Shadow

திரை விமர்சனம்

பீட்டர் ரேபிட் விமர்சனம்

பீட்டர் ரேபிட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பீட்டர் ரேபிட் எனும் முயல் பாத்திரத்தினை, 1902 ஆம் ஆண்டு, ‘தி டேல் ஆஃப் பீட்டர் ரேபிட்’ எனும் புனைவில் அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். ஆனால், 1893 ஆம் ஆண்டே, நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனைக் கலகலப்பூட்ட கடிதங்களில் எழுதப்பட்ட கதையின் நாயகனே பீட்டர் ரேபிட். துறுதுறுவெனப் பக்கத்துத் தோட்டத்தில் காய்கறிகளைத் திருடி உண்ணும் சாகசக்கார பீட்டர் ரேபிட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும். மிக நேர்த்தியான லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளனர் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன். அனிமேஷன் என்ற வார்த்தைப் பார்த்ததும் 2டி, 3டி போல் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். உடை அணிவிக்கப்பட்ட உயிருள்ள முயல்களை அப்படியே பாத்திரங்களாகத் திரையில் உலாவ விட்டுள்ளார்கள். தன் பெற்றோரை இழந்து வாடும் பீட்டர் ரேபிட், ப்யா எனும் பெண்ணின் பாசத்தில் திளைக்கிறது. ப்யாவிற்கும், பக்கத்து வீட்டில் குடியேறும...
பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம்

பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பசிஃபிக் ரிம் என்றால் பசிஃபிக் கடற்கரையின் ஓரத்தில் இருக்கும் ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (US) மேற்கு கரை மாகாணங்களை அடங்கிய பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். பசிஃபிக் பெருங்கடலின் விளிம்பிலுள்ள நாடுகள் என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். பசிஃபிக் கடலுக்கடியில் இருந்து வெளிவரும் கைஜு (Kaiju) எனும் வேற்றுக் கிரக ஜந்துக்களை அழிப்பது தான் முதற்பாகமாகிய பசிஃபிக் ரிம் படத்தின் கதை. இரண்டாம் பாகத்தின் கதையும் அதன் தொடர்ச்சியே! கைஜு பூமிக்குள் நுழைய முடியாதபடி, அது வந்து செல்லும் வழியைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள் பான்-பசிஃபிக் டெஃபன்ஸ் கார்ப்ஸ் (PPDC - Pan Pacific Defence Corps). ஜேகர்கள் எனும் பெரும் ரோபோக்களைக் கொண்டு பி.பி.டி.சி., கைஜுக்களை எதிர்க்கும். ஆனால், கைஜுவின் மூளையை ஜேகர்களில் இணைத்து பி.பி.டி.சி.யையே நிர்மூலம் செய்து விடுவார் நியூட் கெய்ஸ்லர் எனும் விஞ்ஞானி (அவ...
கேணி விமர்சனம்

கேணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எல்லையைத் தீர்மானிக்கும் பொழுது, புளியன் மலையில் உள்ள வீடும் நிலமும் தமிழ்நாட்டின் பக்கமும், அந்த வீட்டுக்குப் பாத்தியப்பட்ட கிணறு கேரள பக்கமுமாகப் போய்விடுகிறது. அந்தக் கிணறு, அதன் உரிமையாளரான இந்திராம்மாவிற்கு மட்டுமல்லாமல் வறட்சியின் காரணமாக அந்த ஊரிற்கே அவசியமாகிறது. அந்தக் கிணறை மையப்படுத்திய அரசியல் தான் படத்தின் கதை. தண்ணீர் இல்லாத ஒரு பொழுதை யோசிக்கவே குலை நடுங்குகிறது. படம் தண்ணீரின் தேவையை, அதைப் பகிர்த்து கொள்வதில் எல்லைகளுக்கு இடையேயான சிக்கல் என மிக ஆழமானதொரு கருவைத் தொட்டுள்ளது. எனினும் படம் அந்த மையப் புள்ளியில் இருந்து விலகி, 'இந்திராம்மாடா! ப்பாஆஆ, என்ன ஒரு போராளி' எனத் தொடர்ந்து பதிகிறது. அதுவும் காட்சிகளாக இல்லாமல் வசனங்களாக. புளியன் மலையின் தலைவர் பார்த்திபன், சமூக அக்கறையுள்ள வக்கீல் நாசர், தமிழக எல்லையின் கலெக்டரான ரேவதி, புளியன் மலை ஊர்வாசியான அனுஹாசன், நீதிபதி ரேகா...
6 அத்தியாயம் விமர்சனம்

6 அத்தியாயம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆறு இயக்குநர்களின் குறும்படங்களை தொகுத்து '6 அத்தியாயம்' என்று ஒரே படமாக இணைத்துள்ளனர். அமானுஷ்யம் தான் இந்த ஆறு படங்களையும் இணைக்கும் கண்ணி. பொதுவாக இப்படி இணைக்கப்படும் படங்கள், ஒரு குறும்படம் முடிந்த பின் இன்னொன்று எனத் தொடங்கும். ஆனால், எல்லாப் படத்தின் க்ளைமேக்ஸையும் கடைசி அரை மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டியுள்ளனர். இந்தப் பரீட்சார்த்த பாணி உலக அளவில் இதுவே முதல் முறை என்பது படத்தின் தலையாய சிறப்பு. 1. சூப்பர் ஹீரோ இயக்கம் - கேபிள் சங்கர் தன்னை சூப்பர் ஹீரோவாக ஒருவன் கருதுகிறான். அவனது வீட்டினரோ அவனுக்கு மனநலக் கோளாறு உள்ளதாக நினைக்கின்றனர். அதனால் அவனை மனநல மருத்துவரிடம் அழைத்து வந்து விடுகின்றனர். அவருக்கும் மனநல மருத்துவருக்கும் நடக்கும் உரையாடலே படத்தின் கதை. 2. இது தொடரும் இயக்கம் - சங்கர் தியாகராஜன் சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த ஒருவனைப் பேய்கள் எப்படிப...
ஏண்டா தலையில எண்ண வெக்கல விமர்சனம்

ஏண்டா தலையில எண்ண வெக்கல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலையில் எண்ணெய் வைக்காதவர்களின் லிஸ்ட்டை எடுத்து, அதிலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து யமதர்மராஜன் ஒரு மரண விளையாட்டை விளையாடுகிறார். நான்கு டாஸ்க்-களை நாயகன் முடிக்காவிட்டால் அவன் மரணித்துவிடுவான். அந்த நான்கு டாஸ்க்-கள் என்ன, அவற்றில் நாயகன் வென்றானா இல்லையா என்பதே படத்தின் கதை. நாயகனாக அஸார் அறிமுகமாகியுள்ளார். புதுமுகம் என்றாலும், அடுத்த வீட்டுப் பையனைப் போன்ற பரீச்சயத்தைத் தோற்றுவித்துவிடுகிறார். வேலையில்லாததால் அவர் வீட்டினரால் கலாய்க்கப்படும் பொழுதும், ஆங்கிலம் தெரியாமல் இன்டர்வியூவில் சொதப்பும் பொழுதும், யமதர்மராஜாவால் சொதப்பப்படும் பொழுதும் அஸார் தன் முகபாவனைகளில் அழகாக வித்தியாசம் காட்டியுள்ளார். ஷர்மிளா, சுமதி, யோகி பாபு, அர்ச்சனா ஆகியோர் வரும் அத்தியாயம் கலகலப்பூட்டினாலும், தேவையில்லாத இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். நாயகனின் நண்பராக வரும் சிங்கப்பூர் தீபனும் ஆங...
மெர்லின் விமர்சனம்

மெர்லின் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநராகும் கனவில் இருக்கும் வெற்றிக்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைக்கிறது. அதற்குத் திரைக்கதையை எழுதி முடிக்கக் குறைவான கால அளவே உள்ள காலத்தில், அவரது அறை நண்பர்களால் நிரம்பி ஆராவாரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் உள்ளது. அறையில் உள்ளவர்களின் ஆராவாரத்தைக் குறைக்க, 'மெர்லின்' எனும் பேய் இரவுகளில் அச்சுறுத்துவதாகப் பீதியை ஏற்படுத்துகிறார். விளையாட்டு விபரீதம் ஆகி, அக்கற்பனைப் பேய் உண்மையிலேயே வெற்றியை ஆட்கொண்டு விடுகிறது. மெர்லினிடம் இருந்து வெற்றி எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் தொடக்கமே மிரட்டலாய் உள்ளது. நீர் இறைக்கும் விவசாயியை மோகினி பிடித்துக் கொள்கிறது. கிராமப்புறங்களில் மோகினி பற்றிய செவி வழி கதைகள் மிகப் பிரசித்தம். இயக்குநர் கீரா அதை மிக அழகாகக் காட்சிப்படுத்தி அசத்தியுள்ளார். மனிதனின் குற்றவுணர்வு தான் அவனைப் பீடிக்குமென இயக்குநர் கோடிட்டுக் காட்டியிருந்தாலும், மோகி...
கூட்டாளி விமர்சனம்

கூட்டாளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜீவா, அறிவு, தண்டு, விக்கி ஆகிய நால்வரும் நண்பர்கள். சேட் பிபி (BB)-யிடம், வட்டி கட்டாத வண்டிகளைத் தூக்கும் வேலை செய்து வருகின்றனர். அறிவு, ஜீவாவை வளர்த்த பீட்டர், சேட் பிபி என ஜீவாவைச் சுற்றி அனைவருமே கொல்லப்படுகின்றனர். யார், ஏன் அனைவரையும் கொல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. ஜீவாவாக நடித்துள்ள சதீஷின் முகம் மிகச் சுலபமாக மனதில் பதிகிறது. நாயகனாக தோன்றாமல் நமக்கு நன்கு தெரிந்த ஒரு பையன் என்ற உணர்வைத் தரும் முகம் அவருடையது. எந்த வாகனமாக இருந்தாலும், யாருடையது என்றாலும் தூக்கி விடுவார். நண்பர்களை எக்காரணம் கொண்டும் கைவிடாதவர். தன்னுடைய நண்பர்களில் ஒருவனின் மரணத்துக்குத் தனது காதலி தான் காரணமென அறிந்து, அவளைக் கொல்ல நாயகன் சபதமேற்பதில் இருந்தே படம் தொடங்குகிறது. திவ்யாவாக க்ரிஷா குரூப் நடித்துள்ளார். தனது தாயின் ஞாபகமார்த்தமாக வைத்திருக்கும் செயினை, வழிபறித் திருடனிடம் இருந்து மீட்பதா...
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் விமர்சனம்

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் என்பது திருமாலைப் போற்றும் திருநாமங்களில் ஒன்று. பக்தியைச் சிலாகிக்கும் படமிது. திருப்பதி பெருமாளான பாலாஜிக்கும், அவரது பரம பக்தனான ஹாத்திராம் பாபாக்குமான பிணைப்பே படத்தின் கதை. 'கடவுளைக் காணும் வழி யாது?' என அழகு சிறுவனான ராமன் வினவுவதில் இருந்து படம் தொடங்குகிறது. 'ஓம்' என்ற ராமனின் கடுந்தவம் வைகுண்டத்தை அடைய, பெருமாள் ராமனைக் காண பாலகனாக வருகிறார். சிறுவனைக் கடவுளென உணராமல் துரத்தி விடுகிறார் இளைஞனான ராமன். பின் மீண்டும் எப்படி இறையை உணர்ந்து ஆத்ம பக்தனாகப் பெருமாளுக்கு மிகப் பிரியமானவராகப் பரிணமிக்கிறார் என நெகிழ்ச்சியாகப் பயணிக்கிறது படம். பக்தர் ஹாத்திராமாக நாகார்ஜுனா அசத்தியுள்ளார். அன்னம்மாச்சார்யாவாக முன்பே பக்திப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்த முன் அனுபவம் இதில் அநாயாசமாய் மிளிர்கிறது. பெருமாளுக்கு நித்ய கல்யாண பூஜ்சி செய்வதாகட்டும், அவருடன் பக...
கலகலப்பு – 2 விமர்சனம்

கலகலப்பு – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2012 இல் வெளிவந்து நகைச்சுவையில் கலக்கிய கலகலப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே ஒன்-லைனைக் கையிலெடுத்து உள்ளார் இயக்குநர் சுந்தர்.சி. பணக்கஷ்டத்தில் இருக்கும் ஜெய், தங்களுக்குச் சொந்தமாகக் காசியில் ஒரு மேன்ஷன் இருப்பதை அறிந்து அதை விற்கச் செல்கிறார். லீசுக்கு எடுத்த முருகா மேன்ஷனைச் சிரமத்தில் நடத்தி வருகிறார் ஜீவா. தங்கள்  இருவரையுமே ஏமாற்றிய சிவாவைத் தேடிச் செல்கின்றனர் ஜெய்யும் ஜீவாவும். அவர்கள் ஏமாறிய பணம் அவங்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. பிரதான ஜோடிகளான ஜீவா - கேத்தரீன் தெரசா, ஜெய் - நிக்கி கல்ராணி அறிமுகப் படலம் முடிந்து, காதல் அத்தியாயம் தொடங்கும் வரை வழக்கமான ஜோரில் போகும் படம், சிவாவின் அறிமுகத்திற்குப் பின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. சதீஷ், ரோபோ சங்கர், மனோ பாலா, சந்தான பாரதி, விடிவி கணேஷ், ஜார்ஜ், சிங்கமுத்து, யோகி பாபு, முனீஷ்காந்த் என நடிகர...
சவரக்கத்தி விமர்சனம்

சவரக்கத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முழு நீள பிளாக்-காமெடி படமாகச் சிரிக்க வைக்கிறது சவரக்கத்தி. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் மிஷ்கினின் தம்பி G.R.ஆதித்யா. முடி திருத்துபவரான பிச்சை தனது குடும்பத்துடன் ராஜ்தூதில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அவர்களைப் பரோலில் வந்த மங்கா எனும் கொலையாளியின் கருப்பு ஸ்கார்பியோ லேசாய்த் தட்டி விடுகிறது. பிச்சை தனது குடும்பத்தினர் முன் பந்தாவாக ஸ்கார்பியோவில் வந்தவர்களை வம்புக்கு இழுத்து விடுகிறார். கிறுக்கனான மங்கா, பிச்சையைக் கொன்றே தீர்வதென அவரைத் தேடுகிறார். பிச்சை மங்காவிடம் சிக்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ஒரே நாளில் நிகழும் படம். மிக எளிமையான ஒரு வரிக் கதை. ஒருவன் கொல்லத் துரத்துகிறான்; மற்றொருவன் தப்பிக்கப் பார்க்கிறான். பயந்து ஓடும் பிச்சைக்கு, காது கேளாத கர்ப்பிணி மனைவியும் இரண்டு அழகான குழந்தைகளும் உள்ளனர். பிச்சையாக இயக்குநர் ராம் நடித்துள்ளார். ஒர...
ஹே ஜூட் விமர்சனம்

ஹே ஜூட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நிவின் பாலிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். த்ரிஷாவின் முதல் மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஹே ஜூட்' என்பது 1968இல் வெளிவந்த 'தி பீட்டில்ஸ்' குழுவின் மிகப் பிரபலமான பாடல். த்ரிஷாவின் கேஃபே மற்றும் இசைக்குழுவின் (Music band) பெயரை 'தி பீட்டில்ஸ் கேஃபே' என வைத்துத் தலைப்பிற்கு ட்ரிப்யூட்டும் செய்துள்ளனர். ஜூடிற்கு மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் பிறந்தது முதலே சிக்கல் உள்ளது. கோபம், மகிழ்ச்சி என மனம் சார்ந்த உணர்வுகளை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. ஆனால், கணிதமோ உள்ளங்கை நெல்லிக்கனி போல் ஜூட்க்குப் புரிகிறது. கிட்டத்தட்ட கணித மேதை ராமானுஜம் அளவுக்கு. 28 வயதாகும் ஜூட் கொச்சியில் இருந்து கோவாவிற்குத் தன் பெற்றோர்களுடன் செல்கிறான். நண்பர்களற்ற ஜூட்க்கு, கோவாவில் பக்கத்து வீட்டுக்காரர்களான செபாஸ்டியனும் அவரது மகள் க்ரிஸ்டலும் நண்பர்களாகின்றனர். இருமன ஒழுங்கின்மையால் (Bi-pol...
ஃபேன்டம் த்ரெட் விமர்சனம்

ஃபேன்டம் த்ரெட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
உக்கிரமான காவியத்தன்மையுடனும் கலையழகுடனும், ஒரு மாய நூலைக் கொண்டு 'ஃபேன்டம் த்ரெட்' எனும் படத்தை அட்சுர சுத்தமாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன். அதனால் தான், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஆகிய ஆறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்குப் போட்டியிடுகிறது. ரெனால்ட் வுட்காக் மத்திம வயதைக் கடந்த மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்புக் கலைஞர். ஒரு பிரத்தியேகமான தனித்த உலகில் வாழ்பவர். தனது நாட்களை ஒரே மாதிரியான கண்டிப்பான ஒழுங்கில் கழிக்கவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பவர். காலையுணவின் பொழுது, ஒரு ஸ்பூன் வைக்கும் சத்தம் கூட அதிகப்படியாக அவருக்குக் கேட்கக்கூடாது. அவர் வேலையில் மும்மரமாக இருக்கும் பொழுது, சிநேகமாய்த் தேநீர் கோப்பையோடும் கூட அவரருகில் கூட யாரும் செல்லக்கூடாது. மனிதர் எரிந்து விழுவார். அப்பட...
விசிறி விமர்சனம்

விசிறி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜித் குமார் ரசிகரும், விஜய் ரசிகரும் ஃபேஸ்புக்கில் ஜென்ம விரோதியாக உள்ளனர். விதி, அஜித் குமார் ரசிகரை ஜென்ம விரோதியான விஜய் ரசிகரின் தங்கையைக் காதலிக்க வைக்கிறது. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. தலைப்பிற்கு முன் கதாபாத்திரங்களின் பெயர்களைப் போடும்பொழுது, விஜய் மற்றும் அஜீத்தின் படங்களில் இருந்து 'மாஸ் சீன்'களை அழகாகத் தொகுத்துள்ளனர். அந்த விறுவிறுப்பு, படத்தின் முதல் பாதியில் முழுவதும் மிஸ்ஸிங். ஒன்றே முக்கால் மணி நேரம் படம் தான் என்ற போதும், இடைவேளைக்கு முன்னான படம் அசாத்தியமானதொரு பொறுமையைக் கோருகிறது. 'தல வெறியன்' சிவாவாக நடித்திருக்கும் ராம் சரவணா தான் படத்தின் நாயகன். ஒரு பொண்ணை "வால்ட்டு" அடிக்க வேண்டுமென அவர் செய்வது எல்லாம் அசுவாரசியத்தின் உச்சம். மிக நன்றாகக் கலகலப்பாக வந்திருக்க வேண்டிய அத்தியாயம், திரைக்கதையின் பலவீனத்தால் சோடை போய்விடுகிறது. 'தளபதி ரசிகன்' கில்லி சூ...
மதுரவீரன் விமர்சனம்

மதுரவீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது தந்தை ரத்தினவேலுவைக் கொன்றது யாரென அறியவும், அவர் நடத்தி வந்த ஜல்லிக்கட்டை ஊரில் தொடர்ந்து நடத்திடவும் மலேஷியாவில் இருந்து சொந்த ஊருக்கு வருகிறான் துரை. அவனது இந்த இரு நோக்கங்களும் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. மதுரவீரன் எனத் தலைப்பு வைத்திருந்தாலும், சண்முகப்பாண்டியனின் அறிமுகம் ஆர்ப்பாட்டமாய் இல்லாமல் கதையின் போக்கிற்குச் சாதாரணமாய் அமைத்திருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது. துரையாகச் சண்முகப்பாண்டியன் அடக்கியே வாசித்துள்ளார். 'பூ' படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய P.G.முத்தையா, இப்படத்தை இயக்கி ஒளிப்பதிவும் செய்துள்ளார். எடுத்துக் கொண்ட கதைக்கு வஞ்சனை செய்யாமல் நிறைவானதொரு அனுபவத்தைத் தருகிறார். 2017இன் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டத்தைக் கதைக்குக் கச்சிதமாய் முடிச்சுப் போட்டுவிடுகிறார். ஜல்லிக்கட்டில் சாதி எப்படிக் குறிக்கிடுகிறது என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ள...
ஏமாலி விமர்சனம்

ஏமாலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாலீஸ்வரனுக்கு ரித்து பிரேக்-அப் சொல்லிவிடுகிறாள். தன்னை ஏமாளியாக உணரும் மாலி, அவரது நண்பர் அரவிந்துடன் இணைந்து ரித்துவைக் கொல்லத் திட்டமிடுகிறார். அந்த ஆப்ரேஷனின் பெயர் A.Maali (ஏமாலி), அதாவது A for அரவிந்தன் & Maali for மாலீஸ்வரன். அந்த ஆப்ரேஷனின் முடிவு என்ன என்பது தான் படத்தின் கதை. மாலியாக சாம் ஜோன்ஸும், அரவிந்தாக கொலைக்கான திட்டமிடலைப் போலீஸின் விசாரணைக் கோணத்தில் இருந்து தொடங்குகின்றனர். எனவே திரைக்கதை நான்-லீனியராக, உண்மை - கற்பனை என இரண்டு கோணங்களில் நகர்கிறது. இந்தத் திரைக்கதை யுக்தியைக் குழப்பமில்லாமல் இயக்குநர் துரை கையாண்டிருந்தாலும், படத்தின் முடிவு ஒரு வகையான ஏமாற்றத்தைத் தருகிறது. ட்ரெண்டியாக, ஜாலியாக, யூத் ஃபுல்லாகச் சென்ற படம் அதற்கான நிறைவைத் தரவில்லை. இரட்டை அர்த்த வசனங்கள் மொக்கையாகவோ, எல்லை தாண்டாமலோ இருப்பது ஆறுதல். 'கஸ்கா முஸ்கா' என்று ஜெயமோகன் தனது வசனங்களால்...