Shadow

சமூகம்

சர்கார் விவகாரத்தில் அதிமுகவினரின் அடாவடி கண்டிக்கத்தக்கது – கருணாஸ் காட்டம்

சர்கார் விவகாரத்தில் அதிமுகவினரின் அடாவடி கண்டிக்கத்தக்கது – கருணாஸ் காட்டம்

சமூகம், சினிமா
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையைக் கிளப்பித் திரையரங்கப் பதாகையைக் கிழித்துப் போராட்டம் செய்து வருகின்றனர் ஆளுங்கட்சி அ.தி.மு.க.,வினார். இது வன்முறையான கண்டிக்கத்தக்க அநாகரிகச் செயலாகும்.   சர்கார் திரைப்படம் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டுத் தணிக்கைக் குழுவின் ஆட்சேபணையின்றி வெளிவந்த வேலையில் அத்திரைப்படத்தில் உள்ள காட்சிகளையும், வசனங்களையும் நீக்கச் சொல்லிப் போராடுவது சட்டவிரோதச் செயலாகும். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் விரும்பியடிதான் படம் எடுக்க வேண்டுமென்றால், அதைத் தணிக்கைக்குழு விரும்பாத படமாகத்தான் படம் எடுக்க முடியும். இவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, “வீட்டுக்குள் புருஷங்காரன் பொண்டாட்டிய அடிக்கத் திண்னையில் கிடக்கிறவன்...
சோனி YAY! – குழந்தைகளுக்கான 75 நாள் திருவிழாக் கொண்டாட்டம்

சோனி YAY! – குழந்தைகளுக்கான 75 நாள் திருவிழாக் கொண்டாட்டம்

சமூகம்
குழந்தைகளுக்குப் பிடித்த சேனலான சோனி YAY!, விழா காலத் திருவிழாவை கொண்டாடட்டத்தை மேலும் சிறப்பாக்க முடிவு செய்துள்ளது. அதன் படி, ‘YAY! Party 75 on Wheels’ என்னும் வாகனம் (Van), இந்தியாவின் அனைத்து நகரங்களில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் குழந்தைகளைச் சந்திக்க வருகின்றது. புத்தாண்டு வரை 75 நாட்களுக்கு, சேனலில் இந்தச் சிறப்பு அத்தியாயம் வெளியாகும். பல்வேறு ஆச்சரியங்களைத் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குக் கொண்டு வருகிறது இந்தப் ‘பார்ட்டி 75’. சென்னையில் தொடங்கிய YAY!-வின் பயணம், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் நீள்கிறது. சோனி YAY!-இன் இந்தப் பார்ட்டி 75, குழந்தைகளின் முகத்தில் புன்னகையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருமென்பது திண்ணம். வாகனத்தில் என்னென்ன சிறப்பு? குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் வண்ணம், போட்டிகள், புதிர் விளையாட்டுகள், பரிசுப் பொருட்கள் எனக் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் பொழுதைக் ...
நோய் முதல் நாடி #MeToo

நோய் முதல் நாடி #MeToo

சமூகம்
முறைகேடான பாலியல் விழைவால் ஒரு தனிமனித அத்துமீறல் நடக்கிறது என்றால், அதற்கு முக்கிய தூண்டுதலாக இருப்பது மூன்று விஷயங்கள். தன்னை / தன் உடலை, தன் விருப்பத்திற்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்கிற புரிதல் இல்லாத விக்டிம்கள் (பாதிக்கப்பட்டவர்கள்). அடுத்து, இது ஓர் அத்துமீறல் என்கிற உணர்வே இல்லாது இருக்கும் சுற்றுப்புறத்திலிருப்பவர்கள். மூன்றாவதாக, தங்கள் வக்கிரத்தை மறைத்து, அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் கயவர்கள். தற்போது பெருகிவரும் பாலியல் குற்றசாட்டுகளை முன்னிறுத்தி, பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஒரு அறிவுறுத்தல் நிகழ்வை (counseling session) ஒருங்கச் செய்திருந்தார். அப்போது நான், 'பலருக்கும் எது அத்துமீறல் என்பதே புரியாது இருக்கும் நேரத்தில் இது போன்ற செஷன்கள் முக்கிய தேவை' எனக் குறிப்பிட்டிருந்தேன். இது இருபுறத்தார்க்கும் பொருந்தும். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நா...
மகளிர் ஆளுமை விருதுகள் 2018 – வேல்ஸ் பல்கலைக்கழகம்

மகளிர் ஆளுமை விருதுகள் 2018 – வேல்ஸ் பல்கலைக்கழகம்

சமூகம்
வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய, "மகளிர் ஆளுமை விருதுகள் 2018" பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் செப். 25 அன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக அகடெமிக் துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், "2018 மகளிர் ஆளுமை விருதுகள் நமது பயணத்தில் ஒரு மைல்கல். ஒரு சாதாரண ஆசிரியராக இருந்து இன்று மாநில கவர்னராக உயர்ந்திருக்கும் திரௌபதி முர்மு அவர்கள் இன்றைய இளம் தலைமுறை மகளிருக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்து வந்திருக்கிறார், அவர் இந்த விழாவில் சிறப்பு விருந்...
ஈஞ்சம்பாக்கத்தில் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி

ஈஞ்சம்பாக்கத்தில் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி

சமூகம்
ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5 அன்று, ஆளுநர் பன்வரிலால் புரோஹித் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளியின் ஈஞ்சம்பாக்கம் கிளையைத் திறந்து வைத்தார். மேற்கு மாம்பலத்திலும், தி.நகரிலும் இரண்டு பள்ளிகள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்க, தற்போது பிரம்மாண்டமாக ஈஞ்சம்பாக்கத்திலும் ஒரு பள்ளியைத் திறக்கப்பட்டுள்ளது. 2011 இல் தொடங்கப்பட்ட அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி தான் சென்னையின் முதல் IB World School என்பது குறிப்பிடத்தக்கது. IB - International Baccalaureate (இன்டர்நேஷ்னல் பக்காலோரியட்), என்பது 1968இல் ஸ்விடசர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனம். மேரி தெரஸ் மெளரட் எனும் ஃப்ரெஞ்ச் கல்வியாளர், ‘அமைதியைப் போதிக்கும் கல்வித்திட்டம்’ என 1948இல் போட்ட விதையே, IB எனும் கல்விமுறை தொடங்கக் காரணம். இந்தியப் பல்கலைக்கழங்கள் உட்பட, உலகிலுள்ள அனைத்துப் பலகலைக்கழங்களாலும், சிறந்த கல்விமுறை என்ற அ...
மகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல்

மகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல்

Others, காணொளிகள், சமூகம்
ஓல குடிசையில கனவு கண்டாளே! கனவு அது பலிக்கும் முன்னே - கலைஞ்சு போனாளே! அரிக்கேன் வெளிச்சம் தந்து ஆறாப்பு முடிச்சா பசி தூக்கம் எதையும் பாக்காம பத்தாப்பு முடிச்சா!அழுத ஈரம் காயலையே! அழுத ஈரம் கண்ணில் காயலையே! நியாயம் தேடிப் பார்த்தும் கிடைக்கலையே! வேதம் நூறு இருந்தும் ஒரு தெய்வம் காக்கலையே!! பாவி சனம் நாங்க உன் சேவை பெற அது வாய்க்கலையே!பாவி மக எங்க போவா? பாவம் அவ என்ன செய்வா நீட்ட கரம் கொண்டு சேவை குணம் கொண்டு பல நாள் கனவா - நீ உழைச்ச நீட்ட கரமின்றி ஏத்த ஆளின்றி தனியா போராடி வளர்ந்த உன் கனவெல்லாம் வெறும் கல்வி தானே முடிந்தவரை நீ நீதி கேட்டாயே!ஏழையாய்ப் பிறந்தது அவள் தவறா? உயர் கல்விக்கு ஆசைகள் அது தவறா? பிஞ்சுயிர் போகுமுன் யார் தடுத்தா?மகராசிஈஈ.. உயிர் போகுமுன் யார் தடுத்தா? ஒருநாள் பொழுதில் எல்லாம் மாறிப் போச்சு மாரி பொழிஞ்சு...
மு.க.ஸ்டாலினுக்குக் கருணாஸ் வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்குக் கருணாஸ் வாழ்த்து

சமூகம்
திராவிட முன்னேற்றக் கழகம் இன்று புதிதாய்ப் பிறக்கிறது! பெரும் மதிப்பிற்குரிய அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இன்று தலைவராய்ப் பிறக்கிறார்! “ஒரு நாயகன் உதயமாகிறான். ஊரார்களின் இதயமாகிறான்” என்று காவியக் கவிஞர் வாலி எழுதிய வரிகளுக்கு ஏற்ப, புதிய சூரியனாய் மு.க. ஸ்டாலின் உதயமாகிறார். முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்! மாணவர் கழகப் பொறுப்பாளராக, இளைஞரணிச் செயலாளராக, மாநிலப் பொருளாளராக, சென்னை மேயராக, துணை முதல்வராக, செயல் தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக படிப்படியாக உயர்ந்து பரிமாணம் பெற்றவர் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். 14 வயது முதல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெறும் இயக்கத்தின் பாதையில் பயணம் செய்கிறவர். போராட்டக் களம், சிறைவாழ்க்கை, தியாகத் தழும்புகள் என இவரது தன்வரலாறு நீளும். அதுதான் இவரை இன்று தலைவர் சிம்மாசனத்தில...
மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

சமூகம், சினிமா, திரை விமர்சனம்
குறிஞ்சி நிலத்தின் கரடுமுரடான வாழ்வியலை அட்டகாசமாகப் பதிவு செய்துள்ளனர். கும்மிருட்டு விலகாத விடியற்காலையில் எழும் ரங்கசாமி, மலையில் ஏறியிறங்கும் தூரம் மிக நீண்டது. அவரது வேலை என்பது ஏலக்காய் மூட்டையைச் சுமந்து கொண்டு மலையில் இறங்கும் சுமைக்கூலி வேலை. ஒரு கையளவு நிலம் வாங்க நினைக்கும் அவனது வாழ்வு, அவன் தினமும் பயணிக்கும் மலைப்பாதை போலவே ஏறியிறங்கி ஒரு வெற்றுவெளியில் முடிகிறது. தேனி ஈஸ்வர். ஒளிப்பதிவில் மாயம் செய்துள்ளார். ஒரு வாழ்க்கையை அதன் அருகில் இருந்து பார்த்த உணர்வையும், கோம்பையில் இருந்து கேரள எல்லை இடுக்கி மாவட்டம் வரை மலையைச் சுற்றிப் பார்த்த ஒரு திருப்தியையும் தருகிறது படத்தின் விஷுவல். மனம் பிசகிய பாட்டி ஒருவர் தன் கையிலுள்ள வளையல்களை எண்ணிக் கொண்டிருப்பார். தகதகக்கும் பொன்னிற சூரிய வெளிச்சத்தின் பின்னணியில் வரும் அந்த ஷாட்டு ரசனையின் உச்சம். படத்தில் வரும் கதாபாத்திரங்களில் ...
2 இன் 1 ஜான்ஸன்ஸ் வேட்டி – கே.எஸ்.ரவிக்குமார்

2 இன் 1 ஜான்ஸன்ஸ் வேட்டி – கே.எஸ்.ரவிக்குமார்

சமூகம், வர்த்தகம்
பெரும்பாலும், வேஷ்டி கிராமப்புறத்தில் அணியப்படும் உடை மற்றும் வயதானவர்கள் அணியும் ஆடை என்பது போலவே கருதப்பட்டு வருகிறது. வெளிப்படையாக, Jansons வேஷ்டிகள் இந்த மாயையை உடைத்து, நினைத்துப் பார்க்க முடியாத விஷயத்தைச் செய்து காட்டியிருக்கிறது. புதுமையான டூ இன் ஒன் ரிவர்சபிள் வேஷ்டியைக் கொண்டு வந்திருக்கிறது. இத்தகைய ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையின் மைய நோக்கம், இந்தப் பாரம்பரிய தென்னிந்திய ஆடைகளை இளைஞர்களிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான். "ஒரே மொபைல் ஃபோனில் இரண்டு சிம் உபயோகிப்பது போன்ற இரட்டை நன்மைகள் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு மட்டும் இல்லாமல், அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களிலும் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. Jansons இந்தியா அணியின் நீண்ட கால விவாதங்களுக்குப் பிறகு இந்த 2 இன் 1 வேஷ்டி பதிசோதனை முயற்சியை செய்து பார்த்தோம். இந்த 2 இன் 1 வேஷ்டியில் இரண்டு வெவ்வேறு வடிவம...
H1-B கலையும் கனவுகள்

H1-B கலையும் கனவுகள்

கட்டுரை, சமூகம்
அமெரிக்கா, கனவுகளின் தேசம். தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் வாரி வாரி வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கிற தேசம். இங்குக் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம், தொழில் வாய்ப்புகள் உலகெங்கிலும் இருந்து தொழில் முனைவோரைத் தன்பக்கம் தொடர்ந்து ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. புதிய தொழில் நுட்பங்கள், அவற்றின் வர்த்தகம், விரிவாக்கம் என அமெரிக்கப் பொருளாதாரம் எல்லாத் திசைகளிலும் வளரத் துவங்கியபோது அதை நிர்வகிக்க, முன்னெடுக்கத் தொழிலாளர்கள், வேலையாட்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தட்டுப்பாடு உருவானபோது, உலகெங்கிலும் இருந்து அடுத்தகட்ட குடியேற்றங்கள் அமெரிக்க மண்ணில் நிகழத்துவங்கின. இதனால்தான் நூற்றாண்டுகள் கடந்தும் போட்டிபோட்டுக் கொண்டு உலகெங்கிலும் இருந்து அமெரிக்க மண்ணில் கனவுகளோடு வந்து இறங்குகிறவர்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை. வேலைதேடி அமெரிக்காவிற்கு வருகிறவர்களை நெறிப்படுத...
‘பூமி’க்கான இசை

‘பூமி’க்கான இசை

சமூகம்
பூமியெனும் தொண்டு நிறுவனத்திற்காக, ரப்சடி (Rhaspody) குழுவின் ‘ஆர்க்கெஸ்ட்ரா, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 14 அன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் PMG (Pioneer Music Gym) -ஐச் சேர்ந்த 15 பாடகர்கள் மேடையில் பாடி அசத்தினார்கள். PMG குடும்பத்தில் பல்வேறு துறைகளில் இருக்கும் நபர்கள் ஒருங்கிணைந்துள்ளனர். மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், ஆடிட்டர்கள், தொழில்முனைவோர்கள், வங்கி உயரதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்றவர்கள், குடும்பத் தலைவிகள் என அனைவரும் ஒன்றிணைந்து, இசையின் பேரானுபவத்தைப் பாடிக் கொண்டாடி வருகின்றனர். ‘SA RE GA ME‘ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரப்சடி (Rhapsody – மகிழ்ச்சியைத் துள்ளலாக வெளிப்படுத்துவது) குழு பாடகர்கள், தமிழ், ஹிந்தி என 28 பாடல்கள் பாடினர். PMG-ஐத் தொடங்கிய Pioneer சுரேஷ் வழி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் நி...
வயலின் ‘ஞான’ சேகரன் 80

வயலின் ‘ஞான’ சேகரன் 80

சமூகம்
1982இல், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வாங்கிய, சங்கீத கலாநிதியான வயலின் வித்வான் M.சந்திரசேகரனின் 80வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும் குடும்பமும், கடந்த ஞாயிறு ஜூலை 8 அன்று, சென்னை மியூசிக் அகாதெமியில் விழாவாகக் கொண்டாடினர்.70 வருடமாக இசைத்துக் கொண்டிருக்கும் சந்திரசேகரன், தனது முதல் கச்சேரியை மார்ச் 5, 1949 இல் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இசை மேதைமையை வியந்தோதி, பத்ம விபூஷன் டாக்டர் M. பாலமுரளிகிருஷ்ணா, சந்திரசேகரரை, ‘ஞானசேகரன்’ என்றே அழைப்பார். கல்கத்தாவில் பிறந்த சந்திரசேகரன், மஞ்சள் காமாலையின் தாக்கத்தால், தன் இரண்டாவது வயதிலேயே தன் பார்வைத் திறனை இழந்து விடுகிறார். ஏழு வயதில் தந்தையையும் இழக்க, அவரைச் சென்னை அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறார் அவரது தாயார் ஸ்ரீமதி சாருபாலா மோகன். மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தன் மகனுக்கு குருவாக இருந்து வயலின் வாசிக்கச...
பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

சமூகம், தொடர்
மூடர்கூடத்து செண்ட்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் நெதர்லாந்துக்காரர்கள் நடத்துவதாகவே நினைத்துக் கொண்டிருப்பார் போல! இதற்கே அவர் ஸ்டார் விஜய் டி.வி. மூலமாகக் கமல் ஹாசனைச் சந்தித்து விட்டு தான் பிக் பாஸிற்குள் வந்தார். எனினும், மற்ற அனைவரும் தமிழில் பேசும்பொழுது, கேமிரா முன் பிக் பாஸிடம்ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார். ஆனால் அவர் நாமினேட் செய்யும் பொழுது, ‘மமதி எனக்குப் புரியாத மாதிரி இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க; ரம்யாவோட ஹேர்ஸ்டைல், பாடி லேங்வேஜ் எல்லாம் இங்கிலீஷ்க்காரங்க மாதிரி இருக்குது’ எனத் தெள்ளத்தெளிவாகக் காரணத்தைத் தமிழில் அடுக்குகிறார். இதில் ஆகப் பெரிய நகைச்சுவை என்னவென்றால், வீட்டின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனனி ஐயர், வைஷ்ணவியை நாமினேட் செய்து சொன்ன காரணம், ‘அவங்க நிறைய இங்கிலீஷ்ல பேசுறாங்க’ என்பது. முதல் நாளிலேயே, யார்க்கு யாரைப் பிடிக்கவில்லை என லேசாகக் கோடி...
பிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்

பிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்

சமூகம், தொடர்
பிக்பாஸ் சீசன் 2-இல் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், ‘ஏன் பிக்பாஸிற்கு வருகிறேன்?’ என்பதற்குச் சொன்ன காரணம், “பிக் பாஸில் கலந்து கொண்டவர்கள் வெளியில் வந்ததும் சொல்வது, தன்னுள் மாற்றம் நிகழ்கிறது என்கிறார்கள். இந்த நூறு நாளில் அப்படியொரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கலந்து கொள்கிறேன்” என்றார்கள். சீசன் 1-இல் கலந்து கொண்டவர்களில், அப்படி யாருக்கு என்ன மாற்றம் நிகழ்ந்தது என நமக்குக் கண் கூடாகத் தெரியாது. அவர்களாக, ‘இன்னது’ எனச் சொல்லும் வரை. அப்படிச் சொல்வதும் உண்மைக்கு எந்தளவுக்கு நெருக்கம் என்பதும் அளக்க இயலாது. ஆனால், பிக் பாஸ், முதல் சீசனுக்கும் இரண்டாம் சீசனுக்கும் இடையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த மாற்றத்தின் பெயர் கமல் ஹாசன். மக்கள் நீதி மய்யத்தின் தொடக்கத்திற்கு முன், பின் என இரண்டு சீசன்களையும் முறையே கொள்ளலாம். பிக் பாஸ் 1-இலே கூட கமல் ஹாசன் அதை ஒரு ப்ளாட்ஃபார்மாகப் பயன்ப...
சென்னையில் வாட்டர் வேர்ல்ட்

சென்னையில் வாட்டர் வேர்ல்ட்

சமூகம்
சென்னையைப் பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் இந்திய சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அந்த வகையில் சென்னையின் இந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக அமைய இருப்பது, ஏப்-27 ல் தொடங்கி ஜூன்-4 ஆம் தேதிவரை நடைபெற இருக்கும் 44வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அமைந்திருக்கும் 'வாட்டர் வேர்ல்ட் (Water World)' ஆகத்தான் இருக்கும். வழக்கமான ஜெயன்ட் வீல் மற்றும் அது சார்ந்த கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் இந்த முறை, வாடிக்கையாளர்களுக்கு சலுகை தரும் விஷயமாக சத்யா எலெக்ட்ரானிக்ஸின் மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் மேளாவும் நடைபெற இருக்கிறது. இந்த முறை கோடையின் தீமாக (Theme) நீர் உலகம் (Water World) இருக்கும். ஆகையால் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக ராட்சஷ நீர்வீழ்ச்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை. நிஜ ந...