Shadow

சினிமா

கோமாளி பாட்டுப்புத்தகம் – 90’ஸ் கிட்ஸ்களுக்காக

கோமாளி பாட்டுப்புத்தகம் – 90’ஸ் கிட்ஸ்களுக்காக

சினிமா, திரைத் துளி
இன்று தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்துவிட்ட நிலையில், 90'ஸ் கிட்ஸ்களின் கொண்டாட்டங்கள் எல்லாம் பழங்கதையாகி விட்டன. அதிலொன்று பாட்டுப்புத்தகம். அவை இன்று பரிணாம வளர்ச்சியடைந்து, பாடல் வரிகளுடன் கூடிய காணொளியாக (Lyrical video) உருமாற்றம் கொண்டுள்ளது. அப்பொற்காலத்திற்கு மீண்டும் செல்வது சாத்தியமில்லை எனினும், கோமாளி படக்குழு தங்கள் படத்துக்கும் பாட்டுப் புத்தகத்தை உருவாக்கி, ரசிகர்களை 90 களின் இனிய நினைவுகளில் திளைக்க வைக்க முடிவு செய்துள்ளனர். "ட்ரெய்லரை, அனைவரும் அதில் பொதிந்துள்ள ஜாலியான நகைச்சுவைக்காக விரும்புவார்கள் என நினைத்தோம். ஆனால், 90 களின் நாஸ்டால்ஜியாவில் ரசிகர்கள் திளைக்க ஆரம்பித்தது, நாங்கள் எதிர்பார்க்காதது. அதனால் அக்காலகட்டத்தில் சிறப்பான அம்சங்களை மீள் உருவாக்கம் செய்யத் திட்டமிட்டோம். அதன் முதல் படியாக, பாட்டுப்புத்தகம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். முன்பெல்லாம், ஒரு படத்தின...
நானும் சிங்கிள் தான் – காதல் படம்

நானும் சிங்கிள் தான் – காதல் படம்

சினிமா, திரைத் துளி
THREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'நானும் சிங்கிள் தான்'. தினேஷ் கதாநாயகனாகவும், கதாநாயகியாக தீப்தி திவேஸும் நடித்துள்ளார். மேலும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னை மற்றும் லண்டன், ஐரோப்பா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. "இது முழுக்க முழுக்க காதல் கலந்த கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் கோபி. ஒரு புது மாதிரியான கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில் உள்ளது. அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். லண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் நடித்து மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் ...
எஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M.

எஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M.

சினிமா, திரைத் துளி
ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது. M.G.R. பிலிம் சிட்டியில், பிரம்மாண்டமனஅ அரங்கம் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது. என் காதல் ராணி என்னைத் தூக்கி வீசிட்டா என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா என்று ஹரிசரண் பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர்ஃபுல்லாகப் படமாக்கப்பட்டது. இந்தப் பாடலுக்காக ஜெய் மிக சிரத்தை எடுத்துச் சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீலஃப் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். C.M. யாருமே எதிர்பாராத இளமை ததும்பும் காதல் கதை இது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை ...
கடமான் பாறை – நவீன தொழில்நுட்பத்தால் நேரும் ஆபத்தைப் பற்றிய படம்

கடமான் பாறை – நவீன தொழில்நுட்பத்தால் நேரும் ஆபத்தைப் பற்றிய படம்

சினிமா, திரைத் துளி
மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கித் தயாரித்திருக்கும் படம் 'கடமான் பாறை'. இந்தப் படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்."நகைச்சுவை கலைந்த த்ரில்லர் படமாக கடமான் பாறை உருவாகி இருக்கிறது. மாடர்ன் டெக்னாலஜி இன்று மாணவர்களை எப்படி தவாறன பாதைக்கு அழைத்துச் செல்கிறது, அதனால் இளைஞர்கள் எவ்வாறு வாழ்கையில் தடம் மாறுகிறார்கள் என்பதுதான் இந்தப் ...
சமந்தாவின் ‘ஓ பேபி’ தமிழில்

சமந்தாவின் ‘ஓ பேபி’ தமிழில்

சினிமா, திரைத் துளி
சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபேக்டரி தயாரிபில், பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ பேபி’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது. ஒரு 70 வயது பெண்மணி, ஒரு மர்மமான புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்தவுடன் 20 வயது மங்கையாக மாறி விடுகிறார். வீட்டின் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் இந்தக் காலத்தில், ஒரு முதியவர் இளமை திரும்பினாலும், தனது குடும்பத்தை எப்படிப் பாதுகாக்கிறார் என்பதைக் கற்பனை கலந்து, ஜனரஞ்சகமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். தொழிட்நுட்பக் கலைஞர்கள்: >> இயக்கம் - பி.வி.நந்தினி ரெட்டி >> ஒளிப்பதிவு - ரிச்சர்ட் பிரசாத் >> படத்தொகுப்பு - ஜுனைத் சித்திக் >> இசை - மிக்கி ஜே மேயர் >> வசனம் & பாடல் - டி ச...
விரைவில் புதிய பட அறிவிப்பு – கெளரவ் நாராயணன்

விரைவில் புதிய பட அறிவிப்பு – கெளரவ் நாராயணன்

சினிமா, திரைத் துளி
கதையின் தன்மையையும், திரைக்கதையின் அழகையும் ஒரு சேர இணைத்து தனது இயக்கத்திறமையால் அழுத்தமும் அழகும் அடங்கிய திரைப்படமாக உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் கௌரவ் நாராயணன். எதார்த்த வாழ்வியலுக்குத் “தூங்கா நகரம்”, காவல்துறையின் கன்னியத்திற்குச் “சிகரம் தோடு", தீவரவாத்திற்கு எதிராக “இப்படை வெல்லும்” எனப் படத்திற்குப் படம் வித்தியாசம் கொண்ட கதை களங்களைத் தேர்ந்தெடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்று வெற்றியும் கண்டவர் இயக்குநர் கௌரவ் நாராயணன். இயக்கம் மட்டுமன்றி நடிப்பிலும் கவனம் செலுத்தித் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். விரைவில் புதிய படத்தின் அறிவிப்பின் மூலம் தனது அடுத்த படைப்பின் விவரத்தை விரைவில் அளிக்கவுள்ளார் கௌரவ் நாராயணன்....
கொலையுதிர் காலம் விமர்சனம்

கொலையுதிர் காலம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒருவழியாக எண்ணற்ற இடைஞ்சல்களைக் கடந்து படம் வெளியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாக எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டதோ அதே அளவு சிக்கல்கள் படத்தின் மேக்கிங்கிலும் உள்ளது. ஒரு ஹாலிவுட் படம் போல் ரம்மியமாக ஓப்பன் ஆகிறது. அரண்மனைக்கு நிகரான அழகான பெரிய மாளிகை, மிக அற்புதமான புல்வெளியும் உயரமான மதில் சுவர்கள், வெள்ளைக்கார வேலைக்காரப் பெண்மணி, ரசனையான ஒளிப்பதிவு என மிக அட்டகாசமாகப் படம் தொடங்குகிறது. பின் வாய்ஸ்-ஒவரில், நயன்தாரா யார், அவர் ஏன் இங்கிலாந்து வருகிறார் என வாய்ஸ்-ஓவரில் கதை சொல்கின்றனர். பின் அதே கதையை, விஷுவலாகவும் கூறியது கூறலாகச் சொல்லத் தொடங்குகிறார்கள். அதையும் கொட்டாவி வர வைக்குமளவு அசமந்தமான காட்சிகளால் காட்டுகின்றனர். சுஜாதாவின் நாவலான கொலையுதிர் காலத்திலிருந்து, இரண்டு சம்பவங்கள் மெலிதாக ஒத்துப் போகிறது. மரத்தின் பின்னால் தெரியும் ஓர் உருவமும், ஒரு பெண்ணின் பெயரில் சொத்து எழுதி...
ரீல் விமர்சனம்

ரீல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மற்றவரை ஏமாற்றி ஏய்த்துப் பிழைக்கும் நாயகனுக்கும், குடும்பச் சூழல் காரணமாய் சோரம் போகும் நாயகிக்கும் காதல் மலர்கிறது. கூடவே எதிரிகளும் உருவாகிறார்கள். நாயகனும் நாயகியும் வாழ்க்கையில் ஒன்றிணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை. அரத பழசான கதை. அதனினும் தொன்மையான திரைக்கதை பாணி. மாறி வரும் கதை சொல்லல் முறையையோ, திரைப்பட வடிவத்தையோ, கொஞ்சம் கூடக் கணக்கில் எடுக்கவில்லை எழுத்தாளர் TN சூரஜ். கதையின் ஊடே கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யாமல், அறிமுகப் படமெனத் தனியாக நீள்கிறது. அதுவும் 80 களின் சினிமா எப்படித் தொடங்குமோ அப்படி! பெண்களை அடைய நினைக்கும் வயதான பணக்கார வில்லன். அவருக்கு வேற எந்த ஷேடும் இல்லை. அறிமுகமாகும் நொடியில் இருந்து பெண்களை வெறிக்க வெறிக்கப் பார்ப்பதும், நாயகியை அடையவேண்டும் என தன் விருப்பத்தை அருவருப்பான முறையில் வெளிப்படுத்துவதுமான அவரது கதாபாத்திரம். கிரீஷ் எனும் அந்தப் பாத்திரத்...
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு JSK சதீஷ்குமாரின் கோரிக்கை

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு JSK சதீஷ்குமாரின் கோரிக்கை

சினிமா, திரைத் துளி
  ஒரு திரைப்படம் உருவாக மிகவும் முக்கியமான காரணமாக இருப்பவர் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். வெகு சிலரைத் தவிர்த்து, பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியே உள்ளனர். அவர்களுக்கு எந்த ஒரு விழாவிலும், சரியான அங்கீகாரமும் அடையாளமும் கிடைப்பதில்லை. இதனைக் கலையும் பொருட்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், FM சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, எந்தவொரு பாடல் ஒலிபரப்புவதற்கு முன்பும், அந்தத் திரைப்படத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயரைச் சொல்லித்தான் பாடல்களை ஒலிபரப்ப வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. FM நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இது தயாரிப்பாளர்களுக்கு ஒரு கெளரவத்தினையும் மரியாதையையும் ஏற்படுத்தி உள்ளது. இதே போல், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்குக்ம் விழாக்களில், விருது அறிவிக்கும் போது தயாரிப்பாளரின் பெயரையும், அந்த நிறு...
45 நாட்கள் 40 லொக்கேஷன் – ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்

45 நாட்கள் 40 லொக்கேஷன் – ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பா.இரஞ்சித்தின் 'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' தயாரிக்கும் இரண்டாவது படம் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஷ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார். கலை இயக்குநராக த.ராமலிங்கம் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல சவால்களைச் சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறார். திட்டமிடப்பட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டிய சவாலை ஏற்று, இயக்குநரோடு தோளுக்குத் தோளாக நின்று படத்தினைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்குப் பக்கபலமாக இருந்திருக்கிறார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் அதியன் ஆதிரை, கிஷோர் குமாரைப் பாராட்டித் தள்ளினார். “நி...
சிறந்த நடிகராக ஜி.வி.பிரகாஷ் தேர்வு

சிறந்த நடிகராக ஜி.வி.பிரகாஷ் தேர்வு

சினிமா, திரைச் செய்தி
நாச்சியார், சர்வம் தாளமயம் போன்ற படத்தில் வித்தியாசமன பாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்த்த ஜி.வி.பிரகஷ்க்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இசை ஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாகக் கொண்ட இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றது. ஜப்பானில் நடைபெற்ற டோக்கி...
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஆக்ஷன் பிரியர்களைக் குறி வைத்து, எந்த லாஜிக்கையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் அக்மார்க் ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படம். ஸ்னோ ஃப்ளேக் எனும் வைரஸைத் தேடி, இட்ரிஸ் எல்பா அட்டகாசமாக பைக்கில் வருகிறார். வளைந்து, நெளிந்து, ஒரு செல்லப்பிராணி போல் சொன்னதைச் செய்யும் வில்லனின் அந்த பைக் செம சூப்பராக உள்ளது. வில்லனிடம் இருந்து வைரஸைக் காப்பாற்ற, நாயகி வனேஸா கிர்பி அதைத் தனக்குள் செலுத்திக் கொள்கிறார். வில்லனின் கையில் அந்த வைரஸ் கிடைக்கும் முன், அதை மீட்க ராக்கும், ஜேஸன் ஸ்டாத்தமும் களத்தில் குதித்து ஆக்ஷன் அதகளம் செய்கின்றனர். முக்கியமாக, க்ளைமேக்ஸில் சாமோ (Samoa) தீவுகளில் நடக்கும் சண்டை செம ஜாலியாகவும், சீட் நுனியில் அமரச் செய்யும் அற்புதமான ஆக்ஷனாகவும் உள்ளது. ஹெலிகாப்டரைப் பறக்க விடாமல், சங்கிலியால் பிணைத்து, ஒற்றுமையாகச் செயற்பட்டு வில்லனைக் கதி கலங்க வைக்கும் காட்சி அட...
ஆபரேஷன் அரபைமா – கடற்படை அதிகாரியின் சாகசம்

ஆபரேஷன் அரபைமா – கடற்படை அதிகாரியின் சாகசம்

சினிமா, திரைத் துளி
துருவங்கள் 16 படத்தின் மிகப் பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் - “ஆபரேஷன் அரபைமா. பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இப்படத்தின் இயக்குநர் ப்ராஷ். இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாகப் பணி புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையைக் கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது. சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கி...
‘டைம் இல்ல’ – மிகப் பெரிய நம்பிக்கை துரோகம்

‘டைம் இல்ல’ – மிகப் பெரிய நம்பிக்கை துரோகம்

சினிமா, திரைத் துளி
அறிமுக இயக்குநர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் ‘டைம் இல்ல’. இந்தப் படத்தைத் தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்த்திபன். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் தூக்கிவிட்டு, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் தானே இயக்குநர் என்றும் பேர் போட்டுக் கொண்டார். மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி விட்டு அதில் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து, மீண்டும் சென்சார் செல்லவிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. “இது என்ன மாதிரியான திருட்டு வேலை?” என்று தெரியாமல் புலம்புகிறார் இயக்குநர். ஒரு படத்தை இயக்குவது என்பதைத் தனது வாழ்நாள் லட்சியமாக எடுத்து உழைக்கும் இயக்குநருக்குக் இப்படிப்பட்ட அநியாயம் நிகழ்ந்தது மிகப்பெரும் கொடுமை. தயாரிப்பாளரிடம் இயக்குநர் விளக்கம் கேட்டதற்கு, “இ...
நேர்கொண்ட பார்வை விமர்சனம்

நேர்கொண்ட பார்வை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ! - புதுமைப் பெண், பாரதியார் மகாகவி இறந்தே 100 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஆனால், ஆண் வகுத்த வல்லாதிக்க விதிகளை மீறி, பாரதி கனவு கண்ட புதுமைப் பெண் என்பது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பின் மூலம், இந்த இழிநிலையை மீண்டும் பொதுத்தளத்தில் ஓர் அழுத்தமான விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார் இயக்குநர் வினோத். ‘அர்ஜுன் ரெட்டி’ போன்று ஆணாதிக்கத்தை ஹீரோயிசமாகப் பேசும் படத்தினை ரீமேக் செய்யும் சம காலத்தில், அஜித் போன்ற மாஸ் ஹீரோ, “பின்க் (Pink)” எனும் அற்புதமான ஹிந்திப் படத்...