Shadow

கட்டுரை

யூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக!

யூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக!

சமூகம்
இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிப்பட்ட இசைப் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் சேவையைத் துவக்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்தச் சேவையைத் துவக்கி வைத்தார். இதற்காக அந்தக் குழுவினர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், அவர்கள் கூறும் போது, 'எங்கள் குழுமம் தகுதி பெற்ற ரேடியோ ஜாக்கிகள் யூனிவர்சல் லைவ் ரேடியோ மூலமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பற்பல விஷயங்களோடு, பல புதுவிதமான யுத்திகளோடு உங்களை நாள்தோறும் மகிழ்விக்க மற்றும் தங்களின் நிகழ்ச்சி திறன் மேம்பாட்டை...
தூத்துக்குடியில் 49000 கோடி முதலீடு – அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம்

தூத்துக்குடியில் 49000 கோடி முதலீடு – அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம்

சமூகம்
சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. குறிப்பாகத் தென்மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை அதிகரிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடியில்  ரூ. 49,000 கோடி முதலீட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க குவைத் நாட்டில் செயல்பட்டுவரும் அல் க்யுப்லா அல் வட்யா என்ற நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்நிலையில், தூத்துக்குடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் முதலீடு செய்யவும் அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கு அல் க்யுப்லா அல் வட்யா நிறுவனத்தல...
“பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா” – ஜெய் கணேஷ்

“பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா” – ஜெய் கணேஷ்

சமூகம்
நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்! பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம். பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசர் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் திரு. கண்ணன் கேசவன் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகி. திரு. செந்தில், திரு.பால்ராஜ், திரு.ஜீவரத்தினம் ஆகியோர் மத்திய சென்னை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். நம்மவர் மோடி எனும் இருசக்கர ஊர்வலத்தை அதன் தேசிய தலைவர் திரு.ஜெய் கோஷ் திவேதி கொடி அசைத்த...
பூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்

பூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்

புத்தகம்
அமேசான் நடத்தும் Pen To Publish போட்டிக்காக ஹேமா ஜே அவர்களால் எழுதப்பட்ட நாவல் “பூக்கள் விற்பனைக்கல்ல”. குடும்ப நாவல் வகையைச் சேர்ந்த கதை. பொதுவாகக் குடும்ப நாவல்களை எழுதுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலும் பெண் வாசகிகள் அதிகமாக இருக்கும் இந்த வகை பிரிவில், காதலையே பல்வேறு விதமாய்க் கொடுத்தாலும் அதை ரசித்துப் படிக்க விரும்பும் வாசகி / வாசகர்களுக்கு என்ன விதமான புதுமையான முயற்சிகளைத் தந்து விட முடியும் என்ற எழுத்தாளர்களின் உளவியல் திறமை சார்ந்த ஒன்று அது. காதலைத் திகட்டத் திகட்டக் கொடுத்தும், இன்னும் பத்தாமல் போதலை போதலை என்று துடிக்கும் இரண்டு துறை இருக்கிறதென்றால், அது ஒன்று சினிமா, இன்னொன்று இந்தக் குடும்ப நாவல்கள் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவைப் போன்றே இந்தக் குடும்ப நாவல் பிரிவிலும் அதை, அதன் டெம்ப்ளேட்டிலிருந்து வெளியே எடுத்து வந்து விட வேண்டும் என்று பல எழுத்தாளர்கள் தொ...
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை

இந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை

புத்தகம்
தமிழ் சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்தியப் பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'. இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. 'ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார். ரஹமான் ஜிப்ரீல், இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார். தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகி உள்ளார். கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ’ஜூவாலை’ என பெயர் வைத்துள்ளார். "காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரிதான். நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொ...
களம் நாவல் விமர்சனம்

களம் நாவல் விமர்சனம்

புத்தகம்
களம். அமேசான் நடத்தும் Pen To Publish போட்டிக்காக இராஜேஷ் ஜெயப்பிரகாசம் அவர்கள் எழுதிய நாவல் இது. கிரிக்கெட்டையும் சினிமாவையும் மையமாக வைத்து எழுதப்பட்ட க்ரைம் த்ரில்லர். இந்த நாவல் குறித்தான பல்வேறு விளம்பரக் குறிப்புகளிலும் அவ்வாறுதான் சொல்லப்பட்டிருந்தது. கிரிக்கெட்டை மையமாக வைத்து தமிழில் வெகுசில நாவல்களே வெளிவந்துள்ளன. எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய 'லேடீஸ் ஹாஸ்டல்', பட்டுக்கோட்டை பிரபாகரின் இரு க்ரைம் நாவல்கள், வெ.த.புகழேந்தியின் 'வீணையடி நீ எனக்கு' போன்றவை சில முக்கியமான நாவல்கள். இது தவிர சில குடும்ப நாவல்கள் கூட இதில் அடக்கம். ஆனால் எனக்குத் தெரிந்து இவை வெறுமனே ஹீரோ ஒரு கிரிக்கெட் வீரராகக் காட்டுவதோடு நின்று விடுகின்றன. க்ரிக்கெட் அதன் முக்கியப் பிண்ணனியாக இருப்பதில்லை. ராஜேஷின் களம் நாவல் முழுக்க முழுக்க கிரிக்கெட் பிண்ணனியில் எழுதப்பட்டிருக்கிறது. 'சரி இதெல்லாம் ஒரு பெருமையா ...
அம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு

அம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு

சமூகம்
தமிழில் உணவு, உணவுகளின் செய்முறை , பழமையான உணவுகளின் நினைவுகள், பழங்கால உணவு பழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியைப் பிரபல உணவு ஆராய்சியாளரும், மிகச் சிறந்த செஃப்புமாகிய ராகேஷ் ரோஷன் தொகுத்து வழங்க “அம்மாவும் நானும்” எனும் பெயரில்  வெப் சீரிஸ் ஒன்று உருவாகியுள்ளது.   உணவு  தயாரிக்கும் துறையில் மிகவும் பிரபலமாக விளங்குபவர் ராகேஷ். உணவு பற்றிய நிகழ்ச்சிகளான 'Dakshin Diaries for Living Foodz' & நியூஸ் 7 தொலைக்காட்சியின் 'சுற்றலாம் சுவைக்கலாம்' எனும்  நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பெரும் ரசிகர்களை உருவாக்கி வைத்திருப்பவர். இப்போது “அம்மாவும் நானும்” எனும் வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களை இணையம் வழி மகிழ்விக்க  வருகிறார்.  உணவு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு உணவின்  பின்னும்   எப்போதும் ஒரு கதை இருக்கிறது. எமோஷன் இருக்கிறது. அத...
ஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..

ஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..

சமூகம்
ஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் ப்ராவோலியன் எவென்ட்ஸ் (PRAAWOLION EVENTZ) சென்னையில் சமூக நல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோ "PRAWLION FASHION WEEK" ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது. ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு ஷோ நடத்தும் அமைப்பாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நடிகர் பிரபாகரன் PC, “ஃபேஷன் உலகைப் பொறுத்தவரை சென்னை எப்போதும் திறமையாளர்களுக்கு முக்கியமான தளமாக இருக்கிறது. இங்கு நிறைய புதுமைகளும் திறமைகளும் அரங்கேறி வருகிறது. அதில் PRAAWOLION EVENTZ மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாங்கள் நடத்த உள்ள இந்த ஃபேஷன் விழாவின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் இதன் மூலம் கிடைக்கும் தொகை விவசாயிகளின் நலனுக்கு அளிக்கப்பட உள்ளது” என்றார். ஃபேஷன் ஒருங்கிணைப்பாளர் ...
தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல்

தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல்

சினிமா, புத்தகம்
தமிழ்த் திரைப்பட உலகின் பவழ விழா ஆண்டு 2006 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அக்டோபர் 31, 1931 இல், தமிழின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' வெளியானது. அன்றிலிருந்து, தமிழ் சினிமாவில் முதன் முதலாக நிகழ்ந்த சிறப்புகளைத் தொகுத்து, 'தமிழ் சினிமாவின் முதல்வர்கள்' என்ற புத்தகத்தை 2006 இல் எழுதியுள்ளார் திரைப்படப் பத்திரிகை தொடர்பாளரான பெரு.துளசி பழனிவேல். மொத்தம் 28 சிறப்புமிகு படங்களைப் பற்றிச் சுருக்கமாக தந்துள்ளார். இப்புத்தகம், திரைப்படப் பிரியர்களுக்கான ஒரு பொக்கிஷச் சேமிப்பு. காதலையும், தமிழ்ப்படங்களையும் பிரிக்கவே முடியாதோ என்று கதி கலங்கும்படி, வசவசவெனக் காதல் படங்களை உருவாக்கித் தள்ளுகின்றது தமிழ்த் திரைப்பட உலகம். அலுக்கவே அலுக்காமல் தமிழ்த் திரையுலகம் காதல் படங்களை எடுப்பதும், எங்களுக்குச் சலிக்கவே சலிக்காதெனப் பார்வையாளர்கள் அவற்றைக் கொண்டாடுவதும் ஒரு தொடர் கதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு, த...
45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி

45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி

சமூகம்
புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், 'தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்' என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான 45 ஆவது துப்பாக்கி சுடுதல் போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் தளத்தில் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கியது. போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, பறந்து சென்ற தட்டுகளைத் துப்பாக்கி தோட்டாக்களால் சுட்டு வீழ்த்தினர். இதில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் மற்றும் மிக்ஸடு ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் சர்வதேச வீரரான பிரித்விராஜ் தொண்டைமான் சிங்கிள் டிராப் பிரிவில் 50 தோட்டாக்களுக்கு 49 தோட்டாக்கள் மூலம் பறக்கும் தட்டைச் சுட்டு வீழ்த்தி புதிய...
வசீகரிக்கும் பாப் சிங்கர் ஹிதா

வசீகரிக்கும் பாப் சிங்கர் ஹிதா

சமூகம்
கலிஃபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரின் பூர்வீகம் கர்நாடகம் ஆகும். 14 வயதான இவருக்கு, முக்கியமாக இவரின் குரலுக்கு கலிஃபோர்னிய மக்கள் அடிமை என்றே சொல்லலாம். ஹிதாவின் பாடல்களை வலைதளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சி நடத்தி தருமாறு கோரிக்கை வைக்தார். அதை ஏற்றுக் கொண்டு, இவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் மகேந்திர சிட்டி பின்னால் உள்ள மகரிஷி ஸ்கூல் கிரெளண்டில் தனது நிகழ்ச்சியை “INSPIRED BY HITHA “ என்ற பெயரில் நடத்தினார். இந்தியாவிற்கு அறிமுகமில்லாத இவரை ரசிகர்கள் எப்படி ஏற்கப்போகிறார்கள் என்று பெரிய சந்தேகம் இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் அவர்க...
சென்னை திருமங்கல ரக்க்ஷகர்களுக்கு  ராக்கி

சென்னை திருமங்கல ரக்க்ஷகர்களுக்கு ராக்கி

சமூகம்
மெட்ராஸ் மெட்ரோபாலிடன் ரெளண்ட் டேபிள் 95 மற்றும் மெட்ராஸ் மெட்ரோபாலிடன் லேடிஸ் சர்க்கிள் 70 -இன் உறுப்பினர்கள், இன்று திருமங்கலம் காவல் நிலையத்திற்குத் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். "எங்கள் குழந்தைகளுடன் திருமங்கலம் காவல் நிலையத்தைப் பார்வையிட்டோம். 24/7 எங்களைப் பாதுகாக்கும் காவல்துறையினர் தான் எங்களுக்கு உண்மையான ரக்‌ஷகர்கள் என்ற உண்மையை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு வலியுறுத்தினோம். நாங்கள் அங்குள்ள 50 காவல்துறையினர்க்கு ராக்கிகளைக் கட்டி இனிப்புகளை விநியோகித்தோம். இன்ஸ்பெக்டர் திரு.ரவி குழந்தைகளுக்குக் காவல் நிலையத்தைச் சுற்றிக் காண்பித்தார். துப்பாக்கியைப் பயன்படுத்துவதையும், மக்களைப் பாதுகாக்க அவர்கள் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கை பற்றியும் குழந்தைகளுக்கு விளக்கினார். காவல்துறையினரை நண்பர்களாகக் கருத வேண்டும் என்றும் அவர்களை அழைக்க ஒருபோதும் தயங்கக்கூடாது என்றும் அவர் வலி...
அத்திப்பழ அல்வா

அத்திப்பழ அல்வா

சமையல்
அத்திப்பழம் ரத்த விருத்திக்கும், தோல்வியாதி நீக்கவதற்கும் உதவும். இப்படி பல நல்ல மருத்துவக் குணங்களைக் கொண்டது. மகிமை பொருந்திய அத்திப்பழத்தில் அல்வா எப்படிச் செய்யலாம் எனப் பார்க்கலாம்.தேவையான பொருட்கள்: அத்திப்பழம் - 1 கிலோ சர்க்கரை- 1 கிலோ பட்டை - 2 அல்லது 3 செய்முறை: 1. அத்திப்பழத்தை இரண்டாக நறுக்கி, அத்துடன் சர்க்கரை, பட்டை போட்டு 4 மணிநேரம், அடி கனமான பாத்திரத்தில் ஊறவைக்கவும். 2. நன்றாக சர்க்கரை நீர்த்துப் போயிருக்கும். இப்பொழுது அடுப்பில் வைத்துக் கிளறவும். 3. நன்றாக நுரைத்து வேகும். நல்ல அல்வா பதம் வந்தவுடன், வாசனைக்கு ஒரு 2 ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். 4. அப்படியே தனியாகவும் சாப்பிடலாம். சப்பாத்தி, தோசை, ரொட்டியுடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.- வசந்தி ராஜசேகரன்  ...
லிடியன் நாதஸ்வரம் – ஓர் இசைப் பிரவாகம்

லிடியன் நாதஸ்வரம் – ஓர் இசைப் பிரவாகம்

சமூகம்
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல், குழந்தைகளுக்கென பிரத்தியேக செய்தி மற்றும் கலை, புகைப்படத் திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்தது. கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக பதிலளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்துக் காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார். அகாடெமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியைப் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்கள், ...
பிக் பாஸ் 3 – நாள் 20

பிக் பாஸ் 3 – நாள் 20

சமூகம்
பளபளவென கமல் என்ட்ரி கொடுத்தார். வீட்டில் இருப்பவர்கள் நடந்து கொள்வதைப் பற்றி ஒரு முன்னுரை கொடுத்துவிட்டு, வெள்ளி நிகழ்வைப் பார்க்கலாமென அழைத்துக் கொண்டு போனார். காலை 8 மணி 'சொடக்கு மேல சொடுக்கு போடுது' எனும் பாடலுடன் விடிந்தது அன்றைய நாள். முதல் டாஸ்க்: வனிதா கிண்டர் கார்டன் ஸ்கூல் டீச்சராக, மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்குப் பாடம் நடத்தவேண்டும். அலோ பிக்பாஸ், கிரியேட்டிவ் டீம்ல இருக்கிறவர்களுக்குத் தண்டத்துக்குச் சம்பளம் கொடுக்கறீங்க. கன்டென்ட் இல்லேன்னா சோஷியல் மீடியால கேளுங்க. சூப்பரான கண்டெண்ட் கிடைக்கும். சரவணன், மது, சாண்டி சமைத்துக் கொண்டிருக்கும் போது, உள்ளே வனிதாவும், ரேஷ்மாவும், 'மதுவுக்கு சமையலே தெரியலே' எனப் பேசிக் கொண்ட்டு இருந்தனர். 'தமிழ்ப் பொண்ணு அது இதுனு பேசிட்டு, எனக்கு எல்லாம் தெரியும்ன்னு சொல்லிட்டு, இப்ப எனக்குத் தெரியாதுனு சொல்றா' என வனிதா சொல்ல, ரேஷ்மா தன் பங்குக்குக் கொஞ...