Shadow

ஆன்‌மிகம்

பூதத்தாழ்வார் – எங்கும் நிறைந்தவனே என்னுள்ளும் நிறைந்தான்

பூதத்தாழ்வார் – எங்கும் நிறைந்தவனே என்னுள்ளும் நிறைந்தான்

ஆன்‌மிகம், இது புதிது
என் மனதுக்குள் இருக்கும் நாராயணனே இந்த பிரபஞ்சமாகவும் வியாபித்து இருக்கிறார். முதலாழ்வார்கள் மூவராவர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். இவர்கள் மூவரும் 7 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த சமகாலத்தவர்கள். பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திலும், பூதத்தாழ்வார் மாமல்லபுரத்திலும், பேயாழ்வார் மயிலாப்பூரிலும் அவதரித்தவர்கள். இவர்களின் தாய் தந்தையர் பற்றிய குறிப்பு இல்லை. மூவருமே குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதல் மூன்று திருவந்தாதிகளை இவர்கள் படைத்தார்கள். ஆழமான தத்துவம், பக்தி நெறி மற்றும் இனிய தமிழால் இறைமையைப் போற்றியவர்கள். இவர்கள் மூவரையும் திருக்கோவிலுரில் இறைவன் இணைத்தார். அதன் பிறகு மூவரும் இணைந்தே பல திவ்விய தேசங்களுக்குச் சென்று பெருமானைப் பாடி மங்களாசாசனம் செய்தனர். திருக்கோவிலுரில், ஓரிரவு ஒரு வீட்டின் சிறு திண்ணையில் பொய்கையாழ்வார் ப...
பொய்கையாழ்வார் – அனேகனான ஏகனான ஓர் பரம்பொருள்

பொய்கையாழ்வார் – அனேகனான ஏகனான ஓர் பரம்பொருள்

ஆன்‌மிகம், இது புதிது
ஒரு சாட்சியாக, பூமி, கடல், சூரியன் என அனைத்துமாக இருப்பது அவனே! முன்னொரு காலத்தில் ஒருநாள், திவ்விய பிரபந்த விளைநிலம் என்று சொல்லப்படும் திருக்கோவலூருக்குப் பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வாராகத் திகழும் பொய்கையாழ்வார் சென்றார். இரவு நேரமாகிவிட்டதால் ஓர் இல்லத்தின் முன்னிருந்த சிறிய திண்ணையில் படுத்துக்கொண்டார். சற்று நேரத்தில், பூதத்தாழ்வாரும் அங்கே வந்து சேர்ந்தார். ஒருவர் படுத்திருப்பதை அறிந்ததும், “எனக்கு இடமுண்டோ?” என்று கேட்டார். ‘இவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் வாருங்கள்’ என்று பொய்கையாழ்வார் எழுந்து அமர்ந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கே வந்து, ‘எனக்கு இடமுண்டோ?’ என்று கேட்க ‘இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், நீரும் வாரும்’ என்று சொல்ல மூவரும் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த ஆழ்வார்கள் கோஷ்டிய...
திருமழிசை ஆழ்வார் – நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

திருமழிசை ஆழ்வார் – நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

ஆன்‌மிகம், இது புதிது
நீ எனக்குள் தான் இருக்கிறாய் என்று அறிந்த பின், என் மனதுக்குள் என்றும் நீங்காமல் நின்றும் அமர்ந்தும் கிடந்தும் அருளுகின்றாய் முன்பொரு காலத்தில் திருமழிசையில், ஒரு முனிவர் தம்பதிக்குக் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் கைகளும் கால்களும் அசைவற்ற நிலையில் இருந்ததால் அக்குழந்தையை ஒரு பொது இடத்தில் அக்குழந்தையின் பெற்றோர் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். அவ்வழியே வந்த கூடை செய்து விற்றுப் பிழைக்கும் தம்பதி, இந்தக் குழந்தையை ஆசையாக எடுத்தனர். அக்குழந்தையின் கை கால்கள் நன்கு அசைந்தது. இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால், இக்குழந்தையையே தமது குழந்தையாக எண்ணி வளர்த்து வந்தனர். அடுத்த சில வருடங்களில் கூடை பின்னும் தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. அவர்களின் குழந்தைக்குக் "கனிக்கண்ணன்" என்று பெயரிட்டு வளர்த்தனர். இவர்களின் வளர்ப்புக் குழந்தை பின்னாளில் ஞானமும் பக்தியும் நிரம்பிய த...
நம்மாழ்வார் – உளனெனில் உளன்

நம்மாழ்வார் – உளனெனில் உளன்

ஆன்‌மிகம்
இறைவன் இருக்கிறான் என்றால் இருக்கிறான். இல்லை என்றால் இல்லை. இருந்தும் இல்லாமலும் பரவியிருக்கும் பரம்பொருளே பெருமான் . பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் மிகவும் சிறப்பு மிக்கவர். அவர், நமக்கான ஆழ்வார் என்பதால் “நம்மாழ்வார் (நம்ம ஆழ்வார்)” என அன்போடு அழைக்கப்படுகிறார். திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள 4000 பாசுரங்களில் அதிக பாசுரங்கள் நம்மாழ்வாருடையது தான். மொத்தம் 1295 பாசுரங்கள் அருளியுள்ளார். திவ்வியப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகள், நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பிறர் பாடக் கேட்டுப் பிறகு தான் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுக்க ஆரம்பித்தார். நம்மாழ்வார் இல்லையென்றால் திவ்வியப் பிரபந்தமே இல்லை. பன்னிரண்டு ஆழ்வார்களில் பத்து பேர் திருமாலைப் பற்றி மட்டும் தான் பாடியிருக்கின்றனர். ஆண்டாள், திருமாலையும் பாடி, பிற ஆழ்வார்களின் பெருமையையும் பாடி சிறப்பு சேர்த்தார். ஆனால் மதுரகவியாழ்வார், திரு...
சரண்டர் விமர்சனம் | Surrender review

சரண்டர் விமர்சனம் | Surrender review

ஆன்‌மிகம், சினிமா, திரை விமர்சனம்
தேர்தல் நேரம் என்பதால் தனது தப்பாக்கியைத் திருமழிசை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான். அதை வாங்கி வைக்கும் ரைட்டர் பெரியசாமி, துப்பாகியைத் தவற விட்டுவிடுகிறார். ட்ரெயினி எஸ்.ஐ.யான புகழிடம், வெளியில் தெரியாமல் ரகசியமாகத் துப்பாக்கி கண்டுபிடிக்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. கனகராஜ் எனும் ரெளடி, தேர்தல் செலவுக்காகப் பத்து கோடியை ஆய்வாளர் வில்லியம்ஸிடம் கொடுத்துவிடுகிறார். அந்தப் பணம் காணாமல் போகிறது. கனகராஜின் தம்பி (ஸ்பாட் படத்தின் நாயகன் கெளஷிக்), ஒரு சின்ன தகராறில் ரைட்டர் பெரியசாமியை உள்ளாடையுடன் நிற்க வைத்துவிடுகிறார். காவல்துறை உயரதிகாரிகளும், கனகராஜின் பக்கம் நின்று மெளனம் சாதிக்கிறார்கள். ஆனால், பெரியசாமி தனது தந்தையைப் போன்றவரென ஆவேசம் இளம் எஸ்.ஐ.யான புகழ், கெளஷிக்கை அடித்துக் கோமாவில் தள்ளிவிடுகிறான். கனகராஜ் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்க...
அஷ்ட ஐயப்ப அவதாரம் – வித்யாசாகரின் ஆன்மிக ஆல்பம்

அஷ்ட ஐயப்ப அவதாரம் – வித்யாசாகரின் ஆன்மிக ஆல்பம்

ஆன்‌மிகம், இது புதிது
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 225 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்றவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப்பாடல்கள் முதல், காலத்தால் அழியாத பல அற்புதமான மெலடி பாடல்களைத் தந்து, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த வித்யாசாகர், முதன் முறையாக ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சுயாதீன ஆல்பங்கள், திரைப்படப் பாடல் இசை, ஆன்மீக ஆல்பம் என இந்திய இசைத்துறையில் கோலோச்சும் முன்னணி இசை நிறுவனமான சரிகம நிறுவனம் இ...
“திருப்பாவையில் 30 பாசுரங்கள் என்ன சொல்கிறது” – “பாவையின் திருப்பாவை” நிகழ்ச்சியைக் காணுங்கள்

“திருப்பாவையில் 30 பாசுரங்கள் என்ன சொல்கிறது” – “பாவையின் திருப்பாவை” நிகழ்ச்சியைக் காணுங்கள்

ஆன்‌மிகம், இது புதிது
மார்கழி மாதம் வந்து விட்டாலே, நாடெங்கும் ஶ்ரீமந்நாராயணனின் புகழ் பாட தொடங்கி விடுவார்கள், அந்த வகையில் சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஶ்ரீ ஆண்டாள் அவர்கள் சாட்சாத் அந்த ஶ்ரீமந்நாராயணனை மனதில் நிறுத்தி பாடிய திருப்பாவையில் 30 பாசுரங்கள் என்ன சொல்கிறது என்பதை விளக்கத்துடன் உபன்யாசம் செய்கிறார் கோழியாலம் ஸ்ரீபரதன் அவர்கள், இந்த நிகழ்ச்சி "பாவையின் திருப்பாவை" என்ற தலைப்பில் டிசம்பர் 17 முதல் காலை 6 மணிக்கு புதுயுகம் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகிறது......
ராமன், எத்தனை ராமனடி?

ராமன், எத்தனை ராமனடி?

ஆன்‌மிகம், சமூகம்
ஆந்திரத்தில் பயணம் செய்யும் போதெல்லாம் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு கோதாவரியின் மீதுள்ள பற்று. அடுத்ததாக ராமனின் மீது அவர்களுக்கு இருக்கிற அபாரமான பிரேமை. வியப்பு. வாத்சல்யம். எனக்கு அது சற்று மிகையாகவே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது. அவர்கள் எப்போதுமே சற்று அதிகம் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள் என்ற பிம்பம் எனக்குள் இருந்ததாலும் இருக்கலாம். ஒரு பக்கம் தெலுங்கானா பிரச்சினை. நக்சலைட் நெருப்பு. இதற்கு நடுவில் ராம பக்தி. எந்த ராமன்? தியாகராஜ சுவாமிகளின் பாடல்களில் நின்றும், நடந்தும், கிடந்தும் என வருகிற ராமன். மனித குல மாணிக்கம் என்று கம்பன் சிலாகிக்கிற ராமன். இந்தியாவில் எங்கு போனாலும் இது ராமர் வில் ஊன்றிய இடம், சீதை இருந்த இடம், அனுமன் தாவிய இடம் என்று குருதிக்கோட்டுடன் வரும் தொன்மங்கள் ஊற்றெடுக்கும் ராமன். நாட்டார் கலைகளில் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கும் ராமன். சீதையின் பிரிவுக்க...
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி, பக்திப் பாடல்களைப் பாடி நம் கண் முன்னே இறைவனைக் கொண்டு வந்து நிறுத்திய தெய்வீகக் குரலுக்குச் சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தைப் பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது. திருமாலின் புகழைப் பாடும் 'வெங்கடேச சுப்ரபாதம்' திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி, 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார். இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்லும் நோக்கில், டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாயத்தைத் தொட்டுள்ளது. ஏற்கெனவே கந்த சஷ்டி கவசத்தை சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா குரலில் வெளியிட்டு 12 மில்லி...
கர்ணன் | பரசுராமரின் சாபம் பலித்ததா?

கர்ணன் | பரசுராமரின் சாபம் பலித்ததா?

ஆன்‌மிகம்
கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா? பரசுராமர், கர்ணனை ஷத்திரியன் என்று அறிந்து சாபம் அளித்தார். அதனால் அவன் வலிமை குன்றியது, கடைசி நேரத்தில் ஆயுதங்கள் துணை வராமல் போனது என்ற குற்றச்சாட்டு. முதலில் அவன் ஏன் பரசுராமரிடம் பயிலச் சென்றான் ? அவன் துரோணரிடம் பயிலும் போது ஒரு வேண்டுகோள் வைக்கிறான். // http://www.tamilhindu.com/2008/12/mahabharata-discussions-007/ பயிற்சிபெற்ற காலத்தில், அர்ஜுனன் தன்னைப் பார்க்கிலும் அதிகம் தேர்ச்சி பெற்றவனாகவும், பல திவ்ய அஸ்திரங்களை எய்யவும் திரும்பப் பெறுவதற்குமான பயிற்சிகளில் தேறியவனாகவும் இருந்தது கர்ணனால் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. ஆகவே, துரோணரைத் தனிமையில் அணுகினான். அவரிடம் கர்ணன் கேட்டுக் கொண்டதை நாரதர் விவரிக்கிறார்: Beholding that Dhananjaya was superior to every one in the science of weapons, Karna. one day approached Drona in pr...
கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா?

கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா?

ஆன்‌மிகம்
கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். “பயிற்சிக் காலம் தொட்டு எனது மாணவர்கள் அனைவரிலும் மேம்பட்டவனாக விளங்கியவன் அர்ஜ்ஜுனன் ஒருவனே. இன்று பலர் அறிய அதை நிரூபித்துவிட்டான். வில்லுக்கோர் விஜயன் என்ற சொல்லுக்கே பிறந்தவன் அவன்” என்று துரோணர் சான்று கூற. “பலே அர்ஜ்ஜுனா பலே! என் தம்பி எல்லோரினும் பெரியவன்” என்று தருமன் மேடையில் முழங்க. "சத்தம் வேண்டாம். இது வீண் இறுமாப்பு. மற்றவர்களைக் குறைத்துக் காட்டும் அப்படி ஒரு சொல்லை நான் அப்படியே ஏற்க முடியாது. இந்தப் போட்டியில் என் வில் திறமையைக் கண்ட பிறகு, ‘வில்லுக்கொருவன் எவன்?’ என்று சொல்லிக் காட்டுங்கள் " என்றவாறு அங்கே உள்ளே நுழைகிறான் கர்ணன். ‘யார் நீ? உன் தாய் தந்தையர் எவர்?’ என்ற கேள்வியோடு அவமானப்படுவதாகக் கர்ணன் அறிமுகம் ஆரம்பிக்கிறது. நாம் பச்சாதாபம் பொங்க கர்ணனை அணுகினோம். கர்ணனை குலத்தைச் சொல்லி, அவனை அவமதித்து அவனுக்கு ஆசாரியர்கள் பா...
‘பீஷ்மரை இகழ்தல் இலமே!’ – கர்ண சுபாவம்

‘பீஷ்மரை இகழ்தல் இலமே!’ – கர்ண சுபாவம்

ஆன்‌மிகம்
கர்ணன் சிறந்த நண்பனா? கர்ணன் படத்தில் ஒரு காட்சி வரும். களத்தில் பீஷ்மர் வீழ்ந்திருக்கிறார். கர்ணன் ஓடி வந்து  கேட்கிறான். "ஐயகோ, வீர மாமலை சாய்ந்ததா? வீரத்தின் விளை நிலம் தரிசாகிப் போனதா? பகை குணத்தால் உம்மோடு துணை நில்லாமல் நம்முள் புரையோடச் செய்துவிட்டேனே! என்னை மன்னித்துவிடுங்கள்" என பீஷ்மரிடம் கேட்கிறான் கர்ணன். எப்பொழுது? பத்தாவது நாள் போரின் முடிவில். பீஷ்மரும் பெருந்தன்மையாக, "கர்ணா விதி வலியது. சென்றதை மற. வீரனே உன்னை நான் ஒதுக்கியதன் உள் நோக்கம் நீ அறியாய்.  மஹாரதி கர்ணன் என்ற மதிப்புக்கு உரியவன் நீ. உன்னை வெல்ல வல்லவன் யாரும் இல்லை. எத்தனைப்பேர் இறப்பினும் எனக்குக் கவலை இல்லை. ஒரு சூதும் அறியாத இந்தத் துரியோதனனை கடைசி வரை உடனிருந்து காத்துத் தரவேண்டும் என்ற காரணத்திற்காக உன்னைத் தனியாக  ஒதுக்கி வைத்தேன். வீரனல்லவா நான்? வீரத்தை வீரம் அவமதிக்குமா கர்ணா?" என...
கர்ணன் சிறந்த நண்பனா?

கர்ணன் சிறந்த நண்பனா?

ஆன்‌மிகம், கதை
கர்ணன் கொடையாளியா? மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்க அற்று விழுந்த அருமணிகள் - மற்றவற்றைக் கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க் கென்னாருயிரைப் போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு என்று பாரத வெண்பாவில் வருகிறது. இது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் எழுதிய நூல். வில்லி புத்தூராரும், 'மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ? கோக்கவோ?'" என்றான்; திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும், தருமமும்!' என்றான். என எழுதியுள்ளார். இதில் யார் முதல் என்று தெரியவில்லை. அதாவது துரியோதனன் மனைவி கர்ணனுடன் சொக்கட்டான் விளையாடுகிறாள். அப்போது துரியோதனன் உள்ளே வருகிறான். அவன் வருவது கர்ணனின் பின் பக்கம், அவள் பார்த்து எழுந்துவிட, கர்ணன் தோல்வியி...
கர்ணன் கொடையாளியா ?

கர்ணன் கொடையாளியா ?

ஆன்‌மிகம்
(Image Courtesy: Quora.com) கர்ணனின் வீரம் மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம் வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம் பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம் பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் கர்ணன் படத்தில் வரும் பாடல். இப்படி கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து வரும் நிறைய கதைகள் உண்டு. புறக்கதைகளை விடுத்துவிட்டு, பாரதத்தில் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கும் முன்பு கொடை, வள்ளல் தன்மை என்றால் என்ன? அதை முதலில் வரையறுத்துவிடலாம். கொடை என்றால் தியாகம் என்று அகராதி சொல்கின்றது. எந்த ஒரு கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இல்லாமல், மனம் உவந்து பிறருக்கு தானமாகத் தருவது. அப்படித் தொடர்ந்து தன்னிடம் இருப்பதைப் பிறர் நலனுக்காக, பிறர் வாடுவதைக் கண்டு தன் மனம் வாடி வறியோர்க்கு வாரி வழங்குவதே வள்ளல் தன்மை. சீதக்காதி வள்ளல் பற்றிய கதை தெரியும் இல்லையா? படிக்காசு புலவர் தன் வறுமைக்காக அவரிடம் ...
கர்ணனின் வீரம்

கர்ணனின் வீரம்

ஆன்‌மிகம்
(Image Courtesy: Quora.com) முந்தைய பகுதி: கர்ணன் துரியோதனன் நட்பு மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் நல்ல வித்தைகளைக் காட்டிவிட்டு, அல்லது வீரத்தைக் காட்டிவிடுவது அன்று. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம். பெரும்பாலோர் கூறுவது கர்ணன் துரோணரிடம் பாடம் பயிலச் சென்ற போது அவனை குலம் காட்டி துரோணர் மறுத்தார் என்பது. எவ்வளவு அப்பட்டமான பொய்? கர்ணன் துரோணாச்சாரியாரின் மாணவர்களில் ஒருவன். துரோணர் வேண்டிய குருதட்சணை, துருபதனைச் சிறையெடுத்தலாகும். கவனிக்க, கர்ணன் இங்கே துரோணரின் மாணவனாக, கௌரவர்களின் பெரும்படையுடன் சென்று போரிட்டுப் புறமுதுகிட்டு வருகிறான். ஆனால் பாண்டவர்கள் ஐவராகச் சென்று துருபதனைச் சிறையெடுத்து வருகிறார்கள். ஆக, கர்ணன் வீரன் என்பது இங்கே அடிபட்டுவிட்டது. கூடவே துரோணர் வில் வித்தையை கர்ணனுக்கு சொல்லித் தர மறுத்தார் என்னும் பொய்யும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. // Vaisamp...