
பிக் பாஸ் 3 – நாள் 22
'உரசாதே' பாடலுடன் தொடங்கியது நாள். கூடுதல் உற்சாகத்துடன் ஆடினார் லியா. வர வர இந்த சாண்டி டான்ஸ் ஆட வருவதே இல்லை. பாடல் முடியும் தருவாயில் ஷெரின் அருகில் நின்ற சாண்டி, தமிழ் சினிமாவில் வருவது போல் குடையால் அவர்களை மறைத்துக் கொண்டு குடையை மட்டும் ஆட்டிக் கண்பித்தார். அதை சரியாக கேட்ச் செய்த கேமரா, எடிட்டிங் டீமுக்கு வாழ்த்துகள்.
காபி போட லேட்டானதால், கிச்சன் ஏரியாவில் காபி, காபி என்று கெரொ செய்து கொண்டிருந்தார்கள். அப்போது சரவணனும், மோகனும் சைகையில் பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த காட்சியில் மோகன் சரவணன் பற்றிப் புகார் சொல்ல ஆரம்பித்தார். சாக்ஷி, ரேஷ்மா அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். தன்னைத் தொடர்ந்து அவமதிப்பதாகவும், தன்னால் தாங்க முடியவில்லை எனவும் சொல்லிக் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் மோகன்.
இல்ல தெரியாமல்தான் கேக்கறேன். இப்படி யாராவது நம்மளை அவமானபடுத்தினால் முதலில் நமக்குக் கோவம...











