Shadow

கட்டுரை

மாற்றத்திற்கான பாதையில் நேச்சுரல்ஸ்

மாற்றத்திற்கான பாதையில் நேச்சுரல்ஸ்

சமூகம்
இயற்கையான அழகிற்கு மெருகு சேர்க்கும் வண்ணம், அறிய பல யுக்திகளை கையாண்டு பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் கூட, அழகிற்கு அழகு சேர்க்கும் பணியை பாங்குற, சீரிய முறையில் செய்து வரும் அழகு நிலையம்தான் நேச்சுரலஸ் (Naturals). சென்னை இந்திரா நகரில், L.B. சாலையில் உள்ள நேச்சுரல்ஸ் நிறுவனத்தில், மாற்றுத் திறனாளர்களை 70% வேலைக்கு அமர்த்தும் ஓர் உன்னத பணியைத் தொடங்கியுள்ளது. இதர பணியாளர்கள் 30% மட்டுமே! “50 வருடங்களுக்கு முன்னர், ‘மார்டின் லூதர் கிங் என் கனவு’ என ஒரு சொற்பொழுவு ஆற்றினார். அந்தக் கனவு, அமெரிக்காவின் உருவாக்கத்தில் மகத்தான பங்கை வகித்தது. அதைப் போலே, எனக்கும் வீணாவிற்கும் ஒரு கனவு உண்டு! அதன் வெளிப்பாடுதான், Naturals Enable எனும் இந்த முயற்சி. நேச்சுரல்ஸின் 611 கிளைகளிலும் இந்த வருட இறுதிக்குள், மாற்றுத் திறனாளர்களைப் பெருமளவில் பணியில் அமர்த்தவுள்ளோம்” என்றார் நேச்சுரல்ஸ் நிறுவனத...
நீட் எனும் அவலட்சணம்

நீட் எனும் அவலட்சணம்

சமூகம்
நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இப்போது அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்ந்திருக்கும் ஒரு மாணவச் செல்வத்திடம் நீட் கோச்சிங் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பிள்ளை படித்தது தமிழகத்தின் டாப் 10 பள்ளிகளில் (யார் சொன்னா - அவங்களே சொல்லிப்பாங்க) ஒன்றில். பதிலைக் கேட்டு நொந்தது தான் மிச்சம். 40 நாட்கள். வேதியியல், உயிரியலில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் திரும்பத் திரும்பத் படிக்கச் சொல்லிக் கொடுத்தார்களாம். இயற்பியலைப் படிக்கவே தேவையில்லையாம் (நெகடிவ் மார்க்கைத் தவிர்க்க அந்த வினாக்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள்) ஆக மூன்று பாடங்களில் ஒன்றைப் படிக்கவே தேவையில்லை. மற்ற இரண்டையும் முழுவதுமாகப் படிக்கத் தேவையில்லை. ஆனாலும் மருத்துவராகி விடலாம். மாநிலப் பாடத்திட்டத்தின் படி மருத்துவம் சேர்வதற்கு மூன்று பாடங்களிலும் குறைந்த பட்சம் 90-95% கண்டிப்பாகத் தேவை. ஆனாலும் நீட் மாத...
வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

கட்டுரை, சமூகம், சினிமா
கவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம், நான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்தப் பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாகக் கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி? உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி? ஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத் தொடங்கிய அந்த ரசனை, உங்களின் அனைத்துப் படைப்புகளுக்கும் பாடல்களுக்குமாய் விரிந்தது. அப்படியாக நான் பாடலாசிரியனாக மாறியதன் பின்னணியில் நீங்கள் இருப்பதை நான் எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறேன். கருதுவேன். சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் உங்களின் ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதில் இரண்டு கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் என்னை இப்படி பின்வருமாறு எழுத வைத்தது. ~~ கேள்வி 1:...
விக்ரம் வேதா – க்ளைமேக்ஸ் புதிர் முடிச்சவிழ்த்தல்

விக்ரம் வேதா – க்ளைமேக்ஸ் புதிர் முடிச்சவிழ்த்தல்

கட்டுரை, சினிமா
சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கலந்துரையாடலில், விக்ரம் வேதா படத்தின் க்ளைமேக்ஸ் பற்றி இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இருவரும் பகிர்ந்து கொண்டது: "மூன்று ஆப்ஷன்களுக்கு வாய்ப்புள்ளன. 1. ஒன்று, வேதா விக்ரமைச் சுடுவது. 2. இரண்டு, விக்ரம் வேதாவைச் சுடுவது. 3. மூன்றாவது, இருவரும் தங்கள் வழியில் பிரிந்து சென்றுவிடுவார்கள். அவர்கள் என்னாவார்கள் என்பதை நாங்க சொல்ல விரும்பவில்லை. அதை ஆடியன்ஸின் பாயின்ட் ஆஃப் வியூவிற்கு விட்டுவிட்டோம்” என்றனர். இனி, இதுதமிழின் புரிதல் என்னவாக இருந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம். வேதாளம் விக்கிரமாதித்யன் கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டு, தோளில் தொங்கியவாறு கதைகள் சொல்லும். கதையின் முடிவில் ஒரு கேள்வி கேட்கும். விக்கிரமாதித்யன் புதிருக்குப் பதில் சரியாகச் சொல்லவில்லை எனில், விக்கிரமாதித்யன் தலை வெடித்துவிடும் என சாபமும் கொடுக்கும். தன்னிகரற்ற மன்னரான விக்கிரமாதித்யன...
தரமற்ற படம் தரமணி – ஏன்? எப்படி?

தரமற்ற படம் தரமணி – ஏன்? எப்படி?

சமூகம், சினிமா
தரமணி படத்திற்குத் திரைக்கதை எழுத இன்ஸ்பையரான இரண்டு விஷயங்களைப் பற்றி ராம் பகிர்ந்து கொள்கிறார். << 1. ஜூனியர் விகடனில் வந்த ஒரு கட்டுரை. வெளிநாட்டில் கணவன் வாழ்கிறான்; இங்கே அவன் வீட்டில் ஒரு லேண்ட் லைன் ஃபோன் வாங்குகிறார்கள். செல்ஃபோன் பரவலான உபயோகத்திற்கு வந்திராத சமயம் அது. ஃபோன் பில் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. இவ்விஷயம் பிரச்சனை ஆகிறது. கால் லிஸ்ட் எடுத்துப் பார்க்கப்படுகிறது. ஒரு நம்பருக்கு அதிகமாக அழைப்புப் போய் வந்துள்ளது. "அவன் யாரெனத் தெரியாது. நன்றாகப் பேசினான். நானும் பேசினேன்" என்கிறாள் அம்மனைவி. >> படத்தில் இதைத் தழுவி காட்சிகளை வைத்துள்ளார் ராம். இந்த ஒரு சம்பவத்தைக் கொண்டு பொதுமைப்படுத்துவதே அபத்தமான விஷயம். ராம் ஒரு படி மேலே போய் தன் வக்கிரத்தைக் காட்சிகளாக வைத்துள்ளார். எப்படியெனில், அந்நியோன்யமாக இருப்பதாகத் தொடக்கத்தில் இருந்து காட்டப்படுபவர்கள் வீனஸ் - ...
கருவியாலஜி – சிறுவர் பொக்கிஷம்

கருவியாலஜி – சிறுவர் பொக்கிஷம்

புத்தகம்
"கருவியாலஜி" - பத்து வயதினைக் கடந்த சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய நல்லதொரு புத்தகம். அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும், நாம் சார்ந்திருக்கும் கருவிகளின் கதையைப் பற்றிச் சொல்கிறது புத்தகம். 1958இல் 17 கிலோவாக இருந்த கால்குலேட்டர் எப்படி இன்று பாக்கெட்க்குள் அடங்குமளவு பரிமாண வளர்ச்சி பெற்றது? முதல் கால்குலேட்டரோ மணல் லாரி சைஸில் இருந்துள்ளது. இப்படியாக இரண்டாம் பக்கத்தில் தொடங்கும் சுவாரசியம் கடைசி பக்கம் வரை நீள்கிறது. செல்ஃபோனுக்கும் ஸ்மார்ட் ஃபோனுக்கும் உள்ள வித்தியாசமென்ன? சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பயன்பாடுகளென்ன? புல்லட் ரயில்களின் வேகமென்ன? அவை எவ்வாறு இயங்குகின்றன எனப் பக்கத்திற்குப் பக்கம் தகவல்கள். ஏ.டி.எம்., மைக்ரோ ஓவன், பேஸ் மேக்கர், டச் ஸ்க்ரீன், ரோபோட் என நீளும் பட்டியலில், பென்சில் சீவும் ஷார்ப்னருக்கும் கோட்டா ஒதுக்கியுள்ளார் ஆயிஷா இரா.நடராசன். தொடக்கத்தில் ஒரு மேசை...
மான்யா ஹஸ்தகலா – கைவினைப் பொருட்கள் கண்காட்சி

மான்யா ஹஸ்தகலா – கைவினைப் பொருட்கள் கண்காட்சி

சமூகம்
சென்னையில் கலாஷேத்ரா பவுன்டேஷனின் பிரதான நுழைவு வாயிலின் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இதனைத் தொடங்கி வைத்த நடிகை சாக்ஷி அகர்வால் பேசும் போது, “இந்தக் கண்காட்சியில் இந்தியாவிலிருந்து பத்தொன்பது மாநிலங்களில் உள்ள கைவினை கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கிறது. பாரம்பரியம் மாறாமல் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கலம்காரி புடவைகள், ஆர்கானிக் மற்றும் இயற்கையான வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், வீட்டின் உள் அலங்காரத்திற்கான பொருட்கள், வரவேற்பறையில் வைக்கக் கூடிய கண் கவர் கலைப்பொருட்கள் என அனைத்து வகையான பொருட்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு வித்தியாசமான கண்காட்சியாக நிச்சயமாக இருக்கும்” என்றார். இந்தக் கண்க...
கண்ணன் தந்த கவிஞர்

கண்ணன் தந்த கவிஞர்

கட்டுரை, சமூகம்
குழந்தைக் கவிஞர் என்றதுமே நம் அனைவருக்கும் அழ.வள்ளியப்பாவின் நினைவு உடனே வந்துவிடுகிறது. அது சரிதான். குழந்தைகளுக்காக வள்ளியப்பா ஆயிரக்கணக்கில் பாடல்கள் எழுதியிருக்கிறார். 'மலரும் உள்ளம்' என்கிற தலைப்பில் இவரெழுதிய புத்தகமொன்று ஒன்பது பதிப்புகளுக்கு மேல் அச்சாகி, முப்பதாயிரம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாகவும் அறிய முடிகிறது. எனவே இவருக்குக் கிடைத்திருக்கும் குழந்தைக் கவிஞர் பட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். குழந்தைக் கவிஞர் என்றால் அழ.வள்ளியப்பா தான் என்கிற பிம்பம், தமிழ் சிறுவர் இலக்கியத்தில் உருவாகிவிட்டது என்ற உண்மையை எவரும் மறுக்க முடியாது. ஆனால் எண்ணிக்கையில் இவரளவு இல்லாவிட்டாலும், மிகக் குறைந்த அளவிலேயே மிகச் சிறந்த சிறுவர் பாடல்கள் எழுதிய கவிஞர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அழ.வள்ளியப்பாவிற்கு முன்பாகக் குழந்தைக் கவிஞர்கள் இருந்திருக்கவில்லையா என எண்ணிப் பார்...
கிச்சன் கில்லாடியான கதை

கிச்சன் கில்லாடியான கதை

சமூகம், மருத்துவம்
விறகு அடுப்பு, மண்ணெண்னை ஸ்டவ், ரம்பத்தூள் அடுப்பு, கரி அடுப்பு, கேஸ் சிலிண்டர், மைக்ரோவேவ் ஓவன், இண்டக்ஷன் ஸ்டவ் என அத்தனையும் பார்த்த ஒரே தலைமுறை என்பதில் எனக்கு எப்போதுமே பெருமைதான். அடுப்புகள் மாறியதால் சமைக்கும் நேரத்தோடு சமையலின் ருசியும் தரமும் குறைந்து போனதென்னவோ உண்மை. போதாத குறைக்கு உடனடி உணவுகள் என்கிற பெயரில் கெமிக்கல் குப்பைகள் நம்மை ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டன. என்ன செய்வது? எல்லோருக்கும் அவசரம். நேரமின்மை. நாக்கிற்கு ருசியாக, மனதிற்கு இதமாக, உடலுக்கும் தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமான சமையல் என்பது வீட்டில் சமைத்தால்தான் உண்டு. நம்முடைய இந்திய உணவு வகைகள் எல்லாமே ஏகப்பட்ட முன் தயாரிப்புகள், பக்குவம், படிநிலைகள் எனச் சமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடியவை. இதை நினைத்தே பல பெண்கள் அயர்ச்சியாகி இன்ஸ்ட்ண்ட் உணவுகளை நாடுகின்றனர். வார இறுதியில் ஏதாவது ஒரு உணவகம் போய்ப் பிடித்த ...
அசோகமித்திரன்: ஆரவாரமில்லா எழுத்து – வைரமுத்து

அசோகமித்திரன்: ஆரவாரமில்லா எழுத்து – வைரமுத்து

சமூகம்
எழுத்துலகில் நல்லெழுத்து, வணிக எழுத்து என்று இரண்டு உண்டு. வணிகச் சந்தையிலும்கூட நல்லெழுத்தே எழுதியவர் அசோகமித்திரன். அவரெழுத்தில் ஆரவாரமில்லை. அலங்காரங்களின் அணிவரிசையில்லை. சத்தியம் மட்டும் அவர் எழுத்தில் தகித்துக் கிடந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு மரணம் நேர்கிறது. உடலுக்கு நேரும் மரணத்தால் ஒரு மனிதன் முதல்முறை மரிக்கிறான். அவனுக்குப் பிறகும் அவனை நினைத்துக்கொண்டேயிருக்கும் சமூகத்தின் கடைசி மனிதன் மரிக்கும்போது இரண்டாம் மரணம் எய்துகிறான். அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் இன்னொரு நூற்றாண்டிலும் இருப்பார்கள். அதனால் இப்போதைக்கு அவருக்கு இரண்டாம் மரணம் இல்லை. நடுத்தர வர்க்கத்தின் வாழ்வின் வலியை அவரைப்போல் எதார்த்தமாக எழுதியவர்கள் குறைவு. ‘கரைந்த நிழல்கள்’ என்ற நாவலில் ஒரு தயாரிப்பாளரையும் ஒரு நடிகையையும் படைத்திருக்கிறார். “படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று ஓர் இளம் நடிகை அடம்பிடிப்...
நவீன உலகத்தின் நன்னெறி

நவீன உலகத்தின் நன்னெறி

ஆன்‌மிகம், சமூகம்
ஜனவரி 30, 2017 அன்று, மூன்றாம் ஆண்டு திரு. S.V.நரசிம்மன் நினைவுப் பேருரை விழாவை மயிலாப்பூரிலுள்ள ‘பாரதீய வித்யா பவன்’ ஏற்பாடு செய்திருந்தது. ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற கருத்தியலையும், ‘உயர்ந்த சிந்தனைகள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் நம்மிடம் வரட்டும்’ என்ற குறிக்கோளும் உடையது பாரதீய வித்யா பவன். தங்கள் கருத்தியலையும் குறிக்கோளையும் பிரதிபலிக்குமாறு விருந்தினர்களைத் தேர்வு செய்திருந்தனர். அவர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசராகப் பணி புரிந்தவரான மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரு.M.K.நாராயணனும், புகழ்பெற்ற புத்த பிட்சுவான திரு. சாம்தாங் ரின்போச்சேவும் ஆவர்.“சீன அரசாங்கம் தவத்திரு தலாய் லாமாவைத் திபெத்தில் இருந்து வெளியேறச் சொன்ன பொழுது, இந்தியா சார்பாக வரவேற்றதில் நானுமொருவன். அவருடன் வந்திருந்த குழுவில், தலாய் லாமாவின் நம்பிக்கைக்குரிய சாம்தாங் ரின்போச்சேவும் ஒருவர். தலாய் லாமா கேட்டுக்...
அசோக் அமிர்தராஜ் – ஐ.நா.வின் இந்திய நல்லெண்ணத் தூதர்

அசோக் அமிர்தராஜ் – ஐ.நா.வின் இந்திய நல்லெண்ணத் தூதர்

சமூகம்
இந்தியாவில் நீடித்த வளர்ச்சி திட்டங்களுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக, பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும், சர்வதேச விம்பிள்டன் டென்னிஸ் வீரருமான அசோக் அமிர்தராஜ் ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைட் பார்க் எண்டர்டெய்ன்மெண்ட் குழுமத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கும் திரு. அமிர்தராஜ், ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தூதர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், இப்பெருமையினைப் பெறும் முதல் திரைப்படத் தயாரிப்பாளர் என்பதும் அவருக்குக் கிடைத்துள்ள கூடுதல் அங்கீகாரம். சென்னையில் பிறந்து, சர்வதே அளவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான அஷோக் அமிர்தராஜ் தனது 30 வருட திரையுலக வாழ்வில் 100க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். அவரது வெற்றிகரமான திரை வாழ்க்கையில் உலகளாவிய பாராட்டுகளையும், 2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வசூலையும் அவர் படங்கள் பெ...
கதைகள் சொல்லும் சுண்டைக்காய்

கதைகள் சொல்லும் சுண்டைக்காய்

கட்டுரை, புத்தகம்
ஏழு கடல், ஏழு மலை தாண்டியிருக்கும் வியாசபுரியை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும். அந்நாட்டில், கற்றல் என்பது கதைகளைப் படிப்பது மூலமாக மட்டுந்தானாம். அதாவது பள்ளிகளில் கதைகளை மட்டுமே சிலபஸாக உடைய நாடு அது. வாவ்! அந்நாட்டின் இளவரசன் ஒரு சாபம் காரணமாக சுண்டைக்காயாக மாறி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் தமிழகத்துச் சிறுவன் சூர்யா கையில் சிக்குகிறான். ‘சுண்டைக்காய் இளவரசன்’ எனும் சிறுவர் நாவலின் கதைக்கரு இதுதான். கதைக்குள் கதையென, சூர்யாவிற்கு இளவரசன் மூன்று மாயாஜாலக் கதைகளைச் சொல்கிறான்.இந்தப் புத்தகத்தை சிறுவர்களுக்கு வாங்கித் தருவதில் ஒரு சின்ன சிக்கலுள்ளது. இளவரசன் அறிமுகமாகித் தன்னைப் பற்றிச் சூர்யாவிடம் சொல்லி முடித்ததும், அவனது நண்பர்கள் “வெடி தேங்காய்” பற்றிச் சொல்லி, அதன் செய்முறையையும் சுவையையும் பற்றிச் சிலாகித்துச் சொல்கிறார்கள். படிக்கும் எவருக்கும் எச்சில் ஊறச் செய்யும். சிறுவர...
கண்ணியமாக உயிர் நீத்தல்

கண்ணியமாக உயிர் நீத்தல்

சமூகம், மருத்துவம்
‘யாருக்கும் தொந்தரவு தராமல், படுத்தப் படுக்கையாக இல்லாமல், எந்த நோய்நொடியும் அண்டாமல் பட்டுன்னு போய்ச் சேர்ந்துடணும்’ என்ற பிரார்த்தனையைச் செவியுறாதவர்களே இருக்கமாட்டோம். அந்தப் பிரார்த்தனையை அடியொட்டிய மருத்துவ விவாதமொன்றினை ட்ரைமெட்டும் நியூரோக்ரிஷும் இணைந்து நடத்தினார்கள். முதியோர் பராமரிப்பைப் பற்றிய TriMed-இன் ‘End of Life Care’ அனுபவத்தை, சம்பந்தப்பட்டவரின் பேத்தியின் ஆடியோவை ஒலிபரப்பி, தங்களது சிகிச்சை முறையை விளக்கினார் மருத்துவர் ஸ்ரீவட்சா. ‘டிக்னிட்டாஸ் (DIGNITAS)’ எனும் நிறுவனத்தைப் பற்றி லண்டன் மருத்துவமனையில் பணி புரியும் நீரஜ் அகர்வால் விளக்கினார். அவர், ‘Oxford Textbook of Neuropsychiatry’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.End of Life Care என்பது, வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் பராமரிப்பு எனப் பொருள் கொள்ளலாம். அந்த ஓய்வு பெற்ற ...
சர்வ அலட்சியமும் சர்வாதிகாரமும்

சர்வ அலட்சியமும் சர்வாதிகாரமும்

அரசியல், கட்டுரை, சமூகம்
நாட்டுக்காக மக்களா? மக்களுக்காக நாடா? என்ற கேள்விக்கு, 'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் வரிகளைப் பதிலாகக் கொள்ளலாம். மோடி அரசோ, அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய பயத்தையும் பதற்றத்தையும், தனி மனிதன் பலருக்கும் உருவாக்கி வைத்துள்ளது. ‘வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity)’ என்பது இந்தியாவிலுள்ள பல்வேறு மொழி, மதம், சடங்கு, உணவு வேறுபாட்டினைக் குறிக்கும் பதம் மட்டுமன்று, மக்களின் பொருளாதார அடுக்கினையும் சேர்த்தே குறிக்கிறது. அதிகாரத்தோடு நெருங்கிப் பழகும் மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் (Crony capitalists) முதல் தினக் கூலியை (Daily wages) நம்பிப் பிழைக்கும் அன்றாடங்காச்சிகள்/கழைக்கூத்தாடிகள் வரை எண்ணற்ற அடுக்கினைக் கொண்டது. இந்த அடுக்குகளைப் பற்றிப் போதிய ஞானம் இல்லாமல், அடுக்கின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொண்டு, 2 நாட்களில் நாட்டை வெளுக்க அரசு ஓர் அ...