Shadow

Author: Dinesh R

தீராத விளையாட்டுப் பையன்

தீராத விளையாட்டுப் பையன்

கவிதை, படைப்புகள்
       கண்ணே, மணியே யென்றான் உன்னையல்ல என்னை உனக்காக தூதுபோகஅரசமரப்பூக்கள் தலைகீழாய் தவமிருக்குமென்பான் அர்த்த ராத்திரியில் பசிக்கிறதென்பான் மொட்டை மாடியில் நிலா வசிக்கிறதுயென்பான்புரியாத கவிதைகளையெல்லாம் புரிந்த மாதிரிச் சிரிக்கிறான் தெரியாத தெருவுக்கெல்லாம் சென்றுத் தவிக்கிறான்அன்றொருநாள் நீ மறந்துவிட்டுப் போன கைக்குட்டையுடன் மாதக்கணக்கில் வாழ்ந்துவருகிறான்திருமணத்திற்குப் போனால் செருப்பைக் கழட்டிவிடாதே! அதைக்கூட அபகரித்துவிடுவான்நீ கிறுக்கிப்போட்ட காகிதத்தை கிறுக்கனாய் தேடுகிறான் கடைசியில் அதுதான் கவிதையென்று அடம்பிடிக்கிறான்முழுமதி உனக்காகப் பேசியதாம் நீரோடை உனக்காக சிலிர்த்ததாம்அம்மாவின் சமையலில் குறைகள் கண்டுபிடிக்கிறான் அதை நீ பரிமாறினால் காதல் கத்திரிக்காய்கள் கண்டுபிட...
கணினி ஆய்வில் தமிழ் – 02

கணினி ஆய்வில் தமிழ் – 02

தொடர், தொழில்நுட்பம்
கணினி ஆய்வில் தமிழ் - 01முந்தைய கட்டுரையில் தமிழ் மொழியை கணினியில் பயன்படுத்துவதில் உள்ள 'எழுத்துரு' பிரச்சனைகளை பார்த்தோம். ஒரு மொழியை எழுத்து வடிவத்திலோ ஒலி/ஒளி வடிவத்திலோ ஆராய்வதை "நேட்சுரல் லாங்குவேஜ் ப்ராசெசிங்" என்பார்கள். இதில் பல்வேறு வகையான ஆய்வுகள் அல்லது பயன்பாடுகள் இருக்கின்றன. அவை பின்வருமாறு..    * இன்ஃபர்மேஷன் ரெட்ரீவல் (கூகுள் தேடு பொறி)     * இன்ஃபர்மேஷன் எக்ச்டிராக்ஷன் (கூகுள் தேடு பொறியில் உள்ள இமேஜ் சர்ச் வசதி)     * மெஷின் ட்ரான்ஸ்லேஷன் (கூகுளில் உள்ள மொழிபெயர்ப்பு வசதி)     * ட்ரான்சிலரேஷன் (கூகுளில் உள்ள ஆங்கிலம் மூலம் தமிழ் தட்டச்சு செய்யும் முறை)தகவல்கள் சேகரித்தல், எடுத்தல், மொழிபெயர்த்தல், ஆங்கிலத்தில் தமிழை எழுதி தமிழ் சொற்கள் பெறுதல் என இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். இம்முறைகளை பற்றி...
சினிமா, மற்றவை
இது நான் எழுதும் விமர்சனமல்ல ஒரு ரசிகனாக நான் உணர்ந்ததை உங்களிடம் சொல்கிறேன் அவ்வளவுதான்.திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தில் திரு.சுஜாதா அவர்கள் இப்படி சொல்லியிருப்பார்  எல்லோரிடமும் ஒரு நல்ல கதை இருக்கும் அதை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் பிரச்சினையே, அதாவது வெற்றியா தோல்வியா என்று. அந்த வகையில் பார்த்தால் இந்த படம் பல நல்ல கதைகளை கொண்டுள்ளது நல்லவிதமாகவும் சொல்லியுள்ளது.ஒரு சிறந்த படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு  உண்டான எல்லா தகுதி தராதரங்களுடன் வெளிவந்து வெற்றிப்  பெற்றுள்ள படம் அங்காடித் தெரு. அதாவது  ஓர் ஓவியம் எப்படி தனக்குள் அனைத்தையும் வைத்துக்கொண்டு பார்க்கும் பலரின் மனதில்  பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ, உணர்வுகளை சுண்டி எழுப்புகிறதோ அதேபோலான ஒரு படைப்புத்தான் அங்காடித் தெரு. பிரச்சாரமில்லாமல் பல உன்னத கருத்துக்களை மக்கள் மனதில் தூவுகின்றது. எந்த ஒரு சிறந...
புதிர் கோணங்கள்

புதிர் கோணங்கள்

கதை, படைப்புகள்
ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்க, லிண்டா மட்டும் உறக்கம் வராமல் எதிர் வீட்டு மாடியைப் பார்த்தவாறு புகைத்துக் கொண்டிருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த லிண்டா, தன் தாயையும் மூன்று வருடங்களுக்கு முன் இழந்திருந்தாள்.யாருமற்ற மாளிகையில், சரியாக கண் தெரியாத வயதில் மூத்த வேலைக்காரியுடன் தனிக் காட்டு இளவரசியாக வாழ லிண்டா பழகிக் கொண்டாள். பிரபு குடும்பங்களுக்கு நிகரான பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசவள். போதா குறைக்கு கெளரவம் மிக்க அரசாங்க வேலையில் வேறு வீற்றிருந்தாள். இறைவன் அழகிலும் குறை வைக்கவில்லை. கால் நூற்றாண்டை நெருங்கும் வயது இருக்கும்.        எதிர் வீட்டு மாடியில் விளக்கு இரண்டு முறை ஒளிர்ந்து, மீண்டும் காரிருள் பரப்பியது. இதைக் கண்ட லிண்டாவின் முகம் பிரகாசித்தது. லிண்டா கையுறையை தேடி அணிந்து, பனி படர்ந்த இருளில் இறங்கி நடந்தாள். எதிர் வீட்டில் இ...
நல்ல கடவுள்!!

நல்ல கடவுள்!!

கதை, படைப்புகள்
"தாத்தா.. கால் வலிக்குது. எப்ப தாத்தா பஸ் வரும்?" "இதோ வந்துடும். போயிடலாம்" "போங்க தாத்தா. இதையே தான் ரொம்ப நேரமா சொல்றீங்க." "சரி, நீ கடவுள்கிட்ட வேண்டிக்கோ. அவர் உடனே பஸ் அனுப்பி வைப்பார்" என்று நேரத்தைப் பார்த்துக் கொண்டே சிறுவனை சமாதானப்படுத்தினார். கண்களை மூடிய சிறுவன் தனக்கு தெரிந்த மழலை மொழி எல்லாம் பிரயோகித்து கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும் பொழுதே பேருந்தின் ஒலிப்பான் ஒலி கேட்டது. கண்களைத் தெரிந்த சிறுவன், "தாத்தா.. தாத்தா பஸ் வந்துடுச்சு" என்று முக்கில் திரும்பும் பேருந்தை கை காட்டி குதித்து மகிழ்ந்தான். பேரனை தூக்கி பேருந்தின் முதல் படியில் வைத்துக் கொண்டே, "நல்ல மனசோடு எது சாமிகிட்ட வேண்டிக்கிட்டாலும் அது கண்டிப்பா நடக்கும்" என்று சொன்னார். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை அணைத்தவாறு அமர்ந்திருந்தவர் பயணச்சீட்டு எடுத்த சில நிமிடங்களில் ந...
முன்தினம் பார்த்தேனே விமர்சனம்

முன்தினம் பார்த்தேனே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முன்தினம் பார்த்தேனே - கெளதம் மேனன் ஏற்படுத்திய விண்ணைத் தாண்டும் ஞாலங்கள் அடங்கும் முன் அவரிடம் துணை இயக்குனராக இருந்த மகிழ் திருமேனி தனது பயணத்தை தொடங்கி விட்டார். சுவரொட்டிகளில் தெரியும் அழகும், தமணின் பாடல்களும் எதிர்பார்ப்பின் ஏனைய காரணிகள். சஞ்சய். ஐ.டி.யில் வேலை செய்யும் சாமான்யன்களில் ஒருவன். நண்பர்கள், வேலை, கிசுகிசு என செல்லும் வாழ்க்கையில் காதல் வராதா என ஏங்குபவன். நிச்சயமானவள் எனத் தெரியாமல் ஒரு பெண்ணிடம் பழகி அவள் விலக, பலரால் தூற்றப்படும் ஆர்த்தி எனும் பெண்ணின் மீது மீண்டும் மிக மெதுவாக காதல் மல்ர்கிறது. அவளது கடந்த காலம் சஞ்சயை சிறிது சலனப்படுத்தும் சமயத்தில் ஆர்த்தியின் மீதான பலரின் வதந்தி உண்மை என சஞ்சயிற்கு தெரிய வருகிறது. அந்த குழப்பத்திலேயே தன் மேல் ஈர்ப்புள்ள அனு எனும் உடன் பணி புரியும் பெண்ணிடம் அவசர அவசரமாக காதலை வெளிப்படுத்துகிறான். இதனிடையில் ஆர்த்தி நல்லவள் என தெ...
சிக்கன் பிரியாணி…

சிக்கன் பிரியாணி…

கதை, படைப்புகள்
 முதலாளியின் பிறந்தநாளைமுன்னிட்டு அன்று அலுவலகத்தில் அணைவருக்கும்  சிக்கன் பிரியாணியும் வெஜிடபுள் பிரியாணியும் அளிக்கபட்டது.   அந்த அழுவலகத்தில் வேலைசெயும் மூன்று சக்கர கூட்ஸ் வண்டியின் ஓட்டுனர் ஒருவர், "சரியான உணவில்லாமல் வீட்டில் தவிக்கும் மனைவியை எண்ணி,அந்த  பிரியாணியை உண்ணவும் முடியாமல்  தவிர்க்கவும் முடியாமல் வேதனையில் திண்டாடினார்". மறுபக்கம் அதே அலுவலகத்தில் பெருக்கி சுத்தம் செய்யும் பெண், "வீட்டில் குழந்தைகளுக்கு மதிய உணவிற்காக ஒன்றுமே செய்துதரமுடியாமல் அவர்கள் பசியில் தவிக்க, தான் மட்டும் அந்த பிரியாணியை  உன்ன மனமில்லாமல் இருந்தார்." இவர்களின் கவலை ஒருபக்கமிருக்க,அங்கு வேலை செய்யும் மேல்நிலை ஊழியர்களில் ஒருவர் அந்த உணவை பார்த்து "இது என்ன சார், பிரியாணி..... நான்  2 நாட்களுக்கு முன் 5 ஸ்டார் ஹோட்டல்லில்  சாப்டேன் பாருங்க அது த...
நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு

கதை, படைப்புகள்
மேடம்....உங்களுக்கு லெட்டர் வந்துருக்கு...என்று சொல்லி  போஸ்ட்மேன் சசியிடம் லெட்டரை கொடுத்தார்... சசி : அம்மா... லெட்டர், நேதாஜி மேல் நிலை பள்ளியிலிருந்து வந்துருக்கு... மா...           நான் டீச்சர் வேளைக்கு அப்பளை  பண்ணதுக்கு பதில் அணுப்பி இருங்காங்க....           டீச்சர் வேளைக்கு நேர்முக தேர்வுக்கு வரும் புதன்கிழமை வரசொல்லிருகாங்க.... அம்மா :  சசி, என்னனு போட்டுருக்கு அந்த லெட்டர்ல... சசி : நேர்முக தேர்வுல பல ரவுண்ட்ஸ்  இருக்கும் போல இருக்கு, மா....          எனக்கு முதல் ரவுண்டே பயமா இருக்கு மா... அம்மா : அப்படி என்ன ரவுண்டு மா... சசி... சசி : இப்போ டீச்சர் வேளைக்கு புதிய விதமா தேர்வு நடத்த போராங்கலாமா.. மா.... அம்மா : அது என்ன பு...
இப்போ பேசுங்க பாக்கலாம்

இப்போ பேசுங்க பாக்கலாம்

கதை, படைப்புகள்
"அத்தே என் பிரண்டு ப்ரியாவோட பொண்ணு  கல்யாணத்துக்கு நாளைக்கு போனும் .அவர்க்கு ஆபீஸ்ல வேலை இருக்காம் ..வரமுடியாதாம் ...கூட வரீங்களா ? "நாளைக்கு பக்கத்து வீட்ல பால் காச்றாங்க சுகந்தி  .ரெண்டு தடவ வந்து அந்தம்மா சொல்லீட்டு போனாங்க ..போகலைனா நல்லா இருக்காது ...நீயும் சுரேஷும் போயிட்டு வாங்க ..அவனுக்கு நாளைக்கு காலேஜ் லீவ் தான " "சரிங்கத்த " "டேய் சுரேஷ் நாளைக்கு என்னோட ஒரு கல்யாணத்துக்கு நீ வரணும் ..நாளைக்கு காலேஜ் லீவ் தான ..ஏதாது ஸ்பெஷல் கிளாஸ் இருக்கா ?" "நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இல்ல ஆனா கிரிகெட் கோச்சிங் இருக்குமா  " "ஒரு நாள் போலனா உங்கோச் ஒன்னும் தலைய வெட்டிட மாட்டாரு " "சரி ...எப்பிடியும் நீ விடப்போறதில்ல ..வழக்கம் போல கோச் கிட்ட ஏதாது போய் சொல்லிகிறேன் " "என்னமோ பண்ணு ...கல்யாணத்துக்கு மட்டும் வந்திரு சாமி "மறுநாள் காலையில்...
கனவே கலையாதே

கனவே கலையாதே

கதை, படைப்புகள்
தொலைபேசி அழைப்பில்"டேய் எங்க இருக்க ? மணி 11 ஆகுது எப்போ வீட்டுக்கு வருவ ? " என்றார் அர்ஜுனின் தாய்." ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு  அரை மணி நேரத்துல கெளம்பிடுவேன்".  என்றான் அர்ஜுன்."சீக்கிரம் சீக்கிரம் வந்து சேரு .. ராத்திரி நேரம் பஸ்சு கூட இருக்காது, ஆட்டோ புடிச்சி வா" என்றார் அவர்.  சரியாக அரைமணிநேரம் கழித்து ஆபீசில் இருந்து புறபட்டான் ஆட்டோவில். நல்ல சோர்வுடன் காணபட்டான்.ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருக்க வழியில் ஒரு பெண் ஆட்டோவை நோக்கி கையை நீட்டியதை கண்டான் அர்ஜுன்."வண்டிய நிறுத்துங்க" என்றான் ஆட்டோ டிரைவரிடம்.வண்டியை நிறுத்திய பெண்,  "நேதாஜி நகர் போகணும் என்றால்".அவளை பார்த்ததும் அர்ஜுனுக்கு பேச்சி வரவில்லை.. தடுமாறியபடியே ஐயோ வாங்க, வாங்க ஒன்னும் பிரச்சனை இல்லை என்றான்.ஆட்டோவில் இருவருக்கும் இடையில் சிறு இடைவ...
ஜவ்வுத்தாள் பை உலகம்

ஜவ்வுத்தாள் பை உலகம்

அயல் சினிமா, சினிமா
மாட மாளிகைகள் நேற்று. விண்ணை முட்டும் கட்டிடங்கள் இன்று. குப்பை கூல கோபுரங்கள் நாளை.குப்பைகளால் மனித இனம் சூழப்பட்டு மீள இயலாமல் ஸ்தம்பித்துப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. மக்குவதற்கு முக்கி திணரும் மக்காத ஜவ்வுத்தாள் பைகள் நம்மை எங்கு சென்றாலும் துரத்துக்கின்றன. தொங்க விடப்பட்டிருக்கும் கயிறை ஒரு முனையில் பொசுக்கி சிகரெட் பிடிக்க உதவும் பெட்டிக் கடைகள் முதல் வக்கனையாய் மெருகேத்தப்பட்ட 'டிசைன் கவர்களுள் அடைப்பட்டிருக்கும் எண்ணற்ற பொருட்களை கண்காட்சியில் வைப்பது போல் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குளிர் சாதன பல்பொருள் அங்காடி வரை ஜவ்வுத்தாள் பை நம் மீது செலுத்தும் அக்கிரமிப்பு உடம்பெங்கும் முளைக்கும் ரோமம் போல் கட்டுக்கடங்காமல் போய் விட்டது.  நாம் தூக்கிப் போடும் இந்த பைகள் காற்றில், பேருந்தில், தெருவோரங்களில், சீரனமாகாமல் மாட்டின் வயிற்றில், கோவில் குளங்களில், பசுமை படர்ந்தோங்...
காதலும் காயமும்

காதலும் காயமும்

கதை, படைப்புகள்
சரி ராம். நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம் என்று கூறிவிட்டு  அவன் வீட்டை விட்டு புறப்பட்டால் ப்ரீத்தி.அவள் சென்றதும்,மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றான் ராம்.டேய் என்னடா இதெல்லாம் ? என்றால் புஷ்பா.உனக்கு தான் எல்லாம் தெரியும்ல அப்புறம் என்ன கேள்வி என்றான் ராம்.புஷ்பா -தெளிவா சொல்லு என்ன நடக்குது?ராம் - இன்னும் என்ன தெளிவா சொல்லணும்.. நான் அவல லவ் பண்றேன். போதுமா ??.புஷ்பா - அவளும் உன்ன லவ் பண்றாளா? .ராம் - இல்ல, ஆனா சீக்கிரமே அது நடக்கும்.புஷ்பா - எனக்கு அவல சுத்தமா பிடிக்கல.  ராம் - உன் விருபத்த யார் கேட்டா? எனக்கு பிடிச்சி இருக்கு அவ்ளோ தான்.புஷ்பா - டேய், நீ இப்படி எல்லாம் என்னோட பேசினதே இல்லையே டா.. இப்போ மட்டும் எப்படி?ராம் - சரி உனக்கென்ன அவ மேல இப்படி ஒரு கோவம்.புஷ்பா - எனக்கு தெரியும்..பல பேரை  நான் பாத்திருக்கிறேன். அவ ...
அக்கறை சீமையிலே – 2

அக்கறை சீமையிலே – 2

கதை, படைப்புகள்
இடம் : பி பி சி  அலுவலகம், லண்டன். நேரம்: 3pm நாளைக்குலாகூர்ல  இருக்கும்  இந்தியன் எம்பசிய டாலிபன்ஸ் தாக்க போறதா  ஒரு ரகசியதகவல்  வந்திருக்கு.அங்க  நம்ம  டீம்  போய்  கவர்  பண்ணினா  நல்லா இருக்கும் என்றார் Mr.வில்லியம்ஸ்.சார்  Mr. ஹுசைன்  தான் பாகிஸ்தான்ல கவர் பண்ற நம்ம  ரிபோர்ட்டர்.ஆனா அவர் இப்போ 1 வீக்  லீவ் ல இருக்காரு.சரி ஆண்டர்சன்,வேற யார அனுப்பலாம் லாகூர்கு ?Mr.இக்பால்,சீனியர் ரிபோர்ட்டர். கடந்த 6 வருஷமா  நம்மகிட்ட  வொர்க் பண்றாரு.அனுபவமுள்ள ஆளு..அவர்  போறது  பெஸ்ட்னு  தோணுது சார் என்றார் ஆண்டர்சன்.சார் மன்னிக்கணும் இக்பால் ஒரு இந்தியர்,அவர இப்போ பாகிஸ்தான்  அனுபறது  நல்ல  ஐடியாவா எனக்கு தோணலை என்றார் ஹென்றி.ஆனா அவர் ஒரு முஸ்லிம் என்பத...
சாளரக் கண்கள்

சாளரக் கண்கள்

கவிதை, படைப்புகள்
சாளரக் கதவுகள் காத்துக் கொண்டிருக்கிறது திறக்கப்படும் நேரத்திற்காககாத்திருப்பின் முடிவில் வேகமாக வெளியேசெல்லும் அதுவரையில் அறையினுள் அடங்கிக் கிடந்தவைமீண்டும் அறையினுள் சிறைப்பட வரலாம் தூசும் துரும்பும்.அதுபோலத்தான் மூடியிருக்கும் சிலரின் மனதில் நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்- இராஜப்ரியன்...