Shadow

சினிமா

சரிகம ஒரிஜினல்ஸின் ‘டிக்கி டிக்கி டா’ சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு

சரிகம ஒரிஜினல்ஸின் ‘டிக்கி டிக்கி டா’ சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு

இசை விமர்சனம்
இசையுலகில் தனித்துவம் வாய்ந்த சுயாதீன பாடல்களை வெளியிட்டு வரும் முன்னணி ஆடியோ நிறுவனமான சரிகம.. அசல் பாடல்களையும், சுயாதீன இசை ஆல்பங்களின் வீடியோவையும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது 'டிக்கி டிக்கி டா' எனும் பெயரில் சுயாதீன பாடல் ஒன்றையும், அதற்கான பிரத்யேக காணொளியையும் வெளியிட்டிருக்கிறது.இந்த பாடலுக்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். பாடலை மதன் கார்க்கி மற்றும் பாடலாசிரியரும், பாடகருமான அசல் கோளாறு ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இந்தப் பாடலை அசல் கோளாறு, தர்புகா சிவா மற்றும் ஷிவாங்கி ஆகியோர் இணைந்து பாடி, ஆடி நடித்திருக்கிறார்கள். இந்த வீடியோ இசை ஆல்பத்தை மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளரும், பாடகருமான தர்புகா சிவா இயக்கியிருக்கிறார்.‌ இந்த பாடலை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனமும், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து தயாரித...
பரிவர்த்தனை விமர்சனம்

பரிவர்த்தனை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து, கல்லூரியில் தன்னோடு படித்த தன் தோழியை பார்க்க வரும் நாயகி, தன் தோழி இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் இருப்பதையும் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருவதையும்,  அவள் வாழ்க்கையில் பள்ளி காலத்தில் நடந்த சோகக்கதையை தான் அவளின் இந்த நிலைமைக்கு காரணம் என்பதையும் அறிகிறாள்.  தன் ஊருக்குத் திரும்பிச் செல்லும் நாயகி தோழியின் வாழ்க்கைக்கும் தன் வாழ்க்கைக்கும் இருக்கும் தொடர்பையும் அறிந்து அடுத்த என்ன முடிவு எடுத்தால் என்பதே பரிவர்த்தனை.மீண்டும் ஒரு பள்ளிக்கூட வயது காதலை காவியமாக்கும் முயற்சி தான் இந்த பரிவர்த்தனை. உண்மையாகவே அந்த பால்ய வயதில் தோன்றும் பள்ளிக்கூட காலத்து காதல் ஒரு காவியமாக இருக்கலாம் தான்.  ஆனால் ஒரு திரைப்படம் அந்தக் காதலை கையாள்வதற்கான முயற்சியை பயிற்சியை அந்த இளம் சிறார்களுக்கு அளிக்க வேண்டும். அதைவிடுத்து வாழ்க்கையைப் பற்றிய எந்தப் பு...
கெழப்பய விமர்சனம்

கெழப்பய விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2014ம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் WILD TALES என்று ஒரு படம் வெளியானது. 6 கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம்.  அப்படத்தில் ஒரு கதை ஹைவேயில் நடக்கும்,  ஹாஸ்ட்லியான கார் ஓட்டிச் செல்லும் ஒருவருக்கும்,  ஒரு Porter போன்ற வண்டி ஓட்டிச் செல்லும் ஒருவருக்கும் ஒருவரையொருவர் முந்திச் செல்வதில் ஏற்படும் ஈகோ அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதை கூறி இருப்பார்கள்.அதே கதை தான் இந்த கெழப்பய திரைப்படத்திலும்.  கிராமம் நோக்கிச் செல்லும் குறுகிய சாலையில் சைக்கிளில் செல்லும் ஒரு பெரியவர், பின்னால் வரும் மோரிஸ் ரக கார் ஒன்றுக்கு வழிவிடாமல் தொந்தரவு செய்கிறார்.  இதனால் அந்தப் பெரியவருக்கும் காரில் செல்பவர்களுக்கும் இடையே கைகலப்பு ஆகிறது. ஆனால் இங்கு அவர் வழிவிடாமல் இருப்பதற்கு காரணம் ஈகோ இல்லை.  அதை மீறிய ஒரு விசயம். அது என்ன என்பதே இந்த கெழப்பய- திரைப்படத்தின் கதை.ஒரு நல்ல சுவாரஸ்யமா...
துடிக்கும் கரங்கள் – விமர்சனம்

துடிக்கும் கரங்கள் – விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
போதைப் பொருள் தடுப்புப்  பிரிவு ஐஜியின் மகள் மர்மமான முறையில் பூட்டிய காருக்குள் சடலமாக மீட்கப்படுகிறார்.  அதே நேரம் தன் மகனைத் தேடி சென்னைக்கு வரும் வயதான முஸ்லீம் பெரியவர்(சங்கிலி முருகன்), மகனின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருக்க, அவன் இருக்கும் இடம் தெரியாமல் தெருத் தெருவாக அலைகிறார். ‘கொத்து பரோட்டோ” என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தும் விமலும், சதீஷும் அந்த முஸ்லீம் பெரியவருக்கு உதவ எண்ணி அப்பெரியவரின் மகன் காணாமல் போனது தொடர்பான தகவலை வீடியோவாக வெளியிட்டு உதவி கேட்கின்றனர்.  இதைத் தொடர்ந்து இறந்து போன ஐ.ஜியின் மகளுக்கும் காணாமல் போன முஸ்லீம் பெரியவரின் மகனுக்கும் என்ன தொடர்பு..? அவர்கள் என்ன ஆனார்கள் என்கின்ற கேள்விக்கான விடை தேடும் முயற்சியே “துடிக்கும் கரங்கள்”.முதன்முறையாக ஆக்‌ஷன் ஹீரோவாக விமல் முயற்சித்திருக்கும் படம், முதல் சண்டைக் காட்சியில் ரவுண்டு கட்டி நிற்கும் ர...
அங்காரகன் விமர்சனம் :

அங்காரகன் விமர்சனம் :

சினிமா, திரை விமர்சனம்
மலை கிராமத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு ரெசார்ட் இயங்கி வருகிறது.  அந்த ரெசார்ட்டுக்கு தன் நண்பர்களோடு வந்து தங்கியிருக்கும் ஒரு இளம் பெண் காணாமல் போய்விட்டாள் என்று தேடத் துவங்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது.  அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் அங்கு தங்கி இருப்பவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட, அவர்கள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட, அந்த ரெசார்ட்டில் இன்னொரு பெண்ணும் காணாமல் போயிருப்பது தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து சில அமானுஷ்ய நிகழ்வுகளும் அங்கு நடக்க, முடிவில் என்ன ஆனது, காணாமல் போன பெண்களுக்கு என்ன நடந்தது என்பதே அங்காரகனின் கதை.ரெசார்ட்டில் இரண்டு பெண்களோடு தங்கும் ஒரு இளைஞன்.  இந்த இரண்டு பெண்களில் ஒருத்தி தான் கதையின் ஆரம்பத்தில் காணாமல் போவது.  இவர்கள் சுற்றுலாவிற்கு வந்தவர்கள். ஒரு கணவன் மனைவி ஜோடி, இருவருமே அவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை போக்கி...
நூடுல்ஸ் விமர்சனம் :

நூடுல்ஸ் விமர்சனம் :

சினிமா, திரை விமர்சனம்
ஒரு சாமானியனுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே “நூடுல்ஸ்” திரைப்படத்தின் ஒன்லைன்.‘தில்’ ‘அய்யப்பனும் கோஷியும்’ போன்ற படங்களிலும் இந்த ஒன்லைனரை காண முடியும். படம் துவங்கும் போது ஒரு மலையாளத் திரைப்படத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றியது. அந்த அளவிற்கு யதார்த்தமான ஒரு மேக்கிங்.ஒரு சனிக்கிழமை இரவு நேரத்தில் ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட் ஒன்றின் குடியிருப்புவாசிகள் மொட்டை மாடியில் கூடி பாட்டுக்குப் பாட்டு போட்டி வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது. எல்லா சனிக்கிழமை இரவுகளிலும் இது அவர்களின் வழமை என்பதும் தெரிய வருகிறது. விளையாட்டின் உற்சாகத்தில் சத்தம் சற்று அதிகமாக இருக்கிறது.  இதை தொந்தரவாக நினைத்த யாரோ போலீஸில் புகார் தெரிவிக்க, கீழே அதே தெருவில் ரோந்து சென்று கொண்டிருக்கும் அந்த ...
தமிழ்க்குடிமகன் விமர்சனம்

தமிழ்க்குடிமகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஊருக்குள் ஒரு பெரிய வீட்டிற்குள் சாவு விழுந்துவிடுகிறது. அந்த ஊரில் பிணத்திற்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்யும், குடிமகன் என்று பொதுவாக அழைக்கப்படும் சின்னச்சாமி (சேரன்) கதாபாத்திரம் தனக்கு முன்பு நேர்ந்த அவமானகரமான நிகழ்வுகளால்,  பிணத்திற்கு சடங்குகள் செய்து அடக்கம் செய்யும் வெட்டியான் பணியை விட்டுவிட்டு வேறு தொழில் செய்து பிழைத்து வருகிறான்.  ஒட்டுமொத்த ஊரும் அவனை இறந்த பெரியவருக்கு இறுதிச்சடங்கு செய்து தான் ஆக வேண்டும் என்று அவனை வற்புறுத்த,  மிரட்ட, அந்தத் தொழிலை இனி தன் வாழ்நாளில் தான் ஒரு போதும் செய்யப் போவதில்லை என்று சின்னச்சாமி திடமாக முடிவு செய்து ஒட்டு மொத்த ஊரையும் எதிர்த்து நிற்கின்றான். இதன் முடிவு என்ன ஆனது என்பதே இந்த தமிழ்க்குடிமகன் பேசும் அரசியல்.சமகால சமூக நிகழ்வுகளையும், சாதிய நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வுகளையும் முன்னிட்டுப் பார்க்கும் போது தமிழ்க்குடிமகன் ஒரு தவிர...
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நாயகி,  தன் அம்மாவின் மறைவுக்குப் பின்னர், தனக்குத் துணையாக ஒரு குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்.  அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பாமல்,  தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  இதற்காக  மருத்துவரை சந்தித்து விளக்கம் கேட்கும் நாயகி அங்கிருக்கும்  ஸ்பேர்ம் டோனார்கள் மீது ஏற்பட்ட திருப்தியின்மையினால் தன் வயிற்றில் உருவாகப் போகும் குழந்தைக்கு உயிர் கொடுக்கும் (ஸ்பேம் கொடுக்கும்) டோனாரை நானே தேர்வு செய்து அழைத்து வரலாமா என்று கேட்க, டாக்டரும் அதற்கு சம்மதிக்க. தனக்கான ஸ்பேம் டோனாரைத் தேடி தன் தோழியுடன் அலைகிறார்.  அப்படி நாயகியும் அவள் தோழியும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் நாயகன் ஒருகட்டத்தில் நாயகியை விரும்பத் துவங்க, சிக்கல் முளைக்கிறது.  இதற்குப் பின்னர் என்ன ஆனதே என்பதே மிஸ் ஷெட்டி மிஸ்...
ஜவான்- விமர்சனம்

ஜவான்- விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் கமர்ஸியல் இயக்குநர்களின் திரைப்படங்கள் இவைகளில் நாம் கேட்கக்கூடாத கேள்வி கதை என்ன என்பது.  ஏனென்றால் பெரும்பாலும் அது ஒரே கதை தான்.  நல்வழியில் செல்லும் நாயகனின் வாழ்க்கையை தீய வழியில் செல்லும் வில்லன் சிதைப்பான். ஹீரோ மீண்டு வந்து பழிவாங்குவார்.  சில சமயங்களில் ஹீரோ பழிவாங்கத் தவறினால் அவரின் மகன் வந்து பழி வாங்குவார்.  இதன் வகையறாக்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து பழி வாங்குவது, அப்பாவிற்காக மகன் பழி வாங்குவது, மகனுக்காக அப்பா பழி வாங்குவது என உலக சினிமா வரலாறு தொடங்கியதில் இருந்து இது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.  உதாரணத்திற்கு நம் இயக்குநர் அட்லியின் படங்களில் முதல் படமான ‘ராஜா ராணி’யை மட்டும் விட்டுவிட்டு பிற படங்களைப் பாருங்கள்.’தெறி’ தன் குடும்பத்தை சிதைத்தவனைப் பழி வாங்கும் ஹீரோ. “மெர்சல்’  தன் அப்பா அம்மாவை கொன்றவனை பழி வாங்கும் மகன்(கள்), “...
ரங்கோலி – விமர்சனம்

ரங்கோலி – விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
புள்ளி வைத்து கோலம் போடுவது ஒரு அழகான கலை. கோலத்தின் முதல் புள்ளி எது..? முற்றுப்புள்ளி எது என்பதை எவராலும் கண்டறிய முடியாது. ஏனென்றால் கோலத்தினை நீங்கள் எங்கும் தொடங்கலாம், எங்கும் முடிக்கலாம்.  அதன் அழகியலே ஒரு புள்ளியில் தொடங்கி ஒவ்வொரு பக்கமும் அழகாய் விரிவது தான்.  ஆனால் இந்த வரையறை பெரும்பாலும் சினிமாவிற்கு ஒத்துவராது.  ஒரு புள்ளியில் தொடங்கி பல்வேறு பக்கங்களில் விரிவதற்கான அழகியல் அல்ல சினிமா.  அது பல்வேறு கதைகளாகத் துவங்கி ஒரு புள்ளியை நோக்கி குவிதற்கான அழகியல்.  ரங்கோலி திரைப்படம் தவறவிடுவது அதைத்தான்.படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளைப் பார்த்ததும், “DON’T JUDGE THE BOOK BY ITS COVER” என்ற சொல்லாடல் நினைவிற்கு வந்தது.  அடுத்து இன்னும் சில காட்சிகள் கடந்ததும், “SOMETIMES WE HAVE TO JUDGE THE BOOK BY IT’S COVER ITSELF” என்று எண்ண வைத்தது.  ஏனென்றால்  படம் துவங்கிய சில நிமிடங்கள...
குஷீ விமர்சனம்

குஷீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பு ஏற்கனவே தமிழில் ஹிட்டடித்த ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தின் தலைப்பு.  படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு வசனம்  மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா எனும் தமிழ் திரைப்படத்தை நினைவு கூறும் வசனம்,  படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது,  படத்தின் இயக்குநர் சிவ நிர்வானா ஒரு தீவிரமான மணிரத்னத்தின் ரசிகர் என்று கூறி, அதனால் படத்தில் அவரின் பாதிப்புகள் இருக்கும் என்று கூறினார். இருக்கலாம். தவறில்லை.  அதற்காக அவரின் படத்தையே திருப்பி எடுத்தால் எப்படி..? படத்தின் முதல்பாதி பம்பாயின் சாயல் என்றால் இரண்டாம் பாதி முழுக்க அலைபாயுதேவின் அலை வீசுகிறது.  இருப்பினும் ஷாலினி இடத்தில் சமந்தாவைப் வைத்துப் பார்க்கும் போது மனம் அலைபாயத்தான் செய்கிறது.  மேலும் துறுதுறுப்புக்கும் வசீகரத்திற்கும் பேர் போன மாதவனை ஈடு செய்யும் விதமாக அங்கு விஜய் தேவரகொண்டா நிற்கும் போது,  சிவ நிர்வான...
‘தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’ – ஷாருக் கான்

‘தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’ – ஷாருக் கான்

சினிமா, திரைச் செய்தி
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு  முன்னதான விளம்பரப்படுத்தும்  நிகழ்வு சென்னையில்  பிரமாண்டமாக  நடைபெற்றது.சென்னையில்  உள்ள  தனியார்  கல்லூரி  வளாகத்தில்  அமைந்திருக்கும் கலை  அரங்கில்  ஆயிரக்கணக்கான  மாணவ,  மாணவிகள்  மற்றும் ரசிகர்களுடன்  நடைபெற்ற  இந்நிகழ்வில்  படத்தை தமிழகம்  மற்றும்   கேரளாவில்  வெளியிடும்  விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம்  கோபாலன்  உள்ளிட்ட  படக்குழுவினர்  கலந்து  கொண்டனர். இவ்விழாவிற்கு  வருகை  தந்திருந்த  அனைவரையும்  விநியோகஸ்தரான  ஸ்ரீ கோகுலம்  கோபாலன்  வரவேற்றார். இந்நிகழ்வில்  இசையமைப்பாளர்  அனிருத்  பேசுகையில்,  '' என் மீது நம்பிக்கை  வைத்து  எனக்கு  வாய்ப்பளித்த  ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட்  நிறுவனத்திற்கும்,  பூஜா தட்லானி  மற்றும்  கௌரி கான்  ஆகியோருக்கும்  நன்றி.  பாடலா...
பாட்னர் விமர்சனம்

பாட்னர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். அவரிடம் இறந்த நபர்களின் டி.என்.ஏ-வை எடுத்து உயிருள்ள மற்றொரு நபரின் உடலில் செலுத்தி இறந்தவரின் குணநலன்களையும் அறிவையும் உயிருள்ளவரின் உடலுக்குள் கொண்டு வருவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய ஒரு பென் டிரைவ், அதை கொள்ளையடிக்க துடிக்கும் அவரின் முன்னாள் உதவியாளரான ஜான் விஜய்,   அந்த பணியை செய்ய முன்னாள் உதவியாளர் நியமிக்கும்  ரோபோ சங்கர் அடங்கிய ஒரு டம்மி டீம்,  திருடுவதையே தொழிலாகக் கொண்டு இயங்கும் ஒரு கம்பெனியில் பணியாற்றும்  யோகி பாபு, ஊரில் தன் தங்கை திருமணத்தை நிறுத்த 25 இலட்சம் தேவை என்று யோகி பாபுவை தேடி வரும் நாயகன் ஆதி.  திருட்டு கம்பெனிக்கு தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வரும் அரசியல்வாதி ரவிமரியா.  இவர்களுக்குள் நடக்கும் வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டும்,  அதற்கிடையேயான ஆள்மாறாட்ட விளையாட்டும், அதன் பிறகு அ...
ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி கொடுத்த சுபாஷ்கரன்..!

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி கொடுத்த சுபாஷ்கரன்..!

சினிமா, திரைச் செய்தி
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்,  ராகவா லாரன்ஸ்  நடிப்பில்  உருவான ‘சந்திரமுகி 2’  படத்தின்  இசை  வெளியீட்டு  விழா  நேற்று  நடைபெற்றது.  இந்த  விழாவில்  லைகா  நிறுவனத்தின்  சேர்மன்  சுபாஷ்கரன்  கலந்து கொண்டார்.இந்த  நிகழ்ச்சி  சிறப்பாக  நடந்து  முடிந்த  நிலையில்  திடீரென எந்தவிதமான திட்டமிடலும்  இல்லாமல்  ராகவா லாரன்ஸ்  நடத்தி  வரும் அறக்கட்டளைக்கு  சுபாஷ்கரன்  ஒரு  கோடி  ரூபாய்  நன்கொடை  அளித்தார்.ராகவா லாரன்ஸ்  ஏற்கனவே பல  குழந்தைகளை  தத்தெடுத்து  வளர்த்து வருகிறார்  என்பதும்,  குறிப்பாக  மாற்றுத்திறனாளி  குழந்தைகளுக்கு  உதவி செய்து வருகிறார்  என்பதும்  தெரிந்ததே.  இது  குறித்து  கேள்விப்பட்ட சுபாஷ்கரன்  அவரது  அறக்கட்டளைக்கு  ஒரு  கோடி  ரூபாய்  நன்கொடை வழங்கியுள்ளார்.அதுமட்டுமின்றி  ராகவா  லாரன்ஸின்  ஆதரவுடன்  இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள்  கொண்ட  நடன குழுவினருடன்  மேடையில் ...
King of Kotha விமர்சனம்

King of Kotha விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறாம் (1996) காலகட்டத்தில் கோதா என்னும் ஊரைத் தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைக்கும் சில கூட்டங்களுக்கு இடையேயான யுத்தமும், ஒட்டு மொத்த கூட்டத்தையும் துடைத்துத் தூக்கிப் போட நினைக்கும் காக்கிச் சட்டைகளின் காய் நகர்த்துதலுக்கும் இடையேயான அன்பும் நட்பும் காதலும் ஏமாற்றமும் துரோகமும் வயோதிகமும் இரத்தமும், இதனோடு பெண்களின் அரசியலையும் உள்ளடக்கியது தான் ‘கிங் ஆஃப் கோதா’வின் கதை. கோதா என்னும் ஊர் எப்படி நிர்மாணிக்கப்பட்டது என்பதான கார்ட்டூன் கதை சொல்லலுடன் தொடங்கும் கதை, அந்த ஊருக்குப் புதிதாக வந்து சேரும் உதவி ஆணையரின் பார்வையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் யார் என்று ஆய்வாளர் மூலம் விளக்கப்படும் காட்சிகளின் மூலம் பெரும் கதையாக விரிகின்றது. ‘கண்ணன் பாய்’ என்கின்ற ஒருவனின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும் ஊர், போதைக் கலாச்சாரத்தில் தள்ளாடு...