Shadow

கட்டுரை

மு.க.ஸ்டாலினுக்குக் கருணாஸ் வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்குக் கருணாஸ் வாழ்த்து

சமூகம்
திராவிட முன்னேற்றக் கழகம் இன்று புதிதாய்ப் பிறக்கிறது! பெரும் மதிப்பிற்குரிய அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இன்று தலைவராய்ப் பிறக்கிறார்! “ஒரு நாயகன் உதயமாகிறான். ஊரார்களின் இதயமாகிறான்” என்று காவியக் கவிஞர் வாலி எழுதிய வரிகளுக்கு ஏற்ப, புதிய சூரியனாய் மு.க. ஸ்டாலின் உதயமாகிறார். முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்! மாணவர் கழகப் பொறுப்பாளராக, இளைஞரணிச் செயலாளராக, மாநிலப் பொருளாளராக, சென்னை மேயராக, துணை முதல்வராக, செயல் தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக படிப்படியாக உயர்ந்து பரிமாணம் பெற்றவர் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். 14 வயது முதல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெறும் இயக்கத்தின் பாதையில் பயணம் செய்கிறவர். போராட்டக் களம், சிறைவாழ்க்கை, தியாகத் தழும்புகள் என இவரது தன்வரலாறு நீளும். அதுதான் இவரை இன்று தலைவர் சிம்மாசனத்தில...
மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

சமூகம், சினிமா, திரை விமர்சனம்
குறிஞ்சி நிலத்தின் கரடுமுரடான வாழ்வியலை அட்டகாசமாகப் பதிவு செய்துள்ளனர். கும்மிருட்டு விலகாத விடியற்காலையில் எழும் ரங்கசாமி, மலையில் ஏறியிறங்கும் தூரம் மிக நீண்டது. அவரது வேலை என்பது ஏலக்காய் மூட்டையைச் சுமந்து கொண்டு மலையில் இறங்கும் சுமைக்கூலி வேலை. ஒரு கையளவு நிலம் வாங்க நினைக்கும் அவனது வாழ்வு, அவன் தினமும் பயணிக்கும் மலைப்பாதை போலவே ஏறியிறங்கி ஒரு வெற்றுவெளியில் முடிகிறது. தேனி ஈஸ்வர். ஒளிப்பதிவில் மாயம் செய்துள்ளார். ஒரு வாழ்க்கையை அதன் அருகில் இருந்து பார்த்த உணர்வையும், கோம்பையில் இருந்து கேரள எல்லை இடுக்கி மாவட்டம் வரை மலையைச் சுற்றிப் பார்த்த ஒரு திருப்தியையும் தருகிறது படத்தின் விஷுவல். மனம் பிசகிய பாட்டி ஒருவர் தன் கையிலுள்ள வளையல்களை எண்ணிக் கொண்டிருப்பார். தகதகக்கும் பொன்னிற சூரிய வெளிச்சத்தின் பின்னணியில் வரும் அந்த ஷாட்டு ரசனையின் உச்சம். படத்தில் வரும் கதாபாத்திரங்களில் ...
2 இன் 1 ஜான்ஸன்ஸ் வேட்டி – கே.எஸ்.ரவிக்குமார்

2 இன் 1 ஜான்ஸன்ஸ் வேட்டி – கே.எஸ்.ரவிக்குமார்

சமூகம், வர்த்தகம்
பெரும்பாலும், வேஷ்டி கிராமப்புறத்தில் அணியப்படும் உடை மற்றும் வயதானவர்கள் அணியும் ஆடை என்பது போலவே கருதப்பட்டு வருகிறது. வெளிப்படையாக, Jansons வேஷ்டிகள் இந்த மாயையை உடைத்து, நினைத்துப் பார்க்க முடியாத விஷயத்தைச் செய்து காட்டியிருக்கிறது. புதுமையான டூ இன் ஒன் ரிவர்சபிள் வேஷ்டியைக் கொண்டு வந்திருக்கிறது. இத்தகைய ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையின் மைய நோக்கம், இந்தப் பாரம்பரிய தென்னிந்திய ஆடைகளை இளைஞர்களிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான். "ஒரே மொபைல் ஃபோனில் இரண்டு சிம் உபயோகிப்பது போன்ற இரட்டை நன்மைகள் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு மட்டும் இல்லாமல், அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களிலும் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. Jansons இந்தியா அணியின் நீண்ட கால விவாதங்களுக்குப் பிறகு இந்த 2 இன் 1 வேஷ்டி பதிசோதனை முயற்சியை செய்து பார்த்தோம். இந்த 2 இன் 1 வேஷ்டியில் இரண்டு வெவ்வேறு வடிவம...
சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

கதை, புத்தகம்
“ஒரு கொடி செஞ்சு கொடு, அண்ணாச்சி.” “என்ன கொடி கேக்கிறே” அலுப்புடன் முகத்தைத் திருப்பிக் கேட்கிறான் பாண்டியன். ஓடிப்போய்த் தன் மூன்றாம் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறான் கருப்பையா. ஒரு பக்கத்தைத் தன் அண்ணனிடம் நீட்டிக் காட்டுகிறான். தேசக் கொடி என்று தலைப்பு; வர்ணம் எதுவும் இல்லாமலே காகிதத்தின் வெண்மையிலும், அச்சு மையின் கருமையிலும் ‘மூவர்ண’க் கொடியின் படம் அந்தப் பக்கத்தில் இருக்கிறது. “இந்தக் கொடி செஞ்சுகொடு, அண்ணாச்சி. நாளைக்கு இஸ்கூலுக்குக் கொண்டுக்கிட்டுப் போகணும். நாளைக்கு எல்லாரும் கொண்டுக்கிட்டுப் போகணும்” என்று சொல்லுகிறான் கருப்பையா. அவன் முகத்தில் களிப்பும் ஆர்வமும் மின்னுகின்றன. இருபக்கமும் கூராக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிறத் துண்டுப் பென்சில் ஒன்றினால் சுவரில் உழவு நடவுக் கணக்குக் குறித்துக் கொண்டிருக்கும் பாண்டியன், “இரு, வாறேன்” என்று மேலும் சிறிது நேரம் சில எண்க...
H1-B கலையும் கனவுகள்

H1-B கலையும் கனவுகள்

கட்டுரை, சமூகம்
அமெரிக்கா, கனவுகளின் தேசம். தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் வாரி வாரி வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கிற தேசம். இங்குக் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம், தொழில் வாய்ப்புகள் உலகெங்கிலும் இருந்து தொழில் முனைவோரைத் தன்பக்கம் தொடர்ந்து ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. புதிய தொழில் நுட்பங்கள், அவற்றின் வர்த்தகம், விரிவாக்கம் என அமெரிக்கப் பொருளாதாரம் எல்லாத் திசைகளிலும் வளரத் துவங்கியபோது அதை நிர்வகிக்க, முன்னெடுக்கத் தொழிலாளர்கள், வேலையாட்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தட்டுப்பாடு உருவானபோது, உலகெங்கிலும் இருந்து அடுத்தகட்ட குடியேற்றங்கள் அமெரிக்க மண்ணில் நிகழத்துவங்கின. இதனால்தான் நூற்றாண்டுகள் கடந்தும் போட்டிபோட்டுக் கொண்டு உலகெங்கிலும் இருந்து அமெரிக்க மண்ணில் கனவுகளோடு வந்து இறங்குகிறவர்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை. வேலைதேடி அமெரிக்காவிற்கு வருகிறவர்களை நெறிப்படுத...
‘பூமி’க்கான இசை

‘பூமி’க்கான இசை

சமூகம்
பூமியெனும் தொண்டு நிறுவனத்திற்காக, ரப்சடி (Rhaspody) குழுவின் ‘ஆர்க்கெஸ்ட்ரா, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 14 அன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் PMG (Pioneer Music Gym) -ஐச் சேர்ந்த 15 பாடகர்கள் மேடையில் பாடி அசத்தினார்கள். PMG குடும்பத்தில் பல்வேறு துறைகளில் இருக்கும் நபர்கள் ஒருங்கிணைந்துள்ளனர். மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், ஆடிட்டர்கள், தொழில்முனைவோர்கள், வங்கி உயரதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்றவர்கள், குடும்பத் தலைவிகள் என அனைவரும் ஒன்றிணைந்து, இசையின் பேரானுபவத்தைப் பாடிக் கொண்டாடி வருகின்றனர். ‘SA RE GA ME‘ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரப்சடி (Rhapsody – மகிழ்ச்சியைத் துள்ளலாக வெளிப்படுத்துவது) குழு பாடகர்கள், தமிழ், ஹிந்தி என 28 பாடல்கள் பாடினர். PMG-ஐத் தொடங்கிய Pioneer சுரேஷ் வழி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் நி...
வயலின் ‘ஞான’ சேகரன் 80

வயலின் ‘ஞான’ சேகரன் 80

சமூகம்
1982இல், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வாங்கிய, சங்கீத கலாநிதியான வயலின் வித்வான் M.சந்திரசேகரனின் 80வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும் குடும்பமும், கடந்த ஞாயிறு ஜூலை 8 அன்று, சென்னை மியூசிக் அகாதெமியில் விழாவாகக் கொண்டாடினர்.70 வருடமாக இசைத்துக் கொண்டிருக்கும் சந்திரசேகரன், தனது முதல் கச்சேரியை மார்ச் 5, 1949 இல் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இசை மேதைமையை வியந்தோதி, பத்ம விபூஷன் டாக்டர் M. பாலமுரளிகிருஷ்ணா, சந்திரசேகரரை, ‘ஞானசேகரன்’ என்றே அழைப்பார். கல்கத்தாவில் பிறந்த சந்திரசேகரன், மஞ்சள் காமாலையின் தாக்கத்தால், தன் இரண்டாவது வயதிலேயே தன் பார்வைத் திறனை இழந்து விடுகிறார். ஏழு வயதில் தந்தையையும் இழக்க, அவரைச் சென்னை அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறார் அவரது தாயார் ஸ்ரீமதி சாருபாலா மோகன். மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தன் மகனுக்கு குருவாக இருந்து வயலின் வாசிக்கச...
பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

சமூகம், தொடர்
மூடர்கூடத்து செண்ட்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் நெதர்லாந்துக்காரர்கள் நடத்துவதாகவே நினைத்துக் கொண்டிருப்பார் போல! இதற்கே அவர் ஸ்டார் விஜய் டி.வி. மூலமாகக் கமல் ஹாசனைச் சந்தித்து விட்டு தான் பிக் பாஸிற்குள் வந்தார். எனினும், மற்ற அனைவரும் தமிழில் பேசும்பொழுது, கேமிரா முன் பிக் பாஸிடம்ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார். ஆனால் அவர் நாமினேட் செய்யும் பொழுது, ‘மமதி எனக்குப் புரியாத மாதிரி இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க; ரம்யாவோட ஹேர்ஸ்டைல், பாடி லேங்வேஜ் எல்லாம் இங்கிலீஷ்க்காரங்க மாதிரி இருக்குது’ எனத் தெள்ளத்தெளிவாகக் காரணத்தைத் தமிழில் அடுக்குகிறார். இதில் ஆகப் பெரிய நகைச்சுவை என்னவென்றால், வீட்டின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனனி ஐயர், வைஷ்ணவியை நாமினேட் செய்து சொன்ன காரணம், ‘அவங்க நிறைய இங்கிலீஷ்ல பேசுறாங்க’ என்பது. முதல் நாளிலேயே, யார்க்கு யாரைப் பிடிக்கவில்லை என லேசாகக் கோடி...
பிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்

பிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்

சமூகம், தொடர்
பிக்பாஸ் சீசன் 2-இல் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், ‘ஏன் பிக்பாஸிற்கு வருகிறேன்?’ என்பதற்குச் சொன்ன காரணம், “பிக் பாஸில் கலந்து கொண்டவர்கள் வெளியில் வந்ததும் சொல்வது, தன்னுள் மாற்றம் நிகழ்கிறது என்கிறார்கள். இந்த நூறு நாளில் அப்படியொரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கலந்து கொள்கிறேன்” என்றார்கள். சீசன் 1-இல் கலந்து கொண்டவர்களில், அப்படி யாருக்கு என்ன மாற்றம் நிகழ்ந்தது என நமக்குக் கண் கூடாகத் தெரியாது. அவர்களாக, ‘இன்னது’ எனச் சொல்லும் வரை. அப்படிச் சொல்வதும் உண்மைக்கு எந்தளவுக்கு நெருக்கம் என்பதும் அளக்க இயலாது. ஆனால், பிக் பாஸ், முதல் சீசனுக்கும் இரண்டாம் சீசனுக்கும் இடையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த மாற்றத்தின் பெயர் கமல் ஹாசன். மக்கள் நீதி மய்யத்தின் தொடக்கத்திற்கு முன், பின் என இரண்டு சீசன்களையும் முறையே கொள்ளலாம். பிக் பாஸ் 1-இலே கூட கமல் ஹாசன் அதை ஒரு ப்ளாட்ஃபார்மாகப் பயன்ப...
இலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்!

இலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்!

புத்தகம்
ஜூன் 16 ஆம் நாள் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் நினைவு தினம். 1976 இல் மறைந்த இவரது நினைவுகளைக் கடந்த சில வருடங்களாக இதுதமிழ் தளத்தில் பகிர்ந்து வருகிறேன். சொல்வதற்கு ஏராளமாக இருந்தாலும், என்னுள் இருக்கும் சில மனக்குறைகளை இக்கட்டுரையின் வாயிலாக இப்பொழுது பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். ஒருமுறை எழுத்தாளர் திலீப் குமாருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, தமிழ் எழுத்துலகில் மிகவும் குறைந்த மதிப்பீடுகளுக்கு உள்ளானவர் கிருஷ்ணன் நம்பி என வருந்திச் சொன்னார். மதிப்பீடு செய்த சில எழுத்தாளர்களும் நம்பியைச் சரியாக மதிப்பீடு செய்தார்கள் எனச் சொல்லமுடியாது. அந்த எழுத்தாளர்கள் வரிசையில் வண்ணநிலவன், அசோகமித்திரன் போன்றவர்களைச் சொல்லலாம். சுந்தர ராமசாமி, நம்பியின் மிக அணுக்க நண்பராக இருந்தும் கூட, நம்பியின் சிறுகதைகள் பற்றிய அவரது விமர்சனங்கள் ஏமாற்றத்தையே அளிக்கிறது. இந்த மூவரில், அசோகமித்திரனும...
நடிகையர் திலகம் விமர்சனம்

நடிகையர் திலகம் விமர்சனம்

அயல் சினிமா, கட்டுரை, சினிமா, திரை விமர்சனம்
சினிமா, இன்றளவும், ஆண்கள் மட்டுமே கோலேச்சி வரும் துறையாக உள்ளது. டி.பி.ராஜலட்சுமி, பானுமதி, சாவித்திரி போன்ற மிகச் சிலரே விதிவிலக்குகளாகத் தங்களுக்கான முத்திரையை அழுத்தமாகத் திரையுலகில் பதித்துள்ளனர். துடுக்கான உடற்மொழியாலும், துள்ளலான பாவனைகளாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற கலைஞர் சாவித்திரி. அவரைப் பற்றிய 'பையோ-பிக்' படமாகத் தெலுங்கில் "மகாநதி" என படம் எடுத்துள்ளார் நாக் அஷ்வின். மிக அற்புதமான ஒரு காண் அனுபவத்தைப் படம் தருகிறது. தமிழ் டப்பிங்கும் உறுத்தாமல், தேவையான இடத்தில் தெலுங்கு வசனங்களையே அப்படியே பயன்படுத்தியுள்ளது சிறப்பு. 'தொடரி' படத்தைப் பார்த்து விட்டு கீர்த்தி சுரேஷை, இந்தப் படத்தில் சாவித்திரியாக நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார் நாக் அஷ்வின். படத்தின் உயிராய் மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். படத்தின் இரண்டாம் பாதியில், கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மறைந்து சாவித்திர...
சென்னையில் வாட்டர் வேர்ல்ட்

சென்னையில் வாட்டர் வேர்ல்ட்

சமூகம்
சென்னையைப் பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் இந்திய சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அந்த வகையில் சென்னையின் இந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக அமைய இருப்பது, ஏப்-27 ல் தொடங்கி ஜூன்-4 ஆம் தேதிவரை நடைபெற இருக்கும் 44வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அமைந்திருக்கும் 'வாட்டர் வேர்ல்ட் (Water World)' ஆகத்தான் இருக்கும். வழக்கமான ஜெயன்ட் வீல் மற்றும் அது சார்ந்த கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் இந்த முறை, வாடிக்கையாளர்களுக்கு சலுகை தரும் விஷயமாக சத்யா எலெக்ட்ரானிக்ஸின் மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் மேளாவும் நடைபெற இருக்கிறது. இந்த முறை கோடையின் தீமாக (Theme) நீர் உலகம் (Water World) இருக்கும். ஆகையால் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக ராட்சஷ நீர்வீழ்ச்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை. நிஜ ந...
இலவச ஊட்டச்சத்து மருந்துகள் – திவ்யா சத்யராஜ் அதிரடி

இலவச ஊட்டச்சத்து மருந்துகள் – திவ்யா சத்யராஜ் அதிரடி

சமூகம்
இலவச மருத்துவம், இலவச கல்வி இதை தரும் அரசுதான் நல்ல அரசு. சத்யராஜ் அவர்களின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் சென்னையில் ஈழத்துத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வசதியில்லாத மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து முகாம் ஒன்றை நடத்தினார். இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆலோசனையும், இலவச விட்டமின் மாத்திரைகளையும் வழங்கினார். இது பற்றி திவ்யா சத்யராஜ், "சிறுவயது முதலே ஊட்டச்சத்து நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை. என் படிப்பு தமிழ்நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கும், ஈழத்துத் தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் பெருங்கனவாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும், ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்தேன். மக்களின் தேவை என்ன...
அட்சய திருதியையின் அரசியல்

அட்சய திருதியையின் அரசியல்

கட்டுரை, சமூகம்
லட்சங்களைக் கொட்டிய விளம்பரங்கள். அழகிய பெண்களின் ஜொலிக்கும் நகை அலங்காரங்கள், அணிவகுப்புகள். மாயப்பேச்சுக்கள். மயக்கும் சலுகைகள். தள்ளுபடிகள், தவறவிடாதீரெனச் செல்லமாய் மிரட்டும் பிரபலங்கள். அடுத்த சில தினங்களுக்கு இந்த அட்சயதிரிதியை அத்துமீறல்கள் இன்னும் ஆர்ப்பாட்டமாய் இருக்கும். ஒன்றுமில்லாதவைகளை ஊதிப் பெருக்கி ஏதோ வாரது வந்த வாய்ப்பு என்பதைப்போல நுகர்வோரை நம்பவைக்கும் மூளைச்சலவைதான் நுகர்வு கலாச்சாரத்தின் மிகப்பெரிய சாபக்கேடு. இதனால் நுகர்வோருக்கு சின்ன எலும்புத்துண்டுகளும், கார்பப்ரேட் கயவாளிகளுக்கு கொள்ளை லாபமும் சர்வ நிச்சயம். சித்திரை மாத அமாவாசையில் இருந்து மூன்றாவது நாள் அட்சயதிருதியை தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழில் மொழிபெயர்த்தால் அள்ள அள்ள குறையாத நாள் எனப் பொருள் கொள்ளலாம். இந்த நாளுக்கு நிறைய புராண கதைகள் இருந்தாலும், அடிப்படையில் இந்த நாளின் நல்ல எண்ணங்கள், செயல்கள், சி...