சமூகம்

இலவச ஊட்டச்சத்து மருந்துகள் – திவ்யா சத்யராஜ் அதிரடி
இலவச மருத்துவம், இலவச கல்வி இதை தரும் அரசுதான் நல்ல அரசு. சத்யராஜ் அவர்களின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.
சில நாட்களுக்கு முன் சென்னையில் ஈழத்துத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வசதியில்லாத மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து முகாம் ஒன்றை நடத்தினார். இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆலோசனையும், இலவச விட்டமின் மாத்திரைகளையும் வழங்கினார்.
இது பற்றி திவ்யா சத்யராஜ், "சிறுவயது முதலே ஊட்டச்சத்து நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை. என் படிப்பு தமிழ்நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கும், ஈழத்துத் தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் பெருங்கனவாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும், ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்தேன். மக்களின் தேவை என்ன...

அட்சய திருதியையின் அரசியல்
லட்சங்களைக் கொட்டிய விளம்பரங்கள். அழகிய பெண்களின் ஜொலிக்கும் நகை அலங்காரங்கள், அணிவகுப்புகள். மாயப்பேச்சுக்கள். மயக்கும் சலுகைகள். தள்ளுபடிகள், தவறவிடாதீரெனச் செல்லமாய் மிரட்டும் பிரபலங்கள். அடுத்த சில தினங்களுக்கு இந்த அட்சயதிரிதியை அத்துமீறல்கள் இன்னும் ஆர்ப்பாட்டமாய் இருக்கும்.
ஒன்றுமில்லாதவைகளை ஊதிப் பெருக்கி ஏதோ வாரது வந்த வாய்ப்பு என்பதைப்போல நுகர்வோரை நம்பவைக்கும் மூளைச்சலவைதான் நுகர்வு கலாச்சாரத்தின் மிகப்பெரிய சாபக்கேடு. இதனால் நுகர்வோருக்கு சின்ன எலும்புத்துண்டுகளும், கார்பப்ரேட் கயவாளிகளுக்கு கொள்ளை லாபமும் சர்வ நிச்சயம்.
சித்திரை மாத அமாவாசையில் இருந்து மூன்றாவது நாள் அட்சயதிருதியை தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழில் மொழிபெயர்த்தால் அள்ள அள்ள குறையாத நாள் எனப் பொருள் கொள்ளலாம். இந்த நாளுக்கு நிறைய புராண கதைகள் இருந்தாலும், அடிப்படையில் இந்த நாளின் நல்ல எண்ணங்கள், செயல்கள், சி...

கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்
வரலாற்றுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நெற்களஞ்சியம் என்று கொண்டாடப்படும் தஞ்சைப் பாசனப்பரப்பு பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறது.
“விளைந்தால் விலையில்லை; விலையிருந்தால் விளைச்சலில்லை” என்ற சந்தைக் கலாசாரத்தால் விவசாயி ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கிறான். இப்போது காவிரியில் தண்ணீரும் கண்களில் கண்ணீரும் வற்றிப்போன பிறகு என்ன செய்வான் பாவம் ஏழைத் தமிழ் உழவன்?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கான உரிமைத் தண்ணீரைக் குறைத்துக்கொடுத்தது. அந்தக் குறைந்த தண்ணீரையாவது காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையின்மீது இப்போது நம்பிக்கை இல்லாமல் செய்வது நியாயமா?
உச்சநீதிமன்றத் தீர்ப்பு ‘ஸ்கீம்’என்ற சொல்லைச் சுட்டியிருக்கிறது.
கிளி என்றாலும் கிள்ளை என்றாலும் ஒன்றுதான். ‘ஸ்கீம்’ என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றத்த...

அமலா பாலின் தொண்டு நிறுவனம்
பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் இந்த இளைஞர்களை வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையைத் தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலா பால் தற்பொழுது நிரூபித்துள்ளார்.
கஷ்டப்படும் மக்களுக்குச் சேவை செய்வதற்காக, அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் அமலா பால். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியைத் திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது.
தனது தொண்டு நிறுவனம் குறித்து, ''அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடைப்பேச்சுக்குத் தயார் செய்து கொண்டிருந்த பொழுது தான் சில முக்கியமான புள்ளிவிவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70...

மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி
சமீபத்தில் தமிழில் மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை 'கலர்ஸ் தமிழ்'. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் 'கலர்ஸ்' தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்குப் பெயர் போனது.
'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில் படிப்பைத் தாண்டி வியக்கத்தக்க திறமைகளைக் கொண்ட குழந்தைகளை மையமாக வைத்து 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' என்ற ஒரு ஷோவைத் தொடங்கியுள்ளனர்.
''தொலைக்காட்சியைக் கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும், இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தரவேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் எங்களிடம் இருந்தது. படிப்பைத் தாண்டி பல விஷயங்களும் திறமைகளும் நிறைய உள்ளது என்ற எங்களது எண்ணம் பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. திறமைகளுக்குப் பஞ்சமே இல்லாத மண் நம்முடையது. நங்கள் தேடிக் கண்டுபிடித்து இந்த ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான ...

ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்
“எதிர்காலத்தில் என் குழந்தை தன் பணிகளை தானே செய்து கொள்ளும்படி வளர்வானா?” எல்லா ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இக்கேள்வி இருக்கும். உண்மையில் எல்லோருக்கும் அது சாத்தியமா என்பதை நான் அறியேன். ஆனால் பலருக்கும் அது சாத்தியம் என்பதை நம்புகிறேன்.
நம் குழந்தை அந்த இடத்தை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புராணங்களில் சொல்லப்பட்ட பூமா தேவியை விட, அதிகம் பொறுமை மிக்கவர்களாகp பெற்றோர் மாறவேண்டும். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வதிலோ, கேட்பதிலோ எப்படி நம் குழந்தைகள் சலிப்படைவதில்லையோ, அதைப்போல பல மடங்கு நாமும் கற்றுக் கொடுப்பதில் மாறவேண்டும்.
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இன்னும் கூடுதலாக அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவேண்டும். அதில் ஆட்டிச நிலைக்குழந்தைகளை ஈடுபடுத்தவேண்டும். அவர்கள் அதைப் பற்றிக்கொள்ள, சில நா...

என்று நிற்கும் இந்த அடாச்செயல்?
‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்’ என்பது பழமொழி. சில தசாப்தங்களுக்கு முன், ஆசிரியர்களின் கையில் இருந்த பிரம்பு, பல மாணவர்களின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் மந்திரக்கோலாக இருந்தது. காலத்தின் வேகமான மாற்றத்தில், சேவையாய்ப் பார்க்கப்பட்ட கல்வி, வியாபாரமாய்ப் பரிணாமம் அடைந்து சொல்லொண்ணா சிக்கல்களைச் சமூகத்தில் கொண்டு வந்ததிலிருந்து, மாணவர்களின் மாற்றத்திற்கு உதவிய மந்திரக்கோல் மரணத்தை நோக்கித் தள்ளி வருகிறது.
இதை அவதானித்த அரசாங்கமும், மாணவர்களை அடிப்பதற்கு ஆசிரியர்களுக்குத் தடை விதித்துள்ளது. அறிவை வளர்க்க என்றிருந்த கல்வி, எப்பொழுது மதிப்பெண் வேட்டையாக மட்டும் மாறியதோ, அன்றிலிருந்து கண்ணுக்குத் தெரியாத கண்ணியாக மாணவர்கள் மீது மன அழுத்தம் படர ஆரம்பித்துவிட்டது. சமீபமாக வேலூரில் நான்கு மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை புரிந்து கொண்டதையும், சத்யபாமாவில் ஒரு கல்லூரி மாணவி த...

கவிஞர் சினேகனின் மக்கள் நூலகம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக கவிஞர் சினேகன் அறிவிக்கப்பட்டால், அதில் கிடைக்கும் பரிசுத்தொகையான ரூபாய் ஐம்பது லட்சத்தைக் கொண்டு அவரது சொந்த கிராமமான தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டியிலனைத்து வசதிகளையும் கொண்ட நவீன நூலகம் கட்டுவதாகாறிவித்தார்.
உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் சினேகனின் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சினேகன் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்படாவிட்டாலும், அவரது கனவு நிறைவேறுவதற்காகப் பல்வேறு தொண்டு அமைப்புகளும், திரைப்படத் துறையினரும், தொழிலதிபர்களும் முன் வரத் தயாராக உள்லனர்.
அதில் முதல் நபராக நடன இயக்குநரும் நடிகரும் சமூக ஆர்வலருமான திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள், ரூபாய் பத்து லட்சம் நன்கொடையாக சினேகனின் சினேகம் செயலகத்தின் "மக்கள் நூலக"ப் பணிகளுக்காக வழங்கியுள்ளார். இவரின் முழுஒத்துழைப்போடு, சினேகனின் லட்சியம...

மாற்றத்திற்கான பாதையில் நேச்சுரல்ஸ்
இயற்கையான அழகிற்கு மெருகு சேர்க்கும் வண்ணம், அறிய பல யுக்திகளை கையாண்டு பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் கூட, அழகிற்கு அழகு சேர்க்கும் பணியை பாங்குற, சீரிய முறையில் செய்து வரும் அழகு நிலையம்தான் நேச்சுரலஸ் (Naturals).
சென்னை இந்திரா நகரில், L.B. சாலையில் உள்ள நேச்சுரல்ஸ் நிறுவனத்தில், மாற்றுத் திறனாளர்களை 70% வேலைக்கு அமர்த்தும் ஓர் உன்னத பணியைத் தொடங்கியுள்ளது. இதர பணியாளர்கள் 30% மட்டுமே!
“50 வருடங்களுக்கு முன்னர், ‘மார்டின் லூதர் கிங் என் கனவு’ என ஒரு சொற்பொழுவு ஆற்றினார். அந்தக் கனவு, அமெரிக்காவின் உருவாக்கத்தில் மகத்தான பங்கை வகித்தது. அதைப் போலே, எனக்கும் வீணாவிற்கும் ஒரு கனவு உண்டு! அதன் வெளிப்பாடுதான், Naturals Enable எனும் இந்த முயற்சி. நேச்சுரல்ஸின் 611 கிளைகளிலும் இந்த வருட இறுதிக்குள், மாற்றுத் திறனாளர்களைப் பெருமளவில் பணியில் அமர்த்தவுள்ளோம்” என்றார் நேச்சுரல்ஸ் நிறுவனத...

நீட் எனும் அவலட்சணம்
நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இப்போது அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்ந்திருக்கும் ஒரு மாணவச் செல்வத்திடம் நீட் கோச்சிங் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பிள்ளை படித்தது தமிழகத்தின் டாப் 10 பள்ளிகளில் (யார் சொன்னா - அவங்களே சொல்லிப்பாங்க) ஒன்றில்.
பதிலைக் கேட்டு நொந்தது தான் மிச்சம்.
40 நாட்கள். வேதியியல், உயிரியலில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் திரும்பத் திரும்பத் படிக்கச் சொல்லிக் கொடுத்தார்களாம்.
இயற்பியலைப் படிக்கவே தேவையில்லையாம் (நெகடிவ் மார்க்கைத் தவிர்க்க அந்த வினாக்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள்) ஆக மூன்று பாடங்களில் ஒன்றைப் படிக்கவே தேவையில்லை. மற்ற இரண்டையும் முழுவதுமாகப் படிக்கத் தேவையில்லை. ஆனாலும் மருத்துவராகி விடலாம்.
மாநிலப் பாடத்திட்டத்தின் படி மருத்துவம் சேர்வதற்கு மூன்று பாடங்களிலும் குறைந்த பட்சம் 90-95% கண்டிப்பாகத் தேவை.
ஆனாலும் நீட் மாத...

வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்
கவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம்,
நான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்தப் பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாகக் கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி? உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி?
ஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத் தொடங்கிய அந்த ரசனை, உங்களின் அனைத்துப் படைப்புகளுக்கும் பாடல்களுக்குமாய் விரிந்தது. அப்படியாக நான் பாடலாசிரியனாக மாறியதன் பின்னணியில் நீங்கள் இருப்பதை நான் எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறேன். கருதுவேன்.
சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் உங்களின் ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதில் இரண்டு கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் என்னை இப்படி பின்வருமாறு எழுத வைத்தது.
~~ கேள்வி 1:...

தரமற்ற படம் தரமணி – ஏன்? எப்படி?
தரமணி படத்திற்குத் திரைக்கதை எழுத இன்ஸ்பையரான இரண்டு விஷயங்களைப் பற்றி ராம் பகிர்ந்து கொள்கிறார்.
<< 1. ஜூனியர் விகடனில் வந்த ஒரு கட்டுரை. வெளிநாட்டில் கணவன் வாழ்கிறான்; இங்கே அவன் வீட்டில் ஒரு லேண்ட் லைன் ஃபோன் வாங்குகிறார்கள். செல்ஃபோன் பரவலான உபயோகத்திற்கு வந்திராத சமயம் அது. ஃபோன் பில் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. இவ்விஷயம் பிரச்சனை ஆகிறது. கால் லிஸ்ட் எடுத்துப் பார்க்கப்படுகிறது. ஒரு நம்பருக்கு அதிகமாக அழைப்புப் போய் வந்துள்ளது. "அவன் யாரெனத் தெரியாது. நன்றாகப் பேசினான். நானும் பேசினேன்" என்கிறாள் அம்மனைவி. >>
படத்தில் இதைத் தழுவி காட்சிகளை வைத்துள்ளார் ராம். இந்த ஒரு சம்பவத்தைக் கொண்டு பொதுமைப்படுத்துவதே அபத்தமான விஷயம். ராம் ஒரு படி மேலே போய் தன் வக்கிரத்தைக் காட்சிகளாக வைத்துள்ளார். எப்படியெனில், அந்நியோன்யமாக இருப்பதாகத் தொடக்கத்தில் இருந்து காட்டப்படுபவர்கள் வீனஸ் - ...




