Shadow

Author: Dinesh R

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 1

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 1

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மர் பெளத்த மதத்தின் பிரிவான "ஜென்"னைத் தோற்றுவித்தவர். 'தனித்திரு; பசித்திரு; விழித்திரு' என்று வள்ளலார் 19வது நூற்றாண்டில் சொன்னதை தான் போதிதர்மர் 5வது நூற்றாண்டிலேயே நாடு கடத்தி உள்ளார். தன் குருவான ப்ரஜ்ன தாரா கட்டளையின்படி பெளத்த மதத்தைப் பற்றிப் பிராச்சாரம் செய்யவே போதிதர்மர் சீனா சென்றாரே அன்றி ஏழாம் அறிவு படத்தில் சித்தரிப்பது போல் எந்தத் தொற்றுநோயையும் தடுக்க அன்று.1994ஆம் ஆண்டு சீனர்களால் எடுக்கப்பட்ட 'மாஸ்டர் ஆஃப் ஜென்' என்ற படம் போதி தர்மரை நெருக்கமாக உணர உதவுகிறது. உண்மையிலேயே போதி தர்மரைக் கெளரவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம். படத்தின் தலைப்பு தோன்றும் முன்பே.. போதி தர்மரைப் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்கிறார்கள். ஷவோலின் மட பிக்குகளுக்கு 'குங் ஃபூ' கற்று தந்தார் என்றாலும், போதி தர்மரின் தனித்துவம் ஜென் கோட்பாடுகளைப் போதித்ததிலியே இருந்தது என்கிறது வாய்ஸ்-ஓவர். சீன ப...
உயிரோடு இருங்கள்

உயிரோடு இருங்கள்

கவிதை, படைப்புகள்
என்னது? ஊருக்கு ரோடு கேட்டு உண்ணாவிரதமா?இட ஒதுக்கீடு கேட்டு நடைப் பயணமா?சேற்றில் மிதக்கும் இந்த சேரிக்குள் நடப்பதா? என்னால் முடியாது!உங்கள் வயிறு எரிந்தால் போதாதா? தெருவிளக்கும் எரியணுமா?தண்ணீர் இல்லை என்கிறீர்கள் அப்படி என்றால் கண்ணீர் ஏது?இலஞ்சம் வாங்கினேன் என்கிறீர்கள் நீரூபிக்க முடிந்ததா?என்ன வயதாகிவிட்டது என்னைப் போய் உண்மை பேசச் சொல்கீறீர்கள்தூரமாய் நில்லுங்கள் தொட்டுத் தொட்டு 'காரை' அழுக்காக்கி விட்டீர்கள்!நீங்கள் சிரித்தாலும் பரவாயில்லை அழுதாலும் பரவாயில்லை உயிரோடு இருங்கள் எனக்கு ஓட்டுப் போட வேண்டும்!- தமிழ் ப்ரியா...
ஒரு விஞ்ஞானியின் சீற்றம்

ஒரு விஞ்ஞானியின் சீற்றம்

கட்டுரை, சமூகம்
உலக விஞ்ஞானிகள், மாவட்ட ஆட்சியர், பத்திரிக்கை ஆசிரியர்கள் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. சகட்டு மேனிக்கு அனைவரையும் டா, டோய் என தான் உரிமையாக அழைப்பார். உப்பைக் கடலில் இருந்து எடுத்தால் தான் உலகத்தைக் காப்பாற்ற முடியும்; விழித்துக் கொள்ளுங்கள் என களப்பணியில் இருப்பவர். அவர் இந்த உலகிற்கு ஏதோ சொல்ல வர்றார் என தமிழ்ப் பேசும் நல்லுலகம் பயன்படுத்தும் கூகிள் பஸ்சின் மூலை முடுக்கெல்லாம் ஒரே பரபரப்பு. சமீபமாக வந்த ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் ஆழிப் பேரலைகள் தாக்குதலின் பொழுது தான் அவரது பேச்சைத் தீவிரமாக கவனிக்கத் தொடங்கினர் என நினைக்கிறேன். ஈரோடு விஞ்ஞானி, வால்பையனின் அண்ணன் என அறியப்பட்டவரின் அவசரம்டா என்ற வலைத்தளத்தில் உள்ள இந்தக் காணொளி மிகவும் பிரசித்தம் (பார்க்காதவர்கள்.. பார்த்து விடவும்). சும்மாதான்டா, கல்கிடா, அவசரம்டா, அவசரம்டா1, அவசரம்டா2, அவசரம்டா3, டாப் சேர் (Top Chair), கூகிள...
மாயப் புன்னகை

மாயப் புன்னகை

கதை, படைப்புகள்
தர்மம் தன் இயல்பை மறைத்து கோப வேடத்தினை அணியத் தெரியாமல் அணிந்தது போலிருந்தது. எதிரில் நிற்கும் தர்மனைப் பார்க்கவே கர்ணனுக்கு வேடிக்கையாக இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது. இன்றே சண்டையை முடித்து விடும் தீவிரத்துடன் தர்மர் தன்னுடன் போர் புரிய ஆயுத்தமாவது போல் கர்ணனுக்குத் தோன்றியது. ஆனால் கர்ணன் மனதில் அன்று ஏனோ இனம் புரியா சோர்வு. பதினாறே நாட்களில் கணக்கில்லா இழப்புகள். பீஷ்மர், துரோனர் போன்ற உத்தம மகா வீரர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அநாவசியமாக அபிமன்யுவின் முகம் தோன்றிக் குற்றயுணர்ச்சியைக் கிளறியது.யுதிஷ்ட்ரனுக்கு தர்மன் என்ற பெயர் பொருத்தமானது தானா என்று யோசித்தான் கர்ணன். வஞ்சகமாக அன்றோ துரோனரை வீழ்த்தி உள்ளனர்? தர்மரின் அம்பு கர்ணனின் வில் நாணை அறுத்தது. வேகமாக நாணைக் கட்டிய கர்ணனால் அதே வேகத்தில் அம்பினைச் செலுத்த முடியவில்லை. நான் உனது தமையன் என்று கூறினால் தர்மன் ஒருவேளை ...
கி.பி.5

கி.பி.5

கதை, படைப்புகள்
கி.பி.4 கிருஷ்ணப்பிள்ளை, அவரது மனைவி, அவரது மருமகள் மூவரும் தொலைக்காட்சியில் ஆர்வமாக மதிய உணவினையும் மறந்து தொடர் ஒன்றினை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர, நான்காவதாக ஒருவரும் யாருக்கும் தெரியாமல் தொலைக்காட்சியைப் பார்த்தார். அது தொட்டிலில் இருந்த கிருஷ்ணப்பிள்ளையின் பேத்தி. கால்களால் நெம்பி நெம்பி தலையை மட்டும் வெளியில் நீட்டி பார்த்துக் கொண்டிருந்தது. கருவில் இருக்கும் பொழுதே அத்தொடரின் கதாநாயகியோட வேதனையும், போராட்டமும் குழந்தைக்குத் தெரியும். பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த பொழுது கூட, அறையில் இருந்த தொலைக்காட்சியில் கிருஷ்ணப்பிள்ளையின் மருமகள் விடாமல் தொடரினைப் பார்த்தாள். தொடரினால் ஏற்பட்ட பாதிப்புகள் குழந்தையை சென்று அடைந்தன. ஒரு பெண்ணின் மனம் மற்றொரு பெண்ணிற்கு தான் புரியும் என்பதற்கேற்ப மருத்துவர் பிரசவ தேதி செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிட்டு இருந்தும், தாயின் மனதை...
கி.பி.4

கி.பி.4

கதை, படைப்புகள்
கி.பி.3 வயதானதால் கிருஷ்ணப்பிள்ளைக்கு மறதி அதிகமாகி விட்டதென வருவோர் போவோர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டாள் அவரது மனைவி. கிருஷ்ணப்பிள்ளைக்கு ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. 'என்ன பெருசா மறதிய கண்டுட்ட? இன்னோர் தடவ அப்படி சொன்னா பாரேன்!' என்று கிருஷ்ணப்பிள்ளை கோபித்துக் கொண்டார். 'ஆயிரந்தடவ சொல்வேன்' என்று பதில் வந்தது. நல்லவேளையாக வாக்குவாதம் முற்றி போராக மாறாமல் போட்டியில் முடிந்தது. 'நல்லா கேட்டுக்கோங்க...பச்ச மொளகா வேண்டாம். காஞ்ச மொளகா 50 கிராம் வேணும். தலைக்கு தேங்க எண்ணெய் வேணும். சமைக்கறதுக்கு நல்லெண்ணெய் ஒரு லிட்டர் வேண்டாம். கொஞ்சமா வீட்டுல துவரம்பயிர் இருக்கிறதால, கடலப்பயிர் வேண்டாம். துவரம்பயிர் மட்டும் 500 கிராம் வாங்கிட்டு வாங்க. துணி தோய்க்கிற சோப்பு பெருசு ஒன்னு, குளிக்கிற சோப்பு நாலு. பெருங்காயம் சின்ன வெங்காயம் வேணாம். பெரிய வெங்காயம் கால் கிலோ. ஒரு லிட்டர் பால். க...
கி.பி.3

கி.பி.3

கதை, படைப்புகள்
கி.பி.2 மதர் தெரசாவின் சேவையை பாராட்டி செய்தி தாளில் ஒரு நினைவு கட்டுரை வெளிவந்திருந்தது. கிருஷ்ணப்பிள்ளை தமது வாழ்க்கையை அந்தப் புண்ணிய ஆத்மாவோடு ஒப்பிட்டுப் பார்த்தார். இதுவரை சமூகத்திற்கென ஒரு நல்லது கூட செய்ததில்லை என்ற உண்மை, பெரும் குற்ற உணர்ச்சியாக மாறி கிருஷ்ணப்பிள்ளையை போட்டு வாட்டியது. இனிமேல் தினமும் நாட்டிற்கோ, சமூகத்திற்கோ ஒரு நல்லதாவது செய்து விட வேண்டுமென சபதம் மேற்கொண்டார். அன்று மாலை காலார நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, சாலையோர மரத்தடியில் நோய்வாய்ப்பட்ட நொண்டி நாய் ஒன்று ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தது. நாயின் மீது கிருஷ்ணப்பிள்ளைக்குப் பரிதாபம் பொங்கியது. அந்நாயினுடைய ஒருவேளை பசியையாவது போக்கி விட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், பக்கத்துக் கடையிலிருந்து ரொட்டித் துண்டுகள் வாங்கி நாயிற்கு போட்டார். நாய் சாப்பிடும் அழகினைப் பார்க்க, ஆயிரம் கண்கள் வேண்டுமென நினைத்துக் கொண...
கி.பி.2

கி.பி.2

கதை, படைப்புகள்
கி.பி.1 எவ்வளவு முயன்றாலும் கிருஷ்ணப்பிள்ளைக்கு நாட்கள் திருப்திக்கரமாக நகர்வதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை எனினும், புத்தகம் உற்ற துணை என்று கேள்விப்பட்டிருக்கார். எப்படிப்பட்ட புத்தங்களைப் படிக்கலாம் என்று கிருஷ்ணப்பிள்ளை ஆழ்ந்து யோசித்து, தனது வயதிற்கு ஆன்மீக புத்தகம் தான் சரி என்று முடிவு செய்தார். வீட்டுப் பரணையிலிருந்து அவர் தந்தை உபயோகித்திருந்த 'அத்வைதம்' என்னும் புத்தகத்தை தூசி தட்டி எடுத்தார். அனைவரும் கடவுள் என்ற அத்வைத கொள்கை கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்தக் கொள்கையின்படி எல்லாம் கடவுளாக தோன்ற வேண்டும், ஆனால் கிருஷ்ணப்பிள்ளைக்கு தான் மட்டுமே கடவுளென தோன்றியது. கண்ணாடி முன் நின்றுக் கொண்டு தலையைச் சுற்றி ஏதாவது ஒளிவட்டம் தோன்றுகிறதா என்று அடிக்கடி சோதித்து பார்த்தார். தான் கடவுளாகி விட்டதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென ஆவல் கிருஷ்ணப்பிள்ளையை வாட்டி...
கி.பி. 1

கி.பி. 1

கதை, படைப்புகள்
~~கிறிஸ்து பிறந்த 1940 வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணப்பிள்ளை பிறந்தார். நண்பர்களால் செல்லமாக கி.பி. என்றழைக்கப்பட்டார். சாதாரண குடும்பத்தில் பிறந்து சர்க்கார் உத்தியோகத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்று விட்டார். அவரது தற்போதைய நிலை குறித்து எவருக்கும் அக்கறை இல்லை எனினும், அக்கறையோடு சேகரித்ததில் கிடைத்த சுவையான தகவல்களின் தோகுப்பு.~~ இவ்வுலகிலேயே மிகவும் கடினமான செயல் எதுவென்று கேட்டால், அவரவர்களது வயதிற்கேற்ப தனது அனுபவத்தை சொல்வார்கள். உதாரணத்திற்கு பள்ளி பருவத்தில் பள்ளிக்குப் போவது, கல்லூரி பருவத்தில் அழகியப் பெண்கள் பாராமுகமாக இருப்பது, இளைஞர் பருவத்தில் வேலைக் கிடைக்காமல் இருப்பது, கல்யாணமானவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருப்பது, முதுமையில் ஒதுக்கப் படுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாம் கிருஷ்ணப்பிள்ளைக்கு குழந்தைத்தனமான செயல்களாக தோன்றின. அவரைப் பொறுத்தவரை இப்பிரஞ்சத்திலிய...
குப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை

குப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை

கட்டுரை, மற்றவை
  என்னிடம் அடிக்கடி ஒரு இளைஞன் வருவான், வறுமையான சூழலில் அவன் பிறந்திருந்தாலும் வறுமையை கொஞ்சம் கூட வெளிக்காட்டாத அவன் பேச்சுத் தோரணை எனக்கு ரொம்ப பிடிக்கும், எவ்வளவு பெரிய கஷ்டமான வேலை அவனிடம் சொன்னாலும் முகம் சுளிக்காமல் எத்தகைய சிரமத்தையும் தாண்டி அந்த வேலையை முடித்து விடுவான்,  ஒருநாள் அவனிடம் நான் தனியாக பேச நேரிட்டது, அப்போது தான் அவன் மனதுக்குள் கிடந்த அத்தனை ஆசை. அபிலாஷைகளை என்னிடம் கொட்டித் தீர்த்தான், தான் கிராமத்தலையாரியின் மகன் என்பதையும். தனக்கு மிகச்சிறிய வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது என்பதையும் என்னிடம் சொல்லி நான் எப்படியும் அரசியலில் பெரிய தலைவராக ஆக வேண்டும் என்றும் அதற்கு நான் உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான்,அவன் ஜாதகம் உட்பட அனைத்தையும் நான் பரிசோதித்து பார்த்தேன், அவன் அரசியல் தலைவராவதற்கான எந்தவித சாத்தியக்கூறும...
இந்திய மூளை வெங்காயமா?

இந்திய மூளை வெங்காயமா?

மற்றவை
   விலங்கியல், பொறியியல், வேதியியல் என்ற வார்த்தைகளை கேட்டவுடன் இவைகளெல்லாம் அயல்நாட்டார் கண்டுபிடித்த விஞ்ஞானம்.  இந்தியாவிற்கும் அதற்கும் எள் முனை அளவேனும் சம்பந்தமில்லையென்று பலர் கருதுகிறார்கள்.   இந்தியர்களின் அறிவில் உதித்தது.  கலைகளும் இலக்கியங்களும் தான் பௌதீக வாழ்க்கைக்கு தேவையான எதையும் ஆதிகால இந்தியர்கள் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.  அதை பற்றிய அறிவு என்பதே அவர்களுக்கு இருந்ததில்லை என்றும் சிலர் பேசுகிறார்கள் இப்படி பேசுவது சரியா?  முறையா?  என்பதை பற்றி கூட அவர்கள் சிந்திப்பது இல்லை.  வெள்ளைகாரர்களையும், அயல் நாட்டினரையும் கால் பிடித்தே பழக்கப்பட்டவர்களால்.  இந்தியர்களின் அறிவு கம்பீரத்தை புரிந்து கொள்ளவும் முடிவதில்லை, தெரிந்து கொள்ளவும் முயலவில்லை.  சமீபத்தில் என்னை சந்தித்த எழுத்தாளர் ஒருவர...
காந்தி என்கிற நெருப்பு

காந்தி என்கிற நெருப்பு

கட்டுரை, சமூகம்
தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும். காந்தி என்ற மகாபுருஷனின் நினைவுகள் கூட ஒருமனிதனை புனிதனாக்கும்.பயங்கரவாதமும் வெறித்தனமும் அதிகரித்து விட்ட இந்த உலகம் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் காந்தியக் கொள்கைகளை கடைப்பிடிப்பதைத் தவிற வேறு வழியில்லை.இதை உலகம் இப்போது சற்று மறந்து போய் இருக்கலாம் ஆனால் பட்டறி கெட்டறி என்பதிற்கினங்க ஒரு நாள் உலகத்தின் புத்திதெளியும் அன்று அண்ணலின் அருமைத் தெரியும். அதற்காக தொடர் முயற்சிகளை நல்லமனம் படைத்தவர்கள் மனச்சோர்வு இல்லாமல் செய்து கொண்டே வரவேண்டும் எறும்பூற கல்லும் தேயும் போது மனிதமனங்கள் மாறாதா என்ன?அதற்கு இத்தகைய நினைவுச்சின்னங்கள் நிச்சயம் உதவும்.இந்த...
“டண்டேலி” – சிலிர்க்கும் அனுபவம்

“டண்டேலி” – சிலிர்க்கும் அனுபவம்

கட்டுரை, மற்றவை
ஊர் சுற்றுவது என்றால் முதலில் கையைத் தூக்குகின்ற ஆள் நானாக தான் இருப்பேன். அது ஏற்கனவே பார்த்த இடமாக இருந்தாலும் சரி, பார்க்காத புது இடமாக இருந்தாலும் சரி.. எங்கேயாவது போவது என்றால் இரட்டை மகிழ்ச்சி தான். ஓர் இடத்திற்குப் போகும் முன், அந்த இடத்துல என்ன இருக்கு ஏது இருக்கு என்று கூகுள் ஆண்டவர் உதவியோடு ஆராய்ச்சிப் பண்ண ஆரம்பித்து விடுவேன். பிறகு நண்பர்களோடு அந்த இடத்திற்கு செல்ல ஆவலோடு காத்துக் கோண்டு இருப்பேன். இப்படிக் கல்லூரி காலங்களிலும், அலுவலகங்களில் பணிபுரியும் போதும் பல இடத்துக்குச் சென்று வந்துள்ளேன். இவை அனைத்திற்கும் நேர்மாறாக அமைந்தது நான் கடந்த மாதம் சென்ற ஒரு சுற்றுலா. சென்னையிலிருந்து இடம் பெயர்ந்து ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் நவம்பர் மாத இறுதியில் இணைந்தேன். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சில தமிழ் நண்பர்களின் அறையில் ஐந்தாவது நபராக அடைக்கலம் புகுந்தேன். ஒரு வியாழனன்று...
எழுந்து நட லட்சியப் பாதையில்..

எழுந்து நட லட்சியப் பாதையில்..

கட்டுரை, மற்றவை
  அது ஒரு குளிர்காலம்.  காலைப் பனியில் பசும் புற்கள் எல்லாம் பனி மகுடம் சூட்டிக் கொள்ளும் பொற்காலம். வயோதிகர்களின் எலும்பையும் உதிர செய்யும் கஷ்ட காலம்.  ஆனால் இளைஞர்களுக்கு உடல் சக்தி அதிகம் விரையமாகாத திருவிழா காலம் எனலாம்.  அதனால் தான் பகவத் கீதையில் கண்ணன் மாதங்களில் நான் மார்கழி என சொன்னான்.  சில மனிதர்கள் இருக்கிறார்கள் எந்த காலம் வந்தாலும் முகத்தில் சோக சாம்பலையே பூசிக் கொண்டு சதா சர்வ காலமும் உற்சாகமின்றியே திரிவார்கள் உடலில் ஊக்க சக்தி கும்மாளம் போடும் வாலிப பருவத்தில் கேட்டால் நான் நினைத்தது நடக்கவில்லை கேட்டது கிடைக்கவில்லை.  நாம் நடக்கும் பாதையில் ஒவ்வொரு அடியிலும் இரும்பாலான ஆணிகளிளே குத்துகிறது என்பார்கள்.  அறிவும் அனுபவமும் ஒருங்கே கை கோர்க்கும் நடு வயது பருவத்திலோ என்னை புரிந்து கொள்ளும் மனைவியில்லை என் பேச்சை கேட்...
கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

கட்டுரை, மற்றவை
இந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர வருவாய் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒருலட்சம் ரூபாய்க்கு நனோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்தது.   அடுத்தக்கட்டமாக தண்ணீரில் ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் முதல் கட்டமாக 75 கோடி ரூபாயை முதலிடு செய்துள்ளார்.பெட்ரோல் டீசல் விக்கும் விலையில் தண்ணீரில் கார் ஓடினால் நல்லதுதான்.முதலில் சுத்தமான காற்று சொர்ப்ப அளவிலேனும் கிடைக்கும் மதிய வெயிலில் புழுதிக்காற்றில் முகத்தை மூடிக்கொண்டு பாலைவன வாசிகளாட்டம் நடக்கும் அவஸ்தை குறையும்.அடுத்ததாக பெட்ரோல் பங்கில் காத்திருக்க வேணாம் மண்ணென்னை கலந்து இருக்குமோன்னு பயத்தோடு வண்டி ஓட்ட வேணாம்.மிக முக்கியமாக பெட்ரோல் விலை ஏறிப்போச்சி லாரி வாடகை கூடிப்போச்சி அதனால பால் விலை காய்கறி விலை குண்டூசி விலை கூட கூ...