Shadow

சினிமா

சென்னை பழனி மார்ஸ் விமர்சனம்

சென்னை பழனி மார்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆரஞ்சு மிட்டாய் படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி வசனமெழுத, பிஜு விஸ்வந்தாத் இயக்கியுள்ள படம் 'சென்னை பழனி மார்ஸ்'. நாயகனின் தந்தை ஒரு விஞ்ஞானி. மார்ஸ்க்குப் போகவேண்டும் என்பது அவரது ஆசை. அவரால் முடியாததைச் சாதிக்க நினைக்கிறார் போதைப் பொருளுக்கு அடிமையாகும் அவரது மகனான. நாயகன் மார்ஸ் போனாரா இல்லையா என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை, மார்ஸ் (செவ்வாய் கோள்) பூமிக்கு அருகில் வருமாம். அப்பொழுது ஏதோ ஒரு மலையில் போய் நின்றால், செவ்வாய்க் கிரகத்துக்கு உறிஞ்சப்படுவார்கள் என ஆஸ்ட்ரோ-பிசிக்ஸ் விஞ்ஞானியான நாயகனின் தந்தை நம்புகிறார். புதிரான ஒரு கணக்கிற்கு விடை கண்டுபிடித்து, அது "பழனி மலை" எனக் கண்டுபிடிக்கிறான் நாயகன். ஒரு பிரமிட் போல் சின்ன கருவி + ஸ்பேஸ் சூட் (space suit) தான் தேவை. மலையின் மீது நின்றால் நேராக செவ்வாய் கிரகம் தான். படத்தோடு கொஞ்சம் கூட ஒட்டவே முடி...
தொரட்டி விமர்சனம்

தொரட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலைப் பேசும் ஓர் அற்புதமான படம். ‘துறட்டி’ என்றால் மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு. துறட்டி என்பதன் பேச்சுவழக்கு மழூஉ தான் தொரட்டி. தொரட்டி என்பது ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு கீதாரிகளின் கையுள்ள கருவியாகும். கீதாரிகளின் வாழ்வியலைத் தொட்டு விட்டு, பின் படம் கூடா நட்பு கேடாய் விளையும் என்பதை நோக்கிப் பயணிக்கிறது. மாயன் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார் ஷமன் மித்ரு. பெற்றோர் பேச்சோ, மனைவி பேச்சோ கேட்காமல், குடிக்காரக் கள்ளர்களோடுநட்பைப் பேணுகிறார் நாயகன். அதற்காக நாயகன் கொடுக்கும் விலை மிகப் பெரியது. அலட்டலில்லாத நடிப்பில் கதையின் போக்கிற்கு நியாயம் செய்துள்ளார். எளிமையான கதைக்களத்தைத் தன் ஒளிப்பதிவால் மிகச் சிறந்த பதிவாக மனதில் ஊடுருவ விட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் குமார் ...
சலசலக்கும் சண்முக பாண்டியன்

சலசலக்கும் சண்முக பாண்டியன்

சினிமா, திரைத் துளி
கிராமப்புறப் பின்னணியில் உருவாகி வரும் குடும்ப பொழுதுபோக்குப் படமான 'மித்ரன்' படத்திற்காகப் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். சமீபத்தில் படக்குழு, 'சல சல' என்ற துள்ளலான ஒரு பாடலைப் படமாக்கியிருக்கிறது. அது உருவாகியிருக்கும் விதம் அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. பொதுவாகப் போலீஸ் கதைகள் தீவிரத்தன்மையுடனும், தீவிரமான மோதல்கள் கொண்ட பின்னணியையும் கொண்டிருக்கும். அதில் துள்ளலான கொண்டாட்ட பாடல் எப்படி வைக்க முடியும்? அதைப் பற்றி இயக்குநர் ஜி.பூபாலன் கூறும்போது, “ஆரம்பத்தில் இருந்தே, இது ஒரு வணிக ரீதியான பொழுதுபோக்கு படம் என்று குறிப்பிடுகிறோம். படம் ஒரு ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞனைப் பற்றியது, அவர் ஒரு போலீஸ்காரராகி தனது பக்கத்துக்கு ஊருக்கு வந்து கடமையில் சேருகிறார். எனவே நாங்கள் காதல், ஆக்‌ஷன், டிராமா, நகைச்சுவை மற்றும் குறிப்பாக தாய் - மக...
நிகிஷா பட்டேலின் லட்சியம்

நிகிஷா பட்டேலின் லட்சியம்

சினிமா, திரைத் துளி
"பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் இருக்கிறது. இப்படத்தைத் தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் இயக்கியுள்ளார். படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபஎஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது . இப்படத்தைத் தவிர எழில் சார் இயக்கியுள்ள, 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்திலும், இயக்குநர் கஸ்தூரி ராஜா சார் இயக்கத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்ற 'பாண்டி முனி' படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயரிடப்படாத படத்திலும், நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன். ...
மயூரன் – உன்னைக் காப்பவன்

மயூரன் – உன்னைக் காப்பவன்

சினிமா, திரைத் துளி
கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன். மயூரன் என்றால் விரைந்து உன்னைக் காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். மயூரன் பற்றி இயக்குநர் நந்தன் சுப்பராயன், "மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்கு பணியாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலிகளைவிடப் போராளிகளே அதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவருக்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு எப்போதும் உயிர் பயம் காட்டுவது தான், அதற்கு நல்லவர்கள் கொடுக்கும் விலை தனிமை. யார் கண்ணிலும் படாத தலைமறைவு வாழ்க்கை மற்றும் உனக்கு எதுக்கு வம்பு எனும் அறிவுரைகள் மட்டும்தான். சொல்லிக் கொடுக்கப்பட்ட மரபுகளிலிருந்து விலகி நிற்பவனை உலகம் வேறு விதமாகத்தான் பார்க்கி...
ஜாக்பாட்: ஜோதிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

ஜாக்பாட்: ஜோதிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

சினிமா, திரைச் செய்தி
2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி, ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ந்தது. விழாவில் பேசிய ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா, "ஜோதிகா மேடம் டூப் ஆக்டரை ஃபைட் செய்யவே விடவில்லை. டூப் ஆர்ட்டிஸ்ட்க்காக நாங்கள் எடுத்து வரும் காஸ்ட்யூம் சும்மா தான் இருக்கும். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து மிகச் சிறப்பாக ஜோதிகா மேடம் நடித்துள்ளார்" என்றார். நடிகை சச்சு, "கல்யாண் என்னிடம் கெஸ்ட் ரோல் பண்ணனும் என்றார். நான் கெஸ்ட்ரோல் பண்ண மாட்டேன் என்றேன். பிறகு யோசித்தேன். படம் பண்ணுவது சிவக்குமார் ஃபேமிலி. அவரோடு நடித்துள்ளேன். சூர்யாவோடும் ஆரம்பத்தில் நடித்துள்ளேன். ஜோதிகாவோடு தான் நடிக்காமல் இருந்தேன். அதனால் இப்படத்தில் நடித்தேன். சூர்யா ...
டியர் காம்ரேட் விமர்சனம்

டியர் காம்ரேட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காம்ரேட் என்றால் தோழர். முக்கியமாக கம்யூனிசத்தை அரவணைத்துக் கொண்டவர்கள், தங்கள் சங்கத்தின் சக உறுப்பினர்களைத் தோழர் என்றோ, காம்ரேட் என்றோ அழைப்பார்கள். 'நீ நினைப்பதைச் சாத்தியமாக்க சக காம்ரேடாக உன் வாழ்நாள் முழுவதும் துணையிருப்பேன்' என நாயகன் நாயகியிடம் கூறுகிறார். ஒரு காம்ரேடாக தான் சொன்னதை நாயகன் எப்படிச் செய்து காட்டுகிறார் என்பது தான் படத்தின் கதை. சமீபமாக, தமிழ்ப் படங்களின் கால அளவு இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவோ, அல்லது அதிகபட்சம் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாவது இருக்கிறது. ஆனால், தமிழில் டப் செய்யப்பட்டுள்ள தெலுங்குப் படமான இதன் கால அளவு 169 நிமிடங்கள். எனினும் படம் பார்க்கும் பொழுது இந்த நீளம் பெரிய குறையாகத் தெரியாதளவு சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர் பரத் கம்மா. இடைவேளை வரையிலான படமே ஒரு முழுமையான காதல் கதையைப் பார்த்த உணர்வைத் தருகிறது. இரண்டாம் பாதியில், பெண்களுக்கு எதிரான பாலி...
வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாகிறார் சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாகிறார் சூரி

சினிமா, திரைத் துளி
விண்னைத்தாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாகத் தயாரித்த எல்ரெட் குமார், தற்போது எதார்த்த இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார். பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் சூரி இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார். குடும்பமாக அனைவரும் ரசித்துப் பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது....
A1 விமர்சனம்

A1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐயங்கார் பெண்ணான திவ்யா, சரவணனை ஐயங்கார் பையனென நினைத்துக் காதலிக்கிறார். சரவணனோ லோக்கல் பையன். திவ்யாவின் அப்பாவோ இக்காதலை ஒத்துக் கொள்ளவில்லை. நாயகனின் நண்பர்கள் இணைந்து நாயகியின் தந்தையைக் கொன்றுவிடுகின்றனர். பின், சரவணன் - திவ்யா காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. என்ன தான் நகைச்சுவைப் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது அடிப்படை விதி என்றாலும், காதல் வர இவ்வளவு மொக்கையான காரணத்தை வைத்திருக்கவேண்டாம் இயக்குநர் K.ஜான்சன். சண்டை போடும் ஐயங்கார் பையன் என்பதால் நாயகிக்கும்; முதல் முறை பார்த்ததுமே காதலைச் சொல்லி, அதை உறுதிபடுத்த உதட்டில் முத்தமே கொடுத்துவிடுவதால் நாயகனுக்கும் காதல் வந்துவிடுகிறதாம். ஷ்ஷ்ப்ப்பாஆஆ.. நாயகனின் தந்தை லோகுவாக எம்.எஸ்.பாஸ்கர் செமயாக நடித்துள்ளார். கதாபாத்திரங்களின் டைமிங் டயலாக்கால், காமெடியில் ஸ்கோர் செய்யும் படம் இது. ஆனால் தேர்ந்த நடிப்பையும், உடற்மொழ...
கொளஞ்சி விமர்சனம்

கொளஞ்சி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரியாரியவாதியான அப்பாசாமி, அவரது மூத்த மகன் கொளஞ்சி தவறு செய்யும்பொழுதெல்லாம் அடி வெளுத்து விடுகிறார். அதனால் கொளஞ்சி அவரது அப்பா மீது கடும்கோபத்தில் இருக்கிறான். அவர்களுக்கிடையில் பெரிதாய் ஏற்படும் விரிசல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. கொளஞ்சியாக நடித்துள்ள பதின் பருவத்துச் சிறுவன் கிருபாகரன் தான் படத்தின் நாயகன். அரிவாளை அடமானம் வைத்து ஐஸ் வாங்குவது, சக மாணவர்களுடன் சண்டையிடுவது, ஆசிரியையிடம் ஆசிரியர் காதல் கடிதம் கொடுத்தாரெனத் தருவது என எண்ணற்ற சேட்டைகள் செய்கிறான் கொளஞ்சி. அதை அவரது தந்தை கண்டித்தால், அவருக்குத் தன்னைப் பிடிக்கவில்லை எனப் பிணக்கு கொள்கிறான். ராஜாஜ், நைனா சர்வாரின் காதல் அத்தியாயம் படத்தின் சுவாரசியத்திற்கு எவ்வகையிலும் உதவவில்லை. தந்தை - மகன் உரசல் என்ற கருவில் பெரிதும் கவனம் செலுத்தாமல், ஆனால் அதைப் படத்தின் மையமாக வைத்துத் தைரியமாகப் படமெடுத்துள்ளார் இயக்குநர்...
டாணா – தமிழகத்தின் செல்லக்குரல்

டாணா – தமிழகத்தின் செல்லக்குரல்

சினிமா, திரைத் துளி
வித்தியாசமாக, அதே சமயம் தனக்கேற்றது போன்ற கதைகளைத் தெர்ந்தேடுத்து நடித்து வருகிறார் வைபவ். ஜூலை 22 அன்று வெளியான டாணா படத்தின் டீசரே அதற்குச் சான்று. போலீஸ் குடும்பத்தில் பிறந்த நாயகன் உணர்ச்சி வசப்பட்டால் அவனது குரல் பெண் குரலாக மாறிவிடும் எனும் வித்தியாசமான கதைக்களத்தைத் தொட்டுள்ளார் இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி. அதைச் சுட்டிக் காட்டும் வகையில், "இந்தக் குரலை வச்சிக்கிட்டு நீ பாடுன்னா, கிராண்ட் ஃபினாலே வரைக்கும் போகலாம். சின்னக்குயில் சித்ரா கிட்ட நான் பேசுறேன்" என்று டீசரில் யோகிபாபுவின் டைமிங் வசனம் அதகளம். இப்படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்க, பாண்டியராஜன், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தயாரிப்பு நிறுவனம் - நோபல் மூவீஸ் ப்ரொடக்ஷன்ஸ் >> தயாரிப்பு - எம்.சி. கலைமாமணி & எம்.கே.லக்ஷ்மி கலைமாமணி >> எழுத்து, இயக்கம் - யுவராஜ் சுப்...
தொரட்டி – மண் வாசனையும், மரப்பாச்சிப் பொம்மையும்

தொரட்டி – மண் வாசனையும், மரப்பாச்சிப் பொம்மையும்

சினிமா, திரைச் செய்தி
ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மாரிமுத்து, "ஆடு மேய்ப்பவர்கள், ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்குத் தொரட்டியைப் பயன்படுத்துவார்கள். மேலும் தொரட்டி, ஆடு மேய்ப்பவர்களின் ஆறாவது விரல் போன்றது. இந்தப் படத்தில் சினேகன் சார் பாடல்களை மிக அழகாக எழுதித் தந்தார். சமீப காலமாகக் கலைப் படைப்புகளுக்கு வர்ணம் பூசும் நிலைமை இருக்கு. இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை. தயவு செய்து இதற்கு எந்தச் சாதிச்சாயமும் பூச வேண்டாம் ...
A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்

A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்

சினிமா, திரைச் செய்தி
சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் ஜுலை 26 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி.செளத்ரி வெளியிடுகிறார். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், "சூது கவ்வும் படத்திற்குப் பிறகு எனக்கு மிகப் பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றிய படங்கள் எப்பவாவது வரும். இந்தப் படமும் சமத்துவத்தை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்துக் கொண்டு மக்களை என்டெர்டெய்ன் பண்றது ரொம்பக் கஷ்டம். அதைச் சந்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார். இந்தப் படத் தயாரிப்பாளரிடம் ஒரு சந்தோஷம் இருக்கிறது. காரணம் இந்தப் படம். தியேட்டரிகல் எக்ஸ்பிரீயன்ஸில் இந்தப் படம் நல்லா இருக்கும் என்று நம்பிக்க...