Tag: Pentagan Public Relations

கமல்ஹாசன் வெளியிட்ட ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ புத்தகம்
சிலோன் வானொலியின் B.H.அப்துல் ஹமீது எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ எனும் நூல், டிசம்பர் 18 ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது.
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பி.சுசீலா பெற்றுக்கொண்ட புத்தகத்தின் முதல் பிரதியை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். இரண்டாவது பிரதியை ராம்குமார் கணேசன் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்) பெற்றுக்கொண்டார். பிளாக் ஷீப் விக்னேஷ்காந்த் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை JMR Events கவனித்துக் கொள்ள, நிகழ்ச்சியை வழங்கியது பிளாக் ஷீப் டிவி. மதன்ஸ்' பேண்ட்-டின் இசை கச்சேரியில், பெரும்பாலும் கமலின் படங்களில் இருந்து ஒரு கலவையான பாடல்களின் தொகுப்பாகவே பாடப்பட்டது, நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம்.
கமல்ஹாசன் தனது உரையில், அப்துல் ஹமீதின் தூய்மை மற்றும் தமிழை உச்சரிப்பதில் முழுமை பெற்றிருப்பதைக் குறிப்பிட்டார். அப்துல் ...

நரம்பியல் மனநலமருத்துவம் வட்டமேசை 2022
சர்வதேச நரம்பியல் மனநலமருத்துவக் கூட்டமைப்புடன் (INA) இணைந்து புத்தி க்ளினிக் & அப்போலோ மருத்துவமனை, நரம்பியல் மனநலமருத்துவம் வட்டமேசை 2022 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பாக, கோவிட் காலத்திற்குப் பிறகு மனநலம் தொடர்பான பிரச்சனைகள் ஓர் அலை போல் அதிகரித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நலனை மேம்படுத்துவதற்கான புதியமுறைகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் உலகிற்கு எழுந்துள்ளது. இந்தக் கருத்துக்களம், மூளை மற்றும் மனதின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
நரம்பியல் மருத்துவத்தையும், மனநல மருத்துவத்தையும் இருவேறு மருத்துவப் பிரிவுகளாக நினைத்துக் கொள்கின்றோம். ஆனால், மருத்துவர்களுக்கும், பொது சுகாதாரத்தில் ஈடுபட்டுள்ளோர்களுக்கும், இவ்விரண்டு மருத்துவமும் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தது இல்லை என்றும், இவ்விரண்டிற்கும் இடையே பரவலான ஓர் இடைத்தளம் உள்ளது...

பிளாக் ஷீப் டிவி | ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ – புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி
பிரபல தொகுப்பாளரும், சர்வதேசளவில் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் அறிவிப்பாளருமான முனைவர் B.H.அப்துல் ஹமீத் அவர்களது வாழ்நாள் அனுபவங்களை உள்ளடக்கிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியை "பிளாக் ஷீப் டிவி" ஒளிபரப்பவுள்ளது. இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி, டிசம்பர் 18 ஆம் தேதியன்று மாலை 05:30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நிகழ உள்ளது.
அரை நூற்றாண்டுக் காலமாக நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் கோலோச்சிய ஆளுமையான அப்துல் ஹமீதின் இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் RJ விக்னேஷ்காந்த். முந்தைய தலைமுறை மேதைகளைத் தேடி ஓடிக் கொண்டாடி மகிழும் பிளாக் ஷீப் டிவி நிறுவனம், இந்நிகழ்ச்சியின் முதன்மை நல்கையாளராகவும் (Title Sponsorship) செயற்படவுள்ளது.
புத்தகத்தைப் பற்றி, B.H.அப்துல் ஹமீத், “இது எனது வாழ்க்கையைப் பற்றிய சுயதம்பட்ட ந...

சிக்னேச்சர் ஸ்டுடியோ – அண்ணா நகரில் புத்தம்புது சலூன்
சிக்னேச்சர் ஸ்டுடியோ (யுனிசெக்ஸ் சலூன் | அகாடமி) எனும் இருபாலருக்கான அழகு நிலையத்தை அண்ணா நகரில்* நிறுவியுள்ளார் ஜபீன் மெஹமூத். ஒப்பனைத் துறையில் 22 வருட அனுபவமுள்ள ஜபீன், சிறந்த ஒப்பனைக்காக பல விருதுகள் வாங்கியூள்ளார். அவர் சிறந்த ஒப்பனையாளர் மட்டுமல்லர், சிறந்த ஒப்பனைக் கல்வியாளராகவும் திகழ்கிறார். ஓர் அழகுநிலையத்தை நடத்துவதற்கான, தொழில் முனைவோருக்குரிய ஊக்கமும் திறனும் ஒருங்கே பெற்றவர். அவருடைய சிறப்பு அம்சம், அழகு மற்றும் ஒப்பனைத் தொழில் பற்றிய பரிபூரண அறிவைப் பெற்றிருப்பதே!சிக்னேச்சர் ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குநர் முஜீபா நாஸ், “அனைத்து சர்வதேச பிராண்ட் தயாரிப்புகள் பற்றிய அறிவைப் பெற்ற தரமான சேவை வழங்கக்கூடிய பணியாளர்களைக் கொண்டுள்ளோம். அவர்கள், உலகின் மிகச் சிறந்த அழகுக் கலை நிபுணர்களிடம் பயிற்சி பெற்றவர்கள். எங்களிடம் ஒரு வாடிக்கையாளர் பெறும் மிகச் சிறந்த அனுபவம், அவரை எங்களது ...

தி பார்க் | சென்னையில் சீன – ஜப்பானியப் பாரம்பரிய உணவுகள்
‘தி பார்க், சென்னை (THE Park, Chennai)’ நட்சத்திர விடுதியில், 2002 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் 601 பல்வகை உணவுக்கூடம் (Multicuisine Restaurant), புத்தம் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது. விரைவாகவும் இலகுவாகவும் ஜீரணமாகும் மதிய உணவாகட்டும் அல்லது நிதானமாக உண்டு களைப்பாற முற்படும் இரவு உணவாகட்டும், அனைத்திற்குமே ஏற்ற வகையில் உணவு வகையறாக்கள் இங்கே உண்டு. கலையும் கற்பனையும் கலந்த கலவையாக இங்குத் தயாரிக்கப்படும் உணவு வகைகள் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தளிப்பதோடு நாவின் சுவைக்கும் நல்விருந்தளிக்கும். ஆர்வமும் நேர்த்தியும் திறமையும் மட்டுமே துணையாகக் கொண்டு, Executive Chef, Ashutosh Nerlekar-உம், அவரது குழுவினரும், சைவ உணவினருக்கும், அசைவ உணவினருக்கும் அற்புதமான பிரத்தியேக மெனுவைத் தயாரித்துள்ளனர்.தற்போது, 601 இல், சீனப் பாரம்பரிய உணவான டிம் ஸம் (Dim Sum) மற்றும் ஜப்ப...

தி வுமன் கிங் – அகோஜி படையின் வீர தீர சாகசம்
சரித்திர புகழ் மிக்க சாகச போர் காவியங்களைத் திரையில் வடிப்பதென்பது ஒரு சாமான்ய செயற்பாடன்று. இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில், ஆஃப்ரிக்க தேசமான தகோமாவில் (Dahomey) 1800 களில், அந்தத் தேசத்தைக் காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட அகோஜி (Agojie) என பேர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை ஒரு காவியமாகத் திரையில் கொண்டு வந்துள்ளனர்.
உயரிய உடை அலங்காரங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், அசர வைக்கும் போர் காட்சிகள் என அதிக பொருட்செலவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ‘தி வுமன் கிங்’ படத்தைப் பரபரப்பாக உருவாகியுள்ளனர். ஆராய்ச்சியின் அடிப்படையில், இவ்வாண்டில் A+ Cinema Score கௌரவத்தைப் பெற்ற இரு படங்களில் இதுவும் ஒன்று.
இயக்கம் முதல் இதர தொழில்நுட்பக் கலைகள் வரை அதிகபட்சமாகப் பெண்களே பங்குபெறும் ஓர் உன்னதமான தற்காப்பு போர்க் காவியமிது. Vio...

டிமென்ஷியாவும், புத்தி க்ளினிக்கும்
உலகெங்கும், செப்டம்பர் மாதம் அல்சீமர் மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அல்சீமர் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்க, செப்டம்பர் 21-ஐ அல்சீமர் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் முதியவர்களைப் பராமரிக்கும், இந்தியத்தன்மை அதிகமுள்ள தன்னிறைவு (ஆத்மநிர்பர்) பெற்ற ஒருங்கிணைந்த மருத்துவ மாடலை வடிவமைத்துள்ளனர் புத்தி க்ளினிக் மருத்துவர்கள்.
அல்சைமர் நோய் டிமென்ஷியாவுக்கு மிகவும் பொதுவான காரணமாகும். மற்ற காரணங்களில் வாஸ்குலர் நோய், லெவி உடல்களுடன் கூடிய டிமென்ஷியா மற்றும் ஃப்ரன்டோ-டெம்போரல் டிமென்ஷியா ஆகியவை அடங்கும்.
மறதி நோய் என அறியப்படும் டிமென்ஷியா என்பது நினைவகம், சிந்தனை, நடத்தை மற்றும் உணர்ச்சிகளைப் பாதிக்கும் பல்வேறு மூளைக் கோளாறுகளை விவரிக்கப் பயன்படும் சொல். டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகளில் நினைவாற்றல் இழப்பு, பழக்கமான பணிகளைச் செய்வதில் சிரமம், மொழி மற்றும் ஆளுமையில...

Calcutta, I’m sorry விமர்சனம்
சீராகச் செல்லும் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஓர் உலுக்கும் சம்பவம் ஏற்படும் வரை, நாம் வாழும் வாழ்வின் பொருளென்ன என்ற தத்துவார்த்த கேள்விக்குள் மனிதன் செல்லுவதில்லை. வாழப் போகும் நாட்கள் குறைவென்று நிச்சயமான பின், இருக்கும் நாட்களுக்குள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டித் துடிக்கிறான். அச்சமயத்தில், சரி, தவறு என மனம் போட்டு வைத்துள்ள எல்லாக் கணக்குகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட மனம் இளகுகிறது. கடைசி நொடி வரையும் இளகாமல் வாழ்ந்து மடிவோர் உண்டு என்ற போதிலும், மனம் இளகுவோரின் அகப்பயணம் எவ்வாறாக இருக்கும் என்பதே இந்த ஆங்கிலப் படத்தின் மையக்கரு.
குன்னூரில் இசை ஆசிரியராகப் பணி புரிபவர் அமாண்டா ரைட். கணவரையும் மகளையும் பிரிந்து இசையே வாழ்க்கையென வாழும் ஆங்கிலோ இந்தியரான அமாண்டாவிற்கு தண்டுவட மரப்பு நோய் (Multiple Sclerosis) கண்டறியப்படுகிறது. வாழ்வின் நிலையாமையையும், விர...

NSI இன் ‘இளம் நியூரோசர்ஜண்ஸ் ஃபோரம்’
‘நியூராலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா (Neurological society of India)’ என்கிற அமைப்பு, 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 3200 அங்கத்தினரோடு திறம்படச் செயற்பட்டு வருகிறது.
இதன் ஒரு கிளைதான், ‘யங் நியூரோசர்ஜன்ஸ் ஃபோரம் (Young Neurosurgeons Forum)’ ஆகும்.
நரம்பியல் அறுவை சிகிச்சையில் (Neurosurgery) முதுகலை பட்டம் பெற்று, பத்து வருடங்கள் பயணித்து, 45 வயதிற்குள் இருந்தால், இந்த அமைப்பில் அங்கத்தினராகச் சேர இயலும்.
இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் இத்துறையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் புதிய வளர்ச்சி பரிமாணங்கள் போன்றவற்றைப் பற்றி விவாதிக்க, செயற்பாட்டு முறைகளைப் பற்றி கலந்துரையாடவும் இரண்டு நாள் மாநாடு (ஜூன் 11 & 12) ஏற்பாடாகியிருந்தது.
இந்தியா முழுவதிலிருந்தும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்மாதிரியான அமைப்புகளை மேலும் நிறுவவும், இத்துறையின் வருங்கால வளர்ச்சிப்பாதையில் திறம்படப் ...

உலகத்தர சிகிச்சையைச் சாத்தியமாக்கும் மேம்படுத்தப்பட்ட “புத்தி கிளினிக்”
நரம்பியல், மன வளம் மற்றும் முதியோர் நலம் பேணுதல் முதலானவற்றிற்கு உகந்த சிகிச்சை அளிக்க உன்னதமான ஓர் இடம் - புத்தி கிளினிக்!
சென்னை தேனாம்பேட்டையில், உலக தரத்தில் இயங்கும் இந்த சிகிச்சை மையம் தனது செயல்பாடுகளை மேலும் சிறப்பாக விரிவாக்கம் செய்ய புதியதொரு பரிமாணத்துடன் புதியதொரு கட்டட வளாகத்தில் தனது சேவைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
நான்கு மண்டலங்களாக இவ்வமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.
1. The Alchemist Zone
மருத்துவ அமைப்புகள், வரவேற்பறை, பரிசோதனை அறை, ஆராய்ச்சி அமைப்புகள், பரிசோதனை கூடம் மருந்தகம் முதலியன.
2. The Mindfulness Zone
நரம்பியல் மற்றும் மூளை சம்பத்தப்பட்ட சிகிச்சை முறைகள், அவற்றை செயல்பட வைக்கும் செயல்முறைகள், யோகா பயிற்சிகள், மன, குண இயல்புகளின் செயல்பாடுகளின் பிரதிபலிப்பின் அடிப்படையில் சிகிச்சை முறை முதலியன.
3. The Rehab Zone
வலி மற்றும் இடம் பெயர்தல் ஆகியவற்றிற்கான சிகி...

பழகிய நாட்கள் – இருவகை காதலைப் பற்றிப் பேசும் படம்
காதலை மையமாக வைத்து தமிழில் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படம் காதலின் குணாதிசயங்களையும் காதல் வயப்படும் ஜோடிகளின் மனப்போக்கையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. காதலிப்பது என்பது இரு வகைப்படும். ஒன்று, இளவயது காதல். இரண்டாம் வகை, முதிர்ந்த காதல். இந்த இரு வகை காதல் பற்றியும் இயக்குநர் ராம்தேவ் எதார்த்தமாகவும் இயல்பாகவும், ஒரு காதல் ஜோடியை மையமாகத் திரைக்கதையில் அமர்த்தி, சுவைப்பட, துளி கூட விரசமின்றி இக்காதல் கதையை வழங்கியுள்ளார்.
புதுமுக அறிமுகங்களான மீரானும் மேகனாவும் காதல் ஜோடிகளாகப் படத்தில் வலம் வந்துள்ளனர். இயக்குநர் ஸ்ரீநாத், சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், நெல்லை சிவா, Monkey ரவி, வின்சென்ட் ராய், சிவகுமார், சுஜாதா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர்.
செந்தில் கணேஷ் ஒரு பாடல் பாடியுள்ளதோடு நடனமும் ஆடியுள்ளார். திரைப்படத்தின் முற்பகுதி காதல் காட்சிகளை மணிவண்ணன் ஒளி...

TNWAA – சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்
TNWAA – Tamil Nadu Women Achievers Awards . பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழ்நாட்டுப் பெண்களுக்கு, ‘தி பிராண்ட் ரீபப்ளிக்’ எனும் நிறுவனம் விருதுகள் வழங்கிக் கெளரவித்தன. இந்நிகழ்வு, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’டன் தொடங்கியது.
TNWAA வின் குறிக்கோள் என்பது, ‘வாழ்த்து, ஊக்கமளி, வல்லமை கொள்ளச் செய்’ என்பதேயாகும். சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பினைத் தங்கள் துறைகளில் செய்திடும் பெண்களை அடையாளம் கண்டு கெளரவிப்பதன் மூலம், அதனால் மேலும் பல பெண்கள் ஊக்கம் பெற்று, தத்தம் துறைகளில் வல்லமையோடு முன்னேறுவார்கள். இந்தியாவின் மூலைமுடுக்குகளில் உள்ள பெண்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் டிஜிட்டல் செயற்பாட்டுத்தளமாக TNWAA விளங்குமென ‘தி பிராண்ட் ரீப்ப்ளிக்’கின் இயக்குநர் ஆதித்யா அறிவித்தார்.
வெவ்வேறு துறையினைச் சேர்ந்த 15 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
1. Woman in Social Services - Dr. Renuka Ramakrish...

புற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை
பா.ஜ.க.வின் மருத்துவக் கிளை உறுப்பினரான புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ், வட சென்னை கிழக்கு பகுதியின் தலைவர் திரு. கிருஷ்ண குமார் மற்றும் மத்திய சென்னை மேற்கு பகுதியின் தலைவர் திரு. தனசேகரன் மூலமாக, ஏழ்மையில் வாடும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு, மளிகைப் பொருட்களை (Modi kit) வழங்கினார். இந்நிவாரணப் பணியை, பா.ஜ.க.வின் மாநில தலைவர் டாக்டர் L. முருகன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சென்னை மண்டலத்தின் பொறுப்பாளரான திரு. காளிதாஸ் முன்னின்று ஒருங்கிணத்தார்.
நிவாரணப் பொருட்கள்:
1. 10 கிலோ அரிசி
2. 400 கிராம் சத்து மாவு பொடி
3. ½ கிலோ சர்க்கரை
4. ½ கிலோ துவரம் பருப்பு
5. ½ லிட்டர் எண்ணெய்
6. ½ கிலோ ரவா
7. 100 கிராம் சீரகம்
8. 100 கிராம் மஞ்சள் பொடி
9. 100 கிராம் மிளகாய் தூள்
10. 1 கிலோ உப்பு
பேராசிரியரும் மருத்துவருமான அனிதா ரமேஷ், லாக்டவுன் தொடங்கிய காலகட்டத்திலேயே ஏழைகளுக்...

கொரோனா தொற்று: புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கான வழிகாட்டி
புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ், புற்றுநோய் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் ஒரு கருத்தரங்கை நிகழ்த்தினார்.
"கொரோனா தொற்றுக் காலத்தில், சமூகத்தில் மருத்துவர்களான நமது பங்கு அளப்பரியது. அதிலும் குறிப்பாகப் புற்றுநோய் துறை மருத்துவர்களுக்கு, கூடுதல் பொறுப்பு உள்ளது. நாம், மத்திய மற்றும் மாவட்ட அரசுகள் வழிகாட்டுதல்களை அறிந்து கொண்டு, அது படி நடக்கவேண்டியது நம் கடமையாகும்.
கொரோனா யொற்றுக் காலத்தில், புற்றுநோய்க்கான சிகிச்சைகளை முன்னிலைப்படுத்தி இயங்க இயலாது. எனினும் நாம் நம் முக்கியத்துவத்தை உணர்ந்து, எளிதில் பாதிப்படையக் கூடிய புற்றுநோய் பிணியாளர்களின் பொருட்டு சரியாகத் திட்டமிடவேண்டும்.
சில கேன்சர் நோயாளிகளுக்குக் கொரோனா தோற்று ஏற்பட்டால், அவர்கள் மீதான நோயின் தாக்கம் மிகவும் அதிகமாகும்.
• கீமோதெரபி அல்லது ரெடியோதெரபி எடுத்துக் கொள்பவர்கள்,
• ரத்தப்புற்று (Leukaemia...


