
நிழற்குடை விமர்சனம் | Nizharkudai review
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். நிழற்குடையின் அருமையோ வெயில், மழை என இரண்டிலும் தெரியும். நிழற்குடையை மனித உறவுகளுக்கான குறியீட்டுத் தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர்.
நிரஞ்சனும் லான்சியும் காதலித்துக் கல்யாணம் செய்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால், தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு நிலா என்றொரு குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தையைப் பார்த்துக் கொள்ள கேர்-டேக்கரை நியமிக்கிறார்கள். ஆனால் கேர்-டேக்கர் ஒத்து வராததால், ஆசிரமத்தில் இருந்து ஜோதிம்மாவை அழைத்து வருகின்றனர். திடீரென நிலா காணாமல் போகிறாள். பின் என்னாகிறது என்பதே படத்தின் கதை.
இடைவேளையில் ஒரு பதைபதைப்பை ஏற்படுத்துவதற்காக தர்ஷன் சிவா கதாபாத்திரத்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளார். தொடக்கம் முதலே கதையோடு ஒட்டாமல், அந்தக் கதாபாத்திரத்தின் கனத்தை அதிகப்படுத்துமளவு நடிக்க முடியாமல் திணறியுள்ளார் தர...