Shadow

சினிமா

ஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் மார்வெல்

ஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் மார்வெல்

சினிமா, திரை விமர்சனம்
அயர்ன் மேன் டோனி ஸ்டார்க் இறந்துவிட்டார். மார்வலின் மொத்த கூட்டமும் கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கிறது. சூப்பர் ஹீரோஸ் உச்சத்தில் இருந்தாலே தீயசக்திகளுக்குப் பிடிக்காது, இப்போது அவர்களே இல்லை எனும் போது மக்களை அழிக்கவே காத்திருக்கும் தீயசக்திகளைப் பற்றி கேட்கவா வேண்டும்? நிலம், நீர், காற்று,ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களின் வடிவமெடுத்து மக்களைக் கொன்று, உலகை ஆட்கொல்ல முடிவு செய்கிறது தீமை. அவஞ்செர்ஸின் தலைவன் நிக் ஃப்யூரிக்கு என்ன செய்வது, யாரைத் தேடுவது எனப் புரியாத நிலையில் ஸ்பைடர்மேன் ஞாபகம் வருகிறது. உண்மையில் ஸ்பைடர்-கிட் என்றோ ஸ்பைடர்-அடல்ட் என்றோதான் படத்தின் பெயரை வைத்திருக்க வேண்டும். மேன்!! அவருக்கு இன்னும் வயதிருக்கிறது மேன். பாவம் அந்தப் பச்சிளம் பாலகனைப் பிடித்து, 'நீ தான் ஸ்பைடர்மேன். உங்கிட்ட பல அசாத்திய திறமைகள் இருக்கு. நீ தா...
ராட்சசி விமர்சனம்

ராட்சசி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரும்பாலானோரின் பொதுப்புத்தியில் ஓர் அரசுப்பள்ளியைப் பற்றிய பிம்பம் எவ்வாறு பதிந்துள்ளதோ, அப்படி ஓர் அரசுப்பள்ளி தான் விருதுநகர் மாவட்டம் R.புதூரில் இருக்கும் அந்தப் பள்ளி. அங்கு தலைமை ஆசிரியையாக கீதா ராணி பொறுப்பெடுத்துத் தன் சாட்டையைச் சுழற்ற, அவருக்கு 'ராட்சசி' எனும் அடைமொழி கிடைக்கிறது. சாட்டை படத்தை நிறையவே ஞாபகப்படுத்துகிறது. குறைந்தபட்சம், அதையொரு சவாலாக எடுத்துக் கொண்டு வேறு பரிமாணத்தில் பயணிக்கக் கூடப் படம் முயற்சி செய்யவில்லை. நேரடியாக, 'இது தவறு, இப்படிச் செய்யலாம்' எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் தலைமை ஆசிரியையான கீதா ராணி டீச்சர். படத்தில் ஏகத்துக்கும் வில்லன்கள் உண்டு. துணைத் தலைமை ஆசிரியர், தனியார் பள்ளி நிறுவனர், உள்ளூர் அரசியல்வாதி போன்றோர் தலைமை ஆசிரியைக்குக் குடைச்சல் தருவதை முதன்மை லட்சியமாகக் கொண்டுள்ளனர். உண்மையின் உரைகல்லாகவும், அவலங்களைச் சுட்டிக் காட...
களவாணி 2 விமர்சனம்

களவாணி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. இப்படத்திற்கு, முதல் பாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை. முக்கிய கதாபாத்திரங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி எனும் அறிவழகனை, மகேஸ்வரி காதலிக்கிறார். காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. களவாணி எனப் பெயர் பெற்ற அவர் தேர்தலில் எப்படி வென்றார் என்பதைக் கலகலப்பாகச் சொல்லியுள்ளார் சற்குணம். மடந்தையான மகேஸ்வரிக்கும், களவாணி அறிக்குக்கும் ஆன காதல், முதற்பாகத்தில் அற்புதமானதொரு உணர்வைத் தரும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். நாயகன், நாயகிக்குள்ளான ஈ...
ஜெசிகா பெளலென்

ஜெசிகா பெளலென்

சினிமா, திரைத் துளி
துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார் ஜெசிகா பவ்லின். மேலும், ராட்சசன் படத்திலும் தன் நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். தற்போது சுசீந்திரன் இயக்கும் ஏஞ்சலினா படத்தில், நடிகர் சூரியின் தங்கையாக நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் தடம் பதித்த ஜெசிகா பவ்லின், தற்போது ஏகாலி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இனி அதிகப் படங்களில் கதாநாயகியாக அவர் வலம் வருவார். அதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தும் வகையில் ஏகாலி படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்....
“கடாரம் கொண்டான் முழுமையான படம்; விக்ரம் முழுமையான நடிகர்” – கமல் புகழாரம்

“கடாரம் கொண்டான் முழுமையான படம்; விக்ரம் முழுமையான நடிகர்” – கமல் புகழாரம்

சினிமா, திரைச் செய்தி
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார். "ராஜ்கமல் நிறுவனத்தைத் துவங்கும் போது அக்ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டே தொடங்கினோம். இந்தக் கம்பெனிக்கு ராஜ்கமல் என்று தான் பெயர் வைத்தோம். ஆனால் அனந்து தான் அதில் இண்டர்நேஷனல் என்பதைச் சேர்த்தார். என்னோட முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவைக் கொண்டு வர வேண்டும் என்றுதான் துவங்கியுள்ளாம். இந்தப் படத்தை விக்ரமிற்காகக் கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டும். ‘யாருய்யா இந்த ஆளு? கண்டிப்பா நல்லா வருவான்’ என மீரா படம் பார்த்துச் சொன்னேன். அப்பொழுது விக்ரம் யாரென எனக்குத் தெரிய...
“சப்பாணியாக நடிக்க ஆசை” – ‘கடாரம் கொண்டான்’ விக்ரம்

“சப்பாணியாக நடிக்க ஆசை” – ‘கடாரம் கொண்டான்’ விக்ரம்

சினிமா, திரைச் செய்தி
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார். கமல் ஹாசனின் தயாரிப்பில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்ட நடிகர் விக்ரம், "ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாவது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே படத்தை ரீமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தில், நாசர் சாரின் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கான கேரக்டர் பண்ணியிருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்ஷரா ஹாசன் ரொம...
கடாரம் கொண்டான் – ஜிப்ரானின் 25வது படம்

கடாரம் கொண்டான் – ஜிப்ரானின் 25வது படம்

சினிமா, திரைச் செய்தி
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார். இது இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. "இது என்னோட 25 ஆவது படம். என் 24 படங்களுக்கும் கமல் சாரோட பங்களிப்பு இருந்திருக்கு. விக்ரம் சார் நடிக்கும் போது, எங்கு எந்த வாத்தியத்தை இசைக்க வேண்டும் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு பெர்ஃபெக்ட்டான ஆக்டர் அவர். அவர் படத்திற்கு ரீ ரெக்கார்டிங் பண்றது ரொம்ப இன்ட்ரெஸ்டிங்காக இருந்தது. ராஜேஷ் உள்பட அனைவருக்கும் நன்றி" என்றார். “நாங்கெல்லாம் உள்ளே வந்து திறமைகளை வளர்த்துக் கொண்டோம். ஜிப்ரான் திறமையானவராகத்தான் உள்ளேயே வந்தார். அதனால் தான் அவரை நாங்கள் எங்கள் நிறுவனத்தில் வளைத்துப் போட்டுக்கொண்டோம்” என்றார் கமல்....
காமோற்சவம்

காமோற்சவம்

சமூகம், சினிமா
‘காமாண்டி கூத்து’ என்பது வசந்தத்தை வரவேற்றுக் கொண்டாடும் பல தொல் பண்டிகைகளில் ஒன்று. மதுரைப் பகுதிகளில் காமன் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படும். திண்டுக்கல்லில் காமக் கடவுளுக்கு கோவில் கூட உண்டு. முன்பொருமுறை இலாவணிப் பாடல் வகையில் காமன் பண்டிகை பற்றி ‘எரிந்த கட்சி’ என்றொரு பாடல் எழுதியிருந்தேன். இன்றும் காமாண்டி கூத்து நடைபெறுகிறது என்றாலும், வள்ளி திருமணம் போன்ற கூத்துகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைதான். மக்கள் கூட்டத்தை ஈர்க்க வெகு ஆபாசமாக நடத்தப்படும். இந்தக் காமாண்டி வழிபாடு என்பது பெரும் வரலாறு கொண்டது. கிளியை வாகனமாகக் கொண்டு, கரும்பு வில்லேந்தி, சந்தனம் பூசி வரும் மன்மதனும், அவனுக்கு இணையாக வரும் ரதிதேவியும், காமாண்டி வழிபாட்டின் கடவுள்கள். தமிழில் அப்படித்தான். மாயாண்டி, விருமாண்டி, சிவனாண்டி என்றுதான் கடவுள்கள் எல்லாம் குறிக்கப்படுவர். இப்பொழுது இதையெல்லாம் புதியதாகக் கேட்பவர்களுக்க...
ப்ரித்விராஜ் – சாந்தினியின் ‘காதல் முன்னேற்ற கழகம்’

ப்ரித்விராஜ் – சாந்தினியின் ‘காதல் முன்னேற்ற கழகம்’

சினிமா, திரைத் துளி
‘காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விபாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மேலும், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார். இயக்குநர் மாணிக்க சத்யா, “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது, இது என்று வேலைக்குப் போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக நடித்துள்ளார். துரோகத்தில் மிகக் கொடூரமான துரோகமாகக் கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான். அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிகக் கொடூரமானது. அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். படம் ஜூலை 5 ஆம் தேதி உலகம்...
மாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ்

மாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(க்சியா ஷி டி சி டென் - The bullet vanishes (2012))   சீனாவின் ஷாங்காய் மாகாணம், 1920 வாக்கிலான காலம், மழை நாள், இரவு நேரம். அது துப்பாக்கி தோட்டாக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளி சில தோட்டாக்களைத் திருடிவிட்டாள் என குற்றம் சுமத்தப்பட்டு சக தொழிலாளிகளின் முன்னே கைகள் கட்டப்பட்டு, மண்டியிட்டு இருக்கிறாள். முதலாளி நீதி விசாரணை நடத்துகிறான். முதலாளி தன் கையில் வைத்திருக்கும் ரிவால்வரில் ஒரே ஒரு குண்டை மட்டும் வைத்துவிட்டு, ரிவால்வர் கேப்பைச் சுழற்றிவிடுகிறான். பிறகு, அந்தப் பெண்ணின் மீது தான் அபாண்டமாக குற்றம் சுமத்தியிருந்தால் இந்தத் துப்பாக்கி என்னைத் தண்டிக்கட்டும் என டிரிக்கரை அழுத்த, வெற்று சத்தத்துடன் டிரிக்கர் அமைதியாகிறது. பிறகு அதே துப்பாக்கியை மீண்டும் சுழற்றி அந்தப் பெண்ணிடம் கொடுத்து அவளை சுட்டுக்கொள்ளச் செய்யும் போது துப்பாக்கியின...