், மிக ...
ரசிகர்களைச் சுமக்கும் வேதாளம்

ரசிகர்களைச் சுமக்கும் வேதாளம்

சினிமா, திரைச் செய்தி
இது வேதாளம் சொல்லும் கதை எனும் படத்தில் பல விசேஷங்கள் உண்டு. முதலாவதாக, க்ரெக் புரிட்ஜ் எனும் வெள்ளைக்கார வ்ரெஸ்ட்லர் ஸ்டன்ட் மாஸ்டராகப் படத்தில் பணியாற்றுவதோடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். முதல்முறையாக புரிட்ஜைப் பார்க்கும்போது, க்ரெக் தன் குழுவினருடன் உண்மையாகவே மல்யுத்தம் செய்வதாக நினைத்துள்ளார் இயக்குநர் ரதீந்தரன். புரிட்ஜ் உருவாக்கிய வ்ரெஸ்ட்லிங் டெக்னிக்களைக் கொண்டு, 'ட்ரையல் ஆஃப் பிளட் (Trial of blood)' எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார் ரதீந்தரன். நான்கு வருடங்களாகவே முழு நீள ஆக்‌ஷன் படம் ஒன்றினை இருவரும் இணைந்து எடுக்கப் பேசி வந்த நிலையில், 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்திற்காகத் தன் அனைத்து வேலையையும் ஓரங்கட்டி விட்டு இந்தியா வந்துள்ளார் க்ரெக். அறுபதுகளுக்குப் பின்னான சண்டைக் காட்சிகளில் யதார்த்தம் கம்மியாகக் காணப்படுவதாக ஓரெண்ணம் ரதீந்தரனுக்கு. ரோப் கட்ட...
அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம்

அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
சில நூற்றாண்டுகளாகவே, இரண்டு ரகசிய குழுக்கள் இடையே துவந்த யுத்தம் நடந்து வருகிறது. இன்றளவும் அது தொடர்வதாக நம்பப்படுகிறது. அசாசின்ஸ் என்ற குழுவிற்கும், டெம்ப்ளர்ஸ் என்ற குழுவுக்கும் இடையே நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ கேம் தான் ‘அசாசின்ஸ் க்ரீட்’.அசாசின் என்றால் மதம் அல்லது அரசியல் காரணங்களுக்காக முக்கியமான நபரைக் குறி வைத்துக் கொலை செய்யும் கொலைக்காரர் எனப் பொருள். ‘அசாசின்’ என்ற வார்த்தை உருவாவதற்கே ‘ஹஷாஷின்’ என்ற வடக்குப் பெர்ஷியாவைச் சேர்ந்த ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த நிஸாரி இஸ்மாயிலிகள் தான் காரணம். சிலுவைப் போர்களின் பொழுது, சுமார் 300 வருடங்களில் அவர்கள் எண்ணற்றவர்களைக் கொன்றுள்ளனர். ஓரிடத்தில் இருந்து சட்டெனப் பதுங்கி மறைவதில் வல்லவர்கள். பயம் என்றால் என்னவென்று அறியாத இவர்கள், சுதிந்திரமாகச் செயல்படக் கூடியவர்கள். டெம்ப்...
நண்பர்கள் – அன்புக்கு அடிமை

நண்பர்கள் – அன்புக்கு அடிமை

சினிமா, திரைச் செய்தி
லவ் ஃபெயிலியரான ஒருத்தனின் மூன்று பெஸ்ட் ஃப்ரெண்ட்கள் படும் அவஸ்தை தான் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தின் கதை. தில்லுக்கு துட்டு 'லொள்ளு சபா' ராம்பாலாவிடம் பணியாற்றிய மகேந்திரன் ராஜமணி இப்படத்தை இயக்குகிறார். 'ஆக, நண்பர்கள் தான் நாயகனின் அடிமைகளா?' என்ற கேள்விக்கு, "நண்பர்கள் அன்புக்கு அடிமை. நமக்காக எதுவும் செய்வார்கள் என்ற அர்த்தத்தில் தலைப்பை வைத்தோம். தலைவியிடம் (ஜெ.) சொல்லப்படும் இந்தப் பிரபலமான வசனத்தை எங்க கதைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்துக் கொண்டோம்" என்றார் மகேந்திரன் ராஜமணி. "இந்தக் கதாபாத்திரத்திற்கு என்னை விட்டா வேறு யாரும் பொருந்த மாட்டாங்க எனக் கதை கேட்டதும் ஜெய் சொன்னார். படம் பார்த்ததும் ஆடியன்ஸும் அதைச் சொல்வாங்க. நான் படத்துக்குப் போகணும்னா நினைச்சா ஜாலியான ஒரு படத்துக்குத்தான் போவேன். அந்த மாதிரி தான் என் படத்தையும் எடுத்திருக்கேன். கண்டிப்பா மக்களும் இந்தப் படத்தை ந...
பலே சசிகுமார்

பலே சசிகுமார்

சினிமா, திரைச் செய்தி
“மகளிர் மட்டும்-க்குப் பிறகு ஜாலியான சூழல் இருந்த படப்பிடிப்பு இங்கே தான் மீண்டும் அமைந்தது. டிமானிட்டைசேஷன், புயல், அம்மாவின் மறைவு என மக்கள் இந்த ஒரு மாதமாகப் பட்ட கஷ்டங்களை மறந்து குடும்பத்தோடு ரசித்து மகிழ நல்லதொரு காமெடிப் படம்” என்றார் சசிகுமாருக்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை ரோகினி. “அரிவாள், முரட்டு மீசை என ரத்தம் தெறிக்கிற சசிகுமாரைத் திரையில் பார்த்துட்டு, ‘நானோ காமெடி பீஸ்? எப்படி செட் ஆகும்?’ எனப் பயந்துக்கிட்டே ஷூட்டிங்கிற்குப் போனேன். ஆனா, நேரில் ரொம்ப அமைதியானவர். அவர் கம்பெனில பேமென்ட் எல்லாம் வீடு தேடி சரியாக வந்துடுது. வருஷத்துக்கு கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் 10 படம் பண்ணணும். அத்தனையிலும் எனக்கு வாய்ப்புக் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன்” என்றார் கோவை சரளா. “இந்தக் கதையை சோலை பிரகாஷ் சொன்னதும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதில் வரும் பாட்டி கேரக்டரைப் பண்ணக் கூடியவர்கள் இரண்டு ...
ஓர் அறை – தாயம்

ஓர் அறை – தாயம்

சினிமா, திரைச் செய்தி
தாயம் என்ற தமிழ்ப்படம், இந்தியாவின் முதல் சிங்கிள் ரூம் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது. “நான் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன். சிங்கிள் ரூமில் எடுக்கப்பட்ட படங்கள் ஏராளமாய் ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன. என் படத்தில், எந்தக் காட்சியிலும் அந்தப் படங்களின் சாயல் வந்துவிடக் கூடாதென மிகக் கவனமாக இப்படத்தை எடுத்துள்ளேன்” என்றார் தாயம் படத்தின் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி. எட்டுக் கதாபாத்திரங்கள் ஓர் அறையில், நேர்க்காணலுக்காகக் கூடுகின்றனர். எதனை நோக்கி அந்த நேர்க்காணல் நகர்கிறது என்பதுதான் தாயம் படத்தின் கதை. நல்லதொரு ஹாரர் சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். டீசரையும் ட்ரெயிலரையும் மட்டுமே பார்த்துக் கவரப்பட்டு, காஸ்மோ வில்லேஜ் சிவக்குமார் படத்தை வெளியிட முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டீசரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த முகமூடியை (ப்ரோஸ...
பார்க்க தோனுதே – இசை வெளியீட்டு விழா

பார்க்க தோனுதே – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
“தோனுதேக்கு மூணு சுழியில்ல வரணும். ரெண்டு சுழிதான் தலைப்புல இருக்கு. ஏதாச்சும் அதன் மூலமா இயக்குநர் சொல்ல வர்றார் போல! படத்தைப் பார்க்கணும்னு தோணுது” என்றவர், தனது பாணியில் இறுதி பன்ச்சாக, “கூட்டமில்லா ஏ.டி.எம். பார்க்கத் தோணுதே! தியேட்டரில் கூட்டம் பார்க்கத் தோணுதே!” என தன் உரையை முடித்துக் கொண்டார் ‘போங்கு’ பட நாயகன் நட்டி. ‘பார்க்க தோனுதே’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.ரமேஷ், நட்டியின் உதவியாளர் ஆவார். ‘பார்க்க தோனுதே’ படத்தின் இயக்குநர் ஜெய்செந்தில்குமாரை அருகில் அழைத்து, “இந்தத் தலைப்பை யார் வைத்தது?” எனக் கேட்டார் இயக்குநர் கஸ்தூரிராஜா. “நானும் தயாரிப்பாளரும் சேர்ந்து வைத்தோம்” என்றார். “இந்தக் கதைலாம் வேணாம். யார் இந்தத் தலைப்பை வச்சது?” என மீண்டும் கேட்டார் கஸ்தூரிராஜா. “நான் நாலு தலைப்புக் கொடுத்தேன். அதில் இந்தத் தலைப்பைத் தயாரிப்பாளர் தேர்ந்தெடுத்தார்” என்றார் இயக்குநர் ஜெய்செந்தி...