Shadow

திரை விமர்சனம்

சுந்தர தெலுங்கில் நெடுநல்வாடை

சுந்தர தெலுங்கில் நெடுநல்வாடை

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நல்லபடைப்பு தனக்கான அங்கீகாரத்தை அதுவாகவே தேடிக் கொள்ளும் என்பதற்கான ஒரு நல்லபடைப்பு தனக்கான அங்கீகாரத்தை அதுவாகவே தேடிக்கொள்ளும் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது நெடுநல்வாடை திரைப்படம். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி தமிழ்சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் நெடுநல்வாடை. தமிழ் இலக்கியத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்து மிக அற்புதமான கதையை எழுதி, வெகு சிறப்பான அழகியலோடு படத்தை இயக்கி இருந்தார் அறிமுக இயக்குநர் செல்வகண்ணன். படத்தின் சிறப்பம்சங்கள் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது. 2019-ல் சிறந்த படம் என பலரும் தங்கள் விரல்களாலும் குரல்களாலும் நெடுநல்வாடையைப் பற்றிப்பேசிக்கொண்டே இருந்தார்கள். இப்படி எல்லோராலும் பேசப்பட்ட இப்படம் தற்போது தெலுங்கு பேசியிருக்கிறது. தெலுங்கில் நல்ல சினிமாவை விரும்பி வரவேற்கும் சானிஷா கிரியேசன்ஸ் என்ற நிற...
மாறா விமர்சனம்

மாறா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாறாவை முற்றிலும் வேறொரு படமாக எடுத்திருக்கலாம். சார்லியோட பலமே, அதில் பதில்களை விட கேள்விகள் தான் அதிகம். சார்லியோட நாடோடி வாழ்க்கைக்கான காரணம் அவனோட வாழ்க்கை தத்துவம் சார்ந்தது. அவன் ஏதோ ஒரு விஷயத்தைத் தேடி அலையவில்லை. அவனது தேடல் அகம் சார்ந்தது. அது தான் அந்தப் படத்தோட ஆன்மா. பார்வதி தேடிப் போவது அவனோட அபாரமான கலைக்காக இல்லை. அவனோட அந்த intriguing வாழ்க்கைமுறைக்காகத்தான். சார்லி அந்தப் படத்தில் ஒரு சூப்பர் ஹீரோ. ஏனெனில் சார்லியை மற்றவர்கள் கண் வழியாகப்தான் பாப்போம். ஜெயகாந்தனின் வரியான, 'விஸ்வரூபம் என்பது காட்டப்படுவதல்ல. காண்பது' என்வதற்கிணங்க, அங்கே சார்லியோட விஸ்வரூபம் ஒவ்வொருத்தரோட பார்வையில் இருந்து விஸ்தாரமாகும். அவன் அழுகை பார்வையாளர்களுக்குத் தெரியாது. ஏனெனில் நாம் அவனை தூரத்தில் இருந்தே தான் பார்க்கிறோம். அந்தப் படத்தின் அந்த அம்சத்தினை, அந்த ஆன்மாவைப் புரிந்து கொள்ளாமல், அல்லத...
சியான்கள் விமர்சனம்

சியான்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு பெரிய பாரத்தை மென்மையாய் மனதில் தூக்கி வைத்துள்ளார் இயக்குநர் வைகறை பாலன். மூத்தவர்கள், பெரியவர்கள், பாட்டன் என்ற பதத்தில் ‘சியான்கள்’ என்ற வார்த்தை படத்தில் உபயோகப்பட்டுள்ளது. ஏழு சியான்கள் தான் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள். அந்த மண்ணின் மைந்தர்களுக்கு இடையேயான நட்பு, கிராமத்திய வெள்ளந்தித்தனம், வீட்டினரால் அனுபவிக்கும் அவமானம்/ புறக்கணிப்பு என இப்படம் கவனத்துக்குரிய முக்கிய படமாக ஈர்க்கிறது. ஒரு வேளை உணவிற்காக ஒரு முதியவர் அவமானப்படுத்தப்படுகிறார்; சொத்துக்காக ஒரு முதியவரின் குறுக்கெலும்பைச் சேதப்படுத்திப் படுத்த படுக்கையாக்குகின்றனர்; இறந்து விடும் அம்மாவின் தண்டட்டியைப் பெறுவதன் பொருட்டு, தண்டட்டி கிடைத்தால் அப்பாவுக்குக் கஞ்சி ஊத்தப்படும் என பொதுச் சபையில் மகன்கள் இரக்கமற்று, கூச்சமற்று ஏலம் விடுகின்றனர். முதுமைப் பருவம் எய்துபவர்களின் வாழ்க்கை எத்தகைய ரணத்துடன் கழிகிறது என்ப...
என் பெயர் ஆனந்தன் விமர்சனம்

என் பெயர் ஆனந்தன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
6 அத்தியாயம் படத்தில், "சித்திரம் கொல்லுதடி" எனும் அத்தியாயத்தை இயக்கிய ஸ்ரீதர் வெங்கடேசனின் தனி முதல் படம். அந்தப் படத்தின் சொல்லிக் கொள்ளும்படியான தனித்துவ முயற்சியாக, அவரது குறும்படம் மட்டும் தனித்துக் கவர்ந்தது. 'அடிமை சுதந்திரம்' எனும் குறும்படத்திற்காக சர்வதேச விருதுகள் பெறும் இயக்குநர் சத்யாவிற்கு, திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. முதல் நாள் படப்பிடிப்பின் பொழுது, அவரை முகமூடி அணிந்த நபரொருவர் கடத்தி விடுகிறார். யாரால் ஏன் கடத்தப்பட்டார் என்பதுதான் படத்தின் கதை. தெருக்கூத்துக் கலைஞராக அருணும், நாடகக் கலைஞராக அரவிந்த் ராஜகோபாலும் நிறைவாக தன் பங்கினைச் செய்துள்ளனர். ஜோஸ் ஃப்ராங்கிளினின் இசையில், கலைஞர்கள் தங்கள் வயிற்றுப்பாடினைப் பாடும் பாடல் மனதை ஊடுருவித் துளைக்குமளவு அட்டகாசமாக உள்ளது. புருஷோத்தமன் வீரையனின் பாடல்வரிகள் அவ் உணர்வெழுச்சியைத் தான் படம் தந்திருக்கவேண்டும். ஆ...
காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்

காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தப் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், அதற்கான காரணமாக, 'இது ஒரு மரியாதையான முயற்சி' என்றார். சாத்தாங்குளம் இரட்டைக் கொலை சம்பவம் ஏற்படுத்திய அதிர்வை நினைவுறுத்துகிறது படம். மேலே உள்ள அந்தப் போஸ்டரே அதற்கு சாட்சி. லாக்கப் மரணம், கஸ்டடியல் வயலன்ஸ் என போலீஸின் அராஜகப் பக்கங்களில் ஒன்றை அழுத்தமாகப் பதிந்துள்ளது படம். இரு உருளை வண்டியில் மனைவியுடன் வரும் பிரபுவைக் காவல்துறை மறித்து விசாரிக்கின்றனர். ஆவணங்களை சரியாக வைத்திருந்தும், 'குடித்துள்ளார்; RC புக் இல்லை' என எனச் சொல்லி பிரபுவை கைது செய்கிறது போலீஸ். அதன் பின், பிரபுவை அடிபணிய வைத்து, அலைகழித்து, அவனது வாழ்வைக் கேள்விக்குறியாக்கி, சீர்குலைத்து சொல்லொண்ணாத் துன்பத்திற்கு ஆட்படுத்துகிறது, பொதுமக்களின் ஊழியரும் நண்பரும் பாதுகாவலருமான போலீஸ். இன்ஸ்பெக்டர் கண்ணபிரானாக மைம் கோபி வெறுப்பைச் சம்பாதித்துள்ளார். படத்த...
மூக்குத்தி அம்மன் விமர்சனம்

மூக்குத்தி அம்மன் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
அமீர் கானின் PK படம் தான் இப்படத்திற்கு இன்ஸ்பிரேஷன் என்றாலும், ஆன்மிகத்தின் பெயரால் கற்பனைக்கு எட்டாத அளவு சம்பாதிப்பவர்களைக் கலாய்த்து ஒரு படத்தை உருவாக்கிவிட்டார் RJ பாலாஜி. NJ சரவணனோடு இணைந்து, முதல் முறையாக இயக்கத்திலும் கவனம் செலுத்தியுள்ளார் RJ பாலாஜி.  மூக்குத்தி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 11000 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த நினைக்கிறார் பகவதி பாபா எனும் கார்போரெட் சாமியார். அதை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லப் போராடும் நிருபரான எங்கல்ஸ் ராமசாமியின் முன் பிரசன்னமாகும் அவரது குலதெய்வமான மூக்குத்தி அம்மன், அவரது கோயிலை உலகப் புகழடையுமாறு செய்யும்படி கேட்டுக் கொள்கிறார். ராமசாமியால் பகவதி பாபாவைத் தடுக்க முடிந்ததா, அம்மனின் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. ஸ்னீக்-பீக்கில், ஏசுவை தனது நண்பரென மனோபாலாவிடம் சொல்லும் மூக்குத்தி அம்மன், திருப்பதி வெங்கடாசலப...
சூரரைப் போற்று விமர்சனம்

சூரரைப் போற்று விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
சூரன் என்றால் அநாயாசமான திறமை படைத்தவன் எனப் பொருள். விமானத்தில் செல்வதென்பதே எட்டாக்கனியாக இருக்கும் ஒருவன், ஏர்லைன்ஸ் ஆரம்பித்துக் காட்டுகிறேன் என்ற கனவு கண்டு, அதை நனவாக்கிய அசாத்திய சாகசம்தான் 'சூரரைப் போற்று' படத்தின் கதை. Simply fly! (தமிழில்: வானமே எல்லை) என்ற சுயசரிதைப் புத்தகத்தைத் தழுவி, ஒரு சுவாரசியமான புனைவாக்கத்தைக் கொடுத்துள்ளார் சுதா கொங்கரா. திரையரங்கில் பார்க்க வேண்டிய படமென்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது படம். திரையரங்கில் வெளியிட்டாலும், ரசிகர்கள் செல்லத் தயாராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், நேர்த்தியான விஷூவலும், ஜி.வி.பிரகாஷின் அற்புதமான இசையுமே! திரையரங்கில் பார்க்க வேண்டிய கொண்டாட்டத்தைப் படம் கொண்டுள்ளது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும், கொண்டாட்டத்திற்கான மேஜிக்கைச் செய்கிறது 'மண்ணுருண்ட', 'வெய்யோன் சில்லி', 'கா...
சைலன்ஸ் விமர்சனம்

சைலன்ஸ் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
சியாட்டல் வாழ் இசை கலைஞரான அந்தோனி கொன்சால்வேஸ் மர்மமான முறையில் ஒரு பேய் வீட்டில் கொல்லப்படுகிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத அவரது காதலி சாக்‌ஷியும் அமானுஷ்யமான முறையில் தாக்கப்படுகிறார். கொலைக்குக் காரணம் அமானுஷ்யம் சூழ்ந்த அந்த வீட்டின் பேய் என்று அனைவரும் நம்பும் பட்சத்தில், கொலையாளியைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் காவல்துறை அதிகாரியான மகாலக்‌ஷ்மி. கொலைக்கான காரணத்தையும், கர்த்தாவையும் மகாலக்‌ஷ்மி எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் கதை. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட படம், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு மும்மொழியில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே என நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம். எனினும், சியாட்டலில் கதை நிகழ்வதாலோ என்னவோ, படத்தில் ஒன்ற முடியாமல் ஒரு அந்நியத்தன்மை இழையோடுகிறது. டீட்டெயிலிங் இல்லாத கத...
க/பெ. ரணசிங்கம் விமர்சனம்

க/பெ. ரணசிங்கம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
கால சக்கரம் போல் அரசு இயந்திரமும் சுழன்று கொண்டே இருக்கிறது. கண்களுக்குப் புலப்படாதகால சக்கரம் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாது; மனிதர்களால் இயக்கப்படும் அரசு இயந்திரமோ ஆட்களுக்குத் தக்கவாறு தன் ஓட்டத்தை மாற்றிக் கொள்ளும். புகழ்மிகு நடிகை ஸ்ரீதேவியின் உடல் ராஜ மரியாதையோடு கொண்டு வர உதவ இயங்கும் அரசு இயந்திரம், ரணசிங்கத்தின் இறந்த உடலைக் கொண்டு வர இல்லாத நொறுநாட்டியமெல்லாம் பேசுகிறது. அரசு இயந்திரம் சாமானியனுக்குக் காட்டும் முகமும், அதிகாரத்திற்கும் பணத்திற்கும் காட்டும் முகமும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தைப் போன்றது. இப்படம், அதைத் தோலுரித்துக் காட்டுகிறது. இது அரசுடனான அரியநாச்சியின் தனிப்பட்ட போராட்டம். ஆனால் படத்தின் தலைப்பில் இருந்தே ரணசிங்கத்தின் ஆதிக்கம்தான். எவரையும் நம்பி வாழ முடியாது எனத் துணிந்து போராடத் தொடங்கும் அரியநாச்சி, கணவனின் சட்டையை அணிந்தே போராடுகிறார். இ...
லீலா (2016) விமர்சனம்

லீலா (2016) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இலக்கியப் படைப்பைத் திரைப்படமாக எடுப்பது சாதாரண விஷயமன்று. பெரும்பாலும் இலக்கியம், படைப்பாளியின் கட்டுக்கடங்காச் சுதந்திரத்தையும், எல்லையற்ற கற்பனையையும் சார்ந்து இருக்கக்கூடியது. மேலும் அங்கு ஆல்-இன்-ஆல் படைப்பாளி மட்டுமே க்ரியேட்டராக இருக்கிறார். ஆனால் திரைப்படம் சமூகம், சென்சார், காட்சிப்படுத்தும் வலி, பட்ஜெட் என பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நூற்றுக்கணக்கான மனிதர்களின் கூட்டுச் செயற்பாட்டுடன் இயங்கும் பெருஞ்செயல். இதனாலேயே இலக்கியப் படைப்புகளைத் திரைப்படமாக்குவது பெரும்பாலும் தோல்வியில் முடிந்திருக்கிறது. கேரள எழுத்தாளர் உண்ணி. ஆர் அவர்கள் எழுதிய சிறுகதை தான் லீலா. ஒருவகையில் இந்தக் கதையை மனித மனதின் அறம், சமூக ஒழுக்கம் குறித்த சர்ரியலிச விமர்சனம் என்றும் கொள்ளலாம். காட்சிப்படுத்துவதற்கு மிகவும் சிக்கலான கதையைத் திரைப்படமாக எடுக்கத் துணிந்ததற்கே கேரளத் திரைத்துறையின் முக்கிய இயக்குனர...
Portrait of a Lady on Fire விமர்சனம்

Portrait of a Lady on Fire விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மனிதனுக்கு சுதந்திரமும், கலையும் எவ்வளவு முக்கியமானவை என்பதைப் படம் ஒரு கவிதையாக உணர்த்துகிறது. கான்ஸ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள் (2019) பெற்றது உட்பட, பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது இந்த ஃப்ரெஞ்ச் மொழிப்படம். ஒரு பெண் இயக்குநரின் படம், கான்ஸ்-இன் Queer Palm விருதினைப் பெறுவது இதுவே முதல்முறையாகும். கோமாட்டி ஹெலூயிஸை ஓவியமாக வரைய, பிரட்டானி தீவுக்கூட்டங்களில் உள்ள ஒரு தீவு ஒன்றுக்கு வரவழைக்கப்படுகிறாள் ஓவியை மரியேன். அந்த ஓவியத்தை மிலனிலுள்ள கோமான் ஒருவனுக்கு அனுப்பித் திருமணத்திற்குச் சம்மதம் பெறுவதே ஹெலூயிஸினுடைய அம்மாவின் திட்டம். திருமணத்தில் விருப்பமில்லாத ஹெலோயிஸ் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறாள். ஆக, அவளுக்குத் தெரியாமலேயே, ஹெலூயிஸை ஓவியமாக வரைவதுதான் மரியேனுக்கு முன்னுள்ள சவால். அப்பொழுது அவர்கள் இருவருக்கிடையே ஏற்படும் காதல்தான் படத்தின் கதை. புன்னகையை இழந்துவிட்ட ...
சூஃபியும் சுஜாதயும் விமர்சனம்

சூஃபியும் சுஜாதயும் விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஒரு சூஃபிக்கும், சுஜாதா எனும் வாய் பேசா முடியாத பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. “சூஃபிகள், ஆடவும் பாடவும் தெரிந்த துறவிகள்” என்பார் சுஜாதாவின் பாட்டி. சூஃபியை, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராகப் பார்ப்பார் சுஜாதாவின் அப்பா. உண்மையில், சூஃபிகள் மதங்களைக் கடந்தவர்கள். சூஃபிகளை, இறைச் சிந்தனையில் வாழும் ஞானிகள் என்று சொல்லலாம். பொதுவாகத் துறவு மனநிலை கொண்டவர்களாக இருப்பார்களே அன்றி, கட்டாயமாகத் துறவியாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. மதத்தை மீறிக் கலைகளின் வாயிலாக இறைவனின் ஏகத்துவத்தை விசாலப்படுத்துவதே சூஃபிகளின் தன்மை. கலையின் வழியே எதிலும் கடவுளைக் காணும் எவருமே சூஃபிகள்தான். படம் மிகச் சிறந்த பேரானுபவத்தை அளிக்கிறது. வீல் சேரில் அமர்ந்திருக்கும் அபூப் இசைக்க, சுஜாதா நடனமாடும் காட்சி மிக அற்புதமாக உள்ளது. அக்காட்சியைப் பின்னுக்குத் தள்ளும் வகையில், சூஃபியின் கட்டை விரல் நடனம் அசத்துகிறது. இசை...
பெண்குயின் விமர்சனம்

பெண்குயின் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ரிதம் எனும் பெண்ணின் மகன் காணாமல் போய், ஆறு வருடங்களுக்குப் பின் கிடைக்கின்றான். அவனை யார் கடத்தினார்கள், அந்தச் சிறுவனுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரிந்து கொள்ள ரிதம் நினைக்கிறார். அவரால் அதைத் தெரிந்து கொள்ள முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. “ஓப்பன் பண்ணா, காட்டுக்கு நடுவுல ‘மதர் ஆஃப் நேச்சர்’ சிலை. ஒரு கருப்பு நாய், தத்தித் தத்தி நடக்கும் சின்ன பையன், சிலைக்குப் பின்னாடியிருந்து மஞ்சள் நிறக் குடையில் சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த கொலைகாரன். அதோடு படம் சரி” என பெண்குயின் பார்வையாளர்களைத் தெறிக்க விட்டுள்ளது. படத்தோடு ஒன்ற முடியாமல், தொடக்கத்தில் இருந்தே ஓர் அந்நியத்தன்மை இழையோடுகிறது. என்ன தான் விஷூவல்ஸில் அசத்தியிருந்தாலும், தட்டையான கதாபாத்திரங்களை மீறிப் படத்தில் கவனம் செலுத்த இயலாமல் போகிறது. சுமார் ஆறு வருடங்களுக்குப் பின் கிடைத்த மகனைத் தனி அறையில் படுக்க வைப்பதெனும் கலாச்சாரமே ப...
பொன்மகள் வந்தாள் விமர்சனம்

பொன்மகள் வந்தாள் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகள் மீது நடக்கப்படும் பாலியல் வன்முறையினால், அக்குழந்தைகளுக்கு ஏற்படும் வாழ்நாள் மன அதிர்ச்சியைப் (mental trauma) பற்றிப் படம் பேசுகிறது. போலீஸ் எப்படி பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகச் சோடிக்கும் என்பதையும் படம் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. இரட்டைக் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட ஜோதியை, சைக்கோ என முத்திரை குத்தி, 2004 இல் என்கவுண்ட்டர் செய்து விடுகிறது போலீஸ். அந்த வழக்கை மறுவிசாரணைக்குக் கொண்டு வருகிறார் பெட்டிஷன் பெத்துராஜ். இறந்துவிட்ட ஜோதிக்கு ஆதரவாக வெண்பா எனும் வக்கீல் களமிறங்க, 15 வருடத்துக்கும் முன் நிகழ்ந்த உண்மையைப் பார்வையாளர்களுக்குக் கதையாகச் சொல்கிறார் வெண்பா. வெண்பாவாக ஜோதிகா நடித்துள்ளார். பாதி படத்திற்கு மேல், நீதிபதியாக வரும் பிரதாப் போத்தனை, விஜய் டிவி ஜட்ஜ் என நினைத்துக் கொண்டு ஜோதிகா அழுது தீர்க்கிறார். படத்தின் சீரியஸ்னஸை அது நீர்த்துப் போகச் செய்கிறது. 'அந்தக...
தப்பட் விமர்சனம்

தப்பட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. 'தப்பட்' என்றால் "அறை (slap)" என்று பொருள். 'ஆர்டிகிள் 15' எனும் அதி அற்புதமான படத்தை இயக்கிய அனுபவ் சின்ஹாவின் படம். அதுவும் குடும்ப வன்முறையைப் (Domestic violence) பற்றிய படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. மாமியார் கொடுமை, வரதட்சணைக்காகத் துன்புறுத்தப்படுவது, வசை மாரி பொழிதல், கையை நீட்டி அடித்தல் என்ற பிசிக்கல் & வெர்பல் அப்யூஸ்கள் மட்டும் டொமஸ்டிக் வயலன்ஸில் வராது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, குடும்ப நலனெனக் காரணம் காட்டி ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பது போன்றவையும் டொமஸ்டிக் வயலன்ஸ்தான். "நான் கார் ஓட்டக் கத்துக்கவா?" - டாப்சி. "முதலில் ஒழுங்கா பராத்தா போடக் கத்துக்க?" - டாப்சியின் கணவன். இந்த உதாசீனத்த...