என் பிரியங்களில்
படிந்துள்ள அழகினை
நான் பார்த்து வியக்கிறேன்மற்றவர்களின் வெளிப்பாட்டிலிருந்து
என்னுடையதில் மட்டும்
ஒரு தனித்துவமிருப்பதால்வழித்தெடுக்க வந்தவர்களுக்கும்
அதையே கொடுத்தேன்
மாறாக
எனக்களித்து சென்றார்கள்
அவர்களுக்கு யாரோ கொடுத்த
வெறுமைகளை- சே.ராஜப்ரியன்
(செவி வழி கதை)மும்பையில ஒரு பெரிய தாதா.. இருக்கேனே அவன் பெயர் என்ன?ஏதோ இப்ராஹிம்னு வருமே!!ஆங்... தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தானுல இருக்கான் இப்ப. அவன் மதுரையில ஒருபெரிய நகைக் கடை ஆரம்பிச்சிருக்கான். அழகிரி போய் காசு கேட்டிருக்கான்.அவனுங்க தரல. அந்த கடை திறப்பு விழாவிற்கு முன்னாடி நாளு, அந்த கடைஇருக்கிற தெருவை சுத்தி பெரிய பள்ளம் வெட்டி கடைக்கு போக வழி இல்லாமசெஞ்சுட்டாங்க.உடனே தாவூத் கலைஞருக்கு போன் பண்ணி, "உன் பேரனும், கொள்ளுப் பேரனும் இந்தரோட்டுல இந்த கார்ல போயிட்டிருக்காங்க. நீ உன் பணத்த எல்லாம் புதைச்சுவச்சிருக்கிற இடத்துல என் ஆளு 'பெட்ரோலோடும் 'லைட்டரோடும் நிக்கிறான்"என்று சொல்லியிருக்கான்.கலைஞர் வாயே திறக்கல. உடனே மதுரைக்கு போன் பண்ணார். நைட்டோட நைட்டா புதுரோடு போட்டுக் கொடுத்திருக்காங்க. நான் கேட்கிறேன்.. இவங்களுக்கு ஏன் இந்தவேலை? நிழல் உலகத்துல இருக்கிற அவன் ஏதாச்ச...
அந்த காலத்தில்
அவள் பார்வைக்காகவே
உயிர் வாழ்ந்தேன்
நம்பவில்லை ஆனாலும் அப்படி
நடக்கும் என்ற நிரந்தரமில்லா நம்பிக்கை சகவாசியை
கட்டாயப்படுத்தி உடன்வசிக்க சொன்னேன்.பிற்பாடு உறுதிசெய்தால்
சிரிப்பு என்ற ஆயுதத்தாலும்
ஒன்றாக சேர்த்தென்னை வீழ்த்திஇந்த நிகழ்காலத்தில்
அவளே மறுபடியும் என்னை சிதிலமாக்குகிறாள்
விஷம்கொட்டும் பேச்சு
வேண்டா வெறுப்பு பார்வை
ஒவ்வாத கசக்கும் மருந்தாய் உதட்டசைவு
ஒற்றையிலக்கத்தின் முதல்எண் தடவைஎன்னுடய இறக்கும் இந்தகாலம்
அவளுக்கு புதியவனொருவனுடன்
நல்ல தொடக்கம் தந்திருக்க
நான் என்ற ஒரு ஆள்
நடுவில் நிற்பது
போ என்றொரு அவள் வார்த்தைகாகமறக்காத ஆசை
ஒரே ஒருமுறையாவது பார்ப்பாள்
உன்னிடமிருந்து விடைபெறும் முன்பு
என கண்ணுக்கு ஆறுதல் சொல்லி
கையால் துடைக்கிறதுஅதற்காகத்தான் காத்திருக்கிறது
எதற்கும் உதவாத
என் உடம்புக் கூடு- சே.ராஜ...
கணினி ஆய்வில் தமிழ் - 06சென்ற வாரம் தேடு பொறியில் உள்ள ஆஃப்லைன் செயல்பாடுகளான கிராலிங், இன்டெக்சிங், வினா விரிவாக்கம் குறித்துப் பார்த்தோம். இவ்வாரம் இன்னொரு ஆஃப்லைன் செயல்பாடான சர்ச்சிங் (தேடுதல்) குறித்துப் பார்ப்போம். சென்ற வாரம் உபயோகித்த அதே உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். அதாவது கீழே ஒரு தேடு பொறியில் இன்டெக்ஸ் செய்யப்பட்ட வார்த்தைகள், பயனர் கொடுக்கும் வினா மற்றும் வினா விரிவாக்க வார்த்தைகள் உதாரணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.இன்டெக்ஸ் வார்த்தைகள்திருநெல்வேலி அல்வா தாமிரபரணி: -d1 ,d100,d890
திருநெல்வேலி அல்வா: -d5,d450,500,600
திருநெல்வேலி தாமிரபரணி: -d100,d800,4500
திருநெல்வேலி: -d1,...d4000
அல்வா: -d6,...d6000
தாமிரபரணி: -d3,...d5000வினா/க்வெரிதிருநெல்வேலிவினா விரிவாக்கம்திருநெல்வேலி அல்வா தாமிரபரணிஇப்பொழுது சர்ச்சிங் செயல்பாட்டில், ...
நிலா வந்து போகிறது
வானம் நட்சத்திரங்களைக் கொட்டி
மீண்டும் பொறுக்கி எடுக்கிறது
சூரியன் தோன்றி மறைகிறது
மழை நனைத்துப் போகிறது
மின்னல் மீண்டும் வானிற்கே போனது
இடி சத்தமிட்டு சாகிறது
பனித்துளி பூத்துக் கரைகிறது
பூக்கள் மலர்ந்து உதிர்கிறது
பலகவிதை எழுந்து விழுகிறது
இசை ஒலித்து ஓய்கிறது
வண்ண விளக்குகள் எரிந்து அணைகிறது
குயில் கூவிச் சோர்கிறது
மயில் ஆடி முடிக்கிறது
அலைகள் கரையைத் தொட்டு
விளையாடி செல்கிறது
இன்னும் என்னென்னவோ நடக்கிறது
எதுவும் முழுமையடையவில்லை
சந்தோஷங்களைப் பெறவில்லை
வீட்டிற்குள்ளே இருக்காதே
வெளியில் வந்து உன் முகம்கட்டு
விவரம் அறியாது
சோகத்திலிருக்கிறது எல்லாம்
என்னைப் போலவே!!- சே.ராஜப்ரியன்...
எவ்ளோ தடவ சொல்றது ஊரு பக்கம் போகாதன்னு இப்ப அழுது என்ன புண்ணியம் என்று சொன்னவாரு கூட்டத்திற்குள் நுழைந்தாள் எட்யாங்.
ஆம் அனுபவமும் அறிவும் ஒருங்கே பெற்றவள் அவள். அதனால் தான் கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தி கொண்டிருந்தாள்.
அனைவரும் வானத்தை நோக்கி ஊளையிட்டு, தலைவிக்கு மரியாதை செலுத்தினார்கள். கூட்டத்தின் செல்ல பிள்ளையான ரூஸ் மனிதர்களால் கொடூரமாக கொல்லப்பட்டு மூன்று நாட்களே ஆன நிலையில், மாயா காயத்துடன் திரும்பி உள்ளான். " நாம்ப எல்லாம் சபிக்க பட்டவங்க எப்பவும் நம் இனம் மனிதர்களுக்கு அடிமைகள் தான் இவங்கள கட்டுபடுத்த யாருமே இல்லையா?" என்று ஒரு குரல் கூட்டத்தின் மத்தியில் ஒலித்தது. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். "ஏன் இல்லை கடவுள் இருக்கிறார்".. என்று பேசத்தொடங்கினாள் எட்யாங். "கடவுளா ?? என்ன பெரிய கடவுள் மனிசங்களுக்கு மட்டும் எல்லாம் கொடுத்துட்...
கணினி ஆய்வில் தமிழ் - 05சென்ற வாரம் தேடு பொறியின் ஆன்லைன் செயல்பாடுகளைப் பற்றி பார்த்தோம்.இவ்வாரம் ஆஃப்லைன் செயல்பாடுகள் பற்றி பார்ப்போம்.பின் வருவன ஆஃப்லைன் செயல்பாடுகள் ஆகும்.வலைத்தளங்களை கிரால் (Crawl) செய்தல் வேண்டும் .இதை செய்யும் நிரலிக்கு "கிராலர் (Crawler)" என்று பெயர்.கிரால் செய்யப்பட்ட வலைத்தளங்களின் உள்ள இமேஜ், எழுத்துமூலம் உள்ள செய்திகள் போன்றவற்றை பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஆவணங்கள் அடிப்படையில் ஐ.டிக்கள் (IDs) கொடுக்கப்படும். பின் வரும் செயல்பாடுகள் இந்த ஐ.டியை வைத்தே செயல்படும் .
வலைத்தளங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இமேஜ் மற்றும் செய்திகளில் உள்ள முக்கியமானவற்றை இன்டெக்ஸ் செய்வார்கள். உதராணத்திற்கு "இந்தியா" என்கிற வார்த்தை அல்லது இமேஜ் d1,d4 d50,d1000 முதலிய வலைத்தளங்களில் / ஆவணங்களில் உள்ளது என குறித்து வைப்பார்கள் . d1,d4... என...
என் இதயம் தீப்பிடித்து எரிகிறது
கண்ணீர்விட்டு அணைத்துக் கொண்டிருக்கிறேன்
எந்நேரமும்முன்பு போலில்லை நீ
நான் பார்த்தால்
முகம் சுளிக்கிறாய்வார்த்தைகளில்
வெறுப்பள்ளி வீசுகிறாய்நான் சிரித்தால்
பதிலுக்கு என்னை சிலுவையில் அறைகிறாய்
முகம் திருப்பிநான் செய்தபாவம் என்னவோ?- சே.ராஜப்ரியன்...
மண்ணில் விழுந்த மழைத்துளி
மீண்டும் தெறித்தது
சிறு சிறுத்துளிகளாய்
உன்மேல் படுவதற்கென்றே!நீ கதவுகளை பூட்டியே வை
மழையை ரசிக்கிறேன்
என ஜன்னலோரத்தில் போகாதே
சாரலென்றபெயரில்
சட்டென நுழையும் மழை
உன்மேல் கொண்ட ஆசையால்.- சே.ராஜப்ரியன்
உடன்பிறப்பே,நான் முன்பு போல அவ்வளவாக திரைப்படங்களைப் பார்க்க என்னுடைய நேரங்களை செலவிடுவதில்லை. தொடர்ந்து இடையறாத அலுவல் பணி இருந்து வருவதனால் அவைகளுக்காக நான் தனியாக நேரத்தை ஒதுக்குவதில்லை. ஏன் என் எழுத்தில் உருவான படங்களைக் கூட சிறப்புக் காட்சியின்பொழுது திரை நட்ச்சத்திரங்களை வரவைத்து என்னுடன் சேர்த்து அவர்களையும் பார்க்க வைத்து நான் எவ்வளவு உறுதி படைத்த கல்நெஞ்சம் கண்டவன் என நிரூபிப்பதோடு சரி. ஆனால் தம்பி விஜயின் ஐம்பதாவது படமான சுறாவை நேற்று அண்ணா அறிவாலயத்தில் குறுந்தகடு மூலம் பார்த்து ரசித்தேன்.இது ஒன்று போதும் நான் தமிழ் மக்களின் மீது வைத்துள்ள பற்றை அவதூறு பேசிவரும் எதிர்க் கட்சிகள் புரிந்துகொள்ள.
முதலில் இது போன்றதொரு படத்தை தாயாரிக்க ஒப்புக்கொண்ட தம்பி சங்கிலி முருகனுக்கு என்னுடைய பாராட்டை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.எ.சந்திரசேகர் என அழைக்கப்படுகிற திரைப்பட இயக்குனரும்,...
கணினி ஆய்வில் தமிழ் - 04
சென்ற வாரம் அனஃபோரா அனாலிசிஸ் மற்றும் நேம்ட் என்டிட்டி ரெகக்னிஷன் (Anaphora Analysis and Named Entity Recognition) பற்றி பார்த்தோம். இந்த வாரம் கூகுள் போன்ற தேடு பொறிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.ஒரு தேடு பொறியின் செயல்பாட்டினை இருவகையாக பிரிக்கலாம். அவை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்பாடுகள் ஆகும். முதலில் ஆன்லைன் பற்றி பார்ப்போம். ஏனெனில் பயனருக்கு ஓரளவிற்கு பரிச்சயமானது ஆன்லைன் செயல்பாடுகளே ஆகும். அவை பின்வருமாறு:* பயனர் கொடுக்கும் வினா (query) தேடு பொறியினுள் செலுத்தபடுகிறது.* அவ்வினா பல வினாக்களாக விரிவாக்கப்படுகிறது. இதனை க்வெரி எக்ஸ்பான்ஷன் (query expansion) என்பார்கள். ஒரு எடுத்துக்காட்டுடன் இதனை பார்ப்போம். தமிழில் கூகுளை நீங்கள் உபயோகித்திருபீர்கள். "முருகன் கோவில்" என்று நீங்கள் வினா கொடுத்தால், பழனி முருகன...
நானும் அவளும்
காதலித்தோம்.
நானும் அவளும்
பேசிக்கொள்வோம்.
நானும் அவளும்
ஒரே தட்டில்
உணவு உண்போம்.
நானும் அவளும்
ஒன்றாக
ஒரே படுக்கையில்
துயில் கொள்வோம்.நானும் அவளும்
எங்கள் உடையை
மாற்றி மாற்றி
உடுத்திக் கொள்வோம்.
நானும் அவளும்
ஒரே இருக்கையில்
இறுக்கமாக
அமர்ந்துக் கொள்வோம்.
நானும் அவளும்
எழுதுகோல் விரல்களால்
காகித கட்டுடலில்
கவிதை எழுதுவோம்.நானும் அவளும்..
'நீயும் நானும்
கல்யாணம்
செய்துக் கொள்வோம்'
என பேசினோம்.
நானும் அவளும்
இப்படி எத்தனையோ
ஒன்றாக செய்தோம்.
கல்யாணமும்
செய்துக் கொண்டோம்.
நான் வேறோறொரு அவளை
அவள் வேறொரு அவனை.எங்கள் திருமணத்திற்கு
வந்து வாழ்த்திய
சாதி, மதம், பணம்
மற்றும்
வாட்டும் நினைவுகள்
என சகலத்திற்கும்
என் நன்றி.- சே.ராஜப்ரியன்...
என்னை மறந்து
உயரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறேன்
எப்படிப் போனேன் தெரியவில்லை
பூமியின்மீது பார்வை படர்ந்திருக்கிறதுஎல்லாமே எனக்கு கீழேதான்
நானும் வானத்தோடு சேர்த்து அதிலிருப்பதையும் தவிர
இவ்வளவு சிறியதா இந்தபூமி?
ஏமாந்திருக்கிறேன்.
யாரோ சொல்லிக் கொடுத்ததைக்கேட்டுசட்டென தெளிகிறேன்
எந்த பறவையின் பார்வையிலிருக்கிறேனோ!!
அதன் இறக்கையின் ஒலிகேட்டு
விழித்துப் பார்க்கிறேன்
வழக்கம் போல கனவுதான்..
விழுந்துவிடவில்லை.- சே.ராஜப்ரியன்...
இதுவரை யாரும்
எனக்கு எழுதாத காதல் கடிதத்தை
படிக்கப் போகிறேன்
கதவை தாழிட்டு
இருள் நிரம்பி வழியும் அறையினுள்
ஒற்றை விளக்கின் ஒளிதனில்...வார்த்தைகள் என்னவாகயிருக்கும்
என பதட்டத்தில்
கடிதத்தை பிரிக்கிறேன்
கைகள் நடுங்குகிறது
வியர்வையால் குளித்துக்கொண்டிருக்கிறேன்
அதனால் நான் போட்டிருக்கும் ஆடையினாலே
என்னுடம்பு துவட்டிகொள்கிறது.ஈரமாகிப்போனது கடிதத்தின் சிலபகுதிகள்
எத்தனை முறைப்படித்தாலும்
புரியவில்லை முடிவில்
வெறு(ம்)மைதான் மிச்சம்.இனிமேலெனக்கு
யாரும் கடிதம் எழுதாதீர்கள்
தயவுசெய்து.- சே.ராஜப்ரியன்...
கணினி ஆய்வில் தமிழ் - 03சென்ற வாரம் மெஷின் ட்ரான்ஸ்லேஷன் பற்றி பார்த்தோம். இந்த வாரம் அனஃபோரா அனாலிசிஸ் (anaphora analysis) மற்றும் நேம்ட் என்டிட்டி ரெகக்னிஷன் (named entity recognition) பற்றி பார்ப்போம். முதலில் அனஃபோரா பற்றி பார்போம். அனஃபோரா அனாலிசிசை ப்ரோநெளன் ரெசல்யூஷன் (pronoun resolution) என்றும் சொல்வார்கள். ஒரு எடுத்துக்காட்டுடன் இதனை பார்ப்போம்."சூரபத்மன் முருகனால் கொல்லப்பட்டான். அவன் மிகவும் கொடியவன்."இரண்டாம் வாக்கியத்தில் உள்ள "அவன்" என்கிற சொல் சூரபத்மனைத்தான் குறிக்கிறது என நாம் அறிவோம். கணினிக்கு அதை தெரிவிப்பது கடினம். அதாவது வாக்கியங்களில் வரும் ப்ரோனவுன் முந்தைய வாக்கியங்களில் உள்ள தகுந்த பெயர்ச் சொல்லை சரியாக கணினியால் எடுத்துக் கொள்ள வைப்பதை அனஃபோரா அனாலிசிஸ் (அ) ப்ரோநெளன் ரெசல்யூஷன் என்கிறோம். இதே போல் ப்ரோநெளன் பின்வரும் வாக்கியங்களில் உள்ள பெயர்...