Shadow

Tag: New tamil movie reviews

தருணம் விமர்சனம்

தருணம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தேஜாவு இயக்குநரின் இரண்டாவது படமிது. பிரபல நடிகர்களைத் தேடிப் போகாமல், திறமையானவர்களுக்கு வாய்ப்பளித்து, சின்ன பட்ஜெட்க்குள் படம் செய்யவேண்டும் என்று தனக்குத் தானே வரித்துக் கொண்ட விதிக்கு உட்பட்டு இப்படத்தை இயக்கியுள்ளார். புகழ் (PUGAZH) & ஈடன் (EDEN) என்பவர்கள் Zhen ஸ்டுடியோஸ் சார்பாகத் தயாரித்துள்ளனர். எதிர்பாராத் தருணத்தில், திடீரென எழுந்த கோபாவேசத்தில் தலையில் ஒரு அடி அடிக்கப் போய், ரோஹித்தைக் கொலை செய்து விடுகிறாள் மீரா. மீராவிற்கு நிச்சயிக்கப்பட்ட CRPF அதிகாரியான அர்ஜுன், மீராவை எப்படிக் காப்பாற்றுகின்றான் என்பதே படத்தின் கதை. அர்ஜுனின் நண்பன் விஷ்வாவாக வரும் பால சரவணன் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். ஆனால், வீட்டில் பிணம் இருக்கும்போது, பாலசரவணனை வைத்து நகைச்சுவை புரிந்தே ஆகவேண்டுமென தருணத்தைக் கவனத்தில் கொள்ளத் தவறவிடுகின்றனர் நாயகனும் நாயகியும். ஆனால், முதற்பாதியில் ஒரு...
கேம் சேஞ்சர் விமர்சனம்

கேம் சேஞ்சர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஊழலுக்கு எதிரான நாயகன் எனும் ஷங்கரின் பழைய விளையாட்டில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அடித்து ஆடியுள்ளார் ராம் சரண். கெட்டதைக் கண்டால் கோபத்தில் பொங்கி எழும் ராம் நந்தனின் சீற்றத்தை ஆரோக்கியமான முறையில் மடைமாற்றி சமூகத்துக்கு நல்லது செய்யச் சொல்கிறாள் அவனது காதலி தீபிகா. படித்து ஐ.பி.எஸ். ஆகி, தொடர் முயற்சியில் ஐ.ஏ.எஸ். ஆகி கலெக்டராகி விடுகிறார் ராம். இறப்பதற்கு முன், ராம் நந்தனை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் ஆந்திர முதல்வர் பொப்பிலி சத்யமூர்த்தி. முதல்வர் கனவில் இருக்கும் சத்யமூர்த்தியின் வளர்ப்பு மகன் பொப்பிலி மோபிதேவி, ராமை 'பாலிட்ரிக்ஸ்' செய்து கட்சியை விட்டு நீக்கி விடுகிறார். ராம் நந்தன் தேர்தல் ஆணையராகி விடுகிறார். இப்படி, காட்சிகள் கதையின் வேகத்தை விட துரிதமாக மாறிக் கொண்டே இருக்கிறது. முதல்வன் படத்தில், ஒருநாள் முதவராக அர்ஜுன் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், ஐ...
வணங்கான் விமர்சனம்

வணங்கான் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஜெயமோகனின் 'அறம்' சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதையின் பெயர் வணங்கான் ஆகும். படத்திற்கும் அக்கதைக்கும் சம்பந்தமில்லை. தலைப்பை மட்டும் பயன்படுத்திக் கொள்ள ஜெயமோகனிடம் அனுமதி கேட்டுள்ளார் இயக்குநர் பாலா. காது கேளாத, வாய் பேச முடியாத நாயகன், எவர்க்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத, வணங்காத அப்பழுக்கற்ற நல்ல முரடன் என்பதால், வணங்கான் எனும் தலைப்பு படத்திற்குச் சாலப் பொருந்துகிறது. சுனாமியால் பெற்றோரை இழந்தவர்கள் கோட்டியும், அவனது தங்கை தேவியும். முரடனான கோட்டிக்கு, ஒரு காப்பகத்தில் வேலை வாங்கித் தரப்படுகிறது. அக்காப்பகத்தில், குளிக்கச் செல்லும் கண்பார்வையற்ற பெண்களை மூவர் ஒளிந்து நின்று ரசிக்கின்றனர். கொதித்தெழும் கோட்டி, வழக்கமாக பாலா முன்மொழியும் தர்மத்தைக் கடைப்பிடிக்கிறான். பாவம் செய்தவனை வதம் செய்துவிடுவதே அந்த தர்மம்! ஒரு படைப்பாளனாகக் குறைந்தபட்ச அறம் கூட இல்லாமல், படத்தின் முதற்பாதியி...
மெட்ராஸ்காரன் விமர்சனம்

மெட்ராஸ்காரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திருமணத்திற்கு முன் தினம், ஒரு கர்ப்பினி பெண் மீது காரை மோதி விடுகிறான் நாயகன். ஊரே அவனுக்கெதிராகத் திரண்டு விடுகிறது. அவ்விபத்தினால், கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குழந்தை இறந்து பிறக்க, ஐம்பதாயிரம் அபராதமும், இரண்டு வருடம் சிறைத் தண்டனையும் பெறுகிறான். அக்குழந்தையின் மரணத்திற்கு, தான் காரணமில்லை எனத் தெரிய வர, உண்மையைக் கண்டறியப் புறப்படுகிறான் நாயகன். நாயகன், உண்மையைக் கண்டுபிடித்து தன் குற்றவுணர்வில் இருந்து மீள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. இப்படத்திற்கு, 'மெட்ராஸ்காரன்' எனத் தலைப்பிட நிச்சயம் ஒரு முரட்டுத் தைரியம் வேண்டும். கதையின் களம் புதுக்கோட்டை, கதாமாந்தர்களோ அம்மண்ணின் மைந்தர்கள். நாயகன், சென்னையில் வேலை பார்ப்பதாலும், அவன் சென்னை ரெஜிஸ்ட்ரேஷன் கார் வைத்திருப்பதாலும், அவனை மெட்ராஸ்காரன் என அழைக்கின்றனர். சொந்த ஊர் மெச்சும்படி தன் கல்யாணத்தை நடத்தவேண்டுமென்ற லட்சியம் கொ...
பயோஸ்கோப் விமர்சனம்

பயோஸ்கோப் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பதினான்கு வருடங்களுக்கு முன் “வெங்காயம் (2011)” எனும் படத்தை இயக்கியிருந்தார் சங்ககிரி ராச்குமார். இயக்குநர் சேரனின் முயற்சியால், அப்படம் மீண்டும் 2012 இல் மறுபடியும் வெளியானது. வெங்காயம் படத்தை எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் எப்படி எடுத்தார் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் ராச்குமார் சங்ககிரி. ஜோதிடத்தையும், நரபலி சடங்கையும் மிகக் காத்திரமாக சாடிய படம் வெங்காயம். அப்படத்தில் தன்னைத்தான் வில்லனாகச் சித்தரிக்கிறார்கள் என அறியும் செல்வாக்கான ஜோதிடர், ராச்குமாரின் படப்பிடிப்பை நிறுத்த முயற்சி செய்வதோடு, படம் வெளியாகக் கூடாதென்பதற்காகவும் காய்களை நகர்த்துகிறார். அப்படியே ஒரு படம் எடுக்கப்பட்டாலும், அப்படத்தை வெளியிட எத்தகைய சங்கடங்கள் எழும் என்பதையும், சினிமாவிற்குள் இருப்பவர்கள் வியாபாரத்தில் எப்படி ஏமாற்றுவார்கள் என்பதையும் சொல்லியுள்ளார் சங்ககிரி ராச்குமார். இந்தப் படத்தில் நடித்தவ...
ராஜா கிளி விமர்சனம்

ராஜா கிளி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார் தம்பி ராமையா. அவரது மகன் உமாபதி இப்படத்தை இயக்கியுள்ளார். முருகப்பா சென்றாயர் எனும் கோடீஸ்வரத் தொழிலதிபரின் வாழ்வையும் உயர்வையும் வீழ்ச்சியையும் பற்றிப் பேசுகிறது படம். தெய்வானை எனும் மனைவி இருக்க, வள்ளிமலரை இரண்டாவது திருமணம் புரிந்து கொள்கிறார். பிறகு, விஷாகா என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொள்ள விழைகிறார். விஷாகாவின் கணவன் இறந்துவிட, கொலைப்பழி வந்து சேர, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுபவரின் வாழ்க்கை என்னானது என்பதே படத்தின் முடிவு. வள்ளிமலராக சுபா தேவராஜ் நடித்துள்ளார். அவரது கணவராக கொட்டாச்சி நடித்துள்ளர். அவர், முருகப்பா சென்றாயரிடம் ஒரு ‘பேக்கரி’ டீலிங் போட்டுக் கொள்கிறார். ‘கெதக்’கென்று இருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்குள், சிந்தாமணி எனும் பாத்திரத்தில் வரும் ரேஷ்மா பசுபலேட்டி மூலம் அடுத்த அதிர்ச்சியைத் தருகிறார். அடுத்து விஷாக...
தி ஸ்மைல் மேன் விமர்சனம்

தி ஸ்மைல் மேன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சரத்குமாரின் 150 ஆவது படமாகுமிது. கொல்பவர்களின் மேலுதட்டையும், கீ்ழ் உதட்டையும் அறுத்து நீக்கி, அவர்களது பல்வரிசை தெரியும்படி முகத்தைச் சிதைத்து, பொது இடத்தில் வீசி விட்டுச் செல்கிறான் ஒரு சைக்கோ கொலைகாரன். அக்கொலைகாரனால் விபத்துக்குள்ளாகும் காவல்துறை அதிகாரியான சிதம்பரம் நெடுமாறன், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, ‘தி ஸ்மைல் மேன்’ எனும் கொலைகாரனைப் பிடிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறார். யாரந்த ஸ்மைல் மேன், எப்படி அவன் சிக்கினான் என்பதுதான் படத்தின் முடிவு. மாலாக்கா கதாபாத்திரத்தின் மூலம் றெக்க (2016) படத்தைக் காப்பாற்றிய ஷிஜா ரோஸ், இப்படத்தில் புலனாய்வு செய்யும் அதிகாரி கீர்த்தனாவாகத் தோன்றியுள்ளார். கதைக்கோ, கதைக்குள் நடக்கும் புலனாய்வுக்கோ அவர் உதவாவிட்டாலும், அவரது இருப்பு (presence) படத்திற்கு அழகைச் சேர்த்துள்ளது. ராஜ்குமார் ஏற்றிருக்கும் பிச்சுமணி எனும் கதாபாத்திரம் நகைச்சுவைக்குக் கடைசி வ...
விடுதலை பாகம் – 2 விமர்சனம்

விடுதலை பாகம் – 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முழு உண்மைக்கும், அதிலிருந்து எடுத்துப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் செய்திக்குமான வித்தியாசம் எவ்வளவு என்பதைப் படம் பேசுகிறது. அதிகாரம் என்பது நினைத்ததைச் செயல்படுத்துவதாக இருந்தாலும், அது நிகழாத பட்சத்தில், நடப்பதை எல்லாம் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் புனைவுத் திறமை உடையது என்பதைப் படம் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. அதிகாரச் சக்கரத்தின் ஏதோ ஒரு பல்லில், ஒட்டிக் கொள்ள இடம் கிடைத்தாலும், சக்கரத்தின் சுழற்சிக்குத் தக்கவாறு தனது தனிப்பட்ட நலனையும் வளர்ச்சியையும் முதன்மைப்படுத்திக் கொண்டு, யார் மீதாவது, எதன் மீதாவது சக்கரத்தோடு இணைந்து பயணித்துவிடுவார்கள். அதிகாரம் எனும் போதை, சமூகத்தின் இன்ன அடுக்கில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமையானதோ, உடைமையானதோ இல்லை; அது எவரையும் வீழ்த்தும் தன்மையுடையது என்று படத்தின் முடிவில் அற்புதமாகவும், மிகத் துணிச்சலாகவும் இயம்பியுள்ளார் வெற்றிமாறன். இந்தப் பாகத்...
சூது கவ்வும் 2 விமர்சனம்

சூது கவ்வும் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பொழுது, இந்த நாடும் நாட்டு மக்களும் என்னாவார்கள் என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றுள்ளது படம். 'சொதப்பினா ஒத்துக்கணும்' என்ற கடைசி விதிக்கு உட்பட்டு, கடத்தல்காரர்களின் தலைவன் குருநாத் சிறைக்குச் செல்கிறார். அவர் சிறையில் இருந்து வந்ததும், அவருக்கு மட்டுமே தெரியக்கூடிய அம்முவின் மரணத்திற்குக் காரணம் நிதி அமைச்சர் அருமை பிரகாசம் என குருநாத்திற்குத் தெரிய வருகிறது. அருமை பிரகாசத்தைப் பழிவாங்க நினைக்க, அது குருநாத் குழுவை எங்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. சூது கவ்வும் முதல் பாகத்தையும், இரண்டாம் பாகத்தையும் மிக அழகாக இணைத்துள்ளனர். வாகை சந்திரசேகரைக் கொண்டு அமைக்கப்பட்ட பின் கதை சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியையும், பாபி சிம்ஹ்சவையும் கதைக்குள் கொண்டு வந்த விதமும் ரசிக்க வைக்கிறது. இப்பாகத்தில், இரண்டு நல்ல 'சைக்கோ' காவல்துறை ...
Once Upon A Time In Madras விமர்சனம்

Once Upon A Time In Madras விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தன் வீட்டு மரத்து மாங்காயை அடித்துத் தின்ற சிறுவனைத் துப்பாக்கியில் சுடுகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரர். வழக்கிற்கு அஞ்சி, அந்தத் துப்பாக்கியைக் கூவத்தில் வீசி எறிகிறார். அந்தத் துப்பாக்கி, யார் யார் கைகளில் கிடைக்கிறது, அவர்கள் வாழ்வில் என்ன நேருகிறது என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை. நான்கு கதைகளை இணைக்கும் hyperlink ஆகப் படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. மகளாகப் பருவ மாற்றம் அடையும் மகனைப் பெற்ற தாயிடமும், அரசியல் கொலை புரியும் கொலைக்காரன்க்கு உடந்தையாக இருக்கும் ஓட்டுநரிடமும், டொமஸ்டிக் வயலன்ஸிற்கு உள்ளாகும் புது மருமகளிடமும், சாதிவெறி பிடித்த பத்திரிகையாளரிடமும் துப்பாக்கி கிடைக்கிறது. படத்தின் முதற்பாதி, கோர்வையற்ற காட்சிகளாக நகர்ந்து இடைவேளையில் ஆவலைத் தூண்டும் விதமாக முடிகிறது. இரண்டாம் பாதியின் முடிவில் எல்லாக் கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் இணைந்து திருப்திக்கரமாகப் படம் முடிகிறது....
சொர்க்கவாசல் விமர்சனம்

சொர்க்கவாசல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'இந்தப்  படத்தின் வகைமை சர்வைவல் த்ரில்லர். இதைப் புரிந்து கொண்டு ரசிகர்கள் படம் பார்க்க வேண்டும்' என ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார் எழுத்தாளர் தமிழ் பிரபா. செய்யாத கொலைக்காகச் சிறைக்குச் செல்கிறான் பார்த்திபன். சிறையைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சிகாமணியை ஒடுக்க நினைக்கிறார் காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் குமார். எதிர்பாராத விதமாக சிகாமணி இறந்து விட, சிறைக்குள் கலவரம் மூள்கிறது. அந்தக் கலவரத்தை யார் யார் எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. சிறைக்குள் நடக்கும் கலவரத்தை விசாரிக்க வருகிறார் இஸ்மாயில். அவரது விசாரணையில் இருந்தே கதை விரியத் தொடங்குகிறது. வேகமாகப் பேசும் நட்டிக்கு நிதானமாக விசாரிக்கும் பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். சிறைச்சாலையையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சிகா எனும் சிகாமணியாக செல்வராகவன் நடித்து...
எமக்குத் தொழில் ரொமான்ஸ் விமர்சனம்

எமக்குத் தொழில் ரொமான்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
லியோனாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே உமா சங்கர்க்குக் காதல் வந்து விடுகிறது. லியோனாவிற்கும் காதல் வந்துவிட, அவர்களுக்கு இடையேயான ரொமான்ஸும் ஊடலும்தான் படத்தின் கதை. மீண்டுமொரு ஸ்டாக்கிங் (Stalking) படமாக இருக்குமோ என்ற எண்ணம் எழும்போது, உமாசங்கர் லியோவிடம் காதலைச் சொல்லி விடுகிறார். 'எனக்கு இது செட்டாகாது' என லியோ சொன்னதும், உமா சங்கர் நாயகியைத் தொந்தரவு செய்யவில்லை. மிகவும் ஆசுவாசமாக இருந்தது. நாயகியும் சட்டென காதலை உணரத் தொடங்கிவிடுவதால், அடுத்த படம் 'ரொமான்ஸ்'-இற்குள் போகுமென நினைத்தால், கடைசி வரை அதுக்குள் போகவே இல்லை. க்யூட்டாக வைக்க வேண்டுமெனத் தலைப்பை மிஸ் லீடிங்காக வைத்துள்ளனர். புரிதலில் ஒரு சின்ன பிரச்சனை, தன்னிடம் பொய் சொல்லி விட்டான் என்ற நாயகியின் கோபம்தான் படத்தின் மைய ஓட்டம். 112 நிமிட கால அளவு கொண்ட படம். திருப்பமோ, சுவாரசியமோ இல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் செல்லும் முதற்பா...
ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்

ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நான்-ஸ்டாப் நான்சென்ஸ் என படத்தைப் பற்றிப் படக்குழு விளம்பரப்படுத்தியுள்ளனர். ‘லாஜிக் பார்க்க்காதீங்க. மூளையைக் கழட்டி வைத்துவிட்டு, ஜாலியா படம் பார்த்துச் சிரிச்சுட்டுப் போங்க. உங்களைச் சிரிக்க வைக்கிறதே மட்டுமே எங்கள் நோக்கம்!’ என படம் தொடங்கும் முன்பே இயக்குநரின் வாய்ஸ்-ஓவர் ஒரு வேண்டுகோளை விடுக்கிறது. வெள்ளைக்காரன் பிரியாணி எனும் உணவகத்தை நடத்தி வருகின்றார் தங்கசாமி. தொழில் நொடிந்து போக, அவரது பேத்தி பவானி, கடன் வாங்கி ஒரு பிரியாணி கடையைத் தாத்தாவிற்கு வைத்துக் கொடுக்கின்றார். அரசியல்வாதியான அடைக்கலராஜ் சமஉ, தங்கசாமிக்கு ஒரு பெரிய ஆர்டரைக் கொடுத்துவிட்டு, பணம் தராமல் ஏமாற்றிவிடுகிறார். அடைக்கலராஜ் மீது வழக்கு போட பூங்குன்றன் எனும் வக்கீலைப் பார்க்கப் போகின்றனர். பூங்குன்றன் இறந்து கிடக்க, தங்கள் மீது கொலைப்பழி விழுமோ என பயந்து, பூங்குன்றன் பிணத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நினைக்கின்...
கங்குவா விமர்சனம்

கங்குவா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தந்தைக்கும் மகனுக்குமான ஜென்மாந்திர பந்தத்தைப் பேசுகிறது படம். நவீன ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தப்பிக்கும் ஜீடோ எனும் சிறுவன், ஃபிரான்சிஸ் தியோடரிடம் அடைக்கலம் புகுகிறான். இது 2024 இல். பெருமாச்சியின் வீரனும் இளவரசனுமான கங்குவா, பெருமாச்சிக்குத் துரோகம் செய்யும் கொடுவாவின் மகனைத் தத்தெடுத்துக் காப்பதாக வாக்களிக்கிறார். அடைக்கலம் புகுந்தவனை ஃபிரான்சிஸ் காப்பாற்றுகிறாரா, கொடுவாவின் மகனைக் கங்குவா காப்பாற்றுகிறாரா என இரண்டு கதைகள் இணையாகப் பயணிக்கிறது. பெருமாச்சி, அரத்தி, முக்காடு, வெண்காடு, மண்டையாறு என ஐந்து தீவுகள் பாரதத் தேசத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்றன. பாரதத் தேசத்தைப் பிடிக்க, 25000 வீரர்களோடு அரசர் அரிலியஸின் ரோமானியக் கப்பற்படை வருகிறது. போருக்கு முன், பயிற்சி எடுக்க நிலம் தேவைப்படுகிறது. இதுவரைக்கும் கதை சரி. சிலுவைப் போர் தொடங்குவதற்கு முன்னான ஆரம்பகட்ட பூசல்கள் நிக...
அமரன் விமர்சனம்

அமரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அமரன் என்றால் மரணமில்லாதவன் எனப் பொருள். வீரத்திற்காக அஷோக் சக்ரா விருது பெற்ற மேஜர் தெய்வத்திரு. முகுந்த் வரதராஜனை, தனது படத்தில் பாட்டுடைத் தலைவனாகயாக்கி, அமரனாக்கியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. ஆனால், படம் அமரத்துவம் எய்துவது இந்து ரெபேக்கா வர்கீஸாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் அதி அற்புதமான நடிப்பாலேயே! சின்ன சின்ன உணர்ச்சிகளையும், முகத்தில் அநாயாசமாகக் கொண்டு வந்து அமரனை ஒரு காதல் படமாக மாற்றிவிடுகிறார். படத்தின் முதற்பாதியின் கலகலப்பிற்கு உதவியுள்ளார் முகுந்த் வரதராஜனின் அம்மா கீதாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம். லப்பர் பந்து படத்தில், கெத்து தினேஷின் அம்மாவாக நடித்து மனதில் நின்றவர், மீண்டும் ஒருமுறை பிரமாதப்படுத்தியுள்ளார். இரண்டு அம்மாக்களும் தான் எத்தனை வேறுபாடுகள் உடற்மொழியில், வசன உச்சரிப்பில்! ஒரு கட்டத்தில், தமிழ் சினிமாவில் சரண்யா பொன்வண்ணன், இது போன்று தொடர்ந...