Shadow

கட்டுரை

ஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்

ஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்

புத்தகம்
மிகவும் பிரபலமான குழந்தைகள் எழுத்தாளரும் ஓவியருமான ப்யாட்ரிகஸ் பாட்டரின் கதைகளை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர் வானம் பதிப்பகம். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதியின் மிக எளிமையான மொழிபெயர்ப்பு இந்நூலின் பெரும் வரபிரசாதம். ஒரு மொழிபெயர்ப்பினைப் படிக்கிறோம் என்ற அயற்சியைத் தராமல் நேரடி தமிழ்க் கதையைப் படிப்பது போல் உள்ளது சிறப்பு.  1866 ஆம் ஆண்டு பிறந்த ஹெலன் ப்யாட்ரிக்ஸ் பாட்டரின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவரது வயதினையொத்த சிறுவர்களுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. பிராணிகளை வளர்ப்பது தான் அவரது முன் இருந்த ஒரே பொழுதுபோக்கு. இங்கிலாந்தில் பிறந்த அவரது விடுமுறைக் காலம் இயற்கை எழில் கொஞ்சும் ஸ்காட்லாந்தில் கழிந்தது. இத்தகைய சூழலில் வளர்ந்தவர், பின்னாளில் ‘ஹெர்ட்விக் ஆட...
கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்

கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்

சமூகம், சினிமா
வரலாற்றுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நெற்களஞ்சியம் என்று கொண்டாடப்படும் தஞ்சைப் பாசனப்பரப்பு பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறது. “விளைந்தால் விலையில்லை; விலையிருந்தால் விளைச்சலில்லை” என்ற சந்தைக் கலாசாரத்தால் விவசாயி ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கிறான். இப்போது காவிரியில் தண்ணீரும் கண்களில் கண்ணீரும் வற்றிப்போன பிறகு என்ன செய்வான் பாவம் ஏழைத் தமிழ் உழவன்? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கான உரிமைத் தண்ணீரைக் குறைத்துக்கொடுத்தது. அந்தக் குறைந்த தண்ணீரையாவது காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையின்மீது இப்போது நம்பிக்கை இல்லாமல் செய்வது நியாயமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பு ‘ஸ்கீம்’என்ற சொல்லைச் சுட்டியிருக்கிறது. கிளி என்றாலும் கிள்ளை என்றாலும் ஒன்றுதான். ‘ஸ்கீம்’ என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றத்த...
அமலா பாலின் தொண்டு நிறுவனம்

அமலா பாலின் தொண்டு நிறுவனம்

சமூகம், சினிமா
பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் இந்த இளைஞர்களை வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையைத் தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலா பால் தற்பொழுது நிரூபித்துள்ளார். கஷ்டப்படும் மக்களுக்குச் சேவை செய்வதற்காக, அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் அமலா பால். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியைத் திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது. தனது தொண்டு நிறுவனம் குறித்து, ''அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடைப்பேச்சுக்குத் தயார் செய்து கொண்டிருந்த பொழுது தான் சில முக்கியமான புள்ளிவிவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70...
மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி

மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி

சமூகம்
சமீபத்தில் தமிழில் மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை 'கலர்ஸ் தமிழ்'. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் 'கலர்ஸ்' தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்குப் பெயர் போனது. 'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில் படிப்பைத் தாண்டி வியக்கத்தக்க திறமைகளைக் கொண்ட குழந்தைகளை மையமாக வைத்து 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' என்ற ஒரு ஷோவைத் தொடங்கியுள்ளனர். ''தொலைக்காட்சியைக் கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும், இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தரவேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் எங்களிடம் இருந்தது. படிப்பைத் தாண்டி பல விஷயங்களும் திறமைகளும் நிறைய உள்ளது என்ற எங்களது எண்ணம் பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. திறமைகளுக்குப் பஞ்சமே இல்லாத மண் நம்முடையது. நங்கள் தேடிக் கண்டுபிடித்து இந்த ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான ...
மரப்பாச்சி பொம்மையின் சாகசம்

மரப்பாச்சி பொம்மையின் சாகசம்

புத்தகம்
செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்கள் தான் இந்நூல். சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சொன்ன பாலபாரதியின் சிறுவர் நூலான 'ஆமை காட்டிய அற்புத உலகம்' போல், மரப்பாச்சியும் மிக மிக முக்கியமான சமூக விஷயமொன்றைத் தொடுகிறது. பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பாற்ற தொடுதல் (Good touch, Bad touch) பற்றி மிக எளிமையானதொரு புரிதலை ஒரு கதையின் மூலம் உருவாக்குகிறது. நல்ல, கெட்ட என்ற சொல்லுக்கு மாற்றாக பாதுகாப்பான, பாதுகாப்பாற்ற எனும் சொற்களைப் பாலபாரதி பயன்படுத்தியுள்ளது சிறப்பாய் உள்ளது. தனக்கு நேருவதைப் பெற்றோர்களிடம் சொல்லவே பூஜா தயங்கும் பொழுது, மரப்பாச்சிப் பொம்மை அவளுக்கு க்யூட்டாய் உதவுகிறது. உதவுவதோடு அல்லாமல், மரப்பாச்சியான செஞ்சந்தன இளவரசி பூஜாவிற...
பேட்டை – தமிழ்ப்பிரபா

பேட்டை – தமிழ்ப்பிரபா

புத்தகம்
சென்னை பற்றி மற்றவர்கள் பார்வை என்பதே எள்ளலும் கிண்டலுமாக தான் இருக்கும். இது வாழ்வதற்குத் தகுதியான இடமில்லை, ஊரு முழுக்க நாற்றமெடுக்கும் கூவத்துக்கு நடுவில் குடியிருக்க முடியாது, சுற்றுபுறம் மிகவும் கெட்டுவிட்டது, சென்னையைச் சுற்றி வாழும் சேரி மக்கள் பேசும் பாஷை சகித்துக் கொள்ள முடியாது என இன்னும் பல இத்யாதிகள். இப்படித் தூற்றி கொண்டே பல இடங்களில் இருந்து சென்னையில் பகுசாகக் குடியேறியவர்களின் பல கேலி கிண்டலுக்கு மத்தியில் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டு, முன்னர் சேரியாகவும் இன்று ஹெளசிங் போர்டில் வாழும் மக்களின் கதையை தான் பேட்டை (சிந்தாதிரிப்பேட்டை) பேசுகிறது. சிந்தாதிரிப்பேட்டை எப்படி உருவாகுகிறது என்பதில் இருந்து நாவல் தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்து அசுர வேகத்தில் முடிவடைகிறது. பல இலக்கிய நாவல்களில், எழுத்தாளர்கள் தங்கள் ஊர்களில் பேசும் வட்டார வழக்குகளை நமக்குக் கடத்தியது போலவே இங்கு ச...
ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

புத்தகம்
Paulo Coelho, Haruki Murakami, Orhan Pamuk என பிறமொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை நாம் நம்மில் ஒருவராக அறிந்திருப்பதற்குக் காரணம் அப்புத்தகங்களின் தரமான ஆங்கில மொழிபெயர்ப்பே. நம்மிடம் நோபல் பரிசு வாங்குவதற்கு உகந்த தரம் மிக்க எழுத்தாளர்கள் இருந்த போதிலும், அவர்கள் யாராலும் கண்டுபிடிக்கப்படாத குகைச் சித்திரங்களைப் போல் அறியப்படாமல் இருப்பது மனவேதனையைத் தரும் விஷயம். இக்குறையைப் போக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே “ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)” ஆகும். சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை ப்ரபாகர், மதன் ஆகியோருடைய புத்தகங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு முதற்கட்டமாக வெளிவர இருக்கின்றன. இந்திரா செளந்திரராஜன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் நாவல்கள் மொழிபெயர்ப்பில் உள்ளன. சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், ல.ச.ரா, கு.அழகிரிசாமி, புதுமைப்ப...
எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது

எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது

அரசியல், கட்டுரை, சினிமா, புத்தகம்
ஈராக்கில் பணி புரியும் ஐ.நா. சபை அதிகாரியான ஆர்.கண்ணன், “MGR: A Life” எனும் புத்தத்தை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா, 2017 ஜூலை 8ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. புத்தகத்தை பாராளமன்ற உறுப்பினர் திரு. சசி தரூர் வெளியிட, எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவரான திரு.இராம.வீரப்பன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய சசி தரூர், “நானும் எம்.ஜி.ஆரின் ஊரான பாலக்காட்டைச் சேர்ந்தவன் தான். எனது குழந்தைப் பருவத்தின் ஹீரோ அவர். என் சகோதரர்களுடன் பல எம்.ஜி.ஆர். படங்களை ரசித்திருக்கிறேன். எம்.ஜி.ஆர். தான் இந்திய அரசியலில் சாதித்த முதல் சினிமா சூப்பர் ஸ்டார். தமிழ்நாட்டில், தேசிய கட்சிக்கும், மாநில கட்சிக்கும் இருந்த அரசியல் போட்டியை, மாநில கட்சிகளுக்கு இடையேயான போட்டியாக மற்றியவர் எம்.ஜி.ஆர். முப்பது வருடங்கள் முடிந்த பிறகும், எங்களையும் (காங்கிரஸ்) சேர்த்து எந்தத் தேசியக் கட்சிகளாலும் த...
ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்

ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்

சமூகம்
“எதிர்காலத்தில் என் குழந்தை தன் பணிகளை தானே செய்து கொள்ளும்படி வளர்வானா?” எல்லா ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இக்கேள்வி இருக்கும். உண்மையில் எல்லோருக்கும் அது சாத்தியமா என்பதை நான் அறியேன். ஆனால் பலருக்கும் அது சாத்தியம் என்பதை நம்புகிறேன். நம் குழந்தை அந்த இடத்தை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புராணங்களில் சொல்லப்பட்ட பூமா தேவியை விட, அதிகம் பொறுமை மிக்கவர்களாகp பெற்றோர் மாறவேண்டும். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வதிலோ, கேட்பதிலோ எப்படி நம் குழந்தைகள் சலிப்படைவதில்லையோ, அதைப்போல பல மடங்கு நாமும் கற்றுக் கொடுப்பதில் மாறவேண்டும். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இன்னும் கூடுதலாக அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவேண்டும். அதில் ஆட்டிச நிலைக்குழந்தைகளை ஈடுபடுத்தவேண்டும். அவர்கள் அதைப் பற்றிக்கொள்ள, சில நா...
என்று நிற்கும் இந்த அடாச்செயல்?

என்று நிற்கும் இந்த அடாச்செயல்?

சமூகம்
‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்’ என்பது பழமொழி. சில தசாப்தங்களுக்கு முன், ஆசிரியர்களின் கையில் இருந்த பிரம்பு, பல மாணவர்களின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் மந்திரக்கோலாக இருந்தது. காலத்தின் வேகமான மாற்றத்தில், சேவையாய்ப் பார்க்கப்பட்ட கல்வி, வியாபாரமாய்ப் பரிணாமம் அடைந்து சொல்லொண்ணா சிக்கல்களைச் சமூகத்தில் கொண்டு வந்ததிலிருந்து, மாணவர்களின் மாற்றத்திற்கு உதவிய மந்திரக்கோல் மரணத்தை நோக்கித் தள்ளி வருகிறது. இதை அவதானித்த அரசாங்கமும், மாணவர்களை அடிப்பதற்கு ஆசிரியர்களுக்குத் தடை விதித்துள்ளது. அறிவை வளர்க்க என்றிருந்த கல்வி, எப்பொழுது மதிப்பெண் வேட்டையாக மட்டும் மாறியதோ, அன்றிலிருந்து கண்ணுக்குத் தெரியாத கண்ணியாக மாணவர்கள் மீது மன அழுத்தம் படர ஆரம்பித்துவிட்டது. சமீபமாக வேலூரில் நான்கு மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை புரிந்து கொண்டதையும், சத்யபாமாவில் ஒரு கல்லூரி மாணவி த...
கவிஞர் சினேகனின் மக்கள் நூலகம்

கவிஞர் சினேகனின் மக்கள் நூலகம்

சமூகம், சினிமா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக கவிஞர் சினேகன் அறிவிக்கப்பட்டால், அதில் கிடைக்கும் பரிசுத்தொகையான ரூபாய் ஐம்பது லட்சத்தைக் கொண்டு அவரது சொந்த கிராமமான தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டியிலனைத்து வசதிகளையும் கொண்ட நவீன நூலகம் கட்டுவதாகாறிவித்தார். உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் சினேகனின் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சினேகன் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்படாவிட்டாலும், அவரது கனவு நிறைவேறுவதற்காகப் பல்வேறு தொண்டு அமைப்புகளும், திரைப்படத் துறையினரும், தொழிலதிபர்களும் முன் வரத் தயாராக உள்லனர். அதில் முதல் நபராக நடன இயக்குநரும் நடிகரும் சமூக ஆர்வலருமான திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள், ரூபாய் பத்து லட்சம் நன்கொடையாக சினேகனின் சினேகம் செயலகத்தின் "மக்கள் நூலக"ப் பணிகளுக்காக வழங்கியுள்ளார். இவரின் முழுஒத்துழைப்போடு, சினேகனின் லட்சியம...
தேசிய விருது இயக்குநரை மயக்கிய நாயகன் ரங்கா

தேசிய விருது இயக்குநரை மயக்கிய நாயகன் ரங்கா

கட்டுரை, திரைத் துளி
தேசிய விருது பெற்ற ஜோக்கர் இயக்குநர் ராஜுமுருகன் கதை, வசனம் எழுத, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநரான அவரது அண்ணன் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். ‘ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இன்னுமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார். இப்படம் குறித்து ராஜுமுருகனிடம் பேசிய போது, ரங்கா எப்படி இந்தப் படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தைச் சுவாரஷ்யமாகச் சொன்னார். “எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது போலத்தான் வாழ்க்கையிலும் சில ஈரமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்துவிட்டது. இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம். பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத...
வெட்டாட்டம் நாவல் – ஒரு பார்வை

வெட்டாட்டம் நாவல் – ஒரு பார்வை

கட்டுரை, புத்தகம்
நாவலின் முதல் அத்தியாத்தைப் படித்து முடித்து இரண்டாம் அத்தியாத்திற்குள் சென்று விட்டால், 266 பக்கங்களையும் வாசித்த பின்பே தான் கீழே வைக்க முடியும். அப்படி ஒரு விறுவிறுப்பான கதை. மிகத் தேர்ந்த கதைசொல்லியாக, சுவாரசியமான நடையில் நாவலைப் படைத்துள்ளார் ஷான் கருப்பசாமி. கதையின் ஜானர் ஒரு பொலிடிக்கல் த்ரில்லர். மக்களின் மனங்களை வசீகரத்த நடிகரான வினோதன் தோல்வியே காணாத முதல்வராகப் பதவியில் வீற்றிருக்கிறார். அவர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நேரத்தில், ராஜினாமா செய்து முதல்வர் பதவியை மகன் வருணுக்குத் தற்காலிக ஏற்பாடாகத் தாரை வார்த்துக் கொடுக்கிறார். அதில் துளியும் விருப்பமில்லாமல், 'மூன்று வாரம் பல்லைக் கடித்துக் கொள்ளலாம்' என வேண்டாவெறுப்பாகக் கவர்னரைச் சந்தித்து பதவி பிரமாணம் எடுக்கிறான் வருண். வினோதனுக்குப் பாதகமாகத் தீர்ப்பு வருகிறது; தலைநகரத்துக்குக் குடிநீர் தரும் பிரம்மாண்டான ஏரிகளில...