Shadow

திரை விமர்சனம்

கவுண்டம்பாளையம் விமர்சனம்

கவுண்டம்பாளையம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஓரு சிங்கத்தைக் கொளுத்தி விடுகின்றனர். அது எரிச்சல் தாங்காமல் ஆக்ரோஷமாக ஓடி வந்து கவுண்டம்பாளையம் என்ற தலைப்பில், வலி வேதனை கதறலுடன் பாய்கிறது. இப்படித் தலைப்பிலேயே வன்முறை தொடங்கிவிட, மனதைத் திடப்படுத்திக் கொண்டு அமர்ந்தால், பசுபதி மே/பா. ராசாக்காபாளையம் படத்தில் இருந்து இன்ஸ்பையராகி முதற்பாதியை ஒப்பேற்றியுள்ளார். ரஞ்சித் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் 'குழந்தை' ஆகும். வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத வடிகட்டின அப்பாவி. அவர் உடன் வேலை செய்யும் சேச்சி சினுங்கலான குரலில், 'வா பிசையலாம்' எனச் சொன்னால், அறிவு முதிர்ச்சியில்லாதவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். அறிவு முதிர்ச்சியுள்ளவர்கள் குணமாகப் பொறுமை காத்தால்தான், அடுத்த காட்சியில் அது பரோட்டா மாவு பிசைவதைப் பற்றிய வசனம் எனத் தெரிய வரும். 'ங்ண்ணா, பச்சு மண்ணு என்னைப் போய் சந்தேகப்பட்டுப் போட்டீங்களே!' என அவரது வெள்ளந்தித்தனத...
அந்தகன் விமர்சனம்

அந்தகன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்ற பொருள். 'அந்தாதுன்' எனும் ஹிந்திப்படத்தின் உரிமையை வாங்கி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் தியாகராஜன். பார்வையற்றவரான க்ரிஷ், பியானோ இசைக்கலைஞராக ஜூலியின் ரெஸ்டோபாரில் பணியில் சேருகிறார். அவரைத் தனது கல்யாண நாளன்று, தன் வீட்டில் வந்து வாசிக்கும்படி நடிகர் கார்த்திக் கேட்டுக் கொள்கிறார். க்ரிஷ், நடிகர் கார்த்திக்கின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கார்த்திக்கின்மனைவி சிமியால் கார்த்திக் கொல்லப்பட்டு இறந்துகிடக்கிறார். பார்வையற்றவர் என்ற போதும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் கிரிஷ். எப்படி அப்பிரச்சனையில் இருந்து மீள்கிறார் என்பதே படத்தின் கதை. ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகராகவும், ஆட்டோ ஓட்டுநராகவும் முரளி எனும் பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். சிம்ரனை, 'ஆம்பளப் பொறுக்கி' எனத் திட்டுகிறார். சின்ன பாத்திரம்த...
மின்மினி விமர்சனம்

மின்மினி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கனத்த இருளில் சிக்கி ஒரு புழுவைப் போல் உழன்று கொண்டிருக்கும் ஒருவனை, ஒளிரும் வண்டான மின்மினிப் பூச்சியைப் போல் மாற்ற ஒருத்தி மெனக்கெடுகிறாள். பாரிமுகிலன் எனும் பள்ளி மாணவன், தனது நண்பனின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இறந்துவிடுகிறான். பாரிமுகிலனின் உறுப்புகள் கொடையாக அளிக்கப்பட்டதில், பிரவீணா எனும் பள்ளி மாணவிக்கு இதய மாற்று அறுவைச்சிகிச்சை நடைபெறுகிறது. பாரிமுகிலனைப் பற்றி அறிய நினைக்கும் பிரவீனாவிற்கு, பாரியின் மரணத்தால் தன்னியல்பை இழந்து, வாழ்வின் மீதான எந்தப் பிடிப்புமின்றி சுற்றித் திரியும் சபரியைப் பற்றித் தெரிய வருகிறது. சபரியை அதிலிருந்து பிரவீனா மீட்க நினைக்கும் பொழுது, சபரி காணாமல் போய்விடுகிறான். சபரியின் ஒளியை அவனுக்கு பிரவீனாவால் மீட்க முடிந்ததா என்பதே படத்தின் கதை. பதின் பருவத்து நடிகர்கள், வளர்ந்து வாலிப பருவம் எய்துவதற்காக எட்டு வருடம் காத்திருந்து இப்படத்தை முடித்துள்ளார் இய...
நண்பன் ஒருவன் வந்தபிறகு விமர்சனம்

நண்பன் ஒருவன் வந்தபிறகு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் அமர விரும்பும் இளையராஜா ரசிகரான வெங்கட் பிரபு, ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகரான ஆனந்தினை சந்திக்கிறார். ஆனந்த் தன் வாழ்க்கையைக் குறித்தும், நண்பர்களைக் குறித்தும் வெங்கட் பிரபுவிடம் பகிர்வதுதான் படத்தின் கதை. சின்னச் சின்ன ஆசை, குட்டிச்சுவர் ஏறி, கல்லூரிச் சாலை, தனிமை தனிமையோ, Take it ஊர்வசி, வான் இங்கே நீலம் அங்கே, எல்லாப் புகழும் இறைவனுக்கே என ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த பாடலின் வரிகளை அத்தியாயங்களுக்கான உப தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். IV Trip - ஏலகிரி என நான்காவது அத்தியாயத்தின் தலைப்பு மட்டுமே இதில் விதிவிலக்கு. தலைப்பில் தான் தமிழ்த் திரைத்துறை சென்ட்டிமென்ட் பார்த்து ஒற்று தவிர்ப்பார்கள். இப்படத்தில் உப தலைப்புகளிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனந்த், ஆனந்தம் காலனியில் குடியேறி நண்பர்களைச் சம்பாதித்து மகிழ்ச்சியாகக் கல்லூரியை முடித்துவிடுகிறான். அதுவரை கலகலப்பா...
பேச்சி விமர்சனம்

பேச்சி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஐந்து நண்பர்கள் ட்ரெக்கிங் போகக் காப்புக்காட்டுக்குள் செல்கின்றனர். உடன் வந்த அந்த ஊரைச் சேர்ந்த வனக்காப்பாளர் பேச்சை மீறி, தடை செய்யப்பட்ட பகுதிகளை ஆராயும் ஆர்வத்துடன் எல்லை மீறுகின்றனர். அவர்கள் மாயமான் காட்டின் அமானுஷ்யத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பேய்ப்படங்களை நகைச்சுவையாக்கியும், ஒரு டெம்ப்ளட்டிற்குள் பழிவாங்கும் கதையாகச் சுருக்கியும் வைத்துவிட்டனர் கோலிவுட்டினர். ஹோலிவுட்டும் தேவைக்கு அதிகமான பேய்ப்படங்கள் எடுத்ததன் காரணமாகப் புதிதாய் வரும் பேய்த் திரைப்படங்களில் எந்த சிலிர்ப்பையும் உணராமல் தேமோவென அமர்ந்திருக்கின்றனர் பார்வையாளர்கள். பேச்சி இத்தகைய வகைமையில் இருந்து விலகி, ஒரு சீரியஸான அமானுஷ்ய படத்திற்கு உத்திரவாதம் அளிக்க முயன்று உள்ளது. பேச்சி என்ற சூனியக்காரியை, ஓர் அச்சுறுத்தும் பொம்மையில் ஆவாஹனம் செய்து, அப்பொம்மையை மரத்தில் ஆணியாலடித்து விடுகின்றனர். கொல்லி மலையின் அர...
வாஸ்கோடகாமா விமர்சனம்

வாஸ்கோடகாமா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
  வாஸ்கோடகாமா என்பது சிறைச்சாலையின் பெயர். நல்லது செய்பவர்களையோ, கெட்டது நடப்பதைத் தடுப்பவர்களையோ கைது செய்து சிறையில் தள்ளிவிடும் அதிசய யுகத்து சிறைச்சாலை அது. நல்லவர்கள் மிகவும் அருகிவிட்ட கலியுகத்தின் பிந்தைய காலமாம். சிறைக்குள் ஏதேனும் அடிதடியில் ஈடுபட்டு எவரையேனும் காயப்படுத்தினாலோ, கொலை செய்தாலோ விடுதலை செய்து விடுவார்கள். அநியாயங்கள் மிகுந்து கிடக்கும் உலகில், கண் முன் கெட்டதைக் கண்டால் பொங்கியெழும் நாயகன் வாசுதேவன் பல சிக்கல்களை எதிர்கொள்கிறான். நல்லதைத் தட்டிக் கேட்டால் சிறையில் அடைத்துவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் கைதாகும்போது, அவரது அண்ணன் மகாதேவன் பணம் கொடுத்து மீட்கிறார். அந்த அண்ணனின் சுண்டு விரலில் காயம் ஏற்பட, நரக (Naraka Multispeciality Hospital) மருத்துவமனைக்குச் செல்கிறார். இதயத்தில் பிரச்சனை என ஐ.சி.யூ.வில் சேர்த்து அனுப்பி வைத்துவிடுகின்றனர். அறமற்ற மருத்துவமனைக...
BOAT விமர்சனம்

BOAT விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சென்னை மீது ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்ற தகவலால் பதற்றத்துக்கு உள்ளாகின்றனர் மக்கள். கடலுக்குள் சென்று தப்பிக்கலாம் என குமரனின் துடுப்புப்படகில் சிலர் ஏறிக் கொள்கின்றனர். கரையில் இருந்து 12 மைல் தொலைவு கடலுக்குள் சென்று விட்டால், ஆங்கிலேயரின் ரோந்து படகு தொல்லையில் இருந்தும், வானில் இருந்து குண்டு வீசப்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்து விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. அத்துடுப்புப்படகில் நூலகர் முத்தையா, மயிலாப்பூர்வாசி நாராயணன், அவரது மகள் லட்சுமி, பாலக்காட்டு முகமது ராஜா, விஜயவாடா விஜயா, அவரது மகன் மகேஷ், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட லால் சேட்டு, துடுப்புப்படகுக்காரர் குமரன், குமரனின் பாட்டி முத்துமாரி ஆகியோர் உள்ளனர். பாதி வழியில் இர்வின் எனும் வெள்ளைக்காரரும் அப்படகில் அழையாத வேண்டா விருந்தாளியாகச் சேர்ந்து கொள்கிறார். இவர்களுடன் படகிற்குள் ஒரு எலி, படகிற்கு வெளியே ஒரு சுறா. ...
ஜமா விமர்சனம்

ஜமா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கூத்துக்கலை என்பது மனிதர்கள் சில பல ஒப்பனை உபகரணங்களுடன் நடத்தும் நிகழ்த்துக்கலை. மஹாபாரதக் கூத்து, வள்ளித்திருமண கூத்து, அரிச்சந்திர கூத்து என நமது புராண இதிகாசங்களை ஒட்டி இக்கலைகள் நடத்தப்படுவதுண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்படியான கூத்துக்களுக்கு மவுசு அதிகம். தற்போதைய சூழலில் கூத்துக்கலை வழக்கொழிந்து வந்தாலும், இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூத்துக்கலை பெரும் சிரமத்துடன் இயங்கி தான் வருகிறது. ஜமா படம் அப்படியான கூத்துக்கலையில் ஊடோடியுள்ள அக்கலைஞர்களின் வாழ்வையும், அதில் ஒருவனின் லட்சியத்தையும் காதலையும் பேசுகிறது. நாயகன் பாரி இளவழகன் சேத்தன் நடத்தும் கூத்து ஜமாவில் குந்தி அல்லது திரளெபதி வேடமிட்டு ஆடும் கலைஞன். அவருக்கு ஒரு தீரா ஆசை உள்ளது. அது என்னவென்றால் ஒருநாளாவது அர்ஜுனன் வேசம் போடவேண்டும் என்பதே. ஆனால் அதற்கு ஜமாவின் தலை ஆன சேத்தன் ஒத்துழைக்க மறுக்கிறார். பாரி இளவழகனின் அ...
ராயன் விமர்சனம்

ராயன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
D50 எனும் தனது ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இது இயக்குநராக அவருக்கு இரண்டாம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. காத்தவராயன், முத்துவேல்ராயன், மாணிக்கவேல்ராயன் என ராயன் சகோதரர்கள் மூவர். அவர்களுக்கு துர்கா எனும் தங்கை பிறக்கிறாள். அவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே, அவளைத் தூக்கிக் கொண்டு ராயன் சகோதரர்கள் சென்னை வந்துவிடுகின்றனர். வளர்ந்ததும், குடிகாரரான முத்துவேல்ராயனால் ஒரு பெரும்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அதை ஒன்றாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் ராயன் சகோதரர்கள், ஒரு கட்டத்தில், கதையில் எதிர்பாராத திருப்பமும், அதிர்ச்சி மதிப்பீடும் வேண்டுமெனக் கருதி தொலைந்து போகிறார்கள். படம் தொடங்கி இடைவேளை வரை நறுக்கு தெறித்தாற்போல் உள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருக்கும் ராயன் சகோதரர்களின் வாழ்க்கை, அந்த வாழ்விடம், முத்துவேல்ராயனுக்கும் மேகலாவுக்கும் இடையேயான காதல் என முதற்பாதி கச்சிதமா...
Deadpool & Wolverine விமர்சனம்

Deadpool & Wolverine விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வானத்தின் கீழ் இருக்கும் எதுவுமே புனிதமில்லை என சகலத்தையும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கும் டெட் பூல், இம்முறை பன்னண்டத்தில் (Multi-verse) இருக்கும் அத்தனையையுமே கேலிக்கும் கேள்விக்கும் கிண்டலுக்கும் உரியவை தான் என டாப் கியரில் கலாய்த்துள்ளார். முத்தாய்ப்பாக டெட்பூல் படத்தின் முன்னாள் உரிமையாளரான '21st Century Fox'-ஐ சகட்டுமேனிக்குக் கலாய்த்துத் தள்ளுகிறார் டெட்பூல். ஆங்கில வசனங்களின் சாறு குறையாதவண்ணம் தமிழ் டப்பிங்கையும் மிகக் கலகலப்பாக எழுதியுள்ளனர். சூப்பர் ஹீரோ நகைச்சுவைப் படம் என்றாலும் A சான்றிதழ் பெற்ற படமென்பதை நினைவில் கொள்க. படத்தை வால்ட் டிஸ்னி கையகப்படுத்தி இருந்தாலும், டெட்பூலின் வாய்க்குப் பூட்டு போடாமல் அப்படியே அனுமதித்துள்ளது சிறப்பு. ஒரு சூப்பர் ஹீரோவுக்கு எப்படி மரியாதையுடன் 'குட் பை' சொல்லி வழியனுப்பி வைப்பதென்பதற்கான செவ்வியல் எடுத்துக்காட்டாக லோகன் திரைப்படம் வ...
இந்தியன் 2 விமர்சனம்

இந்தியன் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தியன் தாத்தா முதல் பாகத்தில் தன் காலடியில் வளர்ந்த களையை தான் வெட்டி எறிந்ததைப் போல் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் உள்ள களையை வெட்டி எறிய வேண்டாம்; குறைந்தபட்சம் வெளிச்சத்திற்காவது கொண்டு வாருங்கள் என்று சொல்வதும், அதைத் தொடர்ந்த விளைவுகளும் தான் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை.நீண்ட நெடுங்காலமாக தயாரிப்பில் இருந்து வந்த படம். படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே 360 டிகிரியில் சுற்றி சுற்றி பிரச்சனைகள் சூழ்ந்த படம். ரோபாட் 2, ஐ போன்ற படங்களின் சுமாரான வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் தன்னை மீண்டும் நிருபிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் கொண்ட படம். பொதுவெளியில் மிகப்பெரிய விவாதத்தையும், லஞ்சம் ஊழல் குறித்தான பிரச்சனைகளை திரை வழியே தெருக்கோடியில் வாழும் கடைக்குடிக்கும் கொண்டு போய் சேர்த்த மாபெரும் வெற்றிப்படமான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், உலக ந...
கல்கி 2898 AD விமர்சனம்

கல்கி 2898 AD விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடவுளின் அவதாரக் கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இரண்டு கதைகள் உண்டு. ஒன்று வசுதேவர் தேவகிக்கு பிறந்த கிருஷ்ணரின் கதை. மற்றொன்று யோசேப்பு – மரியாவிற்கு பிறந்த இயேசுவின் கதை. இந்த இரண்டிலுமே பொதுவான அம்சங்கள் என்று பார்த்தால் குழந்தையை கொல்லத் துடிக்கும் மன்னர்கள், குழந்தையை காப்பாற்ற போராடும் தாய் தந்தையரின் போராட்டம், வானில் தெரியும் அடையாளங்கள் என பல உண்டு. இந்த பொதுவான அம்சங்களின் பின்னணியில் இந்து சமயத்தின் பிரதான நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கும் கலியுகத்தின் கல்கி அவதாரத்திற்கு கற்பனையாக ஒரு உரு கொடுத்தால் அது தான் “கல்கி 2898 AD திரைப்படத்தின் கதை.படம் குருஷேத்திரப் போரில் அபிமன்யு மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையை அழித்த அசுவத்தாமனுக்கு கிருஷ்ணர் சாகா வரமென்னும் சாபமளித்து, கல்கியாக தான் கருவில் தோன்றும் போது என்னைக் காப்பதின் மூலம் உனக்கு சாப விமோசனமும் கிடைக்கும் என்று...
லாந்தர் விமர்சனம்

லாந்தர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மின்சாரம் இல்லாத காலத்திலும், மின்சாரமே இன்னும் கிடைக்காத கிராமங்களிலும் இரவின் ஊடான பயணத்திற்கு லாந்தர் விளக்குகள் பெரும் உதவியாக இருக்கும். அது போல் ஓர் இரவில் கோயம்புத்தூர் நகரில் நடக்கும் தொடர் குற்றங்களை தேடிச் செல்லும் போலீஸ் அதிகாரி ACP விதார்த்தின் பயணம் தான் இந்த “லாந்தர்”சின்ன சின்ன விசயங்களுக்கு கூட பயப்பட்டு மயங்கி விழும் ஒருவித போஃபியாவினால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியுடன் வாழ்ந்து வரும் போலீஸ் அதிகாரி விதார்த் அன்றைய இரவை மனைவியின் அருகாமையில் கழிக்க முற்பட, நகரில் ஒரு மர்ம நபர் எதிர்ப்படும் அத்தனை பேரையும் கொடூரமாக தாக்கியபடி செல்லும் தகவல் வருகிறது. வேறு வழியின்றி தன் மனைவியை தனியாக வீட்டில் விட்டுவிட்டு, அந்த மர்மநபரை தேடிச் செல்கிறார் விதார்த். விதார்த் அந்த மர்ம நபரை கண்டுபிடித்தாரா..? அந்த மர்ம நபருக்கு என்ன பிரச்சனை..? எதனால் அவன் எதிர்ப்படும் அத்தனை பேரையும் தாக்...
பயமறியா பிரமை விமர்சனம்

பயமறியா பிரமை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலையை கலையாகக் கருதி 25 வருடங்களில் 96 கொலைகள் செய்த ஒரு கைதியை பேட்டி எடுத்து, அதை கதையாக எழுதும் ஒரு எழுத்தாளரும், அதை படிக்கும் வாசகர்களும் அந்த கொலையாளியைப் போல் கொலையை கலையாகக் கருதி கொலைகள் செய்யத் துவங்கினால் அதுதான் “பயமறியா பிரமை” படத்தின் கதை.இதுதான் கதையா என்று கேட்டால், படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் ஸ்லைடு அப்படித்தான் கூறுகிறது. ஆனால் அதற்கு எதிர்மாறாக காட்சிகள் காட்டப்படுகின்றன. படத்தில் எழுத்தாளர் புத்தகம் எழுதுவதாகவோ, அல்லது அவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறினார் என்பதோ காட்சிகளில் இல்லவே இல்லை. அவர் வெறுமனே படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை பேட்டி என்கின்ற பெயரில் உப்பு சப்பில்லாத ஏன்..? எப்படி..? என்கின்ற கேள்விகளை கேப்பதும், இது மனிதாபிமானமற்ற செயல் என்று கொலையாளியை சபிப்பதுமாகவே இருக்கிறார்.இதற்கு இடையில் வேறு வேறு கதைமாந்தர்களாக வரும் குரு சோமசுந்தர...
ரயில் விமர்சனம்

ரயில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எப்பொழுதும் போதையில் இருந்து, தனக்கு வரும் வேலை வாய்ப்புகளை இழக்கும் நாயகன், பஞ்சம் பிழைக்க தன் ஊருக்கு வந்து ஒழுக்கமாக வேலை பார்த்து வரும் வட இந்திய தொழிலாளிகளால் தான் தன்னை போன்றோருக்கு வேலை இல்லை என்று வஞ்சம் வளர்க்கிறான். அந்த வஞ்சத்தினால் விளைந்தது என்ன..? என்பது தான் ரயில் திரைப்படத்தின் கதை.தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூரில் குடியும் கூத்துமாக வாழ்ந்து வரும் நாயகன் குங்குமராஜுக்கு வீடுகளுக்கு வயரிங் செய்யும் வேலை. ஆனால் அந்த வேலையை ஒழுங்காக செய்யாமல் தன் நண்பன் ரமேஷ் வைத்யாவுடன் கூட்டணி அமைத்து குடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். இதனால் அவருக்கு வர வேண்டிய வேலைகள் கூட வட இந்திய தொழிலாளர்களுக்குப் போய்விடுகிறது. சற்று வசதிபடைத்த மனைவி வீட்டிலிருந்து வந்த நகை, பணம் மற்றும் இரு சக்கர வாகனம் முதற்கொண்டு குடித்து அழித்துவிட்ட காரணத்தால் மனைவி வைரமாலாவுடனும் இணக்கமான உறவு இ...